தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

View previous topic View next topic Go down

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி ! Empty ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

Post by முழுமுதலோன் Sun Apr 05, 2015 2:59 pm

எது வளர்ச்சி ?

எங்க பார்த்தாலும் வளர்ச்சி வளர்ச்சினே பேசிக்கிறாங்க . தனி மனித வளர்ச்சி , கிராம நகர வளர்ச்சி , பொருளாதார வளர்ச்சி ,நாட்டின் வளர்ச்சி , உலகின் வளர்ச்சினு பலவிதமான வளர்ச்சி பற்றி பலரும் வகுப்பெடுக்கறாங்க . உலகமயமாக்கல், இந்த வளர்ச்சின்ற பேர சொல்லிக்கிட்டு தான் உலகெங்கும் கிளை பரப்புகிறது. உண்மையில் உலகமயமாக்கலால் வளர்ந்ததை விட அழிந்ததே அதிகம். அப்படியென்றால் வளர்ச்சியை எப்படி நிர்ணயம் செய்வது ?

வளர்ச்சியின் உண்மையான பொருள் இயற்கையிடமிருக்கிறது. இயற்கையில் வளர்ச்சி என்பது அழிவால் வருவதில்லை. அழிவு இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமநிலை இயற்கையில் பேணப்படுகிறது. அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் இயற்கை ஒருபோதும் ஆதரிப்பதில்லை . இன்றைய நவீன வளர்ச்சி என்பது அளவுக்கு மீறிய வளர்ச்சியையும் , உடனடியான வளர்ச்சியையும் நோக்கி மனிதனைத் தள்ளுகிறது .உலகமய வளர்ச்சியில் சமநிலைக்கு சிறிதும் இடமில்லை. ஏற்றத்தாழ்வுகளை முன்பிருந்ததை விட அதிகப்படுத்தியது தான் உலகமயமாக்கலின் சாதனை. முற்றுப் பெறாத வளர்ச்சியை உலகமயமாக்கல் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த முற்றப்பெறாத வளர்ச்சி தான் ஒரு நிறுவனத்தின் அழிவுக்குக் காரணமாகிறது .

உண்மையில் வளர்ச்சி என்பது கொடுத்துப் பெறுவதும் , பெற்றுக் கொண்டு கொடுப்பதும் தான் , ஒன்றை அழித்துப் பெறுவதல்ல . ஒரு மரத்தின் வளர்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் . ஒரு மரம் விதையிலிருந்து வளர்ந்து முழு வளர்ச்சியை அடைவது வரை நீர் , வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகள், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு , ஆக்ஸிஜன் , வெப்பம் , குளிர் போன்ற பல்வேறு காரணிகள் தேவைப்படுகின்றன. அதே மரம் வளரும் போதும் , வளர்ந்த பின்பும் நிறைய பலன்களைத் தருகிறது . மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது , ஆக்ஸிஜன் கிடைக்கிறது , மழைப் பொழிவுக்குக் காரணமாகிறது, பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்வதற்கு வாழிடத்தையும் , உணவையும் தருகிறது , வறண்ட காற்றை குளுமைப்படுத்துகிறது ,நிழல் தருகிறது இவ்வாறு பலவற்றை தன்னைச் சுற்றி இருப்பவற்றுக்கு தருகிறது. பல நாடுகளில் சம்பாதித்து ஒரே இடத்தில் குமிக்கும் வேலையை மரங்கள் செய்வதில்லை ; மனிதர்கள் செய்கிறார்கள் . மாறாத சமநிலையுடன் தன்னைச் சுற்றி இருப்பவற்றிடமிருந்து பெற்றுக் கொண்டு கொடுப்பதும் , கொடுத்துப் பெறுவதும் தான் உண்மையான வளர்ச்சி.

சமநிலையைப் பேணாத எதுவும் வளர்ச்சியல்ல ; குறைபாடு தான் . இன்றைய வளர்ச்சி என்பது இயற்கையை அழிப்பதில் தொடங்கி இயற்கையை அழிப்பதிலேயே முடிகிறது. ஆறுகளும் , மலைகளும், மரங்களும் பெரிய அளவில் ஒரே நேரத்தில் அழிவைச் சந்திக்கின்றன , வளர்ச்சியின் காரணமாக . கட்டுப்பாடுள்ள வளர்ச்சி தான் எல்லோருக்கும் நல்லது. பத்தடி வளரும் மரம் 12 அடி வளரலாம் , நூறடி வளர்ந்தால் யாருக்கும் லாபமில்லை. அதிகபட்ச வளர்ச்சியே அதிகபட்ச அழிவைத்தரும் மரத்துக்கும் தான் ,மனிதனுக்கும் தான் , நாட்டுக்குந்தான். பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை கட்டுக்குள் வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை .கடமையைச் செய்யாமல் இருக்க அரசுகளே விலை போகின்றன.

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி ! Empty Re: ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

Post by mohaideen Mon Apr 06, 2015 10:17 am

வளர்ச்சி பற்றி நல்ல தகவல்கள் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி ! Empty Re: ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

Post by ஸ்ரீராம் Mon Apr 06, 2015 11:00 am

சென்ற வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பதிவு
பகிர்வுக்கு நன்றி அண்ணா. 

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி ! GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm3
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி ! Empty Re: ஒன்றை அழித்துப் பெறுவதல்ல வளர்ச்சி. ஒன்றைக் கொடுத்துப் பெறுவதே வளர்ச்சி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum