Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் 'பிள்ளையார் பிரதர்ஸ்'
Page 1 of 1 • Share
5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் 'பிள்ளையார் பிரதர்ஸ்'
தீபாவளி, பொங்கல் பண்டிகை களுக்கு இணையான பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி. சிலைகளை வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்து, அவற்றை கடலில் கரைப்பது வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை.
விநாயகர் உருவ விக்கிரகங்களையும், புகைப்படங்களையும் 5,000-க்கு மேல் சேமித்து, வைத்திருக்கின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர். சுசீந்திரம், ஆஸ்ராமம் கிராமத்தில் அக்ரஹார தெருவுக்குள் நுழைந்து ராம்ஜி, சங்கர்ஜி சகோதரர்கள் வீட்டுக்கு விலாசம் கேட்டாலே, `பிள்ளையார் பிரதர்ஸா?’ என்று கேட்டு அடையாளம் சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
வீடு நிறைய விதவிதமான விநாயகர் சிலைகள். மிகச்சிறிய அளவில் இருந்து தொடங்குகிறது சிலைகளின் உருவம். இதே போல் ஏராளமான ஆல்பங்களில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், நர்த்தன விநாயகர், பார்வதி பரமசிவன் சகிதம் உள்ள விநாயகர், வல்லப விநாயகர், சித்தி புத்தி விநாயகர், மயில்மேல் விநாயகர் என நீண்டுகொண்டே செல்கிறது பட்டியல்.
இளைய சகோதரர் சங்கர்ஜி கூறியதாவது: தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக உள்ளேன். என் சகோதரர் ராம்ஜி வயலின் கலைஞர். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த விநாயகர் கலெக் ஷன்களை செய்துவருகிறோம். 1997-ல் தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற தபால் தலை கண்காட்சியில் கலந்து கொண்டு இசையும், நாட்டியமும் என்ற தலைப்பில் காட்சிக்கு வைத்திருந்தேன். முதல் பரிசு கிடைத்தது.
அந்த கண்காட்சியில் ஏராளமானோர் கிறிஸ்துமஸ், மெக்கா மதினா கலெக்ஷன்ஸ் வைத்திருந்தனர். அதைப் பார்த்து விட்டு விநாயகர் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினேன். நான் தீவிரமான விநாயகர் பக்தர் என்பது கூட அதற்கு ஒரு காரணம். விநாயகரை வணங்கி செய்தால் எந்த செயலும் வெற்றிபெறும் என்பது ஐதீகம். அப்படிப் போட்ட பிள்ளையார் சுழி இப்போது 5,000-க்கும் அதிகமான படங்களை தாண்டிவிட்டன.
மங்கோலியா, நெதர்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகள் விநாயகர் உருவம் பொதித்த கரன்சி நோட்டுக்களை வெளி யிட்டுள்ளன. அவற்றையும் சேகரித்து வைத்துள்ளேன். நான் காலண்டரில் இடம்பெறும் பல்வேறு வடிவங்களில் விநாயகர் படத்தையும் சேகரித்துள்ளேன்.
இதேபோல் ஷேர் ஆட்டோ டிக்கெட் கட்டணத்தின் பின்புறம் விநாயகர் உருவம் வரையப்பட்டிருக்கும். இந்த கலெக்ஷ னுக்காகவே ஷேர் ஆட்டோ ஏறி நாகர்கோவில் முழுவதும் ரவுண்ட் வருவேன்” என்று கூற, தொடர்கிறார் அவரது சகோதரர்ராம்ஜி.
`கிழக்கிந்திய கம்பெனிகளின் காலகட்டத்தில் விநாயகர் உருவம் பொதித்து வெளியிடப்பட்ட காசு இப்போது எங்கள் சேகரிப்பில் இடம் பெற்றுள்ளது. மாக்கல்லினால் செய்யப்பட்ட விநாயகரை வாங்க விரைவில் திருப்பரங்குன்றம் செல்ல இருக்கிறோம்.
தாய்லாந்து நாட்டில் 3 ரூபாய் ஸ்டாம்பில் விநாயகர் உருவம் உள்ளது. அதுவும் எங்கள் சேகரிப்பில் இருக்கிறது. அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் இன்னும் ஏராளமான கலெக்ஷன்களை சேகரிக்க முயற்சித்து வருகிறோம்’ என்றார்.
© தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: 5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் 'பிள்ளையார் பிரதர்ஸ்'
வாவ் சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
» ஸ்வேத விநாயகர் என்னும் வௌ்ளை வாரணப் பிள்ளையார்- தல புராணம் –
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» ஸ்வேத விநாயகர் என்னும் வௌ்ளை வாரணப் பிள்ளையார்- தல புராணம் –
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|