Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கும்போகோணம் டிகிரி காபி
Page 1 of 1 • Share
கும்போகோணம் டிகிரி காபி
[You must be registered and logged in to see this image.]
எங்கோ கண்டுபிடிக்கப்பட்ட பானம் காபி;அது கும்பகோணத்துக்கு வந்ததும் எப்படி அதன் பெயரில் ஒட்டிக்கொண்டது டிகிரி? சுவையான காபியின் வரலாறைப் பார்த்து விட்டு டிகிரிக்கு வருவோம்... காபியின் பூர்வீகம் எது என்பதில் முரண்பாடான கருத்துக்கள் உண்டு.
கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு, எத்தியோப்பியா நாட்டில் ஃகாப்பா என்ற பகுதியில் கல்பா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது வழக்கத்துக்கு மாறாக சில ஆடுகள்
உற்சாகமாக ஆடியோடி திரிந்ததைப் பா ர்த்து அதிசயித்த கல்பா, அவை ஒரு செடியில் உள்ள சிவப்பு பழங்களை உண்டதாலேயே உற்சா கமடைந்ததைக் கண்டறிந்தார்.
அவரும் அப்பழங்களை ருசிக்க, அளவில்லாத உற்சாகத்தை உணர்ந்தார். இப்படித்தான் காபிச்செடி இனம் காணப்பட்டதென ஒரு செவிவழிக் கதையுண்டு.
17ம் நூற்றாண்டில் மெக்கா, ஏமன் நாடுகளுக்கு யாத்திரை சென்ற பாபாபூடன் என்பவர் காபி விதைகளை இந்தியா கொண்டு வந்தார்.அவர் முதலில் காபியை பயிரிட்ட இடம் கர்நாடகாவின் சந்திரகிரி மலை. பிறகு பிரிட்டிஷ்காரர்களால் காபி இந்திய மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி மண்ணிலும் கலந்து விட்டது.
அமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச் சினோ, மோக்கா, லங்கோ என காபியில் உலகப் புகழ்பெற்ற ரகங்கள் இருந்தாலும், அதை உன்னதத் தன்மையோடு அருந்த கும்பகோணம்தான் வரவேண்டும்.பொதுவாக குடந்தைக்காரர்கள் உணவு விஷயத்தில் ரசனைவாதிகள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, கிணற்று நீரில் குளிர்குளியலிட்டு, இறைவனைத் தொழுதபின் அவர்களுக்குச் சுடச்சுட டிகிரி காபி வேண்டும். அதைக் குடித்தால்தான் உடல் இயந்திரம்அடுத்தவேலைக்குத் தயாராகும்.
அதென்ன டிகிரி காபி?டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால்.
இதை லேக்டோ மீட்டர் போட்டு டிகிரி உறுதிப்படுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான், அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும் சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட வேண்டும். ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள் கிளர்ந்து எழும்.
கும்பகோணத்தில் வீதிக்கு வீதி டிகிரி காபி கடைகள் உண்டு. மடத்துத்தெருவில் உள்ள இன்பம் காபிக்கடையில் டிகிரி காபி அருந்துவது சிறந்த அனுபவம். கோதண்ட ராமன் தான் இன்பம் காபிக்கடையின் நிறுவனர். இதுதவிர, முருகன் கபே, காந்தி பூங்கா அருகேயுள்ள வெங்கட்
ரமணா ஹோட்டல், கும்பேஸ்வரன் சந்நதி தெருவில் மங்களாம்பிகா ஆகிய இடங்களில் ரியலான டிகிரி காபியை ருசிக்கலாம்.
dinakaran
எங்கோ கண்டுபிடிக்கப்பட்ட பானம் காபி;அது கும்பகோணத்துக்கு வந்ததும் எப்படி அதன் பெயரில் ஒட்டிக்கொண்டது டிகிரி? சுவையான காபியின் வரலாறைப் பார்த்து விட்டு டிகிரிக்கு வருவோம்... காபியின் பூர்வீகம் எது என்பதில் முரண்பாடான கருத்துக்கள் உண்டு.
கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு, எத்தியோப்பியா நாட்டில் ஃகாப்பா என்ற பகுதியில் கல்பா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது வழக்கத்துக்கு மாறாக சில ஆடுகள்
உற்சாகமாக ஆடியோடி திரிந்ததைப் பா ர்த்து அதிசயித்த கல்பா, அவை ஒரு செடியில் உள்ள சிவப்பு பழங்களை உண்டதாலேயே உற்சா கமடைந்ததைக் கண்டறிந்தார்.
அவரும் அப்பழங்களை ருசிக்க, அளவில்லாத உற்சாகத்தை உணர்ந்தார். இப்படித்தான் காபிச்செடி இனம் காணப்பட்டதென ஒரு செவிவழிக் கதையுண்டு.
17ம் நூற்றாண்டில் மெக்கா, ஏமன் நாடுகளுக்கு யாத்திரை சென்ற பாபாபூடன் என்பவர் காபி விதைகளை இந்தியா கொண்டு வந்தார்.அவர் முதலில் காபியை பயிரிட்ட இடம் கர்நாடகாவின் சந்திரகிரி மலை. பிறகு பிரிட்டிஷ்காரர்களால் காபி இந்திய மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி மண்ணிலும் கலந்து விட்டது.
அமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச் சினோ, மோக்கா, லங்கோ என காபியில் உலகப் புகழ்பெற்ற ரகங்கள் இருந்தாலும், அதை உன்னதத் தன்மையோடு அருந்த கும்பகோணம்தான் வரவேண்டும்.பொதுவாக குடந்தைக்காரர்கள் உணவு விஷயத்தில் ரசனைவாதிகள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, கிணற்று நீரில் குளிர்குளியலிட்டு, இறைவனைத் தொழுதபின் அவர்களுக்குச் சுடச்சுட டிகிரி காபி வேண்டும். அதைக் குடித்தால்தான் உடல் இயந்திரம்அடுத்தவேலைக்குத் தயாராகும்.
அதென்ன டிகிரி காபி?டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால்.
இதை லேக்டோ மீட்டர் போட்டு டிகிரி உறுதிப்படுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான், அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும் சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட வேண்டும். ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள் கிளர்ந்து எழும்.
கும்பகோணத்தில் வீதிக்கு வீதி டிகிரி காபி கடைகள் உண்டு. மடத்துத்தெருவில் உள்ள இன்பம் காபிக்கடையில் டிகிரி காபி அருந்துவது சிறந்த அனுபவம். கோதண்ட ராமன் தான் இன்பம் காபிக்கடையின் நிறுவனர். இதுதவிர, முருகன் கபே, காந்தி பூங்கா அருகேயுள்ள வெங்கட்
ரமணா ஹோட்டல், கும்பேஸ்வரன் சந்நதி தெருவில் மங்களாம்பிகா ஆகிய இடங்களில் ரியலான டிகிரி காபியை ருசிக்கலாம்.
dinakaran
Re: கும்போகோணம் டிகிரி காபி
தகவலுக்கு நன்றி நண்பா....! ஆனால் சென்ற வாரம் நான் நண்பகல் நேரத்தில் கும்பகோணம் வீதிகளில் அலைந்தேன் காபிக்காக....! ஆனால் ஒரு கடைகளில் கூட இல்லை....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கும்போகோணம் டிகிரி காபி
கும்பகோணத்தில் எல்லா கடைகளிலும் கிடைத்து விடாது. ஷண்முகா ரெஸ்டாரென்ட், பாண்டியன், ஒ.வி.ம். விநாயகா போன்ற பல ஹோடேல்களில் கிடைக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கும்போகோணம் டிகிரி காபி
மணப்பாறையில் நேற்று பார்த்தேன். ஒரு கடையில் இங்கு கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும்னு போட்டுருந்தாங்க. என்னா ஒரு விளம்பரம்?
Re: கும்போகோணம் டிகிரி காபி
கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியெல்லாம் இப்படிதான் போட்டுருப்பாங்க. வாங்கி குடிசிட்டிங்கனா வாழ்கையிலேயே மறக்க மாட்டிங்க அவ்வளவு கேவலமா இருக்கும் அந்த காப்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கும்போகோணம் டிகிரி காபி
சீனர்கள்தான் முதன்முதலாக இதை கண்டு பிடித்தாக எப்போதோ எங்கேயோ எதிலோ வாசித்தாக ஞாபகம் பிரபு.
சரியா? தவறா? தெரியலை...
சரியா? தவறா? தெரியலை...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கும்போகோணம் டிகிரி காபி
காஃபி பற்றி தகவலுக்கு நன்றி பிரபு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கும்போகோணம் டிகிரி காபி
பெருசுக்கு வயசாயிட்டுல அதான் எல்லாத்தையும் மறந்துட்டுஜேக் wrote:சீனர்கள்தான் முதன்முதலாக இதை கண்டு பிடித்தாக எப்போதோ எங்கேயோ எதிலோ வாசித்தாக ஞாபகம் பிரபு.
சரியா? தவறா? தெரியலை...
Similar topics
» சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி
» கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
» 108 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூரில் 111 டிகிரி வெயில்
» திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
» டிகிரி{இளநிலை பட்ட படிப்பு} படிப்புகள் சில சந்தேகம்
» கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
» 108 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூரில் 111 டிகிரி வெயில்
» திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
» டிகிரி{இளநிலை பட்ட படிப்பு} படிப்புகள் சில சந்தேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|