தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனைவி எப்படி இருக்க வேண்டும்? – கவிஞர் கண்ணதாசன்

View previous topic View next topic Go down

மனைவி எப்படி இருக்க வேண்டும்? – கவிஞர் கண்ணதாசன் Empty மனைவி எப்படி இருக்க வேண்டும்? – கவிஞர் கண்ணதாசன்

Post by rammalar Sat Nov 25, 2017 5:03 pm

மனைவி எப்படி இருக்க வேண்டும்? – கவிஞர் கண்ணதாசன் 01%20%204%20%20-%20%2092-0
-

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை
உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம்
அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும்
நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான்.
எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது.
அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர
முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே
அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை
லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின்
சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை,
வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது.
அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும்,
அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது.
அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால்
தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.
எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும்
இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை
சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் தேவதையை
போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும் உள்ள
பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்

பார்ப்பதற்கு தேவதை போன்று அழகாக இருக்கிறாள்
என்கிறார்களே, அது போன்ற திருத்தமான அழகு பெண்ணுக்கு
இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக
வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால்
வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி
வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மனைவி எப்படி இருக்க வேண்டும்? – கவிஞர் கண்ணதாசன் Empty Re: மனைவி எப்படி இருக்க வேண்டும்? – கவிஞர் கண்ணதாசன்

Post by rammalar Sat Nov 25, 2017 5:04 pm

மனைவி எப்படி இருக்க வேண்டும்? – கவிஞர் கண்ணதாசன் PIMfq14oSU2ZAQJ4zs0C+wife
-
காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு,
ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, கால்
பார்த்து நடந்து வரும் கட்டழகையே, தேவதை போன்ற அழகு
என்கிறார்கள்.

அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க
மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில்
திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், குலப்பெண்கள் அந்த
அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல்,
அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள்
விரட்டி விடுவாள்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு
வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு
இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க
வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி
குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்
போல் இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற
ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

– இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன்
பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில்
தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும்
அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும்
பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன்,
தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள்
அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான்,
அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி… நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும்
அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை
படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல்,
தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள்.
அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள்
என்பது இதன் அர்த்தம்.

இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது
இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான
அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால்
தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும்
என்கிறார்கள்.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த
திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன.
ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும்
என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே
விட்டுவிட வேண்டும்” என்கிறார் கண்ணதாசன்.

——————————————
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum