தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு தேவாரம்

Page 19 of 33 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 26 ... 33  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed Aug 13, 2014 11:11 am

First topic message reminder :

நற்றுணையாவது நமச்சிவாயவே!
 தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருச்சிற்றம்பலம்!!!

தினம் ஒரு தேவாரம்  - Page 19 2Q==
தினம் ஒரு தேவாரம்  - Page 19 Alampதினம் ஒரு தேவாரம்  - Page 19 Zதினம் ஒரு தேவாரம்  - Page 19 Alamp
தினம் ஒரு தேவாரம்  - Page 19 Images?q=tbn:ANd9GcQu7ef1sdDMr37rvqFgXFOg36Di9aMBDWpyM1DideVWW3mdbwTXuA

 தேவாரங்கள் எனப்படுபவைசைவசமயத்தின் முழுமுதற்
கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசுநாயனார், சுந்தரமூர்த்திநாயனார்
ஆகியநாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.
 
 
 முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
 
 
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும்.
 
 
மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம்ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.
 
 
திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ளதோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
 
 
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.
 
 
“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
 
 
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
 
 
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத்தொகுத்தார்.

 
திருமுறை

பாடியவர்(கள்)

பாடல் எண்ணிக்கை

முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,469

இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,331

மூன்றாம் திருமுறை

திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,358

நான்காம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

1,070

ஐந்தாம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

1,015

ஆறாம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

981

ஏழாம் திருமுறை

சுந்தரமூர்த்தி நாயனார்

1,026

எட்டாம் திருமுறை

மாணிக்கவாசகர்

1,058

ஒன்பதாம் திருமுறை

9 ஆசிரியர்கள்

301

பத்தாம் திருமுறை

திருமூலர்

3,000

பதினொன்றாம் திருமுறை

11 ஆசிரியர்கள்

1,385

பன்னிரண்டாம் திருமுறை

சேக்கிழார்

4,272

 

மொத்தம்
18,266


Last edited by முழுமுதலோன் on Wed Aug 13, 2014 3:45 pm; edited 2 times in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by ஸ்ரீராம் Sun May 10, 2015 1:14 pm

சிறப்பான தொடர்பதிவுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sun May 10, 2015 4:39 pm

214அயனொடு மெழிலமர் மலர்மகள்
மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழ னிகழ்வதொர்
படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய
வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதின் மதியது
தவழ்தர வுயர்திரு மிழலையே.

நான்முகனும் அழகிய மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது அஞ்சி நிற்க, ஒரு சோதிப் பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி, வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by ஸ்ரீராம் Sun May 10, 2015 6:07 pm

சிறப்பான தொடர்பதிவுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Mon May 11, 2015 10:16 am

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Mon May 11, 2015 3:01 pm

215இகழுரு வொடுபறி தலைகொடும்
இழிதொழின் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
கெடவடி யவர்மிக வருளிய
புகழுடை யிறையுறை பதிபுனல்
அணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
செறிவொடு திகழ்திரு மிழலையே.

பிறரால் இகழத்தக்க உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில் மிகுதியாகப் புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும், விளங்கும் மருதந்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத் தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலையாகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Tue May 12, 2015 9:51 am

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by ஸ்ரீராம் Wed May 13, 2015 12:23 pm

சிறப்பான தொடர்பதிவுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed May 13, 2015 2:28 pm

216சினமலி கரியுரி செய்தசிவ
னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே.

சினவேகத்தோடு வந்த யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், சயமகள், அவர்க்கு இனமான புகழ் மகள் ஆகியோர் தம்பால் பொருந்த, பெரிய இவ்வுலகின்கண் இனிதாக வாழ்வர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Thu May 14, 2015 11:03 am

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Lingam01
திருச்சிவபுரம் - திருவிராகம் 

திருச்சிற்றம்பலம் 


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர். 
தேவியார் - பெரியநாயகியம்மை.




217புவம்வளி கனல்புனல் புவிகலை
யுரைமறை திரிகுண மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு
பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர்
செழுநில னினில்நிலை பெறுவரே.

விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில்வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப் பாற்றல் நினைவோடு நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத் தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Thu May 14, 2015 4:07 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முரளிராஜா Fri May 15, 2015 12:13 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Fri May 15, 2015 3:33 pm

218மலைபல வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர் முத லுலகுகள்
நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகட னடுவறி துயிலமர்
அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரநினை
பவர்திரு மகளொடு திகழ்வரே.

மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலைபேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sat May 16, 2015 10:18 am

219பழுதில கடல்புடை தழுவிய
படிமுதலியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
குலமலி தருமுயி ரவையவை
முழுவது மழிவகை நினைவொடு
முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர்
தொழுமவர் புகழ்மிகு முலகிலே.

பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர்ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுர நகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sun May 17, 2015 10:20 am

220நறைமலி தருமள றொடுமுகை
நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள்
குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
நினைபவர் செயமகள் தலைவரே.

மணம் மிகுந்த சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Mon May 18, 2015 1:57 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Tue May 19, 2015 10:35 am

221சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
மன்னுணர் வொடுமலர் மிசையெழு
தருபொரு ணியதமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை
தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரநினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே.

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும் வென்று, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும், தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும் ஒளிப் பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள் தன் அருளைத் தரவாழ்வர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Wed May 20, 2015 12:08 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed May 20, 2015 2:56 pm

222சுருதிகள் பலநல முதல்கலை
துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
யடைவகை நினையர னுறைபதி
திருவருள் சிவபுர நினைபவர்
திகழ்குல னிலனிடை நிகழுமே.

வேதங்களையும், பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும், குற்றம் அறப்பயின்று, உலகியலில் பழிபாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று நிகழும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Thu May 21, 2015 11:28 am

223கதமிகு கருவுரு வொடுவுகி
ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
மதிதிக ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
வெழிலரி வழிபட வருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுர
நினைபவர் நிலவுவர் படியிலே.

திருமால் வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற்பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாதுநிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 9:56 am

224அசைவுறு தவமுயல் வினிலயன்
அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர்
செழுநில னினில்நிகழ் வுடையரே.

உடல் வருத்தத்தைத் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச் செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Fri May 22, 2015 10:05 am

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sun May 24, 2015 10:58 am

225அடன்மலி படையரி யயனொடு
மறிவரி யதொரழன் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர்
வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண
துடையுரு வெளிபடு மவனகர்
திடமலி பொழிலெழில் சிவபுர
நினைபவர் வழிபுவி திகழுமே.

வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப் பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by ஸ்ரீராம் Sun May 24, 2015 11:26 am

சிறப்பான தொடர்பதிவுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Mon May 25, 2015 11:36 am

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முரளிராஜா Tue May 26, 2015 12:25 pm

நல்லதொரு பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 19 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 33 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 26 ... 33  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum