Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
First topic message reminder :
நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஒலிஒளிப் பெட்டிகளின்
சந்துகள் வழியே
கண் காது திருடும்
கலாசார இரைச்சல்
சந்துகள் வழியே
கண் காது திருடும்
கலாசார இரைச்சல்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நெருப்பை அழுக்குச் செய்த
ஜாதி நம் ஜாதி
நெருப்புக்கு ஜாதி சொல்லி
நெருப்பையே எரித்தோம்
நெருப்புக்குப் பெயர் வைப்பதில்
நூற்றாண்டுகள் எரித்தோம்
நெருப்பு கண்டு
வியந்தவன் தீ என்றான்
பயந்தவன்
பகவான் என்றான்
யோசித்தவன்
திரியில் அடக்கி தீபமென்றான்
ஜாதி நம் ஜாதி
நெருப்புக்கு ஜாதி சொல்லி
நெருப்பையே எரித்தோம்
நெருப்புக்குப் பெயர் வைப்பதில்
நூற்றாண்டுகள் எரித்தோம்
நெருப்பு கண்டு
வியந்தவன் தீ என்றான்
பயந்தவன்
பகவான் என்றான்
யோசித்தவன்
திரியில் அடக்கி தீபமென்றான்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மதம் பிடித்தலையும்
மனிதா!
யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?
ஒரு
கிறிஸ்தவக்கிளி - இந்துப்புலி
சமணக் கொக்கு - பௌத்தப்பசு
சீக்கியச் சிங்கம் - மகமதியமான்
காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?
மனிதா!
யானை தவிர
மற்ற விலங்கெதற்கும்
மதம் பிடித்ததுண்டா?
ஒரு
கிறிஸ்தவக்கிளி - இந்துப்புலி
சமணக் கொக்கு - பௌத்தப்பசு
சீக்கியச் சிங்கம் - மகமதியமான்
காட்டுக்குள் அடையாளம்
காட்ட முடியுமா?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பூவின் கர்ப்பத்தில்
புறப்பட்டு வந்தவளே
தேவி உன் பேரழகைத்
திருடாமல் போவேனா?
வானே இடிந்தாலும்
வையம் நகர்ந்தாலும்
தேனே உன் பொன்னுடலும்
தீண்டாமல் போவேனோ?
ஏதானும் மின்னல்வந்து
என் கண்கள் பறித்தாலும்
பாதாதி கேசங்கள்
பாடாமல் போவேனோ?
புறப்பட்டு வந்தவளே
தேவி உன் பேரழகைத்
திருடாமல் போவேனா?
வானே இடிந்தாலும்
வையம் நகர்ந்தாலும்
தேனே உன் பொன்னுடலும்
தீண்டாமல் போவேனோ?
ஏதானும் மின்னல்வந்து
என் கண்கள் பறித்தாலும்
பாதாதி கேசங்கள்
பாடாமல் போவேனோ?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் மட்டும் பாடப் பிடிக்கும்
பழைய பாடல் கேட்டுக் கொண்டே
படுக்கைமீது கிடக்கப் பிடிக்கும்
பாதித் தூக்க கனவில் தோன்றும்
பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
வெப்பக்கோடையில் நீட்டிக் கிடக்க
வேப்பமரத்துக் கட்டில் பிடிக்கும்
நண்பர்கள் என்னைச் சுற்றியிருந்தால்
நரகம்கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும்
இந்த நிமிஷம் எனக்குப் பிடிக்கும்
இரவில் மட்டும் பாடப் பிடிக்கும்
பழைய பாடல் கேட்டுக் கொண்டே
படுக்கைமீது கிடக்கப் பிடிக்கும்
பாதித் தூக்க கனவில் தோன்றும்
பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
வெப்பக்கோடையில் நீட்டிக் கிடக்க
வேப்பமரத்துக் கட்டில் பிடிக்கும்
நண்பர்கள் என்னைச் சுற்றியிருந்தால்
நரகம்கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும்
இந்த நிமிஷம் எனக்குப் பிடிக்கும்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ?
தலையெல்லாம் பூப்பூத்துத்
தள்ளாடும் மரம் ஏறி
இலையெல்லாம் உன் பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ?
சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ?
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ?
தலையெல்லாம் பூப்பூத்துத்
தள்ளாடும் மரம் ஏறி
இலையெல்லாம் உன் பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ?
சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
கடல் நிலா
இடுப்பு வரைக்கும்
குளிக்கும் அழகை
எட்டிப் பாருங்கள்
அதோ
கண்ணடிக்கும் விண்மீன்கள்
ஒரு ஒரே நிலாப்படம் மாட்ட
இத்தனை ஆணி அடித்தவன் எவன்?
இடுப்பு வரைக்கும்
குளிக்கும் அழகை
எட்டிப் பாருங்கள்
அதோ
கண்ணடிக்கும் விண்மீன்கள்
ஒரு ஒரே நிலாப்படம் மாட்ட
இத்தனை ஆணி அடித்தவன் எவன்?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஒரு மாறுதலுக்காக -
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையணை
முளைக்கட்டும்
அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையணை
முளைக்கட்டும்
அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தாஜ்மஹாலை
ஒரு
கறுப்புத் துணியால்
முக்காடிட்டு மூடிவையுங்கள்
எல்லாச் சேரிகளும்
ஒழிக்கப்பட்டபிறகு
திரும்பவும் அதை
திறந்து கொள்வோம்
ஒரு
கறுப்புத் துணியால்
முக்காடிட்டு மூடிவையுங்கள்
எல்லாச் சேரிகளும்
ஒழிக்கப்பட்டபிறகு
திரும்பவும் அதை
திறந்து கொள்வோம்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மனிதா
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?
ஒரு கடவுள் - காளை கொண்டான்
ஒரு கடவுள் - மயில் கொண்டான்
ஒரு கடவுள் - எலி கொண்டான்
ஒரு கடவுள் - கருடன் கொண்டான்
எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை
மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவானென்று
கடவுளுக்குத் தெரியாதா?
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?
ஒரு கடவுள் - காளை கொண்டான்
ஒரு கடவுள் - மயில் கொண்டான்
ஒரு கடவுள் - எலி கொண்டான்
ஒரு கடவுள் - கருடன் கொண்டான்
எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை
மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவானென்று
கடவுளுக்குத் தெரியாதா?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
அயோத்திராமன்
அவதாரமா? மனிதனா?
அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?
அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?
அவதாரமா? மனிதனா?
அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?
அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சிற்றாடைக் காரிகளின்
சிநேகம் வளர்த்ததும்
முற்றாத பெண்களின்
முழங்கால் காட்டியதும்
கோவணம் இருக்க
அரைஞான் கயிறு திருடியதும்
குரவைமீன் தேடிக்
கோரைக்குள் கைசெலுத்த -
தண்ணீர்ப் பாம்பொன்று
முன்கையிற் சுற்றிவிட -
பதறி உதறிப்
பயந்தோட வைத்ததும்
இந்த நதிதான்
இதே நதிதான்
சிநேகம் வளர்த்ததும்
முற்றாத பெண்களின்
முழங்கால் காட்டியதும்
கோவணம் இருக்க
அரைஞான் கயிறு திருடியதும்
குரவைமீன் தேடிக்
கோரைக்குள் கைசெலுத்த -
தண்ணீர்ப் பாம்பொன்று
முன்கையிற் சுற்றிவிட -
பதறி உதறிப்
பயந்தோட வைத்ததும்
இந்த நதிதான்
இதே நதிதான்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சாமிகளா! சாமிகளா!
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா
சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா
சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சாயங்காலம் ஆகஆக
நிழல் நீள்வது மாதிரி
நீ
தள்ளித்தள்ளிப் போகப்போக
உன்
நினைவுகள் நீள்வதென்ன?
நிழல் நீள்வது மாதிரி
நீ
தள்ளித்தள்ளிப் போகப்போக
உன்
நினைவுகள் நீள்வதென்ன?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சிற்றுளியின் பெருமூச்சில்
சிகரங்கள் நகர்ந்தன
காதலின் வெப்பத்தில்
கற்பாறை இளகியது
மழைபெய்யாத மலையில்
இன்னொரு நதியும்
இறங்கி வந்தது
அது -
வெறிகொண்ட சிற்பியின்
வியர்வை நதி
ஷிரின் என்ற பெயரை
அவனோடு சேர்ந்து
உளியும் அல்லவா உச்சரித்தது
சிகரங்கள் நகர்ந்தன
காதலின் வெப்பத்தில்
கற்பாறை இளகியது
மழைபெய்யாத மலையில்
இன்னொரு நதியும்
இறங்கி வந்தது
அது -
வெறிகொண்ட சிற்பியின்
வியர்வை நதி
ஷிரின் என்ற பெயரை
அவனோடு சேர்ந்து
உளியும் அல்லவா உச்சரித்தது
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
கல் - மூங்கில் - கந்தகம்
மட்டுமன்றி
இறுகிக் கிடந்ததைத்
திருகி எரிந்தாலும் தீப்பற்றுமென்றாள்
தணலின் புத்திரி தஞ்சாவூர்த் தமிழச்சி
பிறகே தெரிந்தது
நெஞ்சுக்குள் யாவர்க்கும்
நெருப்புண்டு என்று...
மட்டுமன்றி
இறுகிக் கிடந்ததைத்
திருகி எரிந்தாலும் தீப்பற்றுமென்றாள்
தணலின் புத்திரி தஞ்சாவூர்த் தமிழச்சி
பிறகே தெரிந்தது
நெஞ்சுக்குள் யாவர்க்கும்
நெருப்புண்டு என்று...
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஓ விநாயகா!
உன்
இன்னொரு தந்தத்தையும்
இரண்டாய் உடைத்து
இந்தியர் எல்லாக்கும்
எழுத்தறிவித்தால்....
ஓம் முருகா !
சூரனை எறிந்த உன்
சுத்தவேல்
ஊழல் பூதத்தின்
உயிர்தடவி முடித்தால்...
அம்மா ஆண்டாள் !
முப்பத்தைந்து வயது
முதிர்கன்னியர்க்கெல்லாம்
நீ மாப்பிள்ளை அடைந்த
மகத்துவம் சொன்னால்...
உன்
இன்னொரு தந்தத்தையும்
இரண்டாய் உடைத்து
இந்தியர் எல்லாக்கும்
எழுத்தறிவித்தால்....
ஓம் முருகா !
சூரனை எறிந்த உன்
சுத்தவேல்
ஊழல் பூதத்தின்
உயிர்தடவி முடித்தால்...
அம்மா ஆண்டாள் !
முப்பத்தைந்து வயது
முதிர்கன்னியர்க்கெல்லாம்
நீ மாப்பிள்ளை அடைந்த
மகத்துவம் சொன்னால்...
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஏசுபிரான் ஒரு
சாவி செய்தார்
‘அன்பு’
வள்ளுவர் ஒரு
சாவி தந்தார்
‘அறம்’
நடிகன் ஒரு
சாவி செய்தார்
‘சகோதரத்துவம்’
சங்கரர் ஒரு
சாவி கண்டார்
‘அத்வைதம்’
கார்ல்மார்க்ஸ் ஒரு
சாவி தந்தார்
‘பொதுவுடைமை’
அண்ணல் காந்தி ஒரு
சாவி கண்டார்
‘அகிம்சை’...
சாவி செய்தார்
‘அன்பு’
வள்ளுவர் ஒரு
சாவி தந்தார்
‘அறம்’
நடிகன் ஒரு
சாவி செய்தார்
‘சகோதரத்துவம்’
சங்கரர் ஒரு
சாவி கண்டார்
‘அத்வைதம்’
கார்ல்மார்க்ஸ் ஒரு
சாவி தந்தார்
‘பொதுவுடைமை’
அண்ணல் காந்தி ஒரு
சாவி கண்டார்
‘அகிம்சை’...
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
முன்னோக்கி எனை நடத்தி
முதுமை செய்யும் காலங்காள்
பின்னோக்கி எனை நடத்திப்
பிள்ளையாக்கக் கூடாதா?
கட்டில் கண்டு கிடந்தாலும்
காதோரம் நரைத்தாலும்
தொட்டில் கண்ட மனம் என்னைத்
தொடர்ந்துவரக் கூடாதா?
முதுமை செய்யும் காலங்காள்
பின்னோக்கி எனை நடத்திப்
பிள்ளையாக்கக் கூடாதா?
கட்டில் கண்டு கிடந்தாலும்
காதோரம் நரைத்தாலும்
தொட்டில் கண்ட மனம் என்னைத்
தொடர்ந்துவரக் கூடாதா?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
ஆசையற்ற மனம் வாங்கி
அழிவற்ற உடல் வாங்கி
ஓசையற்ற உலகத்தில்
ஒதுங்கிவிடக் கூடாதா?
அழிவற்ற உடல் வாங்கி
ஓசையற்ற உலகத்தில்
ஒதுங்கிவிடக் கூடாதா?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமேலழகரை வரச்சொல் என்றது
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமேலழகரை வரச்சொல் என்றது
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சொந்த ஊரில் துளிநிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது
கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது
கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
வெளவால்
விலங்கா? பறவையா?
விளங்கவில்லை
நீ
அடிமையா மனிதனா
ஆதாரம் இல்லை
மின்சாரம் அறுந்த ராத்திரியில்
மெழுகுவர்த்தி அழுவதுபோல்
ஓரோர் இரவில்
உனக்காய் அழுகிறேன்
விலங்கா? பறவையா?
விளங்கவில்லை
நீ
அடிமையா மனிதனா
ஆதாரம் இல்லை
மின்சாரம் அறுந்த ராத்திரியில்
மெழுகுவர்த்தி அழுவதுபோல்
ஓரோர் இரவில்
உனக்காய் அழுகிறேன்
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://2img.net/i/empty.gif)
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» இது போதும் எனக்கு – வைரமுத்து கவிதை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» இது போதும் எனக்கு – வைரமுத்து கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|