Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
First topic message reminder :
என்னுடைய பசி இந்தியாவின் பசி
------------------
காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.
அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.
உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
---
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
நன்றி ; முகநூல் ( காந்தியம் )
என்னுடைய பசி இந்தியாவின் பசி
------------------
காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.
அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.
உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
---
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
நன்றி ; முகநூல் ( காந்தியம் )
Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
5. தினைத்துணையாம் குற்றம் வரினும்….
சகன்லால் காந்தியின் பொறுப்பில் உள்ள ஸ்டோர் கணக்கில் ஏதோ தவறுதல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆசிரமத்தின் அப்போதைய செயலாளர் திரு. சகன்லால் ஜோதி ஒரு நாள் காந்தியடிகளிடம் வந்து அறிவித்தார்.
அன்று மாலைப் பிரார்த்தனையின் போது காந்தியடிகள் மிகுந்த மனவேதனையுடன், ஆசிரமத்தில் ஒரு இழி செயல் நடந்து விட்டது எனக்குறிப்பிட்டார். சகன்லால் காந்தி சத்தியத்திலிருந்து தவறி விட்டிருக்கிறார். சத்தியத்தை வாய்மையைக் கடைபிடித் தொழுகுவதே நம்முடைய ஆசிரமத்தின் குறிக்கோளாகும். எனவே தான் இதற்கு ‘சத்தியாகிரக ஆசிரம்ம்’ என்று பெயிரிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இப்பெயரை சொல்லிக்கொண்டிருக்க நமக்கு உரிமை இல்லை. இன்று முதல் இந்த ஆசிரமத்தை ‘உத்யோக் மந்திர்’(தொழிற்கூடம்) என அழைப்போம். பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடம் மட்டும் ‘சத்தியாக்கிரக ஆசிரம்ம்’ என அழைக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டார்.
அதன்பின் காந்தியடிகள் தம்முடைய இருப்பிடத்திற்கு போய்விட்டார். சகன்லால்பாய் உள்பட எல்லா பழைய நண்பர்களும் காந்தியடிகளின் குடிசையில் வந்து கூடிவிட்டனர். காந்தியடிகள் தீவிரமான ஆத்மயோசனையில் முனைந்திருந்தார். தன் சகோதரியின் மகன் செய்த்த் தவற்றை தானே செய்த்தாக நினைத்து தன்னையே நிந்தித்துக்கொள்ளலானார் அடிகள். எல்லோரும் இதனால் மிகுந்த குழப்பமும் வருத்தமும் அடைந்தனர். இவையனைத்தையும் பற்றிச் சிறிது கேள்விப்பட்ட பின் சகன்லால் காந்தி தன் தவற்றை ஒப்புக்கொண்டார். வருத்தமிகுதியால் அழ ஆரம்பித்தார். கூடியிருந்தவர்கள் இதைப்பார்த்து சகன்லால் காந்தி மீது இரக்கம் கொண்டனர்.
இதே சமயத்தில் காந்தியடிகளிடம் மற்றொரு சிக்கலைக் கிளப்பினார் யாரோ ஒருவர். சில நாட்களுக்கு முன் அறிமுகமில்லாத ஒரு அன்பர் ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். அவர் நான்கு ரூபாயைத் தன் அன்பளிப்பாக்க் கஸ்தூரிபாவிடம் கொடுத்திருந்தார். கஸ்தூரிபா அதனைச் சில நாட்களுக்குப்பிறகு ஆசிரம அலுவலகத்தில் சேர்த்திருந்தார். காந்தியடிகள் இதைக் கண்டு திருப்தி கொள்ளவில்லை. அவர் கஸ்தூரிபா மீது குறைப்பட்டுக்கண்டார். மேற்க்கொண்டு இம்மாதிரி தவறுகள் ஏற்பட்டாலோ, அல்லது முன்பு நடந்த தவறுகள் ஏதேனும் இருந்து அவை வெளிப்பட்டாலோ தன்னையும் ஆசிரமத்தைவிட்டே வெளியேறி விடவேண்டுமென்று பாவிடமிஉந்து வாக்குறுதி பெற்றிருந்தார்.
அன்று இரவு மூன்று மணி வரை ஆத்மசோதனை வேள்விநடந்து கொண்டிருந்தது. அதன்பின்னர் நண்பர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு காகிதம் பேனாவுடன் ஒருகட்டுரை எழுத உட்கார்ந்தார். அன்று எழுதி கட்டுரை சரித்திரப் புகழ் பெற்றது. அக்கட்டுரையில் சகன்லால் காந்தியும் கஸ்தூரிபாவும் செய்த தவறுகளை வெளிப்படையாக விவாதித்து, மக்கள் முன் தம் மன உளைச்சலை அப்படியே விளக்கி எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரையைப்படித்த இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் திகிலடைந்தனர். சிலருக்குத்துக்கம் தாள முடியவில்லை. மற்றும் சிலருக்குக் காந்தியடிகள் மீது கோபம் ஏற்பட்டது. கஸ்தூரிபாவின் மீது சுமத்தபட்டிருக்கும் குற்றங்களைக் கண்டு திருமதி சரோஜினி நாயுடுவின் மனம் புண்பட்டது. இச் சம்பவம், பாரத நாட்டின் பெண் குலத்திற்கே இழுக்கு என நினைத்தார் சரோஜினி நாயுடு. அவர் உடனே ஹைதராபாத்திலிருந்து சபர்மதிக்கு வந்து நேராக கஸ்தூரிபாவிடம் சென்றார். காந்திஜியைச் சந்திக்கக்கூட நினைக்காத அளவுக்கு அவர்மனதில் அவ்வளவுகசப்பு உண்டாகியிருந்தது. ஆமால் காந்தி, காந்தியாகவே இருந்தார்.
விசயம் அறிந்து அவர் சிரித்துக்கொண்டே சரோஜினியைச் சந்திக்கவந்தார். அடிகளைப் பார்த்ததும் சரோஜினிநாயுடு ஆத்திரத்தில் ஓரிரு வார்த்தைகள் அதகமாகவே பேசி விட்டார். காந்தியடிகள் விருப்பு, வெறுப்பு இல்லாமல் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். சரோஜினி நாயுடு எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு காந்தியடிகள் தம் இயற்கையான சுபாவத்துடன் பேசலானார்: ‘சரோஜினி தேவி, இன்றைய இந்நேரம் கோப்ப்படவேண்டியதல்ல, மகிழ்ச்சி ததும்ப வேண்டிய நேரம், கடவுள் நம் மீது மிகவும் கருணை காட்டியிருக்கிறார் என்பதை அறிந்து கொள் கடவுள் என்னை, இக் கட்டுரையை எழுதச் செய்யாமலிருந்தோலேஓ அல்லது நான் இங்கு நடந்த தவறுகளை மறைத்து வைத்திருந்தோலோ இந்த ஆசிரமம் ஆசிரமமாகவே இருந்திருக்காது. இது நரகமாகத் தான் இருந்திருக்கும். என் மூலமாக இக்கட்டுரையை எழுதச்செய்து கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டார். நம் பளுவைக் குறைத்து பூவபை போன்று ஆக்கிவிட்டார். இப்போது சகன்லாலோ, கஸ்தூரிபாவோ, ஆசிரமத்திலுள்ள மற்ற நண்பர்களோ யாரும் இம்மாதிரித் தவற்றைச் செய்யமாட்டார்கள். ஆகையால் உன் கோபம் இப்போது மகிழ்ச்சியாக மாற வேண்டும். இறைவன் காட்டிய எல்லையற்ற கருணைக்காக அவன் புகழைப்போற்றி பரவுவோம்”.
சகன்லால் காந்தியின் பொறுப்பில் உள்ள ஸ்டோர் கணக்கில் ஏதோ தவறுதல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆசிரமத்தின் அப்போதைய செயலாளர் திரு. சகன்லால் ஜோதி ஒரு நாள் காந்தியடிகளிடம் வந்து அறிவித்தார்.
அன்று மாலைப் பிரார்த்தனையின் போது காந்தியடிகள் மிகுந்த மனவேதனையுடன், ஆசிரமத்தில் ஒரு இழி செயல் நடந்து விட்டது எனக்குறிப்பிட்டார். சகன்லால் காந்தி சத்தியத்திலிருந்து தவறி விட்டிருக்கிறார். சத்தியத்தை வாய்மையைக் கடைபிடித் தொழுகுவதே நம்முடைய ஆசிரமத்தின் குறிக்கோளாகும். எனவே தான் இதற்கு ‘சத்தியாகிரக ஆசிரம்ம்’ என்று பெயிரிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இப்பெயரை சொல்லிக்கொண்டிருக்க நமக்கு உரிமை இல்லை. இன்று முதல் இந்த ஆசிரமத்தை ‘உத்யோக் மந்திர்’(தொழிற்கூடம்) என அழைப்போம். பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடம் மட்டும் ‘சத்தியாக்கிரக ஆசிரம்ம்’ என அழைக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டார்.
அதன்பின் காந்தியடிகள் தம்முடைய இருப்பிடத்திற்கு போய்விட்டார். சகன்லால்பாய் உள்பட எல்லா பழைய நண்பர்களும் காந்தியடிகளின் குடிசையில் வந்து கூடிவிட்டனர். காந்தியடிகள் தீவிரமான ஆத்மயோசனையில் முனைந்திருந்தார். தன் சகோதரியின் மகன் செய்த்த் தவற்றை தானே செய்த்தாக நினைத்து தன்னையே நிந்தித்துக்கொள்ளலானார் அடிகள். எல்லோரும் இதனால் மிகுந்த குழப்பமும் வருத்தமும் அடைந்தனர். இவையனைத்தையும் பற்றிச் சிறிது கேள்விப்பட்ட பின் சகன்லால் காந்தி தன் தவற்றை ஒப்புக்கொண்டார். வருத்தமிகுதியால் அழ ஆரம்பித்தார். கூடியிருந்தவர்கள் இதைப்பார்த்து சகன்லால் காந்தி மீது இரக்கம் கொண்டனர்.
இதே சமயத்தில் காந்தியடிகளிடம் மற்றொரு சிக்கலைக் கிளப்பினார் யாரோ ஒருவர். சில நாட்களுக்கு முன் அறிமுகமில்லாத ஒரு அன்பர் ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். அவர் நான்கு ரூபாயைத் தன் அன்பளிப்பாக்க் கஸ்தூரிபாவிடம் கொடுத்திருந்தார். கஸ்தூரிபா அதனைச் சில நாட்களுக்குப்பிறகு ஆசிரம அலுவலகத்தில் சேர்த்திருந்தார். காந்தியடிகள் இதைக் கண்டு திருப்தி கொள்ளவில்லை. அவர் கஸ்தூரிபா மீது குறைப்பட்டுக்கண்டார். மேற்க்கொண்டு இம்மாதிரி தவறுகள் ஏற்பட்டாலோ, அல்லது முன்பு நடந்த தவறுகள் ஏதேனும் இருந்து அவை வெளிப்பட்டாலோ தன்னையும் ஆசிரமத்தைவிட்டே வெளியேறி விடவேண்டுமென்று பாவிடமிஉந்து வாக்குறுதி பெற்றிருந்தார்.
அன்று இரவு மூன்று மணி வரை ஆத்மசோதனை வேள்விநடந்து கொண்டிருந்தது. அதன்பின்னர் நண்பர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு காகிதம் பேனாவுடன் ஒருகட்டுரை எழுத உட்கார்ந்தார். அன்று எழுதி கட்டுரை சரித்திரப் புகழ் பெற்றது. அக்கட்டுரையில் சகன்லால் காந்தியும் கஸ்தூரிபாவும் செய்த தவறுகளை வெளிப்படையாக விவாதித்து, மக்கள் முன் தம் மன உளைச்சலை அப்படியே விளக்கி எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரையைப்படித்த இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் திகிலடைந்தனர். சிலருக்குத்துக்கம் தாள முடியவில்லை. மற்றும் சிலருக்குக் காந்தியடிகள் மீது கோபம் ஏற்பட்டது. கஸ்தூரிபாவின் மீது சுமத்தபட்டிருக்கும் குற்றங்களைக் கண்டு திருமதி சரோஜினி நாயுடுவின் மனம் புண்பட்டது. இச் சம்பவம், பாரத நாட்டின் பெண் குலத்திற்கே இழுக்கு என நினைத்தார் சரோஜினி நாயுடு. அவர் உடனே ஹைதராபாத்திலிருந்து சபர்மதிக்கு வந்து நேராக கஸ்தூரிபாவிடம் சென்றார். காந்திஜியைச் சந்திக்கக்கூட நினைக்காத அளவுக்கு அவர்மனதில் அவ்வளவுகசப்பு உண்டாகியிருந்தது. ஆமால் காந்தி, காந்தியாகவே இருந்தார்.
விசயம் அறிந்து அவர் சிரித்துக்கொண்டே சரோஜினியைச் சந்திக்கவந்தார். அடிகளைப் பார்த்ததும் சரோஜினிநாயுடு ஆத்திரத்தில் ஓரிரு வார்த்தைகள் அதகமாகவே பேசி விட்டார். காந்தியடிகள் விருப்பு, வெறுப்பு இல்லாமல் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். சரோஜினி நாயுடு எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு காந்தியடிகள் தம் இயற்கையான சுபாவத்துடன் பேசலானார்: ‘சரோஜினி தேவி, இன்றைய இந்நேரம் கோப்ப்படவேண்டியதல்ல, மகிழ்ச்சி ததும்ப வேண்டிய நேரம், கடவுள் நம் மீது மிகவும் கருணை காட்டியிருக்கிறார் என்பதை அறிந்து கொள் கடவுள் என்னை, இக் கட்டுரையை எழுதச் செய்யாமலிருந்தோலேஓ அல்லது நான் இங்கு நடந்த தவறுகளை மறைத்து வைத்திருந்தோலோ இந்த ஆசிரமம் ஆசிரமமாகவே இருந்திருக்காது. இது நரகமாகத் தான் இருந்திருக்கும். என் மூலமாக இக்கட்டுரையை எழுதச்செய்து கடவுள் நம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டார். நம் பளுவைக் குறைத்து பூவபை போன்று ஆக்கிவிட்டார். இப்போது சகன்லாலோ, கஸ்தூரிபாவோ, ஆசிரமத்திலுள்ள மற்ற நண்பர்களோ யாரும் இம்மாதிரித் தவற்றைச் செய்யமாட்டார்கள். ஆகையால் உன் கோபம் இப்போது மகிழ்ச்சியாக மாற வேண்டும். இறைவன் காட்டிய எல்லையற்ற கருணைக்காக அவன் புகழைப்போற்றி பரவுவோம்”.
Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
46. டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்?
சேவாக் கிராமத்தில் காந்தியடிகளின் குடிசைக்கு முன்னால் கிழக்குப் பக்கம் மற்றொரு குடிசை இருந்தது. அடிகளைக் காணவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அங்கு தங்குவர். அந்நாட்களில் ஆச்சார்ய நரேந்திரதேவ் அதில் தங்கியிருந்தார். அவர் ஒரு பேரறிஞராக மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்டத்தின் பழுத்த தலைவரும் ஆவார். காங்கிரசுக்குள்ளிருந்த சோஷலிசக் கட்சியை நிறுவியவரும் அவரே தான். ஆனால் இளைப்பால் தொல்லைப்பட்டக் கொண்டிருந்தார். காந்தியடிகள் அவரைப் பார்த்த போது தம்முடன் சேவா கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தார்.
அந்நாட்களில் தான்பாரத்த்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும்பொருட்டு ‘கிரிப்ஸ் மிஷன்’ இந்தியாவிற்கு வந்திருந்தது. இக்குழுவினருடன் பேச காந்தியடிகளுக்கு அழைப்பு வருவது இயற்கைதானே. அவர் டில்லி சென்று பேசி விட்டு உடனே திரும்பிவிட்டார். ‘தூதுக்குழு டில்லியில் தங்கியிருப்பதலா இன்னும் சில நாட்கள் இங்கு தாங்கள் தங்கிச் செல்லலாமே’ என பத்திரிகை நிருபர்கள் கேட்டனர்.
அதற்குக் காந்தியடிகள் ‘ஒரு டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்?’ என்று பதிலளிக்கும் முறையில் மறு கேள்வியை கேட்டார்.
அவர் ஆச்சாரிய நரேந்திர தேவுக்க்உச் சிகிச்சை அளித்துக் கவனிப்பதற்க்காக ஆசிரமத்திற்கு உடனே திரும்பிவிட்டார்.
சேவாக் கிராமத்தில் காந்தியடிகளின் குடிசைக்கு முன்னால் கிழக்குப் பக்கம் மற்றொரு குடிசை இருந்தது. அடிகளைக் காணவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அங்கு தங்குவர். அந்நாட்களில் ஆச்சார்ய நரேந்திரதேவ் அதில் தங்கியிருந்தார். அவர் ஒரு பேரறிஞராக மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்டத்தின் பழுத்த தலைவரும் ஆவார். காங்கிரசுக்குள்ளிருந்த சோஷலிசக் கட்சியை நிறுவியவரும் அவரே தான். ஆனால் இளைப்பால் தொல்லைப்பட்டக் கொண்டிருந்தார். காந்தியடிகள் அவரைப் பார்த்த போது தம்முடன் சேவா கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தார்.
அந்நாட்களில் தான்பாரத்த்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும்பொருட்டு ‘கிரிப்ஸ் மிஷன்’ இந்தியாவிற்கு வந்திருந்தது. இக்குழுவினருடன் பேச காந்தியடிகளுக்கு அழைப்பு வருவது இயற்கைதானே. அவர் டில்லி சென்று பேசி விட்டு உடனே திரும்பிவிட்டார். ‘தூதுக்குழு டில்லியில் தங்கியிருப்பதலா இன்னும் சில நாட்கள் இங்கு தாங்கள் தங்கிச் செல்லலாமே’ என பத்திரிகை நிருபர்கள் கேட்டனர்.
அதற்குக் காந்தியடிகள் ‘ஒரு டாக்டர் தன் நோயாளியை எப்படிக் கைவிட முடியும்?’ என்று பதிலளிக்கும் முறையில் மறு கேள்வியை கேட்டார்.
அவர் ஆச்சாரிய நரேந்திர தேவுக்க்உச் சிகிச்சை அளித்துக் கவனிப்பதற்க்காக ஆசிரமத்திற்கு உடனே திரும்பிவிட்டார்.
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://2img.net/i/empty.gif)
» உணர்வு! – காந்திஜி
» விந்தை மிகு வியப்பான நிகழ்ச்சிகள்
» காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்
» எந்நெந்த நிகழ்ச்சிகள், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் என்பதை நினைவூட்டும் தளம்
» உலகப் புகழ்பெற்றவர்கள் வாழ்வில்………………..
» விந்தை மிகு வியப்பான நிகழ்ச்சிகள்
» காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்
» எந்நெந்த நிகழ்ச்சிகள், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் என்பதை நினைவூட்டும் தளம்
» உலகப் புகழ்பெற்றவர்கள் வாழ்வில்………………..
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|