Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பித்தப் பூக்கள்...!!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
பித்தப் பூக்கள்...!!
கண்கள்….!!
*
எங்கெங்கோ தேடின
கண்கள்
எங்கேயிருக்கிறாய் என்று
காட்டிக் கொடுத்தது.
உன் அசையும்
உன் சிரிப்பலையும்
அருகில் நெருங்கி வந்துப்
பார்த்தேன்…. ஏமாந்தேன்
அது நீயில்லை என்பது
உறுதியானது
உடம்பெல்லாம் வியர்த்தேன்
வெட்கத்தில் குனிந்தேன்
நடந்தச் சம்பவம்
நான் சொன்னதைக் கேட்டு
நீ சிரித்தாய் ரொம்ப நேரம்
அந்தச் சிரிப்பில் மலர்ந்த
உன் முகம் தான்
எத்தனை அழகு….!!
*
*
எங்கெங்கோ தேடின
கண்கள்
எங்கேயிருக்கிறாய் என்று
காட்டிக் கொடுத்தது.
உன் அசையும்
உன் சிரிப்பலையும்
அருகில் நெருங்கி வந்துப்
பார்த்தேன்…. ஏமாந்தேன்
அது நீயில்லை என்பது
உறுதியானது
உடம்பெல்லாம் வியர்த்தேன்
வெட்கத்தில் குனிந்தேன்
நடந்தச் சம்பவம்
நான் சொன்னதைக் கேட்டு
நீ சிரித்தாய் ரொம்ப நேரம்
அந்தச் சிரிப்பில் மலர்ந்த
உன் முகம் தான்
எத்தனை அழகு….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
வாட்ஸ்அப் காதல் தூது…!!
*
செல்பி எடுத்து எடுத்து
வாட்ஸ்அப்பில் சளைக்காமல்
உன் உருவப் படத்தை
அனுப்பி வைக்கிறாய்.
உன் அழகான புன்னகையில்
மலர்ந்த முகம் நெற்றி பொட்டு
காதில் தொங்கும் கம்மல்
சுருட்டை முடி கூந்தல்
மல்லிகைப் பூவின் வெண்மை
பிடித்தமான நிறப் புடவையில்
உன்னைப் பார்த்து பார்த்து
ரசிக்கிறேன்…ருசிக்கிறேன்
என்னுடைய பதில் பதிவை
அவ்வப்போது உனக்கு
அனுப்பி விடுகிறேன்
அதைப் படித்து வெட்கத்தில்
நீ பதித்தப் பதில்கள்
எனக்கு தெம்பூட்டுகின்றன
உற்காசத்தில் நானும்
என்னை செல்பி எடுத்து
அனுப்பியதைப் பார்.
அழகாகயிருக்கிறேனா? சொல்.
செந்தாமரைப் பூவாய்
மலர்ந்து செழிக்கட்டும்
நம் காதல்.
தினம் தினம் தவறாமல்
பரிமாறிக் கொள்வோம்
செல்பி வாட்ஸ்அப் தூது
*
*
செல்பி எடுத்து எடுத்து
வாட்ஸ்அப்பில் சளைக்காமல்
உன் உருவப் படத்தை
அனுப்பி வைக்கிறாய்.
உன் அழகான புன்னகையில்
மலர்ந்த முகம் நெற்றி பொட்டு
காதில் தொங்கும் கம்மல்
சுருட்டை முடி கூந்தல்
மல்லிகைப் பூவின் வெண்மை
பிடித்தமான நிறப் புடவையில்
உன்னைப் பார்த்து பார்த்து
ரசிக்கிறேன்…ருசிக்கிறேன்
என்னுடைய பதில் பதிவை
அவ்வப்போது உனக்கு
அனுப்பி விடுகிறேன்
அதைப் படித்து வெட்கத்தில்
நீ பதித்தப் பதில்கள்
எனக்கு தெம்பூட்டுகின்றன
உற்காசத்தில் நானும்
என்னை செல்பி எடுத்து
அனுப்பியதைப் பார்.
அழகாகயிருக்கிறேனா? சொல்.
செந்தாமரைப் பூவாய்
மலர்ந்து செழிக்கட்டும்
நம் காதல்.
தினம் தினம் தவறாமல்
பரிமாறிக் கொள்வோம்
செல்பி வாட்ஸ்அப் தூது
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
வலி…!!
*
நீ
அனுப்பிய பிறந்த நாள்
வாழ்த்துச் செய்தியை
வாட்ஸ்அப்பில் படித்தேன்.
உயிர்எழுத்துக்களைப் படித்து
உன் உணர்வவுகளைப்
புரிந்துக் கொண்டேன்.
பூக்களுக்குத் தான் தெரியும்
பூக்களின் அருமை.
யாருக்குத் தெரியும்
நம் அவல நிலைமை.
நெருஞ்சி முள்ளாய்
தைக்கின்றன இன்னும்
நம்மிருவரின்
பிரிவின் வலி….!!
*
*
நீ
அனுப்பிய பிறந்த நாள்
வாழ்த்துச் செய்தியை
வாட்ஸ்அப்பில் படித்தேன்.
உயிர்எழுத்துக்களைப் படித்து
உன் உணர்வவுகளைப்
புரிந்துக் கொண்டேன்.
பூக்களுக்குத் தான் தெரியும்
பூக்களின் அருமை.
யாருக்குத் தெரியும்
நம் அவல நிலைமை.
நெருஞ்சி முள்ளாய்
தைக்கின்றன இன்னும்
நம்மிருவரின்
பிரிவின் வலி….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
இன்னிசை…!!
*
இசை விரும்பி நீயென்பது
எத்தனையோ முறைச்
எனக்குச் சொல்லி
விளக்கி இருக்கிறாய்.
மெல்லிசை கர்நாடக இசை
மேனாட்டு இசையென சில
கற்றிருப்பதாகச் சொல்லி
கொஞ்சம் பாடிக் காட்டினாய்.
நான் விரும்பி ரசித்தேன்.
இசைப் பிரியையின் ரசிகன்
என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஒரே ஒருமுறை எனக்காக
ஆனந்தபைரவி ராகம் மட்டும்
பாடு… பாடு….கேட்கிறேன்.
பாடல்களைப் பதிவேற்றம் செய்து
எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பு
விரும்பிக் கேட்டு ரசிக்கிறேன்
இசை அலையில் கலந்து
இணைய விரும்புகிறேன்.
இருவர் வசமாகட்டும்
இனிய இன்னிசை.
*
*
இசை விரும்பி நீயென்பது
எத்தனையோ முறைச்
எனக்குச் சொல்லி
விளக்கி இருக்கிறாய்.
மெல்லிசை கர்நாடக இசை
மேனாட்டு இசையென சில
கற்றிருப்பதாகச் சொல்லி
கொஞ்சம் பாடிக் காட்டினாய்.
நான் விரும்பி ரசித்தேன்.
இசைப் பிரியையின் ரசிகன்
என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஒரே ஒருமுறை எனக்காக
ஆனந்தபைரவி ராகம் மட்டும்
பாடு… பாடு….கேட்கிறேன்.
பாடல்களைப் பதிவேற்றம் செய்து
எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பு
விரும்பிக் கேட்டு ரசிக்கிறேன்
இசை அலையில் கலந்து
இணைய விரும்புகிறேன்.
இருவர் வசமாகட்டும்
இனிய இன்னிசை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
மனம் போல வாழணும்…!!
*
மாமன் வாரான் பாருங்க
மாமன் வாரான் பாருங்க
மடக்கி விரட்டிப் பிடியுங்க
மஞ்சநீரை ஊத்துங்க
வெள்ளை சட்டை பூராவும்
மஞ்சக் கரையாக்குங்க
அக்கா கேட்டா சொல்லுங்க
அடிக்க வந்தா ஓடுங்க.
மச்சினிச்சி மஞ்ச தண்ணி
மனசு நிறைஞ்சி போகணும்
மாமன் எனை நினைச்சி நாளும்
மகிழ்ச்சி பொங்க சிரிக்கணும்.
மாப்பிள்ளைப் பாத்து வைச்சி
மச்சினிக் கல்யாணத்தை
மனம் போலமுடிக்கணும்
சீருசெனத்தி குறையில்லாம
நாளு பேரு பார்க்கணும்
மணமேடையில் வாயாற
மாமன் வாழ்த்த வாழணும்.
*
*
மாமன் வாரான் பாருங்க
மாமன் வாரான் பாருங்க
மடக்கி விரட்டிப் பிடியுங்க
மஞ்சநீரை ஊத்துங்க
வெள்ளை சட்டை பூராவும்
மஞ்சக் கரையாக்குங்க
அக்கா கேட்டா சொல்லுங்க
அடிக்க வந்தா ஓடுங்க.
மச்சினிச்சி மஞ்ச தண்ணி
மனசு நிறைஞ்சி போகணும்
மாமன் எனை நினைச்சி நாளும்
மகிழ்ச்சி பொங்க சிரிக்கணும்.
மாப்பிள்ளைப் பாத்து வைச்சி
மச்சினிக் கல்யாணத்தை
மனம் போலமுடிக்கணும்
சீருசெனத்தி குறையில்லாம
நாளு பேரு பார்க்கணும்
மணமேடையில் வாயாற
மாமன் வாழ்த்த வாழணும்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
கிராமத்து வாசனையை நினைவூட்டியமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பித்தப் பூக்கள்...!!
ந.கணேசன் wrote:மனம் போல வாழணும்…!!
*
மாமன் வாரான் பாருங்க
மாமன் வாரான் பாருங்க
மடக்கி விரட்டிப் பிடியுங்க
மஞ்சநீரை ஊத்துங்க
வெள்ளை சட்டை பூராவும்
மஞ்சக் கரையாக்குங்க
அக்கா கேட்டா சொல்லுங்க
அடிக்க வந்தா ஓடுங்க.
மச்சினிச்சி மஞ்ச தண்ணி
மனசு நிறைஞ்சி போகணும்
மாமன் எனை நினைச்சி நாளும்
மகிழ்ச்சி பொங்க சிரிக்கணும்.
மாப்பிள்ளைப் பாத்து வைச்சி
மச்சினிக் கல்யாணத்தை
மனம் போலமுடிக்கணும்
சீருசெனத்தி குறையில்லாம
நாளு பேரு பார்க்கணும்
மணமேடையில் வாயாற
மாமன் வாழ்த்த வாழணும்.
*
மெட்டுகட்டி பாடிப் பார்த்தேன்.
அருமையாக வருகிறது.
கவிதை மிக அருமை.
கிராமிய மணவாசனை வீசுது.






ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: பித்தப் பூக்கள்...!!
ஆவாரம்பூவே….!!
*
அத்தை மகளே அத்தை மகளே
அழகான ஆவாரம்பூவே
ஆசை அரும்பி எனக்கு
அனலாகக் கொதிக்குதடி
மாமன் எனைக் கொஞ்சம்
தலை நிமிர்ந்து பாரடியோ?
காமம் எனை எழும்பிவிட்டான்
கண்குளிரப் பாரடியோ?
காதல் கல்யாணத்திற்கு
சம்மதம் தருவாயோ?
*
*
அத்தை மகளே அத்தை மகளே
அழகான ஆவாரம்பூவே
ஆசை அரும்பி எனக்கு
அனலாகக் கொதிக்குதடி
மாமன் எனைக் கொஞ்சம்
தலை நிமிர்ந்து பாரடியோ?
காமம் எனை எழும்பிவிட்டான்
கண்குளிரப் பாரடியோ?
காதல் கல்யாணத்திற்கு
சம்மதம் தருவாயோ?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
ந.கணேசன் wrote:ஆவாரம்பூவே….!!
*
அத்தை மகளே அத்தை மகளே
அழகான ஆவாரம்பூவே
ஆசை அரும்பி எனக்கு
அனலாகக் கொதிக்குதடி
மாமன் எனைக் கொஞ்சம்
தலை நிமிர்ந்து பாரடியோ?
காமம் எனை எழும்பிவிட்டான்
கண்குளிரப் பாரடியோ?
காதல் கல்யாணத்திற்கு
சம்மதம் தருவாயோ?
*
கவிதை சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பித்தப் பூக்கள்...!!
தங்கமே…‘‘
*
வாழ்க்கை முரண்களுக்கு எதிராகப்
பிறந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்து
அழகு பார்ப்பதில் தான்
எத்தனைச் சந்தோஷம்?
வறுமையில் வாடினாலும்
வஞ்சனையில்லாமல்
எத்தனையோ
ஆசைக் கனவுகளோடு
உனக்கு தங்கம் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள்
உன் பெற்றோர்கள்.
அழகு படுத்தி ஜொலிப்பதற்கு
உன் மேனியில் துளித்
தங்கமி்ல்லை.
உன் அங்கத்தினை
அலங்கரிக்கத் தங்கம்
இல்லாவிட்டால் என்ன?
என்னையே நீ
அங்கமாக்கிடும்போது
தங்கமே
நீதானே என் அசல்
சொக்கத் தங்கம்….!!
*
*
வாழ்க்கை முரண்களுக்கு எதிராகப்
பிறந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்து
அழகு பார்ப்பதில் தான்
எத்தனைச் சந்தோஷம்?
வறுமையில் வாடினாலும்
வஞ்சனையில்லாமல்
எத்தனையோ
ஆசைக் கனவுகளோடு
உனக்கு தங்கம் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள்
உன் பெற்றோர்கள்.
அழகு படுத்தி ஜொலிப்பதற்கு
உன் மேனியில் துளித்
தங்கமி்ல்லை.
உன் அங்கத்தினை
அலங்கரிக்கத் தங்கம்
இல்லாவிட்டால் என்ன?
என்னையே நீ
அங்கமாக்கிடும்போது
தங்கமே
நீதானே என் அசல்
சொக்கத் தங்கம்….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
காத்திரு…!!
*
மாலை நேரம் நெருங்குது
மனசு அலை பாயுது
எங்கே இருக்கேன்னு
கண்கள் தேடி அலையுது.
*
வெளுத்த மேகம் கருக்குது
மழை வரும்போல தெரியுது
எங்கே இருக்கேன்னு
ஏக்கமாக இருக்குது
*
அனல் தனிஞ்சி வருது
ஆடி காத்து வீசுது
எங்கே இருக்கேன்னு
எம்மனசு துடிக்குது.
*
தூறல் மெல்ல போடுது
மழை வேகமாக கொட்டுது
எங்கே இருக்கேன்னு
என் நெஞ்சும் பதறுது.
*
கஷ்டப்பட்டு வராதே
காத்து மழையில் நனையாதே
ஒதுங்கி எங்கும் நிக்காதே
உபத்திரத்தைத் தேடாதே.
*
எங்கே இருக்கேன்னு
செல்போனில் சொல்லிடு
ஸ்கூட்டரிலே வருகிறேன்
கொஞ்ச நேரம் காத்திரு.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
காத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டுங்க !! என்ன நான் சொல்வது சரிதானுங்க ... 

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பித்தப் பூக்கள்...!!
சொத்து…!!
*
பத்தாம் வகுப்பு படிக்கையில்
பக்கத்துப் பக்கத்தில்
உட்கார்ந்துப் படிச்சிப் பேசி
உரக்கச் சிரிச்சிக்கிட்டோம்.
இப்போ சிரிப்பதற்கு
என் பக்கத்திலே யாருமில்லே.
உன்னருகில் யாரிருக்கா?
உன் சிரிப்பலை
கால் நூற்றாண்டாக
நினைவில் பதிவாகி….
உன் சிரிப்பில் உதிர்ந்த முத்து
ஆயுள் முழுக்க மறக்க முடியாத
அழியாதச் சொத்து…!!
*
*
பத்தாம் வகுப்பு படிக்கையில்
பக்கத்துப் பக்கத்தில்
உட்கார்ந்துப் படிச்சிப் பேசி
உரக்கச் சிரிச்சிக்கிட்டோம்.
இப்போ சிரிப்பதற்கு
என் பக்கத்திலே யாருமில்லே.
உன்னருகில் யாரிருக்கா?
உன் சிரிப்பலை
கால் நூற்றாண்டாக
நினைவில் பதிவாகி….
உன் சிரிப்பில் உதிர்ந்த முத்து
ஆயுள் முழுக்க மறக்க முடியாத
அழியாதச் சொத்து…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
நீலமலர்…!!
*
தாவணிப் பறந்தாட
துள்ளித் துள்ளிப் போறா…
தட்டாம்பூச்சிங்க அவ கூட
சிறகடித்துப் பறக்குது.
*
இலந்தம் பூவைப் போலவே
இளமை ரொம்ப அழகு
மயில்வண்ணத் தோகைப்போல
கட்டிய தாவணி யழகு.
*
ஆலமரம் விழுதுகள் போல
கருங்கூந்தல் நீளம்
ஆளானப் பொண்ணு
அவ பேருங் கூட நீலம்.
*
தண்ணிக் குடம் தூக்கிப் போனா
தளும்பவில்லை மனசு
கண்பார்வை வீசிப் போனா
காதல் விழிச்சுடரோ புதுசு.
*
செல்போனில் பேசிப் போனா
உதடு சிவந்து தெரியுது
பேசும் வார்த்தை என்னவென்று
காத்துக்கு மட்டும் தெரியுது.
*
காத்து வந்துச் சொன்னா
கட்டிக்க எனக்கு சம்மதம்
நீலமலர் அழகில் சொக்கி
நீண்ட காலம் வாழ்ந்திடுவேன்…!!
*
*
தாவணிப் பறந்தாட
துள்ளித் துள்ளிப் போறா…
தட்டாம்பூச்சிங்க அவ கூட
சிறகடித்துப் பறக்குது.
*
இலந்தம் பூவைப் போலவே
இளமை ரொம்ப அழகு
மயில்வண்ணத் தோகைப்போல
கட்டிய தாவணி யழகு.
*
ஆலமரம் விழுதுகள் போல
கருங்கூந்தல் நீளம்
ஆளானப் பொண்ணு
அவ பேருங் கூட நீலம்.
*
தண்ணிக் குடம் தூக்கிப் போனா
தளும்பவில்லை மனசு
கண்பார்வை வீசிப் போனா
காதல் விழிச்சுடரோ புதுசு.
*
செல்போனில் பேசிப் போனா
உதடு சிவந்து தெரியுது
பேசும் வார்த்தை என்னவென்று
காத்துக்கு மட்டும் தெரியுது.
*
காத்து வந்துச் சொன்னா
கட்டிக்க எனக்கு சம்மதம்
நீலமலர் அழகில் சொக்கி
நீண்ட காலம் வாழ்ந்திடுவேன்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|