Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மணப்பாறை
Page 1 of 1 • Share
மணப்பாறை
''மணலால் ஆன பாறைகள் நிறைந்த பகுதி இது. மணற்பாறை என்பதுதான் காலப்போக்கில் மணப் பாறை என்றாகிவிட்டது!''
[You must be registered and logged in to see this image.]
''தமிழகத்தின் மையப் பகுதி மணப்பாறை. பண்டைக் காலத் தில் சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியாக இது இருந்து இருக்கிறது. இப்போதைய அமைப்பின்படியும் அந்தப் பெருமை உண்டு. இங்கே இருக்கும் ஓர் எல்லைக் கல்லின் ஒருபுறம் கன்னியாகுமரி 222 மைல்கள் என்றும் மறுபுறம் சென்னை 222 மைல்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வானம் பார்த்த பூமி தான் மணப்பாறை. பருத்தி, மிளகாய், கடலை... இவைதான் நீண்ட காலமாக இங்கு மக்களின் வாழ்வாதாரமாக இருந்தன. நீராதாரம் குறைவு என்பதால், மக்களி டம் இருந்து வறுமை அழிக்க முடியாததாக இருந்தது. ஒவ்வொரு ஊரின் வரலாற்றையும் மாற்றி அமைக்கும் விஷயங்கள் இருக்கும் அல்லவா? அப்படி எங்கள் ஊரின் வரலாற்றைப் புரட்டிப்போட்டது தியாகேசர் நூற்பாலை. புதுக்கோட்டை சமஸ்தான ராஜா தன் ஊரில் உருவாக்க ஆசைப்பட்ட ஆலை இது. ஆனால், அங்கே ரயில் பாதை அமைந்ததால், அந்த ஆலையை அவருடைய அமைச்சர் கலிஃபுல்லா இங்கே கொண்டுவந்தார். வறுமையில் உழன்றுவந்த இந்தப் பகுதி மக்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றியது அந்த ஆலைதான். செவ்வாலூரின் கீழ் இருந்த என் ஊர் தனித்து நிமிர்ந்தது அதற்குப் பின்தான்.
தமிழ் உணர்வும் இன உணர்வும் ததும்பும் ஊர் மணப்பாறை. மணப்பாறை மக்களிடம் தமிழை வளர்த்ததில் மணவை தமிழ் மன்றத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இங்கு கால் பதிக்காத தமிழ் அறிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்போது எல்லாம் விழா நாட்கள் என்றால், அடிக்கடி அண்ணாவின் குரல் இங்கு ஒலிக்கும். அடிக்கடி வருவதால் அண்ணாவே, ''மணப்பாறை எனக்கு மாமியார் வீடு!'' என்று சொல்வாராம்.
[You must be registered and logged in to see this image.]
மணப்பாறையின் மிகப் பெரிய அடையாளங்கள் மாடுகளும் முறுக்கும்தான். மணப்பாறை மாடுகளின் வலுவும் , முறுக்குகளின் சுவையும் வேறு எதனோடும் ஒப்பிட முடியாதது. மாடுகளைப் பூட்டிக்கொண்டு பாயும் வில் வண்டியை உலகத்துக்குத் தந்தது மணப்பாறை தான். மணப்பாறை மாட்டுச் சந்தை அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. பொன்னணியாறும் மாமுண்டியாறும் மனப்பாறையின் நீராதாரங்கள். மாடுகளின் சிறப்புக்கும் முறுக்குகளின் சிறப்புக்கும் இந்த ஆறுகளின் நீர்வாகுதான் முக்கியக் காரணம். ஒருவகையான உப்பு ருசி இந்தத் தண்ணீரில் கலந்து இருக்கும்!
[You must be registered and logged in to see this image.]
இந்த ஊரில் வாழ்ந்த இரண்டு பெருமகனாரின் கதையைப் பதிவு செய்யாவிட்டால் மணவையின் கதை முடிவுறாது. மணவை தமிழ்ச் சங்கத்தை எடுத்து நடத்தியவர் மணவைப் பெரியார் என அறியப்பட்ட காசிநாதன். அவருக்கு மகன்போல விளங்கியவர், அவருடைய தோழர் பழனிச்சாமி. திடீர் என உடல் நலக் குறைவால் பழனிச்சாமி மரணம் அடைய, அந்த அதிர்ச்சியிலேயே காசி நாதன் அய்யாவும் அன்றே உயிர் நீத்தார். இருவ ரும் ஒரே பாடையில் கொண்டுசெல்லப்பட்ட அந்த நாள் மனப்பாறைக்கே துக்க நாள்.
சிறந்த தேசப் பக்தரான பொன்னையா பாரதி இந்த ஊர்க்காரர். அவருடைய அழைப்பை ஏற்று காந்தியடிகளே 1946-ல் இங்குபேச வந்தார். அழகர்சாமி,பெரி யசாமி - துரைராஜ் சகோதரர்கள் சுயமரியாதை இயக்கத் தளகர்த்தர்களாகத் திகழ்ந்தவர்கள். 1938-ல் பெரியார் அமைத்த மொழிப் போர் படையை மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரோடு இணைந்து முன்னெடுத்த திருமலைசாமி இந்த ஊர்க்காரர்!
நன்றி : விகடன்
[You must be registered and logged in to see this image.]
''தமிழகத்தின் மையப் பகுதி மணப்பாறை. பண்டைக் காலத் தில் சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியாக இது இருந்து இருக்கிறது. இப்போதைய அமைப்பின்படியும் அந்தப் பெருமை உண்டு. இங்கே இருக்கும் ஓர் எல்லைக் கல்லின் ஒருபுறம் கன்னியாகுமரி 222 மைல்கள் என்றும் மறுபுறம் சென்னை 222 மைல்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வானம் பார்த்த பூமி தான் மணப்பாறை. பருத்தி, மிளகாய், கடலை... இவைதான் நீண்ட காலமாக இங்கு மக்களின் வாழ்வாதாரமாக இருந்தன. நீராதாரம் குறைவு என்பதால், மக்களி டம் இருந்து வறுமை அழிக்க முடியாததாக இருந்தது. ஒவ்வொரு ஊரின் வரலாற்றையும் மாற்றி அமைக்கும் விஷயங்கள் இருக்கும் அல்லவா? அப்படி எங்கள் ஊரின் வரலாற்றைப் புரட்டிப்போட்டது தியாகேசர் நூற்பாலை. புதுக்கோட்டை சமஸ்தான ராஜா தன் ஊரில் உருவாக்க ஆசைப்பட்ட ஆலை இது. ஆனால், அங்கே ரயில் பாதை அமைந்ததால், அந்த ஆலையை அவருடைய அமைச்சர் கலிஃபுல்லா இங்கே கொண்டுவந்தார். வறுமையில் உழன்றுவந்த இந்தப் பகுதி மக்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்றியது அந்த ஆலைதான். செவ்வாலூரின் கீழ் இருந்த என் ஊர் தனித்து நிமிர்ந்தது அதற்குப் பின்தான்.
[You must be registered and logged in to see this image.]
தமிழ் உணர்வும் இன உணர்வும் ததும்பும் ஊர் மணப்பாறை. மணப்பாறை மக்களிடம் தமிழை வளர்த்ததில் மணவை தமிழ் மன்றத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இங்கு கால் பதிக்காத தமிழ் அறிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்போது எல்லாம் விழா நாட்கள் என்றால், அடிக்கடி அண்ணாவின் குரல் இங்கு ஒலிக்கும். அடிக்கடி வருவதால் அண்ணாவே, ''மணப்பாறை எனக்கு மாமியார் வீடு!'' என்று சொல்வாராம்.
[You must be registered and logged in to see this image.]
மணப்பாறையின் மிகப் பெரிய அடையாளங்கள் மாடுகளும் முறுக்கும்தான். மணப்பாறை மாடுகளின் வலுவும் , முறுக்குகளின் சுவையும் வேறு எதனோடும் ஒப்பிட முடியாதது. மாடுகளைப் பூட்டிக்கொண்டு பாயும் வில் வண்டியை உலகத்துக்குத் தந்தது மணப்பாறை தான். மணப்பாறை மாட்டுச் சந்தை அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. பொன்னணியாறும் மாமுண்டியாறும் மனப்பாறையின் நீராதாரங்கள். மாடுகளின் சிறப்புக்கும் முறுக்குகளின் சிறப்புக்கும் இந்த ஆறுகளின் நீர்வாகுதான் முக்கியக் காரணம். ஒருவகையான உப்பு ருசி இந்தத் தண்ணீரில் கலந்து இருக்கும்!
[You must be registered and logged in to see this image.]
இந்த ஊரில் வாழ்ந்த இரண்டு பெருமகனாரின் கதையைப் பதிவு செய்யாவிட்டால் மணவையின் கதை முடிவுறாது. மணவை தமிழ்ச் சங்கத்தை எடுத்து நடத்தியவர் மணவைப் பெரியார் என அறியப்பட்ட காசிநாதன். அவருக்கு மகன்போல விளங்கியவர், அவருடைய தோழர் பழனிச்சாமி. திடீர் என உடல் நலக் குறைவால் பழனிச்சாமி மரணம் அடைய, அந்த அதிர்ச்சியிலேயே காசி நாதன் அய்யாவும் அன்றே உயிர் நீத்தார். இருவ ரும் ஒரே பாடையில் கொண்டுசெல்லப்பட்ட அந்த நாள் மனப்பாறைக்கே துக்க நாள்.
சிறந்த தேசப் பக்தரான பொன்னையா பாரதி இந்த ஊர்க்காரர். அவருடைய அழைப்பை ஏற்று காந்தியடிகளே 1946-ல் இங்குபேச வந்தார். அழகர்சாமி,பெரி யசாமி - துரைராஜ் சகோதரர்கள் சுயமரியாதை இயக்கத் தளகர்த்தர்களாகத் திகழ்ந்தவர்கள். 1938-ல் பெரியார் அமைத்த மொழிப் போர் படையை மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரோடு இணைந்து முன்னெடுத்த திருமலைசாமி இந்த ஊர்க்காரர்!
நன்றி : விகடன்
Re: மணப்பாறை
புதன் தோறும் கூடும் மணப்பாறை வாரச் சந்தை ஸ்பாட், ரொம்பவே அழகானது, ஆச்சர்யமானது!
சந்தைக்குள் நுழைந்ததும்... மலைபோல் குவிந்துள்ள போண்டாக்களும், வடைகளும்தான் வரவேற்கின்றன. ''ஒண்ணு ஒரு ரூவா'' என்று கூவிக்கூவி அழைக்க... ''பத்து ரூவாக்கு இதுல ஒண்ணு, அதுல ஒண்ணாக் கலந்து கட்டு' என்று பொட்டலம் கட்டி வாங்கி, உள்ளே தள்ளியபடிதான் பர்ச்சேஸ் நடக்கிறது.
சமையல் சாமான் தொடங்கி குட்டிக்குட்டி கவுன்கள் வரை சகலமும் கிடைக்கின்றன. வீட்டு உபயோகப் பொருள்கள், கருவாடு, காய்கறி, பழங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஃபேன்ஸி ஐட்டங்கள், ஸ்வீட், காரம் என ஒவ்வொன்றும் தனித் தனி செக்ஷன்களாக வியாபாரம் களைகட்டுகிறது.
''கிலோவே பத்து ரூவாதான்'', ''வா... வா... வா...'', ''எடுத்துப் பார்த்து நீயே விலை சொல்லு...'' என்று காய்கறிக் குவியல்களில் இருந்து விதவிதமான குரல்கள்.
'நமக்குப் பக்கத்துல இருக்கிற ராயம்பட்டிதான் தம்பி. கத்திரி, வெண்டை, புடலைனு நம்ம மண்ணுக்கு எல்லாமே நல்லா வரும். அதை இங்கேயே கொண்டாந்து வித்துருவோம்'' என, சுருக்கமாகச் சொல்லிவிட்டு வியாபாரத்தில் மூழ்குகிறார் மாணிக்கம்.
''நான் ரொம்ப வருஷமா யாவாரம் பாக்குறேன். என் பையனை ஐ.டி.ஐ. படிக்கவெச்சுட்டேன். என் பொண்ணை நர்ஸ் ஆக்கிட்டேன்...'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு பெண்மணி காய்களைப் பொறுக்க... ''எல்லாமே நல்ல காய்தாம்மா... அப்படியே எடுமா'' என்று அதட்டுகிறார் அந்தோணியம்மாள்.
''மணியாரம்பட்டி அவரை, எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி'' என்று ஊர் பெயரைச் சொல்லியே கூவுகிறார்கள். இது எந்த ஊர் காய் என்று விசாரித்தே பலரும் வாங்குகிறார்கள். ''அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு சிறப்பு இருக்குல்ல'' என்கிறார்கள் பெருமையுடன்.
'எனக்கு அம்பது வயசு ஆகுது. வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தவறாம சந்தைக்கு வந்துடுவேன். ஒரு வாரம் காய்கறி, ஒரு வாரம் மளிகை சாமான்னு வாங்குவேன். வாங்குற வேலை இல்லைனாகூட சும்மாவாச்சும் வருவேன். 100 ரூவாத் தாள் ஒண்ணு போதும்... ஒரு வாரத்து காய்கறிச் செலவுக்கு'' - காய்கறி விலை பேசியபடியே சொல்கிறார் பெரியகுளத்துபட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்.
அப்படியே மாட்டுச் சந்தை பக்கம் நகர்ந்தால்...
''சுத்து வட்டாரம் மட்டும் இல்லாம, தமிழ்நாடு பூரா இருந்தும் மாடு ஓட்டிட்டுப்போக வருவாங்க. மணப்பாறை மாடுகளுக்குன்னு தனி மவுசு இருக்கில்ல? பசு, கன்னு, காளை, எருமைனு இங்கே கொண்டாருவாங்க. எங்க தாத்தா காலத்துல இருந்து இங்க நான் வர்றேன். மாடு என்னா கண்டிஷன்னு கரெக்டா சொல்லிப்புடுவேன்'' -மாட்டின் பல்லைப் பார்த்து தரம் பிரிக்கிறார் நல்லதம்பி.
பரந்து விரிந்துகிடக்கிறது சந்தைத் திடல். காலை விடிவதற்கு முன்பே ஆரம்பித்துவிடும் சந்தை, மெள்ள மெள்ளச் சூடு பிடிக்க ஆரம்பித்து மாலை நான்கு, ஐந்துக்கு எல்லாம் ஜே... ஜே... என்று களைகட்ட ஆரம்பிக்கிறது. வேடிக்கை பார்ப்பது என்றாலே சந்தையைச் சுற்றி வர குறைந்தது மூன்று மணி நேரம் பிடிக்கிறது.
எவ்வளவு பொருள்கள் வாங்கினாலும் பர்ஸ் காலியாவது இல்லை. அன்று ஒருநாள் மட்டும் தங்களுடைய வேலைகளை விரைவிலேயே முடித்துக்கொள்ளும் மணப்பாறை சுற்றுவட்டார ஊர்க்காரர்கள், தவறாமல் சந்தையில் ஆஜர் ஆகிவிடுகிறார்கள்!
நன்றி: விகடன்
சந்தைக்குள் நுழைந்ததும்... மலைபோல் குவிந்துள்ள போண்டாக்களும், வடைகளும்தான் வரவேற்கின்றன. ''ஒண்ணு ஒரு ரூவா'' என்று கூவிக்கூவி அழைக்க... ''பத்து ரூவாக்கு இதுல ஒண்ணு, அதுல ஒண்ணாக் கலந்து கட்டு' என்று பொட்டலம் கட்டி வாங்கி, உள்ளே தள்ளியபடிதான் பர்ச்சேஸ் நடக்கிறது.
சமையல் சாமான் தொடங்கி குட்டிக்குட்டி கவுன்கள் வரை சகலமும் கிடைக்கின்றன. வீட்டு உபயோகப் பொருள்கள், கருவாடு, காய்கறி, பழங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஃபேன்ஸி ஐட்டங்கள், ஸ்வீட், காரம் என ஒவ்வொன்றும் தனித் தனி செக்ஷன்களாக வியாபாரம் களைகட்டுகிறது.
''கிலோவே பத்து ரூவாதான்'', ''வா... வா... வா...'', ''எடுத்துப் பார்த்து நீயே விலை சொல்லு...'' என்று காய்கறிக் குவியல்களில் இருந்து விதவிதமான குரல்கள்.
[You must be registered and logged in to see this image.]
'நமக்குப் பக்கத்துல இருக்கிற ராயம்பட்டிதான் தம்பி. கத்திரி, வெண்டை, புடலைனு நம்ம மண்ணுக்கு எல்லாமே நல்லா வரும். அதை இங்கேயே கொண்டாந்து வித்துருவோம்'' என, சுருக்கமாகச் சொல்லிவிட்டு வியாபாரத்தில் மூழ்குகிறார் மாணிக்கம்.
''நான் ரொம்ப வருஷமா யாவாரம் பாக்குறேன். என் பையனை ஐ.டி.ஐ. படிக்கவெச்சுட்டேன். என் பொண்ணை நர்ஸ் ஆக்கிட்டேன்...'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒரு பெண்மணி காய்களைப் பொறுக்க... ''எல்லாமே நல்ல காய்தாம்மா... அப்படியே எடுமா'' என்று அதட்டுகிறார் அந்தோணியம்மாள்.
''மணியாரம்பட்டி அவரை, எழுமணம் மிளகா, ராயம்பட்டி கத்திரி'' என்று ஊர் பெயரைச் சொல்லியே கூவுகிறார்கள். இது எந்த ஊர் காய் என்று விசாரித்தே பலரும் வாங்குகிறார்கள். ''அந்தந்த ஊர் மண்ணுக்குன்னு ஒரு சிறப்பு இருக்குல்ல'' என்கிறார்கள் பெருமையுடன்.
[You must be registered and logged in to see this image.]
'எனக்கு அம்பது வயசு ஆகுது. வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தவறாம சந்தைக்கு வந்துடுவேன். ஒரு வாரம் காய்கறி, ஒரு வாரம் மளிகை சாமான்னு வாங்குவேன். வாங்குற வேலை இல்லைனாகூட சும்மாவாச்சும் வருவேன். 100 ரூவாத் தாள் ஒண்ணு போதும்... ஒரு வாரத்து காய்கறிச் செலவுக்கு'' - காய்கறி விலை பேசியபடியே சொல்கிறார் பெரியகுளத்துபட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்.
அப்படியே மாட்டுச் சந்தை பக்கம் நகர்ந்தால்...
''சுத்து வட்டாரம் மட்டும் இல்லாம, தமிழ்நாடு பூரா இருந்தும் மாடு ஓட்டிட்டுப்போக வருவாங்க. மணப்பாறை மாடுகளுக்குன்னு தனி மவுசு இருக்கில்ல? பசு, கன்னு, காளை, எருமைனு இங்கே கொண்டாருவாங்க. எங்க தாத்தா காலத்துல இருந்து இங்க நான் வர்றேன். மாடு என்னா கண்டிஷன்னு கரெக்டா சொல்லிப்புடுவேன்'' -மாட்டின் பல்லைப் பார்த்து தரம் பிரிக்கிறார் நல்லதம்பி.
பரந்து விரிந்துகிடக்கிறது சந்தைத் திடல். காலை விடிவதற்கு முன்பே ஆரம்பித்துவிடும் சந்தை, மெள்ள மெள்ளச் சூடு பிடிக்க ஆரம்பித்து மாலை நான்கு, ஐந்துக்கு எல்லாம் ஜே... ஜே... என்று களைகட்ட ஆரம்பிக்கிறது. வேடிக்கை பார்ப்பது என்றாலே சந்தையைச் சுற்றி வர குறைந்தது மூன்று மணி நேரம் பிடிக்கிறது.
எவ்வளவு பொருள்கள் வாங்கினாலும் பர்ஸ் காலியாவது இல்லை. அன்று ஒருநாள் மட்டும் தங்களுடைய வேலைகளை விரைவிலேயே முடித்துக்கொள்ளும் மணப்பாறை சுற்றுவட்டார ஊர்க்காரர்கள், தவறாமல் சந்தையில் ஆஜர் ஆகிவிடுகிறார்கள்!
நன்றி: விகடன்
Re: மணப்பாறை
மனைப்பாரை இன் மண்வாசனை பதிவுக்கு நன்றி பிரபு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|