Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஊதியூர் அருள்மிகு உத்தாண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
ஊதியூர் அருள்மிகு உத்தாண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
மூலவர் : உத்தாண்ட வேலாயுதசுவாமி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : ஊதியூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருவிழா:
கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய மாத விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தன்று சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். கந்தர் சஷ்டியும் தைப்பூசமும் இங்கு கொண்டாடப்படும் தலையாய வருட உற்சவங்களாகும். கந்த சஷ்டி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி 6-ம் நாள் தேரோட்டம், 7-ம் நாள் திருக்கல்யாணம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி விசாகத்தன்று படிபூஜை கோலாகலமாக நடைபெறும்.
தல சிறப்பு:
கருவறையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் அருளும் வேலாயுத சுவாமியை கண்குளிர தரிசித்து இன்புறலாம்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உத்தாண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், ஊதியூர் மலை திருப்பூர் மாவட்டம்
போன்:
+91 04257 249977, 97880 10161,
பொது தகவல்:
அடுத்துள்ள பாத விநாயகர் சன்னதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சன்னதி. சக்திகிரி, சிவகிரியை காவடியில் வைத்து சுமந்த கோலத்தில் அருள்பாலிக்கும் இவரை இடும்பக் குமரன் என அழைக்கின்றனர். அடுத்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியைக் கடந்து சென்றால் மலைக் கோயிலை அடையலாம். 156 படிகளைக் கொண்ட மலைக்கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. தீபஸ்தம்பம் ராஜகோபுரத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை அடுத்துள்ளது, குறட்டுவாசல். கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டது. உட்பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் தனிச் சன்னிதிகளில் அருள்கின்றனர்.
பிரார்த்தனை
பலருக்கும் இத்தலத்து வேலாயுத சுவாமி குல தெய்வமாகவும், இஷ்டதெய்வமாகவும் விளங்குகிறார். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எந்த சுப காரியங்களை செய்வதென்றாலும், வேலாயுத சுவாமியின் உத்தரவு பெற்றே மேற்கொள்கின்றனர். அப்படிச் செய்வதால், தாங்கள் செய்யும் காரியங்களில் எந்தத் தடையும் ஏற்படாமல் வெற்றியே கிட்டும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை உள்பட அனைத்து பிரச்னைகளும் அகல ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வேலாயுதசுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், நற்பலன் விரைவாக கிட்டுகிறது. என்று மனப்பூர்வமாக நம்புகின்றனர் பக்தர்கள்.
தலபெருமை:
கொங்கணச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட முருகன் விக்ரகம் இங்குள்ளது. திப்புசுல்தான் படையெடுப்பின் போது அது பின்னமடைந்துவிட்டாலும் அதனை மகாமண்டபத்தில் வைத்து இன்றும் பூஜித்து வருகின்றனர். கோயிலுக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் கொங்கணச் சித்தருக்கு கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் கொங்கணச் சித்தர் வடக்கு நோக்கி யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார். இச்சன்னிதியில் சித்தர் பூஜித்த கருப்பணசாமி, முனியப்பன், நாகர் ஆகியோரை தரிசிக்கலாம். அவர்களுக்கு தினசரி பூஜைகளும், பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கொங்கு நாட்டில் குமரப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்று, ஊதியூர் மலை. கொங்கு மண்டல சதகம் எனும் நூலில் இம்மலையின் பெருமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தலப் பெருமானை போற்றிப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர். அவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் பசி, பட்டினி என வாடிய மக்களின் குறைகளை தங்கள் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்து வந்தனர். ஒரு சமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக மக்களை ஒன்று திரட்டி, மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை நீக்கி, அவர்களின் வாழ்வில் வளமையை உண்டாக்கினார்.புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும்; கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும்; கொங்கணகிரி என்றும்; அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது. இன்றும் சித்தர்கள் ஒளிவடிவாக இரவு நேரங்களில் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.அடிவாரத்தில், மலைப்பாதையின் தொடக்கத்தில் சுதைச் சிற்பங்களைக் கொண்ட கோபுரத்துடன் அமைந்துள்ள அழகான மயில் மண்டபத்தில் கலைநயத்துடன் கூடிய 4 கல் தூண் வீற்றிருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இதன் தென்புறம் ஒரு சுனை உள்ளது.
படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் அருளும் வேலாயுத சுவாமியை கண்குளிர தரிசித்து இன்புறலாம்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஊதியூர் அருள்மிகு உத்தாண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
நல்லதொரு ஆலயப் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில்,கதித்த மலை ,ஈரோடு
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அனுவாவி அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில்,கதித்த மலை ,ஈரோடு
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அனுவாவி அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|