தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உணவு மருத்துவம் - கறிவேப்பிலை

View previous topic View next topic Go down

 உணவு மருத்துவம் - கறிவேப்பிலை Empty உணவு மருத்துவம் - கறிவேப்பிலை

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:47 pm

முடி - கண் - வயிறு - நரம்பு - மூளை இவற்றிற்கு இன்றியமையாதது கறிவேப்பிலை. கறிவேப்பிலையினை வெயிலில் கருகச் செய்து தேங்காய் எண்ணெயுடன் பொடி செய்து கலந்து தேய்த்து வர இளம் நரை விலகும். கறிவேப்பிலை சாற்றினை பசும் பாலுடன் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலமும் நரை முடி வராமல் தடுக்கலாம்.

கறிவேப்பிலையில் வைட்டமின் அ சத்து மிகுந்து இருப்பதால் இது கண்ணுக்கு உரமாய் விளங்குகின்றது. தினமும் கறிவேப்பிலையினை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது.

பசியினைத் தூண்டி, செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படாது தடுப்பதில் கறிவேப்பிலைக்குத் தனிபங்கு உண்டு. கறிவேப்பிலை பொடியினை நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்றில் வாய்வு சேராது. மலச்சிக்கல் ஏற்படாது. பசியில்லையே என்று அலைமோதுபவர்கள், சாப்பிட்டில் மனம் செல்லாது விளையாடும் பிள்ளைகள் இவர்களுக்கு சிறந்த பசி தூண்டியாக கறிவேப்பிலை பயன்படுகிறது.

வாய்வு, சீதளம் காரணமாக இடுப்பு, கைகால், தொடை பகுதிகளில் பிடிப்பு வலி எற்படின் கறிவேப்பிலையுடன் துவரம்பருப்பு, இஞ்சி, சீரகம், பெருங்காயம் கலந்து பொடி செய்து உணவுடன் கலந்து சாப்பிட தொல்லைகள் தீரும்.

உடலுக்கு உற்சாகத்தை ஊட்டி தெம்பூட்டுவதில் கறிவேப்பிலை தன்னிரகரற்றது. மூளையினை முதலீடாகக் கொண்டு செயலாற்றும் ஆபீசர்கள் மூளை திசுக்களின் செயல்திறன் குன்றாமல் இருக்க கறிவேப்பிலையை மறந்து விடக்கூடாது.

சித்தப்பிரமை பிடித்தவர்களுக்கு கறிவேப்பிலையை மஞ்சள். சீரகத்துடன் கலந்து மோருடன் கலந்து 48 நாட்கள் பருகச் செய்தால் கைமேல் பலன் கிட்டும்.

மூலச்சூடு, கருப்பைச்சூடு ஆகியவற்றைப் போக்குவதில் கறிவேப்பிலை வல்லமை பெற்றதாகும் உடல் சூட்டினைத் தணித்து உடல் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகின்றது. இதனால் கண் முதல் கால் நகம் வரை ஊட்டம் பெறும். குடல் சூட்டினால் வயிற்றுப்புண், காலரா, அமீபியாசிஸ், சீதபேதி, இரத்தபேதி, வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன் வெந்தயம்சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நிவராணம் துரிதமாகும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 உணவு மருத்துவம் - கறிவேப்பிலை Empty Re: உணவு மருத்துவம் - கறிவேப்பிலை

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:47 pm

பார்லி

பார்லி மாவுத்தன்மை கொண்ட உணவாகும். இது உடலுக்கு உரமளித்து சிறுநீரை வெளியேற்றி செரிமானத்தை உண்டு பண்ணும். இனிப்பு சுவையுள்ள பார்லி கஞ்சி செய்து சாப்பிடுவதால் சிறுநீர் தடையின்றி வெளியேறும். அஜீரணக் கோளாறுகள் வராது.

கருவுற்ற மகளிர் இருதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், இரத்த சோகை நோயாளிகள் ஆகியோருக்கு கால் வீக்கம் காணும். அவர்களுக்கு பார்லி கஞ்சி சிறந்த உணவாகும். பார்லி கஞ்சி சிறுநீரைப் பிரித்து கால்வீக்கத்தை வற்றச் செய்யும்.

உஷ்ணம் காரணமாக வரும் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிறு எரிச்சல், நீரிழிவு நோயில் காணும் நீர் வேட்கை ஆகியவை தணிய பார்லி கஞ்சியுடன் எலுமிச்சம் பழச்சாறும், தேனும் கலந்து பருகலாம்.

தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்குப் பார்லி கஞ்சி சிறந்த டானிக்காகும்.

வாழைத் தண்டு

வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி வேறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.

வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும்.

வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வû தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.

வாழைப் பூவை வேகவைத்து பொரியல் செய்து உண்பதால் அஜீரணம் நீரழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும் வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்.

வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.

(இக்கட்டுரை மாற்று மருத்துவம் ஜூலை 2009 இதழில் வெளியானது)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

 உணவு மருத்துவம் - கறிவேப்பிலை Empty Re: உணவு மருத்துவம் - கறிவேப்பிலை

Post by mohaideen Thu Dec 27, 2012 7:57 pm

அனைத்தும் அருமையான மருத்துவ குறிப்புகள்

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

 உணவு மருத்துவம் - கறிவேப்பிலை Empty Re: உணவு மருத்துவம் - கறிவேப்பிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum