தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியா என் தாய்த்திரு நாடு!

View previous topic View next topic Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் Wed Apr 29, 2015 10:33 am

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

வாள்பிடித்த மரபுயென்று
வக்கணையாய்ப் பேசிவிட்டு
வால்பிடித்து வாழுகின்ற
வகையான தத்துவத்தை
நூல்வடித்து வைத்திருக்கும்
நாணமே சிறிதுமில்லா
சீழ்பிடித்த பிணங்களவர்
சூழ்ந்திருக்கும் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

சூடு சொரணையெலாம்
சோற்றுக்கு விற்றுவிட்டு
கூடு தனைவளர்க்க
கூனிக் குறுகிநிற்பார்!
நாடு எரிகையிலும்
நெஞ்சில் பதற்றமின்றி
வீடு காத்திருக்கும்
வீரமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

தாகம் என்றொருவாய்த்
தண்ணீர்க் கேட்டழுவார்
தேகம் துடிப்பதனைத்
தள்ளிநின்று பார்த்துவிட்டுப்
போகுமுயிர் போனபின்னே
பிணத்தை வலம்வந்தே
நீர்க்குடம் உடைக்கும்;ஈர
நெஞ்சமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

ஈழம் இடுகாடாய்
இனத்தின் சுடுகாடாய்
ஓலம் மிகுத்தாலும்
ஒக்கக் குரலெழுப்பி
காலம் கடத்துகின்ற
கண்கட்டு வித்தைகளின்
ஜாலம் காட்டுகின்ற
அரசதனைக் கேளார்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

தட்டிக் கேட்பதற்கும்
தலைபோகும் என்றிடுவார்!
எட்டி உதைப்பதற்கும்
எடுப்பர் காலென்பார்!
முட்டிக்கொண் டழுவதற்கும்
மனதில் திடமின்றிப்
பெட்டிப்பாம் பாய்க்கிடக்கும்
பேடிகளின் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

தகப்பன் தலையிங்கே
தவிக்கும் உடலெங்கோ!
இடுப்பில் இதையறியா
இளம்பிள்ளை அழுகிறது!
ஒப்பாரி வைப்பாளோ
தாலாட்டுப் படிப்பாளோ
அப்"பாவி" மகள்கதை
ஐயா! நமக்கெதற்கு?
துப்புகெட்ட மக்காள்!நீர்
தூங்கிக் கொண்டிருங்கள்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by kanmani singh Wed Apr 29, 2015 11:47 am

ஆக்ரோஷமான கவிதை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் Wed Apr 29, 2015 1:45 pm

மிக்க நன்றி! ---------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 29, 2015 7:24 pm

தட்டிக் கேட்பதற்கும்
தலைபோகும் என்றிடுவார்!
எட்டி உதைப்பதற்கும்
எடுப்பர் காலென்பார்!
முட்டிக்கொண் டழுவதற்கும்
மனதில் திடமின்றிப்
பெட்டிப்பாம் பாய்க்கிடக்கும்
பேடிகளின் நாடு!

வேறு வழியில்லை இங்கே தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் Wed Apr 29, 2015 8:06 pm

உண்மைதான்...இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்...அதனால்தான் அத்தனை ஆத்திரம் வருகிறது. நன்றி! ----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by thamiliniyan Wed Apr 29, 2015 8:14 pm

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

வலிக்கிறது இந்த வரிகள் ரௌத்திரன் !
தவறாய் எழுதி விட்டீர்களோ என்று தோன்றுகிறது.!
என்ன தான் கேடானாலும்
தாய் நாடல்லவா?
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் Wed Apr 29, 2015 8:28 pm

அந்த நேசிப்பு இருப்தனால்தான் இந்தக் கோபம்....என் தாய் நாடு என்பதனால்தான் இத்தனை வலி வருகிறது! இது உரிமையின் பேரில் வருகின்ற கோபமும் சலிப்பும்... நன்றி தோழர்! -----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 30, 2015 8:19 am

சில கவிஞர்களின் கவிதைகள்

எங்கள் தேசத்தை சுற்றி
யாரோ சிலர்
வேலி அமைத்திருக்கிறார்கள்
கொஞ்ச தூரம் துப்பாக்கி
கொஞ்ச தூரம் பீரங்கி
கொஞ்ச தூரம் அணுகுண்டு என்று
வேலிகள் நீண்டு கிடக்கின்றன.
வேலிகளுக்கு நடுவில்
நாங்கள் படித்துக்கொண்டிருக்கிறோம்
“யாதும் ஊரே யாவரும் கேளீர்”
(முகிலன், இறகுதிர் காலம், ப.75)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 30, 2015 8:19 am

குடும்பக் கட்டுப்பாடு
குறித்து விளம்பரப்படுத்தும்
நாட்டில் பிறந்ததால்
உன் பிறப்பு கூட பாரமாகிவிட்டது.
இந்த நாட்டிற்கு! (கனியன் செல்வராஜ், தமிழனும் இந்தியனே!, ப.11)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 30, 2015 8:20 am

எனக்கொரு தேசம் இருந்தது
என் இனத்திற்கு மொழி இருந்தது
அதுவும் உன் மொழிதான்.
நேற்றுவரை
பாதங்கள் தேய உலா வரவும்
தரையில் படுத்து உருண்டு புரளவும்
ஓடிப்பிடித்து விளையாட
வெட்ட வெளிப்பரப்பும்
தாகம் தீரக் குடிக்க
நறுநீர்ச் சுனைகளும்
உழைத்து வீடு திரும்ப
மலைத் தோட்டத்தில் பிழைப்புமென…
எல்லாம் எல்லாமென சுதந்திரமாய்
எனக்கானதாய் இருந்தது. (விழி.பா. இதயவேந்தன், முரண்தடை, ப.84)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 30, 2015 8:20 am

அகதிகளாக
அடைபட்டுக் கிடக்கிறோம்
அவதிகளால்
அல்லல்பட்டு இறக்கிறோம்
யுத்தத்தின் ஒலிகளில்
சிரிப்பொலி மறந்தோம்
வாழ்வினில் பொலிவிழந்தோம்
மகிழ்வானின் வழி இழந்தோம்
(மு.ஜ. மன்சூர் அஹ்மத், காற்றைப் பகிர்தல், ப.23)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 30, 2015 8:20 am

தமிழக் கொலைகளுக்கு
முன்னும் பின்னும் திமிரும் உற்சாகத்
தினவேற்றிக் கொள்ள அவர்கள்
உடம்பின்
ஒவ்வொரு திசுவுக்கும் ஒவ்வொரு
தமிழ்ப் பெண் தேவை. (ஈரோடு தமிழன்பன், என் அருமை ஈழமே!, ப.101)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by ரௌத்திரன் Thu Apr 30, 2015 6:55 pm

அற்புதம் என்று பாராட்டி ரசித்தற்குரிய எழுத்துகள் அல்ல இவை. நெஞ்சிலே பாறையை ஏற்றி கனக்கச் செய்பவை...நன்றி தோழர்! -----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்தியா என் தாய்த்திரு நாடு! Empty Re: இந்தியா என் தாய்த்திரு நாடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum