Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உயரத்தை எட்ட உதற வேண்டிய 4 விஷயங்கள்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
உயரத்தை எட்ட உதற வேண்டிய 4 விஷயங்கள்!
‘‘சமைக்காதீங்க... சாமி கும்பிடாதீங்க... சாட் பண்ணாதீங்க...ஷாப்பிங் பண்ணாதீங்க...
இந்த நான்கு விஷயங்களையும் தவிர்த்தீங்கன்னா, வாழ்க்கையில உயரத்துக்குப் போயிடுவீங்க!’’ஃபிக்கி (ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சாம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி) அமைப்பின் ஒரு அங்கமான ஃபிக்கி லேடீஸ் ஆர்கனைசேஷன் சார்பாக, பெண் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் இந்தக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார் நேச்சுரல்ஸ் அதிபர் குமாரவேல். 3 ஆயிரம் சலூன்களை எட்டிப் பிடிக்கிற கனவுடன் ஓடிக் கொண்டிருக்கிற குமாரவேலுக்கு, அவற்றில் ஆயிரம் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதே லட்சியம். இந்திய அகராதியிலிருந்து ‘இல்லத்தரசி’ என்கிற வார்த்தையே நீக்கப்பட வேண்டும் என்பதை தான் பங்கேற்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வலியுறுத்துகிற குமாரவேல், வீட்டை விட்டு வெளியே வந்து, சாதிக்க நினைக்கிற பெண்களுக்கு இந்த முறை சொன்ன அறிவுரைகள் அத்தனையும் புதுமை!
சமைக்காதீங்க...
சமையலை தன்னோட உரிமையா பார்க்கிற பெண்களுக்கு, இதைக் கேட்டதும் கோபம் வரும். சமையலை ஒட்டுமொத்தமா தூக்கிப் போடுங்கனு நான் சொல்லலை. சமையலுக்கான நேரத்தையும் சமையலைப் பத்தின சிந்தனைக்கான நேரத்தையும் குறைச்சுக்கோங்கனு சொல்றேன். இந்தியப் பெண்களோட வாழ்க்கையில 30 முதல் 35 சதவிகித நேரமானது சமையலறைக்குள்ளயே வீணாகுது. வேலைக்குப் போனா யார் சமையலைப் பார்க்கிறது, பிசினஸ் தொடங்கினா சமைக்க எப்படி நேரம் ஒதுக்குறது, ராத்திரிக்கு என்ன சமைக்கிறது, காலையில என்ன சமைக்கிறதுனு பொழுதுக்கும் சமையலைப் பத்தின சிந்தனைதான் அவங்களுக்கு அதிகமா இருக்கு. சமையலை தொழிலா பார்க்கிறவங்களும் பண்றவங்களும் அதைப் பத்தி யோசிக்கிறதுல தப்பில்லை. மத்தவங்க அதை விட்டு வெளியே வரணும். பெண்கள் சமையலை விடவும் வேற பெரிய வேலைகள் செய்யப் படைக்கப்பட்டவங்க. வெளிநாடுகள்ல எந்தப் பெண்ணும் சமையலுக்காக இவ்வளவு நேரத்தை வீணாக்கறதில்லை. ஸோ... வேலை, பிசினஸ்னு அடுத்தகட்டத்தை நோக்கி நகரணும்னு நினைக்கிற பெண்கள், சமையல் பொறுப்பை வேற ஒருத்தர்கிட்ட ஒப்படைச்சிடலாம்.
சாமி கும்பிடாதீங்க...
கடவுளை நம்பறதும் நம்பாததும் அவங்கவங்க தனிப்பட்ட உரிமை. நான் அதைப் பத்திப் பேசலை. வாழ்க்கையில நடக்கிற, நடக்காத எல்லாத்துக்கும் சாமி முன்னாடி மணிக்கணக்கா உட்கார்ந்துக்கிட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்னுதான் சொல்றேன். ஆண்களைவிட பெண்கள்தான் ஜோசியம், வாஸ்து, மந்திரம், மாந்திரீகம் மாதிரியான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஒருத்தன் தனக்கு லாட்டரியில பரிசு விழணும்னு மூணு வருஷமா சாமியை விழுந்து விழுந்து வேண்டிக்கிட்டிருந்தானாம். அவனோட வேண்டுதலைப் பார்த்த கடவுளும் ஒருநாள் அவனுக்கு தரிசனம் கொடுத்தாராம். ‘கடவுளே... எப்படியாச்சும் எனக்கு லாட்டரியில பரிசு கிடைக்கச் செய்யுங்க’னு கேட்டானாம். ‘எல்லாம் சரிப்பா... முதல்ல லாட்டரிச் சீட்டு வாங்கு’னு சொல்லிட்டுப் போனாராம் கடவுள். அந்த மாதிரி நடக்க வேண்டிய விஷயங்களுக்கான முயற்சிகளைப் பத்தி யோசிக்காம, எல்லாத்தையும் கடவுள் கிட்ட ஒப்படைச்சிட்டு ஒதுங்கி நிற்கறது தப்பு. தினம் அஞ்சு நிமிஷமோ, பத்து நிமிஷமோ சாமி கும்பிடுங்க. அதை உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கிற விஷயமா மட்டும் பாருங்க. பிரச்னைகள்லேருந்து தப்பிக்கிறதுக்கான வழியா பார்க்காதீங்க.
சாட் பண்ணாதீங்க...
போன்ல பேசறது, சாட் பண்றது, சமூக வலைத்தளங்கள்ல மூழ்கிக்கிடக்கறது, டி.வி., சினிமானு பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறதுனு எல்லாத்தையுமே தவிர்க்கணும். ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த விஷயங்கள் தொழில் ரீதியா அவங்களுக்கு அவசியப் படும்னா, ஓ.கே. மத்தபடி பொழுதுபோக்கறதுக்காக இதுல நேரத்தை விரயம் பண்றது வேண்டாம். இந்த விஷயங்களைச் செய்யறதுக்கான நேரத்தைப் போலவே, அது பத்திப் பேசறதுக்கான நேரத்தையும் சேர்த்து வீணாக்கிறாங்க பல பெண்களும். அதைக் குறைச்சிட்டு, ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு நேரத்தை ஒதுக்கலாம்.
ஷாப்பிங் பண்ணாதீங்க...
இன்னிக்கு உட்கார்ந்த இடத்துலேருந்தே மளிகைச்சாமான்கள்லேருந்து, காய்கறி, பழம், வீட்டு உபயோகப் பொருட்கள்னு எல்லாத்தையும் வாங்கற ஆன்லைன் ஷாப்பிங் வசதிகள் வந்திருச்சு. ஆனாலும், ‘அதெல்லாம் முடியாது... நான் கடை கடையா ஏறி, இறங்கிதான் ஷாப்பிங் பண்ணுவேன்’னு அடம் பிடிக்கிறது நேர விரயம். இப்படி அவசியமில்லாத விஷயங்களுக்கான நேரத்தைக் குறைச்சு, ஆக்கப்பூர்வமான வேலைகளுக்குத் திருப்பினாலே, பெண்கள் பொருளாதார ரீதியான சுதந்திரத்தை அடையறதுக்கான கதவுகள் திறக்கும். பணம் என்பது ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் அத்தியாவசியமானது. அது பயப்படற விஷயமில்லை... பயன்தரும் விஷயம். பணம் இருந்தா, வாழ்க்கையின் எதிர்ல இருக்கிற சாய்ஸ்களை பார்த்து, ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவும் முடியும். பொருளாதார சுதந்திரம் என்பது யாரும் கொடுத்துப் பெறும் விஷயமில்லை. பெண்கள் தாமாகவே தேடிப் பெறுவது!
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உயரத்தை எட்ட உதற வேண்டிய 4 விஷயங்கள்!
ச்சீ... இது நம்மால முடியாத விஷயங்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்
» மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய 30 விஷயங்கள்
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
» தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..
» ஆலயத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
» மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய 30 விஷயங்கள்
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
» தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..
» ஆலயத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|