தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"இம்சை அரசு" தர்பார்: பாகம்;7

View previous topic View next topic Go down

"இம்சை அரசு" தர்பார்: பாகம்;7 Empty "இம்சை அரசு" தர்பார்: பாகம்;7

Post by இம்சை அரசன் Thu Nov 08, 2012 12:26 pm

"நம் மக்கள் உங்களிடம் ஏதோ சந்தேகத்தைப் பற்றி விளக்கம் கேட்கவேண்டுமாம்.அதற்காக உங்களைக் காண வஎதிருக்காங்க மன்னா...",
அமைச்சர் வண்டுமுருகன் கூறியதும்,
"ம்ம்ம்...வரசொல்லு அவர்களை....",
என ஆணவமாக பதிலளித்தார் இம்சை அரசன்.
சிறுது நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கூட்டமாக அரண்மனையில் கூடினர்.
"மக்களே....உங்களுக்கு எல்லாம் என்ன சந்தேகம்.?எதற்கு விளக்கம் வேண்டும்?அதை என்னிடம் தாராளமாக கேளுங்கள்...",
என்று இம்சை அரசன் கூறியதும்..

"இந்த தீபாவளியை நாங்க கொண்டாடலாமா?வேண்டாமா?",
சட்டென மக்கள் கூட்டத்தில் இருந்து குரல் வந்தது.
அதைக் கேட்ட இம்சை கலகலவென சிரித்தப்படி,
"ஹையோ....ஹையோ...தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்குதானே அமைக்கப்பட்டது.அதை கொண்டாடலாமா வேண்டாமன்னு கேக்குறீங்களே....மக்கு மக்களே...",
என்றதும்,

"அட மங்குனி மன்னா.....நாங்க ஒன்னும் மக்கு இல்ல.எங்களுக்கு வருமானம் குறைந்துப்போச்சு..ஆனால் விலைவாசி ஏறிப்போச்சு.இந்த லட்சணத்தில் இப்படி செலவுகளைக் கொடுக்கும் பண்டிகை தேவையான்னு யோசிக்கிறோம்....",
என வெடித்துசிதறினர் மக்கள்.
"வருமானம் இல்லைன்னா அதுக்கு நான் என்னய்யா பன்னமுடியும்.நீங்கதானே உழைக்கனும்...",
இம்சை அலட்சியமாக கூற,
"ம்ஹூம்....என்னத்தை உழைக்கிறது?24மணி நேரத்தில் 14மணி நேரம் கரெண்ட் இல்லை.தொழிற்சாலைகளில் பாதியை மூடிட்டாங்க..அப்புறம் எங்க வருமானம் வரும்?",
என கூட்டத்தில் இருந்து ஒருவன் ஆக்ரோஷமாக சத்தம்மிட ,இம்சை அமைதியாகினார்.

"500 ரூபாய்கு பட்டாசு வெடி வாங்கினால்,வெத்தலைப்பாக்கை மடிச்சு பொட்டலம் கட்டினாப்ல,சின்ன பொட்டலமா தராங்க.அதை,மிச்சம் செய்து, கார்த்திகை தீப திருநாள் வரை வெச்சு வெடிக்கனும்னு புள்ளைங்களிடம் கன்றாவியா கண்டிஷன் வேற போடவேண்டி இருக்கு...புள்ளைங்களே கேவலமா பாக்குதுங்க...",
கூட்டத்தில் ஒரு குடிமகன் பரிதாபமாக கூற,

"தீவளிக்கு பலகாரங்கள் செய்து சந்தோஷமா சாப்பிடலாம்னு ஆசையா இருக்கு.ஆனல் உங்க ஆட்சியில்,பால்,அரிசி,பருப்பு,ஜீனி,எண்ணை,காஸ் சிலிண்டர்,எல்லாத்தையும் கண்டபடி விலை ஏற்றம் செய்து,,,குதுகலமா இருந்த குடிமகன் குடும்பத்திலெல்லாம் கும்மி அடிச்சிட்டீங்க...",
என அடுத்து ஒரு பிரஜை பரிதாபமாக கூற,
"யோவ்...என்னால இப்படித்தான் ஆட்சி செய்ய முடியும்.இதுக்குமேலே என்கிட்ட பெருசா எதையும் எதிர்பாக்காதீங்க...",
இம்சை அரசு கடுகடுத்தார்.
"குடும்பத்துல இருக்கிற அனைவருக்கும் கடனை வாங்கி புதுத்துணியை வாங்கிக் கொடுத்துட்டு,,,,எங்களைப்போன்ற குடும்ப தலைவர்களெல்லாம் 4முழம் வேட்டியை மட்டும் சாஸ்த்திரத்திற்கு படைக்க வாங்கிக்கிறோம்,,,,இப்படியேப்போனால்....அடுத்து தீபாவளிக்கு எங்களுக்கு சின்ன கர்சீஃப் தான் வாங்க முடியும்...",
பொதுமக்களில் ஒருவர் கூற,

"நன்னாரிப்பசங்களா....அதான் ரேஷன் கடைகளில் இலவச வேடி புடவையெல்லாம் அரசாங்கம் தருதே.அதை வாங்கிகட்டிக்க வேண்டியதுதானே...",
இம்சை அறிவுப்பூர்வமாக கேட்டதும்,
"நீங்க தருகிற வேட்டியைக் கட்டினால்,...எக்ஸ் ரே எடுத்தாப்ல..உள்ளே உள்ள உடம்பு அப்படியே வெளியே தெரியுது மன்னா...வேற வழியில்லாமல் நாங்க அதை வாங்கி கட்டிக்கிறோம்...",
என்ற மக்களிடம் இருந்து பதில வர,,,,
"சரி....நான் இப்ப என்னசெய்யவேண்டும்...அதை சொல்லுங்கள்...",
இம்சை அரசன் கேட்டதும்,

"மாத வருமானம் 25,000 ரூபாய்கு மேல் உள்ளவர்கள் மட்டும் தீபாவளி கொண்டாட வேண்டும்...அதற்கு கீழ் வருமானம் உள்ளோர் தீபாவளிக் கொண்டாடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் போடுங்கள்....",
மக்களில் ஒருவர் கூற,
"இல்லையென்றால்...தீபாவளி பண்டிகையையே அரசு பண்டிகை நாட்களில் இருந்து தூக்கிவிடுங்கள்...",
"இல்லையென்றால்.....முறையாக மனசாட்சியுடன் ஆட்சி செய்து மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துங்கள்...",
என ஒருவர் கூற அதைக் கேட்ட இம்சை சட்டென எழுந்து,
"மனசாட்சிப்படியெல்லாம் ஆட்சி செய்ய முடியாது.வேண்டுமென்றால் வருமானதிற்கு சிங்கி அடிக்கும்,வசதி இல்லாதவர்கள் தீபாவளியை கொண்டாடதீர்கள்...",
ஆவேசமாக கூற,
"வசதியானவர்களுக்குதான் தீபாவளியா?அப்படியென்றால்,அதை கண்டு எங்க பிள்ளைகள் ஏங்கிப்போகும் மன்னா..அவர்கள் சந்தோஷத்திற்காக நாங்க கந்துவட்டிக்கு கடன் வாங்கி கொண்டாடுகிறோம்..",
என மக்களில் ஒரு பெண் பரிதாபமாக கூற,
"நம்ம நாடே..அக்கம் பக்கதுல உள்ள நாடுகளில் கடன் வாங்கும்போது...ஒரு சாதராண குடிமகன் நீங்கலெல்லாம் கடன் வாங்கின தப்பில்ல...",
இம்சை சிரித்தப்படி ஆறுதல் கூற,
"இறுதியாக உங்கள் கருத்து என்ன என்பதை தெளிவாக சொல்லுங்க...",
மக்கள் இம்சை அரசிடம் ஆரவாரம் செய்ததும்,

"தீபாவளிக்கு..உங்களைப் போன்று பஞ்சப்பாட்டு பாடும் மக்கள் அனைவரையும் எங்கேனும் நாடுகடத்தி விடுகிறேன்,.இங்க வசதியனாவர்கள் மட்டும் இருந்துக்கொண்டு தீபாவளியைக் கொண்டாடட்டும்.தீபாவளி முடிஞ்சதும் உங்கள் அனைவரையும் எவ்வித சேதாரமும் இன்றி நம் நாட்டுக்கு கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்....ஆட்டத்துக்கு நான் ரெடி...நீங்க ரெடியா?",
என மக்களைப் பார்த்து கேட்டதும்...

"சூப்பர் ஐடியா மன்னா,.எங்களை நாடு கடத்துங்கள்.நாங்களும் வெளிநாடுகளை சுற்றிப் பார்த்தாப்ல இருக்கும்...",
என்று மக்கள் அனைவரும் சந்தோஷமாக குரல் தந்தனர்...
"இம்சை அரசர் வாழ்க வாழ்க...",
மக்கள் கூட்டம் ஆரவராம் செய்ய,இம்சை அரசன் மனம் மகிழ்ந்தார்...






இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

"இம்சை அரசு" தர்பார்: பாகம்;7 Empty Re: "இம்சை அரசு" தர்பார்: பாகம்;7

Post by மகா பிரபு Thu Nov 08, 2012 12:41 pm

நகைச்சுவையாக சொன்னாலும், உள்ளே சொன்னவை மனதை பாதிக்கிறது. இன்னும் கொஞச காலத்தில் எப்படி வாழப் போகிறோம் என்றே தெரியவில்லை.

அட்வாண்ஸ் தல தீபாவளி வாழ்த்துக்கள் அண்ண்! லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

"இம்சை அரசு" தர்பார்: பாகம்;7 Empty Re: "இம்சை அரசு" தர்பார்: பாகம்;7

Post by இம்சை அரசன் Thu Nov 08, 2012 4:59 pm

நன்றி பிரபு
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

"இம்சை அரசு" தர்பார்: பாகம்;7 Empty Re: "இம்சை அரசு" தர்பார்: பாகம்;7

Post by ஸ்ரீராம் Fri Nov 09, 2012 12:49 am

நாட்டு நடப்பை தோலுரித்து காட்டியுள்ளீர்கள் அரசே. என்ன ஒரு சோதனை நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் ?!?!?!?!?!!?!?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"இம்சை அரசு" தர்பார்: பாகம்;7 Empty Re: "இம்சை அரசு" தர்பார்: பாகம்;7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum