Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன உறுதியின் பலன் - திருக்குறள் கதைகள் 19
Page 1 of 1 • Share
மன உறுதியின் பலன் - திருக்குறள் கதைகள் 19
செந்தில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த இளைஞன். வசதியில்லாததால், தொடக்கப் பள்ளிக்குப் பிறகு படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. தாய், தந்தை, ஒரு சகோதரி என ஒரு குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. அதற்காக கிராமத்தில் பண்ணையாரின் தோட்டத்திலிருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு போய், அவற்றை நகரத்தில் விற்று அதற்கான கூலியைப் பெற்று வாழ்க்கையை ஓட்டினான். ஏழ்மையால் சிரமப்பட்டாலும், செந்தில் ஊக்கம் நிறைந்தவன். தனக்கிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என்பதைப் பற்றியே தீவிரமாக சிந்தித்து வந்தான்.
பண்ணையார் தோட்டத்து காய்கறிகளை வாங்கி விற்பதற்கு பதிலாக, தானே தன் வீட்டில் ஏன் தோட்டம் போடக் கூடாது என்று ஒருநாள் நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டான். தொடக்கத்தில் அது அவ்வளவு எளிதாக இல்லை. தரிசாகக் கிடந்த தோட்டத்து நிலத்தைப் பயன்படுத்தவே பல மாதங்கள் ஆயின. பல காய்கறிகளின் விதைகளை பண்ணையாரே மனமுவந்து அளித்தார்.
அடுத்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டிய பிரச்சனை அவனை பயமுறுத்தியது. மிகவும் சிரமப்பட்டு, சிறிது செலவு செய்து ஒரு கிணறு தோண்டினான். தோட்டத்தைச் சுற்றி வேலி போட வேண்டியிருந்தது. இரும்பு வேலி போட கையில் காசு இல்லாததால், காட்டு முட் செடிகளை நெருக்கமாக நட்டு, ஓர் உயிர்வேலி தயாரித்தான்.
செந்திலின் குடும்பத்தாரும் அவனுக்கு மிகுந்த ஒத்துழைப்பைத் தந்தனர். செயற்கை உரங்கள் வாங்க பணமில்லாததால், அவனது தாயும் சகோதரியும் சேர்ந்து அரும்பாடுபட்டு இயற்கை உரங்களைச் சேகரித்தனர்.
ஒருவாறாக தோட்டத்தை உருவாக்கி விட்டான். தரிசான நிலத்தில் இயற்கை உரங்களைப் போட்டதால், விளைச்சல் நன்றாக இருந்தது. செந்திலின் குடும்பத்தினர் தோட்டத்தில் பாடுபட, அவன் ஓய்வின்றி நகரத்துக்குச் சென்று காய்கறிகளை விற்று வந்தான்.
குறைந்த விலை மற்றும் தொடந்து விற்று வந்ததால், நகரத்தில் ஏராளமானோர் செந்திலிடம் மட்டுமே காய்கறிகளை வாங்கினர். இவ்வாறு சில ஆண்டுகள் கடினமாக உழைத்ததால், கிடைத்த லாபத்தில் தன் தோட்டத்தை இன்னும் பெரிதுபடுத்தினான். அடுத்த சில ஆண்டுகளில் நகரத்தில் காய்கறி கடையைத் திறந்து அதிக லாபம் ஈட்டினான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கிராமத்து பெரிய மனிதர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தான். இதற்குக் காரணம்,. அவனது மன உறுதியும் ஊக்கமும் தான்.
வான் புகழ் வள்ளுவரும் அதைதான் சொல்கிறார்
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
விளக்கம் : குளத்தின் நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு அதிலுள்ள தாமரை மலர்களும் உயர்ந்து காணப்படும். அது போல ஒருவனுடைய ஊக்கத்தையும், மன உறுதியையும் பொறுத்தே, அவன் வாழ்வில் உயர்வு ஏற்படும்.
நன்றி அம்புலிமாமா
பண்ணையார் தோட்டத்து காய்கறிகளை வாங்கி விற்பதற்கு பதிலாக, தானே தன் வீட்டில் ஏன் தோட்டம் போடக் கூடாது என்று ஒருநாள் நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டான். தொடக்கத்தில் அது அவ்வளவு எளிதாக இல்லை. தரிசாகக் கிடந்த தோட்டத்து நிலத்தைப் பயன்படுத்தவே பல மாதங்கள் ஆயின. பல காய்கறிகளின் விதைகளை பண்ணையாரே மனமுவந்து அளித்தார்.
அடுத்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டிய பிரச்சனை அவனை பயமுறுத்தியது. மிகவும் சிரமப்பட்டு, சிறிது செலவு செய்து ஒரு கிணறு தோண்டினான். தோட்டத்தைச் சுற்றி வேலி போட வேண்டியிருந்தது. இரும்பு வேலி போட கையில் காசு இல்லாததால், காட்டு முட் செடிகளை நெருக்கமாக நட்டு, ஓர் உயிர்வேலி தயாரித்தான்.
செந்திலின் குடும்பத்தாரும் அவனுக்கு மிகுந்த ஒத்துழைப்பைத் தந்தனர். செயற்கை உரங்கள் வாங்க பணமில்லாததால், அவனது தாயும் சகோதரியும் சேர்ந்து அரும்பாடுபட்டு இயற்கை உரங்களைச் சேகரித்தனர்.
ஒருவாறாக தோட்டத்தை உருவாக்கி விட்டான். தரிசான நிலத்தில் இயற்கை உரங்களைப் போட்டதால், விளைச்சல் நன்றாக இருந்தது. செந்திலின் குடும்பத்தினர் தோட்டத்தில் பாடுபட, அவன் ஓய்வின்றி நகரத்துக்குச் சென்று காய்கறிகளை விற்று வந்தான்.
குறைந்த விலை மற்றும் தொடந்து விற்று வந்ததால், நகரத்தில் ஏராளமானோர் செந்திலிடம் மட்டுமே காய்கறிகளை வாங்கினர். இவ்வாறு சில ஆண்டுகள் கடினமாக உழைத்ததால், கிடைத்த லாபத்தில் தன் தோட்டத்தை இன்னும் பெரிதுபடுத்தினான். அடுத்த சில ஆண்டுகளில் நகரத்தில் காய்கறி கடையைத் திறந்து அதிக லாபம் ஈட்டினான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கிராமத்து பெரிய மனிதர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தான். இதற்குக் காரணம்,. அவனது மன உறுதியும் ஊக்கமும் தான்.
வான் புகழ் வள்ளுவரும் அதைதான் சொல்கிறார்
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
விளக்கம் : குளத்தின் நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு அதிலுள்ள தாமரை மலர்களும் உயர்ந்து காணப்படும். அது போல ஒருவனுடைய ஊக்கத்தையும், மன உறுதியையும் பொறுத்தே, அவன் வாழ்வில் உயர்வு ஏற்படும்.
நன்றி அம்புலிமாமா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திருக்குறள் கதைகள் #1
» நட்புக்கு அழகு - திருக்குறள் கதைகள் 20
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» தீர விசாரிப்பதே மெய்! - திருக்குறள் கதைகள் #27
» நட்புக்கு அழகு - திருக்குறள் கதைகள் 20
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» தீர விசாரிப்பதே மெய்! - திருக்குறள் கதைகள் #27
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|