Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நான் ரசித்த கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளின் தொடர் இது
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் கவிஞராக வலம் வருகின்றார். பால்வீதி என்ற தமது முதல் கவிதைத் தொகுதியிருந்தே இன்றும் தம்மை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக தனித்து இனங்காட்டிக் கொண்டு வருபவர். சிறந்த கவிஞராக மட்டுமல்லாது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். பல பட்டச் சிறப்புகளைப் பெற்ற கவிக்கோ, ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுதிக்காகச் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றவர் ஆவார்.
இன்றையத் தமிழன்
தன் தாய்மொழியையே கொல்லத்
தயாராகி விட்டான்
‘தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன்’ என்றான்
புரட்சிக் கவிஞன்
நான் சொல்கிறேன்
தாய் மொழியைக் கொல்லத்
தாயே முனைந்தால்,
தமிழா!
தாயைக் கொன்று விட்டுத்
தாய்மொழியைக் காப்பாற்று. (மு.மு., ப.92)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 4:54 am; edited 1 time in total
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
தமிழென்றால் எழுத்தில்லை,
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன்
... ... ... ...
அகமே தமிழின்
அடையாளம்; தமிழர்களின்
முகமும் அதுதான்
முகவரியும் அதுதான் (இ.பி., ப.115)
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன்
... ... ... ...
அகமே தமிழின்
அடையாளம்; தமிழர்களின்
முகமும் அதுதான்
முகவரியும் அதுதான் (இ.பி., ப.115)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அரக்கர்களைப் பூண்டோடு ஒழிக்கும்
போர்க்களத்தில்
கணை ஏந்த வேண்டிய கை
காதைப் பொத்திக் கொண்டிருப்பதா?
எப்போது நடக்கும்
இராவண சம்ஹாரம்?
என்றைக்கு நடக்கும்
இலங்கா தகனம்? (சு.வி., ப.86)
போர்க்களத்தில்
கணை ஏந்த வேண்டிய கை
காதைப் பொத்திக் கொண்டிருப்பதா?
எப்போது நடக்கும்
இராவண சம்ஹாரம்?
என்றைக்கு நடக்கும்
இலங்கா தகனம்? (சு.வி., ப.86)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
நாம் அடைப்புக் குறிகளுக்குள்
அடைக்கப்பட்டவர்கள்
விற்பனைக்காகச்
சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
சட்டத்தின் கைதிகள்
சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
செயற்கையின் ப பீடத்திற்காக
வளர்க்கப்படும் ஆடுகள் (ஆலா., பக்.53-54)
அடைக்கப்பட்டவர்கள்
விற்பனைக்காகச்
சந்தையில் கூறு கட்டிக் கிடப்பவர்கள்
சட்டத்தின் கைதிகள்
சம்பிரதாயத்தின் கொத்தடிமைகள்
அட்டவணைகளுக்குப் பிறந்தவர்கள்
செயற்கையின் ப பீடத்திற்காக
வளர்க்கப்படும் ஆடுகள் (ஆலா., பக்.53-54)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போ நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்., ப.72)
போ நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி (பால்., ப.72)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
வணக்கம், தலைவரே! என்னைத் தெரிகிறதா?
சகுனி - அசல் சகுனி. என்ன அப்படி விழிக்கிறீர்கள்?
என்றைக்கோ செத்துப்போனவன் இன்றைக்கு
எப்படி எழுந்து வந்தான் என்று
ஆச்சரியப்படுகிறீர்களா?
தேர்தல் வருகிறதல்லவா? செத்துப்போனவர்கள்
எல்லாம் எழுந்து வரவேண்டியதுதானே! (சு.வி., ப.62)
சகுனி - அசல் சகுனி. என்ன அப்படி விழிக்கிறீர்கள்?
என்றைக்கோ செத்துப்போனவன் இன்றைக்கு
எப்படி எழுந்து வந்தான் என்று
ஆச்சரியப்படுகிறீர்களா?
தேர்தல் வருகிறதல்லவா? செத்துப்போனவர்கள்
எல்லாம் எழுந்து வரவேண்டியதுதானே! (சு.வி., ப.62)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புதிய கொடிக் கம்பத்தைக்
காலுயர்த்தி
நனைத்துப் போகிறது
பழைய நாய் (ப.பா., ப.65)
காலுயர்த்தி
நனைத்துப் போகிறது
பழைய நாய் (ப.பா., ப.65)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கம்பங்களுக்கு ஆடை
மனிதர்களுக்கு நிர்வாணம்
விசித்திரமான தேசம்! (சு.வி., ப.16)
மனிதர்களுக்கு நிர்வாணம்
விசித்திரமான தேசம்! (சு.வி., ப.16)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
எல்லோரையும் போலவே
தலைவர்களும்
செத்துப்போகிறார்கள்
ஆனால்
தலைவர்களின் சாவு மட்டும்
ஈடு செய்ய முடியாத
இழப்பாகிவிடுகிறது
இருந்தாலும்
நாற்காகள்
காயாக இருப்பதில்லை (சு.வி., ப.74)
தலைவர்களும்
செத்துப்போகிறார்கள்
ஆனால்
தலைவர்களின் சாவு மட்டும்
ஈடு செய்ய முடியாத
இழப்பாகிவிடுகிறது
இருந்தாலும்
நாற்காகள்
காயாக இருப்பதில்லை (சு.வி., ப.74)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அது ஈ நாடு.
ஈக்களே அதிகமாக இருப்பதால் ஈநாடு.
ஈக்களுக்குக் கழிவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
கழிவுகள் தங்கள் நாற்றத்தால் ஈக்களைக்
கவர்ந்து இழுக்கும்.
எந்தக் கழிவில் நாற்றம் அதிகமோ
அந்தக் கழிவில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும்.
எந்த இடத்துக் கழிவு என்பதைப் பொறுத்தும்
கழிவுகளுக்கு மவுசு உண்டு.
சில ஈக்கள் புத்திசாகள், எந்தக் கழிவுக்கு
மவுசு இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு
அங்கே போய் மொய்க்கும். (சு.வி., ப.54)
ஈக்களே அதிகமாக இருப்பதால் ஈநாடு.
ஈக்களுக்குக் கழிவுகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
கழிவுகள் தங்கள் நாற்றத்தால் ஈக்களைக்
கவர்ந்து இழுக்கும்.
எந்தக் கழிவில் நாற்றம் அதிகமோ
அந்தக் கழிவில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும்.
எந்த இடத்துக் கழிவு என்பதைப் பொறுத்தும்
கழிவுகளுக்கு மவுசு உண்டு.
சில ஈக்கள் புத்திசாகள், எந்தக் கழிவுக்கு
மவுசு இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு
அங்கே போய் மொய்க்கும். (சு.வி., ப.54)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
தமிழென்றால் எழுத்தில்லை,
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன் ....
*
*
*
*
இதற்கு மேல் என்ன வேண்டும் ...?
சத்தமில்லை, வாழ்க்கையில்
அமிழ்தமாம் இன்பமென்ற
அருங்கருத்தை உணர்ந்தவன் ....
*
*
*
*
இதற்கு மேல் என்ன வேண்டும் ...?
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அருமையான கவிதைகள் நானும் அவரின் கவிதைகளை தொலைகாட்சியில் கேட்டு ரசித்திருக்கிறேன் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
அனைத்தும் அருமையான கவிதைகள்... அமர்க்களம் கவிதைகள் களமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உடல்களைக்
கசக்கிப் பிழிந்து
வியர்வையைக் குடிக்கும்
குடிகாரர்களை
ஏன் தண்டிப்பதில்லை
உங்கள் சட்டம்?
... ... ... ...
உங்கள் சட்டமே
போதையில் மயங்கிச்
சாக்கடையில்
விழுந்து கிடக்கிறதே! (சு.வி., பக்.96-97)
கசக்கிப் பிழிந்து
வியர்வையைக் குடிக்கும்
குடிகாரர்களை
ஏன் தண்டிப்பதில்லை
உங்கள் சட்டம்?
... ... ... ...
உங்கள் சட்டமே
போதையில் மயங்கிச்
சாக்கடையில்
விழுந்து கிடக்கிறதே! (சு.வி., பக்.96-97)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
சட்டம்
அந்த அநாதைப் பெண்-
அவளுக்கல்லவா நீங்கள்
பாதுகாவலர்கள்?
ஆனால் அவளைப்
பலாத்காரம் செய்கிறவர்களுக்கல்லவா
நீங்கள்
பக்கத் துணையாய் இருக்கிறீர்கள்? (சு.வி., ப.41)
அந்த அநாதைப் பெண்-
அவளுக்கல்லவா நீங்கள்
பாதுகாவலர்கள்?
ஆனால் அவளைப்
பலாத்காரம் செய்கிறவர்களுக்கல்லவா
நீங்கள்
பக்கத் துணையாய் இருக்கிறீர்கள்? (சு.வி., ப.41)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
காக்கிச் சட்டை
சட்டத்தின் கவசம்;
சில சாமியார்களின்
காவியுடைபோல்
இதையும்
வேஷமாக்கிவிடாதீர்கள் (சு.வி., ப.42)
சட்டத்தின் கவசம்;
சில சாமியார்களின்
காவியுடைபோல்
இதையும்
வேஷமாக்கிவிடாதீர்கள் (சு.வி., ப.42)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
இதோ!
நவீன காலத்துக் காதலர்கள்
ஆதாம் ஏவாள் அருந்திய
அதே பழைய மதுவைத்தான்
அருந்திக்கொண்டிருக்கிறார்கள்
காதல் மேடையில்
பாத்திரங்களே புதியவை
கதை பழையதே (ஆலா., ப.89)
நவீன காலத்துக் காதலர்கள்
ஆதாம் ஏவாள் அருந்திய
அதே பழைய மதுவைத்தான்
அருந்திக்கொண்டிருக்கிறார்கள்
காதல் மேடையில்
பாத்திரங்களே புதியவை
கதை பழையதே (ஆலா., ப.89)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
பாதிகள் நாம் என
உணரும் பசிப்பொழுதில்
செருக்குகளையே ஏந்தி
ஒருவரது வாசல்
ஒருவர் இரக்கின்றோம்
இருவர்க்கிடையே
இந்த மோக ஈர்ப்பு
பரிணாமத் தூண்டின் புழு (பால்., ப.19)
உணரும் பசிப்பொழுதில்
செருக்குகளையே ஏந்தி
ஒருவரது வாசல்
ஒருவர் இரக்கின்றோம்
இருவர்க்கிடையே
இந்த மோக ஈர்ப்பு
பரிணாமத் தூண்டின் புழு (பால்., ப.19)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கொளுத்தப்பட்ட கற்பூரம் போல்
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும் (ப.பா.,ப.9)
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும் (ப.பா.,ப.9)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
புதுமைக்கு மிரண்டு
அறியாத தேவதைகளைப்
புறக்கணித்து
அறிந்த பேய்களை
ஆதரிக்கும் நீயே
பழைய மனைவியைச்
சத்துப்
புதுப் பெண்ணை
நாடுகிறாய் (ஆலா. ப.91)
அறியாத தேவதைகளைப்
புறக்கணித்து
அறிந்த பேய்களை
ஆதரிக்கும் நீயே
பழைய மனைவியைச்
சத்துப்
புதுப் பெண்ணை
நாடுகிறாய் (ஆலா. ப.91)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உங்களுக்குத் தரப்பட்ட
காதல் என்ற
அந்த தெய்வீக நெருப்பை
என்ன செய்தீர்கள்?
... ... ... ...
ஆணையும் பெண்ணையும் இணைத்து
வெளிச்சம் உண்டாக்கும்
மின்சாரம் அல்லவா அது
ஆனால் நீங்களோ
அதனால் விபத்துக்களை
உண்டாக்கிக்கொள்கிறீர்களே! (ஆலா., பக்.126-27)
காதல் என்ற
அந்த தெய்வீக நெருப்பை
என்ன செய்தீர்கள்?
... ... ... ...
ஆணையும் பெண்ணையும் இணைத்து
வெளிச்சம் உண்டாக்கும்
மின்சாரம் அல்லவா அது
ஆனால் நீங்களோ
அதனால் விபத்துக்களை
உண்டாக்கிக்கொள்கிறீர்களே! (ஆலா., பக்.126-27)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
உமையைப்போல் கணவன்தன்
பாதி யாகும்
உரிமைகளைப் பெற்றவளே
மனைவி ஆவாள் (இ.பி., ப.177)
பாதி யாகும்
உரிமைகளைப் பெற்றவளே
மனைவி ஆவாள் (இ.பி., ப.177)
Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கண்ணென்றும் பொன்னென்றும்
அன்னை அழைத்தாள் - எனைக்
கனியென்றும் கரும்பென்றும்
கணவர் அழைத்தார்
பெண்ணென்று நான் பிறந்து
கேட்ட மொழிக்குள் - என்
பிள்ளை சொன்ன அம்மா போல்
வேறொன்றில்லை (இ.பி., ப.122)
அன்னை அழைத்தாள் - எனைக்
கனியென்றும் கரும்பென்றும்
கணவர் அழைத்தார்
பெண்ணென்று நான் பிறந்து
கேட்ட மொழிக்குள் - என்
பிள்ளை சொன்ன அம்மா போல்
வேறொன்றில்லை (இ.பி., ப.122)
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|