Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காக வேனும்
வாழ்ந்து கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துப் பார்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
அணைக்கு ஆணைகள் வாங்கி
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
காலண்டரில்
இந்த ஆகஸ்ட் பதினைந்தை
அச்சடித்த சிவப்பில்
எனக்கு
இலங்கைத் தமிழனின்
ரத்த நெடி அடிக்கிறது
இந்த ஆகஸ்ட் பதினைந்தை
அச்சடித்த சிவப்பில்
எனக்கு
இலங்கைத் தமிழனின்
ரத்த நெடி அடிக்கிறது
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
அவன்
ஒரு
பட்டுவேட்டி பற்றிய
கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது
ஒரு
பட்டுவேட்டி பற்றிய
கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பாரதத்தின் மூன்று பக்கம்
கடல் இருக்கு
பாரதத்தின் நான்கு பக்கம்
கடன் இருக்கு
கடல் இருக்கு
பாரதத்தின் நான்கு பக்கம்
கடன் இருக்கு
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மானுக்கு
வலைகள் வேண்டும்
யானைக்கோ
பள்ளம் வேண்டும்
எங்கள் ஜனநாயகத்தில்
ஜனங்களைப் பிடிக்கச்
சப்தமே போதும்
வலைகள் வேண்டும்
யானைக்கோ
பள்ளம் வேண்டும்
எங்கள் ஜனநாயகத்தில்
ஜனங்களைப் பிடிக்கச்
சப்தமே போதும்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
அணைக்கு ஆணைகள் வாங்கி
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பாவம் மனைவி
இந்த
இல்லறக் கிரிக்கெட்டில்
கட்டிலறைக்கும்
சமையலறைக்கும்
ரன்கள் எடுத்தெடுத்தே
ரணமாய்ப் போனாள்
இன்னும் ஆண்களுக்கு
இது ஏன் புரியவில்லை
இந்த
இல்லறக் கிரிக்கெட்டில்
கட்டிலறைக்கும்
சமையலறைக்கும்
ரன்கள் எடுத்தெடுத்தே
ரணமாய்ப் போனாள்
இன்னும் ஆண்களுக்கு
இது ஏன் புரியவில்லை
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சில ஆண்களின்
ஆரோக்கியமில்லாத பார்வைகள்
கம்பளிப் பூச்சியாய்
உள் முதுகில் ஊறும்
சிலர்
கோப்புகளை வாங்கும்போது
விரல்களையும் விசாரிப்பார்கள்
ஆரோக்கியமில்லாத பார்வைகள்
கம்பளிப் பூச்சியாய்
உள் முதுகில் ஊறும்
சிலர்
கோப்புகளை வாங்கும்போது
விரல்களையும் விசாரிப்பார்கள்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
திரும்பத் திரும்பத்
திருத்தியும் திருத்தியும்
முற்றும் பிழை நீக்க
முடியவில்லை
இத்தனை ஓட்டைகள்
இருப்பினும் என்னில்
வழியாதெப்படி
வந்து நிறைந்துள்ளாய்
என் தமிழே?
திருத்தியும் திருத்தியும்
முற்றும் பிழை நீக்க
முடியவில்லை
இத்தனை ஓட்டைகள்
இருப்பினும் என்னில்
வழியாதெப்படி
வந்து நிறைந்துள்ளாய்
என் தமிழே?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தமிழா
காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா
கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்
பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்
காற்றின் ஈரம் பருகிவாழும்
பாலைவனத் தாவரம்போல்
முன்னாள் பெருமை என்னும்
முதுமக்கள் தாழியில் மூச்சுவிடும் தமிழா
கிளியோபாட்ராவின் சாராயத்துக்கு
முத்துக்கள் தந்தாய்
பாவம்
உன் சோற்றுக்குத்தான்
உப்பின்றிப் போனாய்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்
இனத்தின் பிணத்துக்கு
மலர்வளையம் வைத்தநாள்
அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்
தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்
இனத்தின் பிணத்துக்கு
மலர்வளையம் வைத்தநாள்
அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்
தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நம் சமூகம்
கண்கள் அறியாக்
கம்பிகொண்ட சிறைச்சாலை
வீடுதாண்டி விடுதலை இல்லை
பெண்டிர்க்கு
மனம் தாண்டி விடுதலை இல்லை
மனிதர்க்கு
மடம் தாண்டி விடுதலை இல்லை
துறவியர்க்கு
வா !
நீயும் நானுமேனும்
விடுதலை பெறுவோம்
அடிமைத்தளை வேண்டாம்
கண்கள் அறியாக்
கம்பிகொண்ட சிறைச்சாலை
வீடுதாண்டி விடுதலை இல்லை
பெண்டிர்க்கு
மனம் தாண்டி விடுதலை இல்லை
மனிதர்க்கு
மடம் தாண்டி விடுதலை இல்லை
துறவியர்க்கு
வா !
நீயும் நானுமேனும்
விடுதலை பெறுவோம்
அடிமைத்தளை வேண்டாம்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே !
வறுமைக் கோட்டின் கீழ்
நாற்பது கோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டிக் கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன் அறிவிக்க மறந்தாய்?
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐந்நூறாண்டுப் பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே !
வறுமைக் கோட்டின் கீழ்
நாற்பது கோடி மக்கள் என்றாய்
அறிவுக் கோட்டிக் கீழ்
அறுபது கோடி
அதை மட்டும் ஏன் அறிவிக்க மறந்தாய்?
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
பழைய பிடி விடமுடியாமலும்
புதிய அடி தொடமுடியாமலும்
திரிசங்கு சொர்க்கத்தில்
கிழவன் கிழவிகள்
ஆனாலும் இன்னும்
தேர்தல் - திரைப்படச்
சுவரொட்டி எதிர்பார்த்து
சில பிராணிகளும்
பல ஜீவன்களும்
புதிய அடி தொடமுடியாமலும்
திரிசங்கு சொர்க்கத்தில்
கிழவன் கிழவிகள்
ஆனாலும் இன்னும்
தேர்தல் - திரைப்படச்
சுவரொட்டி எதிர்பார்த்து
சில பிராணிகளும்
பல ஜீவன்களும்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மதம் வந்தது
நீ
வருணமாய்ப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாப்ப் பிரிந்தாய்
தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்
நீ
வருணமாய்ப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாப்ப் பிரிந்தாய்
தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
சேரிக்குள் சென்று திரும்பிய
சில அரசியல் தலைவர்கள்
வந்தவுடன் செய்யும்
முதல் சீர்திருத்தம்
தம்
சட்டை வேட்டியைச்
சலவைக்குப் போடுவதுதான்
சில அரசியல் தலைவர்கள்
வந்தவுடன் செய்யும்
முதல் சீர்திருத்தம்
தம்
சட்டை வேட்டியைச்
சலவைக்குப் போடுவதுதான்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
தட்டுங்கள் திறக்கப்படுமென்ற
கர்த்தனின் மொழி இங்கே
கவைக்குதவாது
சேரிக் கதவின் முன்
குரல் கொடுங்கள்
திறந்துவிடும்
தட்டினால்
விழுந்து விடும்
கர்த்தனின் மொழி இங்கே
கவைக்குதவாது
சேரிக் கதவின் முன்
குரல் கொடுங்கள்
திறந்துவிடும்
தட்டினால்
விழுந்து விடும்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
கண்மணியே உனைக்காண வைத்ததாலே - என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீபோகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகிறேன்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீபோகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகிறேன்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
காதல் இன்றேல் சாதல் என்றே
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
கவிதை சொன்னதும் ஒரு காலம்
காதல் என்பது சந்தர்ப்பம்தான்
கண்டு தெளிந்ததும் ஒரு காலம்
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
மரணப் பிரதேசம் தாண்டி
நாம்
மௌனம் பேசுவோம்
நீ
பிறந்து வளர்ந்த பூமிக்கு
முத்தங்கொடுத்து என்னுயிரை
முடித்துக் கொள்கிறேன்
அவன் உடலைவிட்டு
பிரிந்தது உயிர்
பிரியவில்லை உளி
நாம்
மௌனம் பேசுவோம்
நீ
பிறந்து வளர்ந்த பூமிக்கு
முத்தங்கொடுத்து என்னுயிரை
முடித்துக் கொள்கிறேன்
அவன் உடலைவிட்டு
பிரிந்தது உயிர்
பிரியவில்லை உளி
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நாம்
பிரிவு கொண்டோம் என்பதைப்
பிரபஞ்சம் அறியாதா?
இன்னும் பூமி
சுற்றிக்கொண்டிருக்கிறதே
மாதம் ஒரு பௌர்ணமி
வான வெளியில் வருகிறதே
காற்று தன் பயணத்தை
நிறுத்திக் கொள்ளவில்லையே...
பிரிவு கொண்டோம் என்பதைப்
பிரபஞ்சம் அறியாதா?
இன்னும் பூமி
சுற்றிக்கொண்டிருக்கிறதே
மாதம் ஒரு பௌர்ணமி
வான வெளியில் வருகிறதே
காற்று தன் பயணத்தை
நிறுத்திக் கொள்ளவில்லையே...
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
நீ தந்த சுகமெல்லாம் -
நெற்றியில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை
வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த பெருமூச்சில் கொண்டதில்லை
எங்கே மீண்டுமொரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல்குட்டியாகு
தட்டாதே
தாய் சொல்லைக் கேள்
பத்து மாதம் என் வயிறுசுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே
நெற்றியில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை
வில்லாய் விறைக்கும் கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த பெருமூச்சில் கொண்டதில்லை
எங்கே மீண்டுமொரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல்குட்டியாகு
தட்டாதே
தாய் சொல்லைக் கேள்
பத்து மாதம் என் வயிறுசுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே
Re: கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
முடிவெட்டலாகாது
நகம் களைதலாகாது
பேன் பார்க்கலாகாது
அழுக்குத் துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“ஒன்றை மறந்தீரே ! ”
“என்னது? ”
“தொலைக்காட்சி ஆகாது
நகம் களைதலாகாது
பேன் பார்க்கலாகாது
அழுக்குத் துணியை
வெளுக்கப் போடலாகாது
உப்போ மோரோ
இரவல் தரலாகாது
பல் துலக்கலாகாது
கடன் கொடுக்கலாகாது
“ஒன்றை மறந்தீரே ! ”
“என்னது? ”
“தொலைக்காட்சி ஆகாது
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» கேள்வி ஞானம் - கவிஞர் வைரமுத்து
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» அறிவுரைகள் - கவிஞர் வைரமுத்து
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» கேள்வி ஞானம் - கவிஞர் வைரமுத்து
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|