தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!

View previous topic View next topic Go down

கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்! Empty கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!

Post by rammalar Tue Nov 22, 2016 9:36 pm

பாட்னா- இந்தூர் ரயில் விபத்தில் 133 க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.

ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.

ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.

தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.

உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.

இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.

விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.

ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.

சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.

அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.

ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.

ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.

அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.

பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.

ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------

-எம்.குமரேசன்
விகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum