Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மைசூர் அரண்மனைக்குச் செல்லும் 30 அடி ஆழ சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share
மைசூர் அரண்மனைக்குச் செல்லும் 30 அடி ஆழ சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
மைசூர் நகரில் அரண்மனைக்கு செல்வதாக கூறப்படும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மைசூர் நகரில் நீலகிரி சாலை, சாமராஜா டபுள் ரோடு சந்திக்கும் இடத்தில் கடந்த வாரம் நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருந்தது. அது பூமிக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடைக்கான துவாரமாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கருதினர். இதனால் அதை சரிசெய்வதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியை தோண்டும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதாள சாக்கடை இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மாறாக, சதுர வடிவில் 30 அடி ஆழத்துக்கு பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் ஏறி இறங்குவதற்கு வசதியாக கற்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஆச்சரியம் அடைந்த ஊழியர்கள், அருகில் தோண்டியபோது அங்கும் இதேபோன்று ஒரு பள்ளம் இருந்தது. அதில் 20 அடி தொலைவுக்கு கீழே இறங்கி பார்த்தால், மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், தொல்பொருள் ஆய்வு துறை ஆணையர் பெட்சூர் மட் மற்றும் அதிகாரிகள சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அது மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை தானா? என்பதை ஆராயும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதி முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மைசூர் அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை என்று தகவல் பரவியதும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு கூடி விட்டனர். அவர்கள் ஆச்சரியத்துடன் அந்த சுரங்கப்பாதையை பார்த்து சென்றனர். அது அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதை தான் என்றும், எதிரி படைகளை முறியடிப்பதற்காக அந்த சுரங்கப்பாதையை மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். என்றாலும், தொல்பொருள் ஆய்வு முடிவில் தான் அது அரண்மனைக்கு செல்லும் சுரங்கப்பாதையா? என்பது தெரியவரும். ஏராளமானவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு, அந்த சுரங்கப்பாதையை பார்த்ததால், அந்த பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
நன்றி: வெப்துனியா
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மைசூர் அரண்மனைக்குச் செல்லும் 30 அடி ஆழ சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» பைசா செலவில்லாமல் 150கிமீ செல்லும் சோலார் ரிக்ஷா: திருப்பூர் பட்டதாரி கண்டுபிடிப்பு
» ஐரோப்பாவின் முதல் பசுமை ரெயில் சுரங்கப்பாதை!!
» இந்திய எல்லையில் 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை: ராணுவம் முறியடித்தது
» காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்க
» மைசூர் பாக்
» ஐரோப்பாவின் முதல் பசுமை ரெயில் சுரங்கப்பாதை!!
» இந்திய எல்லையில் 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை: ராணுவம் முறியடித்தது
» காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை விரைவில் திறப்பு: பிரதமர் தொடங்கி வைக்க
» மைசூர் பாக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|