Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தூத்துக்குடி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தூத்துக்குடி
மூலவர் : கைலாசநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : சவுந்தர நாயகி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : ராஜபதி
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு
தல சிறப்பு:
இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
ஜோதி குருக்கள், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி-628 207, தூத்துக்குடி மாவட்டம்.
போன்:
+91 99420 62825, 98422 63681, 94863 81956
பொது தகவல்:
இங்கு விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் வாழவும், திருமணத்தடை, கவலை, சர்ப்பதோஷம், குழந்தை பேறு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், தொழில்வளத்தில் முன்னேற்றம் கிடைக்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இந்த சிவனுக்கு பலவர்ண வஸ்திரம் சாத்தி, கொள்ளு, விளைபொருட்கள், பழங்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
நவ கைலாயத்தில் இது கேது வணங்கிய ஸ்தலம். இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது. இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். ஒருவருடைய ஆயுள்காலத்தில் கேதுதசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த தசை காலத்தில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிக மிக சிறப்பானது. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் சிறந்த வருமானத்தை தரவும் கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்ளலாம். கோரிக்கை நிறைவேறினால், சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
கேது பரிகார பூஜை: ஞாயிறு பகல் 12 -1.30 மணிவரையிலும், செவ்வாய் காலை 9-10.30 மணி வரையிலும் கேது பரிகார பூஜை நடக்கிறது. அப்போது யாகம் நடக்கிறது. இதில் பங்கேற்பதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்குவதுடன், திருமணத்தடை, கவலை, சர்ப்பதோஷம் ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த யாகத்தில் பங்கேற்றால் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர். குழந்தை பேறு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், தொழில்வளத்தில் முன்னேற்றம் கிடைக்கிறது.
தென்காளஹஸ்தி: காளஹஸ்தி கோயில் கோபுரம் சேதமடைந்த நாள் அன்று ராஜபதி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முதல்கால பூஜை துவங்கியது. இதனால் ராஜபதியை தென் காளஹஸ்தி என்று அழைக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்திற்கு இணையான கேது தலமாக திகழ்கிறது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சவுந்தர்ய நாயகி, ஆதிகைலாசநாதர் ஆகியோர் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு:
பொதிகை மலையில் தவம் செய்து வந்த அகத்திய முனிவரின், முதல் சீடரான உரோமச முனிவர், பிறவாவரம் பெற தன் குருவிடம் யோசனை கேட்டார். நான் உருவாக்கிய தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை தண்ணீரில் விடு. இவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ, அவ்விடத்தில் சிவலிங்க பூஜை செய். நீ வழிபடும் சிவலிங்கம் கைலாசநாதர் என்று பெயர் பெறும். இதைச் செய்தால் பிறவா நிலை அடையலாம், என்றார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்ய எட்டாவது மலர் ராஜபதியில் ஒதுங்கியது. அங்கு சிவலிங்கத்தை வைத்து பூஜித்தார். மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இப்பகுதியில் இருந்ததால், இவ்வூர் ராஜபதி எனப்பட்டது. இந்த லிங்கம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு கோயிலும் இருந்தது. 416 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் வெள்ளப் பெருக்கில் மூழ்கி அழிந்தது. தற்போது சிவனடியார்களின் முயற்சியால் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: நவகைலாயங்களில் இது கேதுவுக்குரிய தலமாகும்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தூத்துக்குடி
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» செவிலிமேடு-அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
» திடியன் மலை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மதுரை
» லால்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருச்சி
» அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,செவிலிமேடு,காஞ்சிபுரம்
» நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
» திடியன் மலை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மதுரை
» லால்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருச்சி
» அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,செவிலிமேடு,காஞ்சிபுரம்
» நெடுங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|