Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
Page 1 of 1 • Share
குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
மேஷம்
ஆளும் குணமும், ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்துவந்ததுடன், எந்த வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் உங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்த குருபகவான், இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.
செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அவர்களால் புகழ், கவுரவம் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோலாகலமாகத் திருமணத்தை முடிப்பீர்கள். மகனின் கூடாப் பழக்கம் விலகும்.
எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். தாய்க்கிருந்த நோய் விலகும். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களுடன் இருந்துவந்த விரிசல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும்.
குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதுமே சோகமாக இருக்கும் உங்கள் முகத்தில் அழகும் இளமையும் கூடும். கடனாக, கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாகத் தந்துமுடிப்பீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும். இதுநாள் வரை இழுபறியாக இருந்துவந்த வேலைகளெல்லாம் முடிவடையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும்.
லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். பங்குதாரரை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.
வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்சினைகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன் வசதி, வாய்ப்புகளை அள்ளித் தரும்.
ஆளும் குணமும், ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்துவந்ததுடன், எந்த வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் உங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்த குருபகவான், இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.
செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அவர்களால் புகழ், கவுரவம் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோலாகலமாகத் திருமணத்தை முடிப்பீர்கள். மகனின் கூடாப் பழக்கம் விலகும்.
எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். தாய்க்கிருந்த நோய் விலகும். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களுடன் இருந்துவந்த விரிசல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும்.
குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதுமே சோகமாக இருக்கும் உங்கள் முகத்தில் அழகும் இளமையும் கூடும். கடனாக, கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாகத் தந்துமுடிப்பீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கான அழைப்பு வரும். இதுநாள் வரை இழுபறியாக இருந்துவந்த வேலைகளெல்லாம் முடிவடையும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும்.
லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். பங்குதாரரை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.
வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்சினைகளும் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன் வசதி, வாய்ப்புகளை அள்ளித் தரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
ரிஷபம்
எப்போதும் லட்சியத்தை நோக்கி பயணிப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதிலும் ஒருவித தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியதுடன் ஆர்வமில்லாமலும் செய்தீர்கள். சின்னச் சின்ன வேலைகளைக் கூட போராடி முடித்தீர்கள். நாலாவிதத்திலும் யோசித்துக் குழம்பினீர்கள். உங்களை எதிலும் ஆர்வமில்லாமல் அலைக்கழித்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். கடந்த ஓராண்டு காலமாக இருந்த 3-ம் வீட்டை விட 4-ம் வீடு ஓரளவு நன்மையைத் தரும்.
இதுவரை இருந்துவந்த தடைகள், பணப்பற்றாக்குறை, தாழ்வு மனப்பான்மை எல்லாம் நீங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் பூர்வீகத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும். கருத்து மோதல்களும் வரும். வாகனங்கள் அடிக்கடிப் பழுதாகும். விபத்துகளும் வந்து போகும். பல வருடங்கள் நெருங்கிப் பழகியவர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.
ப்ளான் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். முறையான பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் போராடி முடிக்க வேண்டிவரும்.
தந்தையாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துகொண்டேயிருக்கும். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தைப் போராடி முடிக்க வேண்டிவரும். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
வியாபாரத்தில் பெரிய தொகை முதலீடு செய்ய வேண்டாம். ஸ்டேஷனரி, மருந்து வகைகளால் லாபம் வரும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவும், கூட்டுத்தொழில் தொடங்குவதற்கு முன்பாகவும் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைகூறிக் கொண்டிருப்பார்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன நெருக்கடிகள் வரும் அடிக்கடி இடமாற்றம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். இந்த குரு மாற்றம் அலைச்சலையும் பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் விடாமுயற்சியாலும் பிரபலங்களின் நட்பாலும் முன்னேற வைக்கும்.
எப்போதும் லட்சியத்தை நோக்கி பயணிப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதிலும் ஒருவித தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியதுடன் ஆர்வமில்லாமலும் செய்தீர்கள். சின்னச் சின்ன வேலைகளைக் கூட போராடி முடித்தீர்கள். நாலாவிதத்திலும் யோசித்துக் குழம்பினீர்கள். உங்களை எதிலும் ஆர்வமில்லாமல் அலைக்கழித்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். கடந்த ஓராண்டு காலமாக இருந்த 3-ம் வீட்டை விட 4-ம் வீடு ஓரளவு நன்மையைத் தரும்.
இதுவரை இருந்துவந்த தடைகள், பணப்பற்றாக்குறை, தாழ்வு மனப்பான்மை எல்லாம் நீங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் பூர்வீகத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும். கருத்து மோதல்களும் வரும். வாகனங்கள் அடிக்கடிப் பழுதாகும். விபத்துகளும் வந்து போகும். பல வருடங்கள் நெருங்கிப் பழகியவர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.
ப்ளான் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். முறையான பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூடப் போராடி முடிக்க வேண்டிவரும்.
தந்தையாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துகொண்டேயிருக்கும். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தைப் போராடி முடிக்க வேண்டிவரும். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
வியாபாரத்தில் பெரிய தொகை முதலீடு செய்ய வேண்டாம். ஸ்டேஷனரி, மருந்து வகைகளால் லாபம் வரும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவும், கூட்டுத்தொழில் தொடங்குவதற்கு முன்பாகவும் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைகூறிக் கொண்டிருப்பார்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்னச் சின்ன நெருக்கடிகள் வரும் அடிக்கடி இடமாற்றம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். இந்த குரு மாற்றம் அலைச்சலையும் பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் விடாமுயற்சியாலும் பிரபலங்களின் நட்பாலும் முன்னேற வைக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
மிதுனம்
மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக பணம், பதவி, செல்வாக்குடன் சமூகத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். குரு 3-ல் மறைவதால் உங்கள் முன்னேற்றம் தொடரும். குரு மறைவதால் பயணங்கள் அதிகரிக்கும்.
நியாயமான செலவுகளும் கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த வேண்டிவரும். வேலைச்சுமை கூடும். எதிலும் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும்.
திடீரென்று அறிமுகமாகுபவரையெல்லாம் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரத்தையெல்லாம் சரிபார்த்துக்கொள்வது நல்லது. உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன், மனைவியிடையே சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும். 9-ம் வீட்டைப் பார்ப்பதால் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். லாப வீடான 11-வது வீட்டைப் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பங்குவர்த்தகத்தில் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பெரிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல் வரும். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டிவரும்.
அண்டை மாநில வேலையாட்களைப் பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தொடர் விடுப்பதாலும், புது அதிகாரியின் கெடுபிடியாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.
மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக பணம், பதவி, செல்வாக்குடன் சமூகத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். குரு 3-ல் மறைவதால் உங்கள் முன்னேற்றம் தொடரும். குரு மறைவதால் பயணங்கள் அதிகரிக்கும்.
நியாயமான செலவுகளும் கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த வேண்டிவரும். வேலைச்சுமை கூடும். எதிலும் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும்.
திடீரென்று அறிமுகமாகுபவரையெல்லாம் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய்ப் பத்திரத்தையெல்லாம் சரிபார்த்துக்கொள்வது நல்லது. உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன், மனைவியிடையே சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும். 9-ம் வீட்டைப் பார்ப்பதால் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். லாப வீடான 11-வது வீட்டைப் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பங்குவர்த்தகத்தில் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பெரிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்து மோதல் வரும். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டிவரும்.
அண்டை மாநில வேலையாட்களைப் பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் தொடர் விடுப்பதாலும், புது அதிகாரியின் கெடுபிடியாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
கடகம்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் நுழைந்து உங்களை நாலாவிதத்திலும் அலைக்கழித்த குருபகவான் 05.08.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். ராசியை விட்டு குரு விலகுவதால் வாடி, வதங்கியிருந்த உங்கள் முகம் இனி மலரும். சாதாரண விஷயத்தில் கூட சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி தன்னிச்சையாக மிகப் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பல்வேறு காரணங்களால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வேலை கிடைத்தும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி உங்கள் ரசனைக்கேற்ற வேலை அமையும். மகளுக்கு உறவினர்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் வலியவந்து பேசுவார்கள். தாழ்வுமனப்பான்மையும், தடைகளும் நீங்கும். எதிர்பார்த்த தொகை வரும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். குரு ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். தேமல், முடி உதிர்தல் நீங்கும்.
உங்களது எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குரு பத்தாவது வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் அறிந்து அதற்கேற்ப தொழிலை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் சேருவார்கள். பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உண்டு. தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார். உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்த வர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றிக் கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்றுவருவீர்கள்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் நுழைந்து உங்களை நாலாவிதத்திலும் அலைக்கழித்த குருபகவான் 05.08.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். ராசியை விட்டு குரு விலகுவதால் வாடி, வதங்கியிருந்த உங்கள் முகம் இனி மலரும். சாதாரண விஷயத்தில் கூட சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி தன்னிச்சையாக மிகப் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பல்வேறு காரணங்களால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வேலை கிடைத்தும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி உங்கள் ரசனைக்கேற்ற வேலை அமையும். மகளுக்கு உறவினர்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் வலியவந்து பேசுவார்கள். தாழ்வுமனப்பான்மையும், தடைகளும் நீங்கும். எதிர்பார்த்த தொகை வரும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். குரு ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். தேமல், முடி உதிர்தல் நீங்கும்.
உங்களது எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். எட்டாவது வீட்டை குரு பார்ப்பதால் விலகியிருந்த பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதில் தடையிருக்காது. குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குரு பத்தாவது வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் அறிந்து அதற்கேற்ப தொழிலை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் சேருவார்கள். பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உண்டு. தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார். உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். பதவி உயர்வுக்காக தேர்வெழுதிக் காத்திருந்த வர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றிக் கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்றுவருவீர்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
சிம்மம்
எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதைத் தொட்டாலும் நட்டத்தையும் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் அடுக்கடுக்காகத் தந்து உங்களை அலைக்கழித்தாரே குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்கிறார். கணவன், மனைவிக்குள் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் சண்டை, சச்சரவு வர வாய்ப்பிருக்கிறது.
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பதறினால் சிதறிவிடும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாட்டில் காரம், உப்பை குறைத்துக்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. மஞ்சள் காமாலை, காய்ச்சல், சளித் தொந்தரவு வரக்கூடும். முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. ஒற்றையாக இருந்து எவ்வளவுதான் போராடுவது என்று ஆதங்கப்படுவீர்கள்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்துபோகும். ஏதோ ஒரு சக்தி உங்களை அழுத்துவதைப் போலவும், தடுப்பது போலவும் நினைப்பீர்கள். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி புத்திரபாக்கியம் கிட்டும். மகனுக்கிருந்துவந்த கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக முடியும். 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பணப்பாற்றாக்குறை ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நஷ்டத்தை சரிக்கட்ட வேலையாட்களைக் குறைப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, துணி, வாகன வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களால் நிம்மதி குறையும். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம்.
உத்தியோகத்தில் சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்களை நம்பி சில கூடுதல் வேலைகளை ஒப்படைப்பார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும். ஆக மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி ஒருவிதப் படபடப்பையும் வேலைச்சுமையையும் தந்தாலும் கடந்தாண்டை விட வளர்ச்சியையும், செல்வாக்கையும் தரும்.
-
எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதைத் தொட்டாலும் நட்டத்தையும் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் அடுக்கடுக்காகத் தந்து உங்களை அலைக்கழித்தாரே குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்கிறார். கணவன், மனைவிக்குள் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் சண்டை, சச்சரவு வர வாய்ப்பிருக்கிறது.
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பதறினால் சிதறிவிடும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாட்டில் காரம், உப்பை குறைத்துக்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. மஞ்சள் காமாலை, காய்ச்சல், சளித் தொந்தரவு வரக்கூடும். முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. ஒற்றையாக இருந்து எவ்வளவுதான் போராடுவது என்று ஆதங்கப்படுவீர்கள்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்துபோகும். ஏதோ ஒரு சக்தி உங்களை அழுத்துவதைப் போலவும், தடுப்பது போலவும் நினைப்பீர்கள். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் கர்ப்பச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி புத்திரபாக்கியம் கிட்டும். மகனுக்கிருந்துவந்த கூடா நட்பு விலகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக முடியும். 9-ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பணப்பாற்றாக்குறை ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நஷ்டத்தை சரிக்கட்ட வேலையாட்களைக் குறைப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, துணி, வாகன வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களால் நிம்மதி குறையும். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நட்டப்பட வேண்டாம்.
உத்தியோகத்தில் சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள். சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்களை நம்பி சில கூடுதல் வேலைகளை ஒப்படைப்பார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும். ஆக மொத்தம் இந்த குருப்பெயர்ச்சி ஒருவிதப் படபடப்பையும் வேலைச்சுமையையும் தந்தாலும் கடந்தாண்டை விட வளர்ச்சியையும், செல்வாக்கையும் தரும்.
-
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
கன்னி
காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! கடந்த ஓராண்டு காலமாக குருபகவான் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுடைய அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தினார். அதிகாரப் பதவியிலும் உங்களை அமர வைத்து அழகு பார்த்தார். எதிர்த்தவர்களையெல்லாம் அடக்கினார். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது.
ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் அக்கம்பக்கம் கடன் வாங்க வேண்டிவரும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. கூடாப் பழக்கமுள்ள நண்பர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள்.
முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டிவரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற மனநெருக்கடி இருக்கும். வாகனத்திற்கான உரிமம் மற்றும் காப்பீட்டைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.
சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனவருத்தங்கள் விலகும். காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத வீட்டிலிருந்து மாறி அமைதியான சூழல் உள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.
விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புது முதலீடுகள் பெரிய அளவில் செய்ய வேண்டாம். கமிஷன், வாகன உதிரிப்பாகங்கள், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்ப்யூட்டர் உதிரிப்பாகங்கள் மற்றும் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும். இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளையும், பயணங்களால் திருப்பங்களையும் தரும்.
காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! கடந்த ஓராண்டு காலமாக குருபகவான் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுடைய அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தினார். அதிகாரப் பதவியிலும் உங்களை அமர வைத்து அழகு பார்த்தார். எதிர்த்தவர்களையெல்லாம் அடக்கினார். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது.
ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் அக்கம்பக்கம் கடன் வாங்க வேண்டிவரும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. கூடாப் பழக்கமுள்ள நண்பர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள்.
முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டிவரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற மனநெருக்கடி இருக்கும். வாகனத்திற்கான உரிமம் மற்றும் காப்பீட்டைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.
சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனவருத்தங்கள் விலகும். காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத வீட்டிலிருந்து மாறி அமைதியான சூழல் உள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.
விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புது முதலீடுகள் பெரிய அளவில் செய்ய வேண்டாம். கமிஷன், வாகன உதிரிப்பாகங்கள், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்ப்யூட்டர் உதிரிப்பாகங்கள் மற்றும் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும். இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளையும், பயணங்களால் திருப்பங்களையும் தரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
துலாம்
இனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மரியாதைக் குறைவையும், தோல்வியையும், அடுக்கடுக்காக ஏமாற்றங்களையும், காரியத் தடைகளையும் தந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்களும் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக்கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு பேசத் தொடங்குவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். அவருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும்.
அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் வீடு கட்டும் பணியைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள் இனி வங்கியின் கடனுதவியுடன் முழுமையாகக் வீடுகட்டி முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்தும் ஒப்பந்தங்கள் வரும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கடந்த ஒராண்டு காலமாக ஏற்பட்ட அவமானங்கள், தொந்தரவுகள், எதிர்ப்புகள் நீங்கும். இனி உங்கள் கை ஓங்கும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளுக்கு ஆலோசனை தருமளவிற்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஓரமாய் இருந்த உங்களுக்கு முதல் மரியாதையைத் தருவதுடன், வசதியையும் தருவதாக அமையும். வெற்றியைத் தரும்.
-
இனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மரியாதைக் குறைவையும், தோல்வியையும், அடுக்கடுக்காக ஏமாற்றங்களையும், காரியத் தடைகளையும் தந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்களும் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக்கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு பேசத் தொடங்குவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். அவருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். 7-ம் வீட்டைப் பார்ப்பதால் அழகு, இளமை கூடும்.
அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் வீடு கட்டும் பணியைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள் இனி வங்கியின் கடனுதவியுடன் முழுமையாகக் வீடுகட்டி முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்தும் ஒப்பந்தங்கள் வரும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கடந்த ஒராண்டு காலமாக ஏற்பட்ட அவமானங்கள், தொந்தரவுகள், எதிர்ப்புகள் நீங்கும். இனி உங்கள் கை ஓங்கும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளுக்கு ஆலோசனை தருமளவிற்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஓரமாய் இருந்த உங்களுக்கு முதல் மரியாதையைத் தருவதுடன், வசதியையும் தருவதாக அமையும். வெற்றியைத் தரும்.
-
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
விருச்சிகம்
சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், நிம்மதியையும் தந்தார் குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் மனக்கலக்கத்தையும், பணப்பற்றாக்குறையையும் தருவார். 10-ம் இடம் பதவியைக் கெடுக்குமென்றோ, அந்தஸ்து குறையுமென்றோ பெரிதாகக் கவலைப்பட வேண்டாம்.
உங்கள் யோகாதிபதியான சூரியனின் வீட்டில் குரு அமர்வதால் உங்களுக்குக் கெடுபலன்கள் குறையும். பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, வாக்குறுதிகளோ தர வேண்டாம்.
குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரும். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக்கொண்டிருக்காதீர்கள். 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
பார்வைக் கோளாறு, பல் வலி சரியாகும். சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. காற்றோட்டமில்லாத, தண்ணீர் வசதியில்லாத வீட்டிற்கு மாறுவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வார்கள். அண்டை வீட்டாரிடம் அனுசரணையான சூழ்நிலை உருவாகும்.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மறைமுக அவமானங்களும் வீண்பழிகளும் வரக்கூடும். அடிக்கடி இடமாற்றம் உண்டு. அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் சூழ்ச்சிகளாலும், பிரச்சினைகளாலும் வேலையை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் மட்டுமே இந்த குரு மாற்றம் ஓரளவு வெற்றியை தரும். மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், நிம்மதியையும் தந்தார் குருபகவான். இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் மனக்கலக்கத்தையும், பணப்பற்றாக்குறையையும் தருவார். 10-ம் இடம் பதவியைக் கெடுக்குமென்றோ, அந்தஸ்து குறையுமென்றோ பெரிதாகக் கவலைப்பட வேண்டாம்.
உங்கள் யோகாதிபதியான சூரியனின் வீட்டில் குரு அமர்வதால் உங்களுக்குக் கெடுபலன்கள் குறையும். பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். நல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, வாக்குறுதிகளோ தர வேண்டாம்.
குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரும். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக்கொண்டிருக்காதீர்கள். 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
பார்வைக் கோளாறு, பல் வலி சரியாகும். சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. காற்றோட்டமில்லாத, தண்ணீர் வசதியில்லாத வீட்டிற்கு மாறுவீர்கள். 6-ம் வீட்டை குரு பார்ப்பதால் புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வார்கள். அண்டை வீட்டாரிடம் அனுசரணையான சூழ்நிலை உருவாகும்.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களால் பிரச்சினைகள் வெடிக்கும். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மறைமுக அவமானங்களும் வீண்பழிகளும் வரக்கூடும். அடிக்கடி இடமாற்றம் உண்டு. அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் சூழ்ச்சிகளாலும், பிரச்சினைகளாலும் வேலையை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் மட்டுமே இந்த குரு மாற்றம் ஓரளவு வெற்றியை தரும். மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
தனுசு
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 100/70 (ஒன்பதாம் இட குரு உயர்த்துவார் உங்களை)
பெரியோர்களிடம் நன்மதிப்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும்போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டி இருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் குரு தற்போது 9-ம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். குருபகவான் 2015 டிசம்பர் 20-ந் தேதி 10-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. பொருள் நஷ்டத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.சனிபகவான் 2015 ஜூன் 12-ந் தேதி அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். 2015 செப்டம்பர் 5-ந் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அங்கு அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
கடந்த காலத்தைவிட முன்னேற்றம்காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். ஆனால் சிற்சில தடைகளும் வரத்தான் செய்யும். அதை எளிதில் முறியடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் மீதான பொல்லாப்பு மறைந்து, மதிப்பு, மரியாதை சிறப்படையும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். கணவன்-மனைவி இடையே அன்பு சீராக இருக்கும். அதேநேரம் ராகு சிறப்பாக இல்லாததால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறு வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் வளர்ச்சி அடைவர். லாபம் அதிகரிக்கும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற பாதையில் செல்லலாம். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். சம்பள உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர்.
விவசாயிகள் சிறப்பான வருவாயை காணலாம். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். நெல், கோதுமை, கடலை பயிர்கள் நல்ல மகசூல் தரும். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்கலாம்.
பெண்கள் உற்சாகமாகக் காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காணலாம். விருந்து, விழா என சென்று வரலாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போக வேண்டும்.
பரிகாரம்: பத்ரகாளிஅம்மனுக்கு தீபம் ஏற்றுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழரை சனிகாலம் என்பதால், சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
மகரம்
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) 100/55 (இடம் எட்டானாலும் பார்வை ஏழால் பலன்)
குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட மகரராசி அன்பர்களே!
இதுவரை, குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அஷ்டம குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். சிரமங்களைத் தருவார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம்.
ஏனெனில், குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்குசாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் . அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும், அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் 2015 டிசம்பர் 20ல், குருபகவான் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு வக்ரமாகி செல்கிறார். இது மிகவும் உகந்த நிலை. அங்கு சென்ற பின் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், சுபங்களையும் அள்ளித் தருவார். மேலும் அவரது 9-ம் இடத்துப்பார்வையாலும் நன்மை தருவார்.சனிபகவான் 2015 ஜூன் 12 அன்று வக்கிரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் சில சிரமங்கள் வர வேண்டும் என்பது விதி. ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவானால் வரும் கெடுபலன்கள் குறையும். கேதுவால் நற்பலன்கள் அதிகமாகவே கிடைக்கும். எந்தச் செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்.வீட்டுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளி போகலாம். ஆனாலும், குருவின் பார்வையால் அதையும் முயற்சியின் பேரில் சாதிக்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் விரோதம்
ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும்.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தொழிலதிபர்களும், வியாபாரிகளும் எந்த தொழில் செய்தாலும் நல்ல வருமானம் பெறலாம். புதிய வியாபாரம் துவங்க யோகமுண்டு. இரும்பு வியாபாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிறருக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலை உருவாகும்.
பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம்.
கலைஞர்கள் விடா முயற்சிஉடன் உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த விருது, பாராட்டு கிடைப்பதில் தாமதமாகும்.
அரசியல்வாதிகள் வளமாகக் காணப்படுவர். மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு போல் இருக்காது. விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
விவசாயத்தில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குதூகல நிலையில் இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியிருக்கும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவும். அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து எந்த வரவையும் எதிர்பார்க்க முடியாது. உடல் நலம் சிறப்படையும். மனதில் ஒரு வித தளர்ச்சி ஏற்படும்.
பரிகாரம்: குரு சாதகமாக இல்லாததால் தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
கும்பம்
கும்பம்: (அவிட்டம் 3,4,சதயம், பூரட்டாதி 1,2,3) 100/80 (ஏணியாய் இருப்பார் ஏழாமிடத்து குரு)
மற்றவர் தயவை எதிர்பார்க்காத கும்ப ராசி அன்பர்களே!
குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அவர் மன நிம்மதியை
இழக்கச் செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இப்போது குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே, குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். டிசம்பர் 20-ந் தேதி, குரு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம் அல்ல. பொருளாதர சரிவையும், மனவேதனையும், எதிரிகளால் தொல்லையையும் தரலாம். ஆனால், அவரது 7-ம் இடத்துப்பார்வையால், எந்த பிரச்னையையும் முறியடிக்க வாய்ப்பு கிடைக்கும். சனி பகவான், ஜூன் 12-ந் தேதி அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். சனி வக்ரம் அடைந்து 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார்.மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.முன்னேற்றப் பாதைக்கு அடியெடுத்து வைக்கும் காலம். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதிகள் மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் சிரத்தை எடுத்து புதிய வீடு கட்டலாம். அதற்காக கடன்பட வேண்டியதிருக்கும். புதிய வாகனம் வாங்கலாம்.
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். ஆனால், அதற்குத் தகுந்த பலன் ஒன்றுக்கு பத்தாக இருக்கும்.
பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் உயர்வான நிலையை அடைவர். உங்கள் உழைப்புக்கு மதிப்பு இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கவுரவத்தை இழக்காவண்ணம் இருப்பர். உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் இந்த கல்விஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயத்தில் நல்ல வளம் காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். தானிய விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை செல்வங்கள் பெருகும். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் முன்னேற்றமான பலன் காண்பர். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர்.உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் நோய் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தவர்கள் குணம் அடைவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: குரு சாதகமாக இருந்தாலும் சனி திருப்தியற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு எள்சோறு படைத்து பரிகாரம் செய்யுங்கள். கிருஷ்ணர் வழிபாடு துணைநிற்கும். ஏழைகளுக்கு ஆடுதானம் செய்யுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
மீனம்
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 100/ 55 (தடைகள் தகரும் வெற்றி நிலைக்கும்)
உள்ள உறுதியுடன் உழைப்பில் ஈடுபடும் மீனராசி அன்பர்களே!
குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் இருந்து நன்மைகளை வாரி வழங்கி வந்தார். அவரால் குடும்ப நலன் மேம்பட்டிருக்கும். கையில் பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் முன்னேற்றம் அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் குரு பகவான் ராசிக்கு 5ல் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமானது அல்ல. 5ல் இருந்தது போல நன்மையை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் பிற்போக்கான பலனை அவர் தர மாட்டார். பொதுவாக 6ல் இருக்கும் போது, உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனத் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. குருவின் இடம் சாதகமற்று இருந்தாலும், அவரது 9ம் பார்வை சிறப்பாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் குறுக்கிடும்தடைகளைத் தகர்த்து, வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிப்பீர்கள். டிசம்பர் 20ல் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு அவர் அதிசாரம் ஆகிறார். அப்போது சுபம், செல்வாக்கு, பொருளாதார வளம் மேலோங்கும். சனிபகவான், ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். இவரால் முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆனால், வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்தவகையில் சனியால் கெடுபலன் அதிகம் நேராது. மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணத்தின் மூலம் எதிர்பார்த்த ஆதாயம்
குறையும். இருந்தாலும், பணநிலை சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். யாரிடமும் வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது. குடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமண விஷயத்தில் தடை
ஏற்பட்டு விலகும். வீடு, மனை வாங்க சில காலம் பொறுத்திருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது. புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. ஆதாய நோக்கில் வெளியூர் பயணம் அடிக்கடி செல்வீர்கள். குருவின் 9-ம் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால், எக்காரணம் கொண்டும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட மாட்டீர்கள்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு அதிகரித்தாலும், சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதம் ஆகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். வேலையில் கவனம் செலுத்தி விட்டால், அதிகாரிகள் உங்கள் பக்கம் தலை வைக்க
மாட்டார்கள்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும். எதிர்பார்த்த விருது கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் பலன் கருதாமல் பாடுபட வேண்டியிருக்கும். பணவரவும் சுமார் தான்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடப்பவர்கள்கல்வியில் சிறந்து விளங்குவர்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப நற்பலன் காண்பர். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதம் ஆகும். அப்படி வாங்கினால், வில்லங்கம், பத்திரம் உள்ளிட்டவற்றை கவனமாக சரிபார்த்து வாங்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் தீர்ப்பை சாதகமாகப் பெற கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆடம்பர செலவைக் குறைப்பது புத்திசாலித்தனம்.
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். லட்சுமி வழிபாடு வருமானத்திற்கு வழிவகுக்கும். துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றுங்கள். பவுர்ணமியன்று மலைக்கோயிலுக்குச் செல்லுங்கள்
http://www.tamilnews.cc/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
என் மகர ராசிக்கு படித்தேன். பரிகாரம் செய்கிறேன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
ஸ்ரீராம் wrote:என் மகர ராசிக்கு படித்தேன். பரிகாரம் செய்கிறேன் அண்ணா.
இது பொதுவான் பலன்கள்
உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை பார்க்க வேண்டும் அப்போதுதான் ஒரு தெளிவான நிலை தெரியும்
தினமும் உங்கள் தாய் தந்தையரை வணங்குங்கள் அது ஒன்றே போதுமானது தெய்வீகமானது
"ஸ்ரீராம்"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குருப் பெயர்ச்சி யாருக்கு சாதகம்ஸ! யாருக்கு பாதகம்ஸ?
முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» குரு பெயர்ச்சி
» குரு பெயர்ச்சி பலன்கள் 2016
» குரு பெயர்ச்சி - வாட்ஸ் அப் கலக்கல்
» குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015
» ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
» குரு பெயர்ச்சி பலன்கள் 2016
» குரு பெயர்ச்சி - வாட்ஸ் அப் கலக்கல்
» குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015
» ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|