Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜே.கே
Page 1 of 1 • Share
ஜே.கே
பேரினைப் பாடப் புகழ்பாட, விண்தொட்ட
சீரினைப் பாடநினைந் தேனையோர் - நேரிணை
இல்லா தவனே இழவினைப் பாடென்று
சொல்லாமற் சொன்னதென் சொல்?
திறத்தினைப் பாடத் திசையெட்டு மோங்கு
சிறப்பினைப் பாடநினைந் தேனை -இறப்பினைப்
பாடிப் புலம்பென்று கூறி இருகண்ணை
மூடிமறைந் தால்என் முறை?
நடைபாட, ஈர்க்கும் நளினமிகு பேச்சுப்
படைபாட நின்றவன்நீ பெற்ற - விடைபாடி
ஆவென் றழுதரற்றி என்கவிப்பூ பாடையில்
தூவெனத் தூவிடவோ சொல்.
எழில்பாட வந்துன் எதிர்பாட வீரக்
கழல்பாட நின்றேன்;பேய்க் காற்றின் - சுழல்பாட்டைக்
கேட்குமோ பூவனம்? கேட்கவும் வலியுண்டோ?
தாக்குந் துயர்அத் தகை!
கம்பீர மென்றுங் குறையாமற் கர்ச்சிக்கும்
உன்வீரம் பாடநினைந் தேன்ஐயோ -வெம்பாரம்
ஏற்றியென் நெஞ்சை எரிக்கவே நீயின்று
கூற்றொடுஞ் சென்றதென் கூறு?
எச்சில் விழுங்கும் எரிமலையும் உன்பேரை
உச்சரித்தால் என்றே கவிபாடி - உச்சி
முகர விருந்தவென் நெஞ்சைப் பிரிவால்
தகர்ப்பதெவ் வாறு தகும்?
எழுத்தென்று சொன்னால் இதுவே; உலகில்
எழுத்தாளன் என்றால் இவனே! - முழுத்தகுதி
பெற்றவன்வே றாரென்று பேசவே வைத்தவெம்
கொற்றவ! போனாயோ இன்று?
வசைபாடி வந்தவர் வாய்விட் டலற
இசைபாடி வந்தோர் இடிய - அசைந்தாடி
பூந்தேரில் ஏறிப் புறப்பட்டாய்; மீண்டுமுனை
வேந்தனே காண்பதெவ் வாறு?
மீசை முறுக்கும் கரமெங்கே? நற்றமிழை
வீசிச் செருக்கும் குரலெங்கே? - நீசர்
குடலைக் கலக்குமப் பார்வையெங்கே? யென்று
கடலை வடிக்குதே கண்.
பெட்டையும் ஏந்துவான் போர்வாள்; எழுதுகோலைத்
தொட்டெழுத வேண்டுமடா பேராண்மை! - எட்டுதிசை
எங்கிலும் இஃதை எழிலுறவே சாற்றியவென்
சிங்கமே மாயுமோநின் சீர்?
நிமிரத் தமிழ்க்குலம் நின்றவன் போனாய்
அமரப் பதவி அடைந்தாய் - குமுறும்
மனத்தினை எவ்வாறு தேற்றுவேன்? எம்தலைவ!
உனக்கென்ன போகின்றாய் போ!
(என் அபிமான எழுத்தாளன் ஜெயகாந்தனின் மரணத்திற்காக எழுதியது)
-----------ரௌத்திரன்
சீரினைப் பாடநினைந் தேனையோர் - நேரிணை
இல்லா தவனே இழவினைப் பாடென்று
சொல்லாமற் சொன்னதென் சொல்?
திறத்தினைப் பாடத் திசையெட்டு மோங்கு
சிறப்பினைப் பாடநினைந் தேனை -இறப்பினைப்
பாடிப் புலம்பென்று கூறி இருகண்ணை
மூடிமறைந் தால்என் முறை?
நடைபாட, ஈர்க்கும் நளினமிகு பேச்சுப்
படைபாட நின்றவன்நீ பெற்ற - விடைபாடி
ஆவென் றழுதரற்றி என்கவிப்பூ பாடையில்
தூவெனத் தூவிடவோ சொல்.
எழில்பாட வந்துன் எதிர்பாட வீரக்
கழல்பாட நின்றேன்;பேய்க் காற்றின் - சுழல்பாட்டைக்
கேட்குமோ பூவனம்? கேட்கவும் வலியுண்டோ?
தாக்குந் துயர்அத் தகை!
கம்பீர மென்றுங் குறையாமற் கர்ச்சிக்கும்
உன்வீரம் பாடநினைந் தேன்ஐயோ -வெம்பாரம்
ஏற்றியென் நெஞ்சை எரிக்கவே நீயின்று
கூற்றொடுஞ் சென்றதென் கூறு?
எச்சில் விழுங்கும் எரிமலையும் உன்பேரை
உச்சரித்தால் என்றே கவிபாடி - உச்சி
முகர விருந்தவென் நெஞ்சைப் பிரிவால்
தகர்ப்பதெவ் வாறு தகும்?
எழுத்தென்று சொன்னால் இதுவே; உலகில்
எழுத்தாளன் என்றால் இவனே! - முழுத்தகுதி
பெற்றவன்வே றாரென்று பேசவே வைத்தவெம்
கொற்றவ! போனாயோ இன்று?
வசைபாடி வந்தவர் வாய்விட் டலற
இசைபாடி வந்தோர் இடிய - அசைந்தாடி
பூந்தேரில் ஏறிப் புறப்பட்டாய்; மீண்டுமுனை
வேந்தனே காண்பதெவ் வாறு?
மீசை முறுக்கும் கரமெங்கே? நற்றமிழை
வீசிச் செருக்கும் குரலெங்கே? - நீசர்
குடலைக் கலக்குமப் பார்வையெங்கே? யென்று
கடலை வடிக்குதே கண்.
பெட்டையும் ஏந்துவான் போர்வாள்; எழுதுகோலைத்
தொட்டெழுத வேண்டுமடா பேராண்மை! - எட்டுதிசை
எங்கிலும் இஃதை எழிலுறவே சாற்றியவென்
சிங்கமே மாயுமோநின் சீர்?
நிமிரத் தமிழ்க்குலம் நின்றவன் போனாய்
அமரப் பதவி அடைந்தாய் - குமுறும்
மனத்தினை எவ்வாறு தேற்றுவேன்? எம்தலைவ!
உனக்கென்ன போகின்றாய் போ!
(என் அபிமான எழுத்தாளன் ஜெயகாந்தனின் மரணத்திற்காக எழுதியது)
-----------ரௌத்திரன்
Re: ஜே.கே
மூச்சு முட்டுகிறது உங்கள்
மூர்க்கத் திறமையை நோக்குகையில்
பாராட்டுக்கள்
மூர்க்கத் திறமையை நோக்குகையில்
பாராட்டுக்கள்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஜே.கே
மீசை முறுக்கும் கரமெங்கே? நற்றமிழை
வீசிச் செருக்கும் குரலெங்கே? - நீசர்
குடலைக் கலக்குமப் பார்வையெங்கே? யென்று
கடலை வடிக்குதே கண்.
என்ன செய்ய நாம் தான் அவரைப் போல் வளர வேண்டும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum