Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
Page 1 of 1 • Share
12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
மும்பை,
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவில் இருந்தே மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. மருத்துவமனைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பொதுமக்கள் பாதிப்பு
தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நின்றன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்தது.
பலத்த மழையால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மும்பையின் அனைத்து பகுதியிலும் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வந்த 40 விமானங்கள் ஆமதாபாத், புனே, நாக்பூர் போன்ற பல இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
அனைத்து வசதியும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மீட்பு பணி தீவிரம்
பள்ளி, அலுவலகங்களுக்கு மதியத்திற்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வெளியே சென்றவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. பலர் வெள்ளநீரில் செய்வதறியாது தத்தளித்தனர்.
பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 220 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்ததாக மாநகராட்சி தெரிவித்தது.
மாநகராட்சியினர் வெள்ளம் தேங்கிய இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பல இடங்களில் நீர் உறிஞ்சு பம்புகள் மூலம் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது.
உதவி மையம்
வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்ய மும்பை மாநகராட்சி 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கி உள்ளது. பொதுமக்கள் 196 என்ற எண்ணிற்கு இலவசமாக தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு பிரிவினர், தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கோவில்கள், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கேட்டறிந்தார்
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலவரத்தை கேட்டறிந்தார். அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அவர் உறுதி அளித்தார். இதேபோல் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும், பட்னாவிசிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2005-ம் ஆண்டில் 3 நாட்கள் கொட்டி தீர்த்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டு, பல உயிரிழப்புகளும் நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவில் இருந்தே மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. மருத்துவமனைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பொதுமக்கள் பாதிப்பு
தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நின்றன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்தது.
பலத்த மழையால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மும்பையின் அனைத்து பகுதியிலும் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வந்த 40 விமானங்கள் ஆமதாபாத், புனே, நாக்பூர் போன்ற பல இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
அனைத்து வசதியும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அன்றாட தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மீட்பு பணி தீவிரம்
பள்ளி, அலுவலகங்களுக்கு மதியத்திற்கு பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வெளியே சென்றவர்களால் வீடு திரும்ப முடியவில்லை. பலர் வெள்ளநீரில் செய்வதறியாது தத்தளித்தனர்.
பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 220 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்ததாக மாநகராட்சி தெரிவித்தது.
மாநகராட்சியினர் வெள்ளம் தேங்கிய இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பல இடங்களில் நீர் உறிஞ்சு பம்புகள் மூலம் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது.
உதவி மையம்
வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்ய மும்பை மாநகராட்சி 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கி உள்ளது. பொதுமக்கள் 196 என்ற எண்ணிற்கு இலவசமாக தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு பிரிவினர், தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கோவில்கள், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கேட்டறிந்தார்
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலவரத்தை கேட்டறிந்தார். அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அவர் உறுதி அளித்தார். இதேபோல் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும், பட்னாவிசிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2005-ம் ஆண்டில் 3 நாட்கள் கொட்டி தீர்த்த மழையினால் வெள்ளம் ஏற்பட்டு, பல உயிரிழப்புகளும் நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 125-ஆண்டுகளுக்கு பிறகு இரகசிய கோக் சூத்திரம் வெளியானது...!
» 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில்சேவை : தமிழக எம்.பி.,க்கள் ஆப்சென்ட்
» லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் சாதனை
» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
» 100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி
» 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில்சேவை : தமிழக எம்.பி.,க்கள் ஆப்சென்ட்
» லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் சாதனை
» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
» 100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|