தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுட சுட செய்திகள்...அச்சலா

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 5:38 pm

First topic message reminder :


தினசரி செய்திகள் இந்த பகுதியில் இடமெறும்..


மது அருந்தும் வயது: மகாராஷ்டிரா அரசு உத்தரவிற்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை: மது அருந்தும் வயதினை அதிகரி்த்து உத்தரவிட்ட மகாராஷ்டிரா அரசுக்கு
எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில், அரசு உத்தரவிற்கு இடைக்கால
தடைவிதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.
மகாராஷ்டிரா மாநில அரசு, மது
அருந்துவோர் சட்டபூர்வ வயதினை 21-ல்இருந்து 25 ஆக அதிகரித்து கடந்த
2009-ம் ஆண்டு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் பாலிவுட்
நடிகர் இம்ரான்கான், மும்பை ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு பொதுநல வழக்கு
தொடர்ந்தார்.அதில் அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என
கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மோஹித்ஷா, மேத்தா ஆகியோர் முன்பு
விசா‌ரணைக்கு வந்தது. விசாரணை‌க்கு ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு ஆணைக்கு
தடைவிதிக்க முடியாது , இது தொடர்பாக ஏப்.15-ம் தேதிக்கு மகாராஷ்டிரா அரசு
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:27 am

குஜராத் வன்முறை மீண்டும் நடக்காது: மோடி உறுதி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_643963

ஆமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு நடந்ததைப் போல், மீண்டும் ஒரு வன்முறை
சம்பவம் குஜராத்தில் நடக்காது என தன்னைச் சந்தித்த ஐரோப்பிய யூனியன்
தூதரிடம் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் முதல்வராக தொடர்ந்து 3வது முறையாக பொறுப்பேற்ற பின், கடந்த
ஜனவரி 7ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியாவுக்கான ஐரோப்பிய
யூனியன் தூதர் ஜோ கிராவின்ஹோ சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு
குஜராத்தில் நடந்த கலவரத்திற்குப் பின், ஐரோப்பிய யூனியன் மோடியுடன் சுமூக
உறவு வைத்துக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 10
ஆண்டுகளுக்குப்பிறகு, திடீரென நடந்த இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ கிராவின்ஹோ,
கடந்த ஜனவரி 7ம் தேதி எங்களின் சந்திப்பு நடந்தது. அப்போது குஜராத் கலவரம்
உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குஜராத் கலவரம் இந்தியாவில்
மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வரும் விஷயம் என
நான் மோடியிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். எனினும் ஜோ
கிராவின்ஹோவிடம், குஜராத் கலவரம் போன்று மற்றுமொரு சம்பவம் நடைபெறாது என
மோடி உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன் தூதரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி, குஜராத் சம்பவத்தை
யாரும் எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்று கூறினார்.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:27 am

திருச்சியில் நடிகை குஷ்பு மீது செருப்பு வீச்சு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_643385
திருச்சி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்ததாக,
நடிகை குஷ்பு மீது, திருச்சியில், தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல்
நடத்தினர். திருச்சி, தேசியக்கல்லூரி மைதானத்தில், தி.மு.க., ராஜ்யசபா
எம்.பி., சிவா மகள் திருமணம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று
காலை நடந்தது. விழாவில், நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார்.




திருச்சி
சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள, "பெமினா' ஓட்டலுக்கு சென்று
ஓய்வெடுத்து விட்டு, விமானத்தில் சென்னைக்கு செல்வதற்காக, ஓட்டல்
அறையிலிருந்து மதியம், 1:45 மணியளவில் வெளியே வந்தார்.ஓட்டலுக்கு வெளியே
வந்து, காரில் ஏறச் சென்ற குஷ்புவை, தி.மு.க., கரைவேட்டி கட்டிய, 50 பேர்
கொண்ட கும்பல் வழி மறித்தது. "குஷ்பு ஒழிக' என்று கோஷமிட்டனர். அவர்களிடம்,
"எதற்காக, கோஷம் போடுகிறீர்கள்' என, குஷ்பு கேட்டார்."தமிழகம் முழுவதும்
உள்ள தொண்டர்கள், தி.மு.க., தலைவராக தளபதியை (ஸ்டாலின்) ஏற்றுக்
கொண்டுவிட்டனர். நீ யாரடி, அவருக்கு எதிராக பேட்டி கொடுக்க' என்று கேட்டு,
சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

திடீரென்று அவர்கள், குஷ்பு மீது செருப்புகள், தண்ணீர் பாட்டில்களை வீசி
தாக்குதல் நடத்தினர். நிலை குலைந்து போன குஷ்புவை, ஓட்டல் மேலாளர் அமர்நாத்
காப்பாற்றி, மீண்டும் ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றார்.போலீசார் வரும்
முன், ஓட்டலில் திரண்டிருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதன்
பின், 2:15 மணியளவில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குஷ்பு விமான
நிலையத்துக்கு சென்றார். மதியம், 2.30 மணிக்கு, சென்னை செல்லும் ஜெட்
ஏர்வேஸ் விமானத்தில், சென்னைக்கு கிளம்பிச் சென்றார்.




குஷ்பு மீது தாக்குதல் ஏன்?
வார
இதழ் ஒன்றில், "தளபதி தான் அடுத்த தலைவராக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை'
என, ஸ்டாலினுக்கு எதிராக, நடிகை குஷ்பு பேட்டியளித்ததை போல, போஸ்டர்
செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்கி முழுமையாக படிக்காமல்,
வெறும் போஸ்டர் செய்தியை மட்டும் பார்த்து விட்டு, ஆத்திரமடைந்த சில
உடன்பிறப்புகள், குஷ்பு மீது தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது.



செருப்பு வீச்சுக்கு பின் குஷ்பு விளக்கம் : ""என்
வழி, தலைவர் கருணாநிதி வழி; நான் அளித்த பேட்டியை தொண்டர்கள் தவறுதலாக
புரிந்து கொண்டனர்,'' என்று செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட பின்,
நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறினார். தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்,
ஸ்டாலினை சந்திக்க குஷ்பு முயன்றார். ஆனால், ஸ்டாலின் அவரை சந்திக்க
மறுத்துவிட்டதாக தெரிகிறது.




வீடு மீது கல்வீச்சு :

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள, குஷ்புவின் வீட்டை, 20க்கும்
மேற்பட்டோர் கல்வீசி தாக்கினர். பேட்டி தொடர்பாக, திருச்சியில் குஷ்பு
மீது, செருப்பு வீச்சு சம்பவம் நடந்த அதே நேரத்தில், சென்னை,
பட்டினப்பாக்கம், லீத் கேஸ்டல் வடக்கு தெருவில், குஷ்பு வீட்டு முன், 10
பெண்கள் உட்பட, 20 க்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்கள் குஷ்புவுக்கு
எதிராக கோஷம் எழுப்பியதுடன், வீட்டின் முகப்பு விளக்கு, கார் கண்ணாடி,
ஆகியவற்றை கல்வீசி தாக்கிவிட்டு, அங்கிருந்து மாயமாகினர். தாக்குதல்
நடத்தியவர்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
தாக்குதல்
நடந்தபோது, குஷ்பு, அவரது கணவர், சினிமா டைரக்டர், சுந்தர்.சி ஆகியோர்
வீட்டில் இல்லை. குஷ்புவின் மகள்கள் அவந்திகா, அனந்திகா மற்றும்
பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். கல்வீச்சு தாக்குதல் காரணமாக,
அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது; போலீசார் குவிக்கப்பட்டனர். மதியம்
2:00 மணிக்கு, குஷ்புவின் தாயார், நஜ்மாகான் வீட்டுக்கு வந்தார். அப்போது,
குஷ்புவின் மகள்கள் இருவரும் அவரை கட்டிப்பிடித்து அழுதனர். நேற்று மாலை
வரை, இதுபற்றி போலீசில் புகார் செய்யப்படவில்லை.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:28 am

ஜெயலலிதாவுக்கு, "பெண் பூனை படை' பாதுகாப்பு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_643396
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்
மாயாவதிக்கும், பெண் பூனைப் படை பாதுகாப்பு அளிக்க, தேசிய பாதுகாப்புப் படை
முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பில்
ஈடுபடும், முதல் பெண் பூனைப் படையினர் என்ற அந்தஸ்தை, இப்படையினர்
பெறுகின்றனர்.

நாட்டின் முக்கிய இடங்களின் பாதுகாப்பு, கடத்தப்பட்டவர்களை மீட்பது,
முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு ஆகிய பணிகளுக்காக, தேசிய
பாதுகாப்புப் படை, 28 ஆண்டுகளுக்கு முன், உருவாக்கப்பட்டது. இதில், ஆண்கள்
மட்டுமே, சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, கறுப்புப் பூனைப் படையினராக
உருவாக்கப்பட்டு வந்தனர். முதல்முறையாக, பெண்களையும், பூனைப் படையினராக
உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், தேசிய
பாதுகாப்புப் பணியில் சேர்க்கப்பட்டனர்.

பெண் பூனைப் படையினரை, நாட்டின், "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பில்
இருக்கும், இரு பெண் தலைவர்களுக்கு பயன்படுத்த, தேசிய பாதுகாப்புப் படை
முடிவு செய்தது. இதையடுத்து, "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பில் இருக்கும்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி
ஆகியோரின் பாதுகாப்புக்கு, பெண் பூனைப் படையினரை அனுப்ப, மத்திய உள்துறை
அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால், பாதுகாப்புப் பெறும் இரு பெண் தலைவரும்,
இதற்கு சம்மதம் அளிக்காததால், பெண் பூனைப் படையினரை அனுப்புவது
தாமதப்பட்டது என, தேசிய பாதுகாப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது,
பெண் பூனைப் படையினரை பாதுகாப்புக்கு அனுப்ப, மத்திய உள்துறை முடிவு
செய்திருப்பதாக கூறப்படுகிறது.

"இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று தான், ஒருவர் கேட்க
முடியும். பாதுகாப்பில் ஈடுபடுபவர்கள் ஆணா, பெண்ணா என்பதை, பாதுகாப்பு
கோருபவர் முடிவு செய்ய முடியாது. ஆண் பூனைப் படையினருக்கு இணையான அனைத்து,
பயிற்சிகளையும், பெண் பூனைப் படையினரும் பெற்றுள்ளனர். பாதுகாப்பு
வீரர்களில், ஆண், பெண் வேறுபாடு இல்லை என, தேசிய பாதுகாப்புப் படை உயர்
அதிகாரிகள் கூறுகின்றனர்.

திரும்பப் பெற்றுக்கொள்ளும் :
முதல்வர்
ஜெயலலிதாவின் பாதுகாப்பில், 21 ஆண் பூனைப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் ஏழு பேர், 24 மணி நேர பாதுகாப்பில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். மத்திய அமைச்சகத்தின் முடிவின் படி, பெண் பூனை
படையினர் அனுப்பப்பட்டால், தற்போது இருக்கும், 21 ஆண் பூனைப் படையினரை,
தேசிய பாதுகாப்புப் படை திரும்பப் பெற்றுக்கொள்ளும் என, மத்திய உளவுத் துறை
வட்டாரங்கள் கூறுகின்றன. -தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:28 am

அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_643402
திருச்சி: ""கடந்த, 19 மாத, அ.தி.மு.க., ஆட்சியில், 896 கொலைகள்
நடந்துள்ளன; இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை,'' என, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., திருச்சி சிவா
மகள் திருமணம் மற்றும், தி.மு.க., நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க,
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று, திருச்சி வந்தார். அவர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கே: இலங்கை விவகாரத்தில், இனியாவது மத்திய அரசு விழிக்க வேண்டும் என்பதை,
நீங்கள் முன்பே சொல்லியிருந்தால், லட்சக்கணக்கான உயிரை
காப்பாற்றியிருக்கலாமே?


ப: தி.மு.க., மட்டுமல்ல, இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து கட்சியும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.


கே: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியே வரவேண்டும் என, வைகோ கூறியுள்ளாரே?


ப: நான் வெளியே வந்தால், அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கின்றனர்.


கே: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, 1,000 கோடி ரூபாய், ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவார்களா?


ப: தி.மு.க., மத்திய அமைச்சர்கள் மட்டுமல்ல, எம்.பி.,க்களும் வலியுறுத்தியுள்ளனர்.


கே: காங்., கூட்டணியில் உள்ள, முலாயம்சிங் யாதவ், செப்டம்பர் மாதம் லோக் சபா தேர்தல் வரும் என, கூறியுள்ளாரே?


ப: அவர் கூறியது யூகம்.


கே: உங்களது யூகம்?


ப: நாங்கள் யூகத்திலும் இல்லை; வியூகத்திலும் இல்லை.


கே: லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து?


ப: தி.மு.க., எப்போதும், இது போன்ற பெரிய விஷயங்களை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவெடுக்கும்.


கே: ராகுல், காங்., துணை தலைவரானதை பாராட்டி, நீங்கள் கடிதம் எழுதியதற்கு
பதில் இல்லை. ராகுலை சந்திக்க, டில்லி சென்ற ஸ்டாலினையும், அவர்
சந்திக்கவில்லையே?


ப: ஸ்டாலின், பாலு உள்ளிட்டோர், "டெசோ' சார்பாக, டில்லியில் உள்ள,
வெளிநாட்டு தூதரை சந்திக்க சென்றனர். சில பத்திரிகைகள் அபாரமாக கற்பனை
செய்து, இதை திசை திருப்ப முயற்சித்துள்ளன.


கே: எதிர் கட்சியினர் மீது, தொடர்ந்து வழக்குகள் பாய்கிறதே?


ப: விஜயகாந்த் மீதா... இந்த அரசுக்கு, வழக்கு போடுவது, வழக்கமானது தான்.


கே: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது போல, தமிழகத்தில் நடத்த வலியுறுத்துவீர்களா?


ப: இங்கு எல்லாம், "நானே' என்ற ஆட்சி நடக்கிறது. இதில், ஆல் - பார்ட்டியாவது, ஆள் இல்லாத பார்ட்டியாவது.


கே: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட, தி.மு.க., தடையாக இருப்பதாக, தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளரே?


ப: அ.தி.மு.க., அமைச்சர்கள் பேச்சை நான் கவனிப்பது இல்லை. அதுபற்றி கருத்து
சொல்ல ஆரம்பித்தால், அந்த கருத்துக்களை கேட்டு, தங்களை திருத்தி
கொள்பவர்களாக, இந்த ஆட்சியில் யாரும் இல்லை.


கே: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவீர்களா?


ப: எங்களது எதிர்ப்பே, போராட்டத்துக்கான அறிகுறி. தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கே: மத்திய அரசு, தி.மு.க.,வின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளதே? "சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இருந்தாலும் தீய, மதவாத
சக்திகள், உள்ளே வரக்கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி அன்னிய முதலீட்டை
ஆதரிக்கிறோம்' என்று கூறியுள்ளீர்களே? கல்லக்குடி உட்பட, பல களங்களை கண்ட
தி.மு.க.,வுக்கு பயமா?


ப: களங்களை கண்டு, கழகம் ஒருபோதும் அஞ்சாது. மதவாத களங்களை கழகம் விரும்பாது.


கே: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பது போல் உள்ளதே?


ப: உங்களுக்கு பொறுக்காதே!


கே: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை
செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், போலீசார் இதுவரை, ஒருவரை கூட கைது
செய்யவில்லையே?


ப: சி.பி.ஐ.,க்கு இந்த வழக்கை கொண்டு வர, தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.


கே: தமிழக சட்டம் - ஒழுங்கு பற்றி...


ப: இந்த ஆட்சியில், 19 மாதத்தில், 896 கொலைகள் நடந்துள்ளன. இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை.


கே: அழகிரி மீது, 1,000 கோடி ரூபாய், ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?


ப: முதலில் அந்தம்மாவை, பெங்களூரு கேஸை முடிக்க சொல்லுங்கள்.


இவ்வாறு, அவர் கூறினார்.




"அகநானூறு முடிந்து விட்டது"
:
பேட்டி துவங்கியதிலிருந்து உற்சாகமாகவும், ஜாலியாக, அவர், விஜயகாந்த்
பற்றி, மூன்று முறை பேசினார். தொடர்ந்து, பல கேள்விகளுக்கு, தன் பாணியிலேயே
பதிலளித்தார். அப்போது, மூத்த நிருபர் ஒருவர், "உங்கள் இலக்கியப் பணியில்,
தொல்காப்பியத்துக்கு பின், அகநானூறு எழுதுகிறீர்களா' என, கேட்டதும், அவரை
பார்த்து சிரித்துக் கொண்டே, ""அகநானூறு தான் முடிந்து விட்டதே. எனக்கு
மட்டுமல்ல, உங்களுக்கும் முடிந்து விட்டது. இனி புறநானூறு தான் எழுத
வேண்டும்,'' என்றார்.-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:29 am

மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_643436
சென்னை : ""அரசியலுக்கு வரும் மன நிலை எனக்கு இல்லை. என்னை மறுபடியும்
தொந்தரவு செ ய்தால், நாட்டை விட்டு போய் விடுவேன்,'' என, நடிகர் கமல்ஹாசன்
தெரிவித்தார்.

சென்னையில் கமல் அளித்த பேட்டி:


"விஸ்வரூபம்' படம், ஆங்கிலப் படம் போல எடுத்திருப்பதாக, ரசிகர்கள்
பாராட்டியுள்ளனர். படம் பிரச்னை தொடர்பாக, இனிமேல் அங்கலாய்க்கவோ, கண்ணீர்
விடவோ வேண்டியதில்லை. படத்திற்கான என் உழைப்பு வீண் போகவில்லை. படத்திற்கு
போட்ட பணத்தை மீண்டும் எடுத்து, கடனையும் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை
ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் துவங்கி
விட்டன. சக கலைஞர்களின் ஒத்துழைப்பு, எனக்கு மேலும் மேலும் உழைக்க வேண்டும்
என்ற உத்வேகத்தை தூண்டியுள்ளது.




நடிகர் விஷாலுக்கு பிரச்னை :
நாங்கள்
சமூகத்தின் நிலையை தான், சினிமா மூலம் பிரதிபலிக்கிறோம். சமூக
பொறுப்புணர்வுடன், திரைப்படங்களை தயாரித்து வழங்குவேன். அரசியலுக்கு வர
எனக்கு தனிப் பயிற்சி ஏதுமில்லை; அதற்கான மன நிலை எனக்கு இல்லை. காலம்,
வயோதிகம், வாழ்க்கை என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்து செல்லும். என்னை
மறுபடியும் தொந்தரவு செ ய்தால், நாட்டை விட்டு போய் விடுவேன். என்
பகுத்தறிவு வாதம், மனிதநேயம், யாரையும் கெஞ்சாமல் நடந்து கொண்டிருக்கிறேன்.
கடமையை மட்டும், நிறைவேற்றி வருகிறேன். விஸ்வரூபம் படத்தை பார்க்கும்
இஸ்லாமியர்கள் பெருமைப்படுவர். எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர்
விஷாலுக்கு பிரச்னை என்றால், அவருக்காக நான் வாதாடவும் தயாராக இருக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா, விஸ்வரூபம் படத்தை பார்க்க வேண்டும் என,
விரும்புகிறேன். அவரை சந்திக்க நேரம் கேட்டு, கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.




டி.டி.எச்.,சில் எப்போது?
விஸ்வரூபம்
படத்தை டி.டி.எச்., வாயிலாக வெளியிடுவது குறித்து கமலிடம் கேட்டபோது,
""தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் முதலில் வெளியிடப்பட்டதில், டி.டி.எச்.,
நிறுவனங்கள், என்மீது கோபத்தில் உள்ளன. அவர்களிடம், இனிமேல் தான் பேசி
முடிவு செய்ய உள்ளேன். டி.டி.எச்., வெளியிடும் தேதி குறித்து தற்போது
சொல்லமுடியாது,'' என்றார்.
இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின், திருட்டு, "சிடி' விற்னை, தமிழகத்தின்
முக்கிய நகரங்களில் துவங்கியுள்ளது. சென்னையில், பர்மாபஜார்,
வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் இவை வெளியாகியுள்ளன.




600 தியேட்டர்கள் :
தமிழகம் முழுவதும், நேற்று, 600 தியேட்டர்களில் விஸ்வரூபம்
திரையிடப்பட்டது. தியேட்டர்கள் முன், ரசிகர்கள் பட்டாசு வெடித்து
அமர்க்களப்படுத்தினர்.இப்படம், நேற்று முன்தினம், சென்னையில் நடிகர்
ரஜினிகாந்துக்கு அவரது வீட்டிலேயே கமல் வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்.
ரஜினி மற்றும் குடும்பத்தினர், வீட்டிலேயே விஸ்வரூபம் படத்தை பார்த்தனர்.
சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில், நடிகர், நடிகைகளுக்கும், சினிமா,
வி.ஐ.பி.,களுக்கும் பிரத்தியோகமாக திரையிடப்பட்டது.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:29 am

துணை சபாநாயகர் முற்றுகை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் "சஸ்பெண்ட்'
சென்னை : சட்டசபையில் அமைச்சர் முனுசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு
தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், துணை சபாநாயகரை முற்றுகையிட
முயன்றதால், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சட்டசபையில் நேற்று, கவர்னர்
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத விவரம்:


ம.ம.க., - ஜவாஹிருல்லா:
இலங்கை படையினரால், தமிழக மீனவர்கள்
தாக்கப்படும் போது, இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும்,
காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இலங்கையை சர்வதேச
கோர்ட்டில் நிறுத்தி, இதற்கான இழப்பீடுகளை பெற, தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.


ஈழத்தில் இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய, ராஜபக்ஷேவிற்கு இந்தியாவில்
சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. "டெல்டா' மாவட்ட விவசாயிகள்
கண்ணீர் வடிப்பதற்கு, மத்திய அரசு தான் காரணம்.



ரங்கராஜன்- காங்கிரஸ்:
இலங்கை பிரச்னை தொடர்பாக, தீர்மானம்
நிறைவேற்றப்பட்ட போது, தமிழக காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. இலங்கை
தமிழர்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை.



அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:
இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு
செயல்படுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், மத்திய அரசை,
தி.மு.க., தாங்கிப் பிடிக்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும்
போது,"பேராசை பிடித்த மீனவர்கள், எல்லை தாண்டி செல்வதால் தான்
தாக்கப்படுகின்றனர்' என்று, மத்திய அரசின் செயல்பாடுகளை, தன் கருத்தின்
மூலம் நேரடியாக ஆதரித்தவர், தி.மு.க., தலைவர் தான். அவர் பேசியது,
அவைக்குறிப்பில் இருக்கிறது.


அ.தி.மு.க., - செங்கோட்டையன்:
இலங்கையில் போர் நடந்த போது, கருணாநிதி,
இரண்டு மணி நேரம் போலி உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அமைச்சர் போர்
நிறுத்தப்பட்டதாக கூறியதும், உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால், அந்த
நேரத்தில், இலங்கையில் குண்டு வீசப்பட்டதில், 84 ஆயிரம் தமிழர்கள்
கொல்லப்பட்டனர். இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

(அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் செங்கோட்டையன் பேசும் போது, தி.மு.க., வினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.)



அமைச்சர் முனுசாமி:
எல்லாரையும் எந்த நேரத்திலும் ஏமாற்ற முடியாது.
இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேவை பார்க்க சென்ற குழுவில், கனிமொழியும்
இடம் பெற்றிருந்தார். இலங்கை தமிழர்கள் அனாதையானதற்கு முக்கிய காரணம்,
தி.மு.க., தலைவர் தான்.



தி.மு.க., - சக்கரபாணி:
உங்கள் ஆட்சிக் காலத்தில் தான், பிரபாகரன்
குற்றவாளி என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரின் போது, அப்பாவி மக்கள்
கொல்லப்படுவது சாதாரணமானது தான் என்று செ õன்னீர்கள். இலங்கை பிரச்னையில்,
நீங்கள் நாடகமாடுகிறீர்களா; நாங்கள் நாடகமாடுகிறோமா?



அமைச்ச ர் முனுசாமி:
நாங்கள் ஒருபோதும் தீவிர வாதத்தை ஏற்றுக் கொண்டது
கிடையாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்ட போது, குரல் கொடுத்தோம். நீங்கள்
எதிர்க்கட்சியில் இருந்த போது ஒரு விதமாகவும், ஆட்சிக்கு வந்த போது, அதை
காப்பாற்றிக் கொள்ள, மத்திய அரசுடன் சேர்ந்து, இலங்கை தமிழர்களை
முன்னிறுத்தி, அரசியல் நடத்தினீர்கள். மத்திய அரசு, இலங்கைக்கு
பிரதிநிதிகளை அனுப்பிய போது, அதை வேண்டாம் என்று சொல்லாமல், உங்கள் தலைவர்,
நான் என் மகளையே அனுப்புகிறேன் என, அனுப்பினார்.

அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததும், தி.மு.க., கொறடா சக்கரபாணி,
எம்.எல்.ஏ.,க்கள் தங்கம்தென்னரசு, அன்பழகன், பெரியகருப்பன் உள்ளிட்ட
அனைவரும் சபாநாயகர் இருக்கை அருகில் வந்து, அமைச்சரின் கருத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்தனர்.


உடனடியாக, அனைவரையும் வெளியேற்ற, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபை
காவலர்களுக்கு உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்டு, சட்டசபை அரங்கத்தின்,
"லாபி' பகுதியில் நின்று அனைவரும், அமைச்சரின் பேச்சை திரும்பப் பெற
வலியுறுத்தி கோஷமிட்டனர்.அங்கிருந்தும் வெளியேற்றுமாறு, காவலர்களுக்கு,
துணை சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோஷமிட்டபடியே, சபையில் இருந்து,
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர்.


சஸ்பெண்ட் :
இதுகுறித்து, சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு:

எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை, ஜனநாயக முறையில் தெரிவித்திருக்கலாம்.
வன்முறையை தூண்டுவது போல், சபாநாயகர் இருக்கை அருகே வந்து, மரபுகளுக்கு
மாறாக, கண்ணியம் மற்றும் மாண்பை குறைக்கும் வகையில், துணை சபாநாயகரின்
உத்தரவையும் மீறி பொறுப்பற்ற தனமாக கூச்சலிட்டனர்.


சபையின் அலுவல்களை இடைமறித்தும், விதிகளுக்குமாறாக சபையில் குந்தகம் செய்து
வந்ததாலும், சபையில் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதாலும்,
விதி,120ன் கீழ், வந்திருக்கும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இந்த
கூட்டத்தொடர் காலத்திற்கு, பேரவை பணிகளில் இருந்தும் நீக்கி வைக்கிறேன்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஸ்டாலின் வருவாரா? :
சட்டசபையில்,
அமைச்சர் முனுசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குழப்பம்
விளைவித்ததாக, இன்று சபைக்கு வந்திருந்த, தி.மு.க., கொறடா சக்கரபாணி,
எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், அன்பழகன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன்,
அன்பழகன், ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 14 தி.மு.க.,
எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கவர்னர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம், எதிர்க்கட்சி தலைவர் உரை
மற்றும் முதல்வர் பதிலுரையுடன், இன்றுடன் முடிவடையும் நிலையில், தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி
வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். விதிப்படி, கூட்டத்தொடர் முழுவதும்
என்றால், கூட்டம் முடிந்ததாக கவர்னர் மூலம் அறிவிக்கப்படும் வரை,
நீக்கப்படுவதாக பொருள்படும் என்று கூறப்படுகிறது. சபையில் இருந்தவர்கள்
மீது தான் நடவடிக்கை என்பதால், சபைக்கு வராத, ஸ்டாலின், துரைமுருகன்
உள்ளிட்டோர் இன்று பங்கேற்பர் என, கூறப்படுகிறது.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:29 am

சட்டசபையில் அடக்கி வாசிக்க விஜயகாந்த் முடிவு
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கிண்டலும், எதிர்ப்பும் தெரிவிப்பதால்,
இன்று, சட்டசபை விவாதத்தில் பங்கேற்று பேசுவதை தவிர்க்க, விஜயகாந்த் முடிவு
எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு, பிப்.,
1ம்தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான,
விவாதத்தில் பங்கெடுத்து பேசியபோது, முதல்வர் ஜெ.,- எதிர்கட்சி தலைவர்
விஜயகாந்த் இடை@ய, கூட்டணி தொடர்பாக நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது.
"சஸ்பெண்ட்' : அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், விஜயகாந்துடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபையில் அநாகரிக மாக நடந்துக்கொண்டதாக , 10
நாட்களுக்கு விஜயகாந்த்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதை எதிர்த்து
ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்த விஜயகாந்த், தீர்ப்பு வரும் வரை, சட்டசபைக்கு
செல்வதை தவிர்த்துவந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கடந்தாண்டு, ஏப்.,
மாதம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகு, சட்டசபைக்கு சென்று, கையெழுத்து
போடுவதோடு, சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.

கடந்தாண்டு
ஜனாதிபதி தலைமையில் நடந்த, சட்டசபை வைர விழா மற்றும் இந்த ஆண்டு கவர்னர்
உரையிலும், விஜயகாந்த் பங்கேற்றார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீதான விவாதம், இன்றுடன் முடிகிறது.கடந்த மூன்று நாட்களாக,
தே.மு.தி.க.,-எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேரை தேர்வு செய்து, சபை
விவாதத்தில், விஜயகாந்த் பங்கேற்க செய்தார். இன்று முதல்வரின் பதிலுரைக்கு
முன், எதிர்கட்சி தலைவருக்கு,விவாதத்தில் பங்கேற்று பேச, வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.


குட்டிக் கதைகள் :
சமீபகாலமாக
அமைச்சர்களும், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களும், தி.மு.க., தலைவர்களை
காட்டிலும், விஜயகாந்தை அதிகம் விமர்சித்து வருகின்றனர். சட்டசபையில்,
குட்டி கதைகளுடன், விஜயகாந்தை கிண்டல் செய்யும் சம்பவங்கள் அரங்கேறி
வருகின்றன.இதனால், முக்கியமான பிரச்னை குறித்து பேசினால் கூட, அமைச்சர்கள்,
அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்களும் குறுக்கிட்டு கிண்டலும், எதிர்ப்பும்
தெரிவிக்கவாய்ப்புள்ளது என, விஜயகாந்த் கருதுகிறார்.
எனவே, இன்றைய விவாதத்தில் பங்கேற்பதை தவிர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்திற்கு பதிலாக, எதிர்கட்சி துணைத்தலைவர்
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசவுள்ளதாக தெரிகிறது.இதனிடையே, சட்டசபை
விவாதத்தில் விஜயகாந்த் பங்கேற்று பேசவேண்டும் என, அக்கட்சி
எம்.எல்.ஏ.,க்கள் நேற்று நேரில் வலியுறுத்தினர். அதற்கு, பதில் சொல்லாமல்
விஜயகாந்த், புன்னகைத்தபடியே சென்றுள்ளார்.



பதிலுக்கு பதில் :
இதுகுறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள்
கூறியதாவது: எங்கள் தலைவர் பேசும்போது, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு
தெரிவித்தால், பதிலுக்கு நாங்களும் அதை செய்தால், நன்றாக இருக்காது. சபையை
சுமூகமாக நடத்தவேண்டும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பல்வேறு பிரச்னைகள் இருக்கும் இந்த நேரத்தில், எதிர்கட்சி தலைவர் பேசினால்
நன்றாக இருக்கும் என, கூறியுள்ளோம். எங்கள் கோரிக்கையை விஜயகாந்த் நிச்சயம்
ஏற்றுக்கொள்வார் என, நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Sat Feb 09, 2013 12:30 am

குடி படுத்தும் பாடு : 70 வயது மனைவியை கொலை செய்த 75 வயது கணவர்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Tamil_News_large_643607
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, மதுபானம் குடிப்பதற்காக, தங்க
தாலிச்செயினை அடகு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மனைவி பெரியபிராட்டியை,
70, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த, கணவர் அர்ச்சுனன், 75, கைது
செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்,
மேலஆழ்வார் தோப்பைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி பெரியபிராட்டி.
இவர்களுக்கு, 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும்,
திருமணமாகிவிட்டன. இளமை முதலே, எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றிய
அர்ச்சுனன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். திருமணத்தின்போது, மனைவி
பெரியபிராட்டி, சீதனமாக தந்த, 70 பவுன் தங்க நகை, தன் குடும்பத்திற்கு
சொந்தமான, 14 ஏக்கர் நிலத்தையும், அடகுவைத்து, விற்று, அதில் கிடைத்த
பணத்தில், அர்ச்சுனன் மதுகுடித்தார். வீட்டில் இருந்த, பட்டுப்புடவை
உள்ளிட்ட பொருட்களையும், குடும்ப சொத்துக்களையும், மதுகுடித்தே அவர்
அழித்துவிட்டதால், அவரிடம், பெரியபிராட்டி, சமீபகாலமாக பேசாமலிருந்தார்.




மனைவியை எழுப்பி பணம் கேட்பு : மேலஆழ்வார்தோப்பில்
இருவரும், அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர். அவ்வப்போது, வெளியூர்களிலுள்ள
மகன், மகள் வீட்டிற்கு பெரியபிராட்டி சென்றுவிடுவார். மகன்கள், செலவிற்கு
மாதந்தோறும் பணம் அனுப்பினர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டில்
தூங்கிக்கொண்டிருந்த பெரியபிராட்டியை, எழுப்பிய அர்ச்சுனன், மதுகுடிக்க
பணம் தேவைப்படுவதால், அடகு வைக்க, அவர் அணிந்திருந்த, ஏழுபவுன் தங்கதாலிச்
செயினை தருமாறு வற்புறுத்தினார். அதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே,
இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ச்சுனன், அரிவாளால்,
பெரியபிராட்டி கை, தலையில் வெட்டினார். கை விரல் துண்டாகி, தலையில் பலத்த
காயமடைந்த பெரியபிராட்டி, அங்கேயே இறந்து போனார். அவரிடமிருந்து,
தாலிச்செயினை பறித்துக்கொண்டு, தப்பியோடிய அர்ச்சுனன், ஏரல் நகைக்கடையில்,
அதனை அடகு வைக்கும்போது, ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரை, கைது செய்தனர்.


குடிக்கக் கூடாது என கண்டித்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்


அன்னூர், : கோவை அருகே, அன்னூரில் குடிப்பதை கண்டித்த மனைவி மீது,
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை
மாவட்டம், அன்னூர், கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜ், 34;
பெயின்டர். இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு நான்கு மற்றும்
ஒன்றரை வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் 2008ல் திருமணம் நடந்தது.
எட்டு மாதங்களுக்கு முன், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, முருகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள
தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆறு மாதங்களுக்கு முன், கணவன் வரதராஜ்,
மாமனார் வீட்டுக்குச் சென்று, இனி தகராறு செய்ய மாட்டேன் என்று கூறி,
மனைவியை அழைத்து வந்தார்.


நேற்று முன்தினம், கெம்பநாயக்கன்பாளையம் வீட்டில் இருந்து அலறல் சத்தம்
கேட்டது. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, முருகேஸ்வரி தீக்காயங்களுடன்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கணவர் வரதராசும், மற்றவர்களும்,
முருகேஸ்வரியை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்
சேர்த்தனர். அங்கு,

முருகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம்:


கணவர் வரதராஜை மது குடிக்க வேண்டாம் என, பல முறை கூறினேன். ஆனால் கணவர்
திருந்தவில்லை. வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. குடிக்காமல் வீட்டில்
இருந்தால் போதும் என்றும் கூறினேன். கடந்த 6ம் தேதி, "இன்றாவது குடிக்காமல்
வேலையிலிருந்து வீட்டுக்கு வா' என்று கூறினேன். "நான் அப்படித்தான்
குடிப்பேன்' என்று கூறி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து, என் மீது
ஊற்றினார். பின்னர் நெருப்பு பற்ற வைத்து விட்டார். இவ்வாறு, முருகேஸ்வரி
வாக்குமூலத்தில் தெரிவித்தார். முருகேஸ்வரியின் தாடையில் துவங்கி, நெஞ்சு,
வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியை தீ
வைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.





சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Blank




-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by mohaideen Sat Feb 16, 2013 11:21 pm

டிவி பார்ப்பதில் தம்பியுடன் சண்டை.. திட்டினார் அப்பா.. பிளஸ் டூ மாணவி தற்கொலை

February 15, 2013


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், டிவி பார்க்கும்போது தம்பியுடன் சண்டை போட்டதால் அப்பா கண்டித்துள்ளார்.
இதனால் மன வருத்தமடைந்த பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.மானாமதுரை குண்டுராயர் தெருவில் வசிப்பவர் சிங்கப்பெருமாள். இவர் கூட்டுறவு நிறுவனமான பாம்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் பத்மா (17). பிளஸ் டூ படித்து வந்தார்.

சம்பவத்தன்றஉ வீட்டில் டி.வி பார்ப்பதில் பத்மாவுக்கும் அவரது தம்பிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தை சிங்கப்பெருமாள் இவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பத்மா வீட்டுக்குள் தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

http://tamil.oneindia.in/news/2013/02/15/tamilnadu-2-girl-commits-suicide-169878.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 3 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum