Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
உன் உதட்டுச் சாயத்தால் !
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40.
தொலைபேசி 044-24314347.
மின்னஞ்சல் info@karpagamputhakalayam.com
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ,உல் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள் .
.
வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில் காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பாணிபோல இவரும் எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல தமிழ்ப் பெயராக இல்லை என்பது வருத்தம்தான் .
பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் ரசனைக்கு .முதல் கவிதையே முத்தத்தில் தொடங்குகின்றது .முதல் கவிதையே நூலின் பின் அட்டையிலும் அச்சாகி உள்ளது .
-
உன் உதட்டுச் சாயத்தால்
நீ வரைந்த
முதல் ஓவியம்
உன் முத்தம் !
நூலில் அணிந்துரை வாழ்த்துரை என்ற பக்க செலவின்றி தன்னுரையோடு கவிதைகள் தொடக்கி விடுகின்றன .
.காதலின் முன்னுரை முத்தம் என்பதால் முத்தம் பற்றிய பல கவிதைகள் உள்ளன .
ஒரே ஒரு முத்தம்தான்
என்று கண்டிப்போடு
கொடுத்தாய் !
என்றாலும் இன்று வரை
கன்றிப் பொய் இருக்கிறது
என் உதடுகள் !
மறுபடியும் முத்தம் பற்றி ஒரு கவிதை .காதலர்கள் மட்டும் உணர்ந்த தனிச்சுவை முத்தம் பற்றி தித்திக்க புதுக்கவிதைகள் வடித்துள்ளார் .
நீ முத்தமிட்டால்
வெப்பத்தில்
உறைந்து போகிறேன்
நான் !
முத்தம் குளிர்ச்சி என்பார்கள் சிலர் .இவர் வெப்பம் என்கிறார் .கோடை காலத்தில் குளிர் .குளிர் காலத்தில் வெப்பம் என்றும் பொருள் கொள்ளாலாம் .நாம் .
பெண்களுக்கு குளியலறையில் நெற்றிப் பொட்டை ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு .வீடுகளில் பார்த்து இருக்கிறோம் .அதனை காட்சிப் படுத்தும் விதமாக ஒரு புதுக் கவிதை .
உன் குளியலறைக்கு
நீயே வைக்கும்
திருஷ்டிப் பொட்டு
உன் நெற்றி
ஒட்டுப் பொட்டு !
கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனைக்கு பொய் அழகு .என்பதை மெய்ப்பிக்கும் கவிதை நன்று .
உன் பிறந்த
நாளுக்கு
நீ
ஊதி அணைக்க
சூரியனைத் தரவா
மெழுகுவர்த்தியாக !
காதலி சரி சூரியனைத் தா ! என்றால் காதலனால் தர முடியாது. என்றாலும் வார்த்தையில் உள்ள நளினம் காதலி ரசிப்பாள் .
மனதிற்குள்ளேயே காதலை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் அதிகம் .அவள் சொல்லட்டும் என்று அவனும் .அவன் சொல்லட்டும் என்று இருவர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் வைத்து ரகசியமாக காதலிப்பவர்களும் உண்டு .அதனை நவீன உவமையுடன் எழுதி உள்ளார் .
கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !
பலர் மறக்காது என்று கணினியில் இரகசிய பெயர் தங்கள் துணையின் பெயரை வைத்துக் கொள்வதும் உண்மை .
காதலி நினைவு வந்து விட்டால் தூக்கம் பறி பொய் விடும் என்ற காதல் அனுபவம் வைத்து எழுதிய கவிதை.
கடவுள் பக்தர்களுக்கு
ஆண்டுக்கு ஒரு நாள்தான்
சிவராத்திரி !
காதலியே
உன் பக்தன் எனக்கு
தினம் தினம் !
இன்றைய கல்லூரி காதல் பற்றிய நடப்பியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .புதிய காதலர்கள் பற்றி கல்லூரியே பேசிக்கொள்ளும் இயல்பை உணர்த்தி உள்ளார் .
எனக்கு
நீ அனுப்பிய
குறுசெய்திதான்
அந்த ஆண்டு
கல்லூரிக்கே
தலைப்பு செய்தி !
எல்லோர்க்கும் அவரவர் காதலி தேவதைதான் .அழகிதான் .பேரழகிதான் சில சொற்களில் நன்கு உணர்த்துகின்றார் .
தேவதை என்று
உன்னை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனை
இப்படியா நீ
காதலனாக்கி
வேடிக்கைப் பார்ப்பது !
நாய் குறைப்பது கூட காதலனுக்கு லவ் லவ் என்று கேட்கிறதாம். கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் ரசிக்கலாம் .
காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !
காதல் ரசம் சொட்டச் சொட்ட கற்பனை கலந்து புதுக் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
.
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40.
தொலைபேசி 044-24314347.
மின்னஞ்சல் info@karpagamputhakalayam.com
நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ,உல் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள் .
.
வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில் காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பாணிபோல இவரும் எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல தமிழ்ப் பெயராக இல்லை என்பது வருத்தம்தான் .
பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் ரசனைக்கு .முதல் கவிதையே முத்தத்தில் தொடங்குகின்றது .முதல் கவிதையே நூலின் பின் அட்டையிலும் அச்சாகி உள்ளது .
-
உன் உதட்டுச் சாயத்தால்
நீ வரைந்த
முதல் ஓவியம்
உன் முத்தம் !
நூலில் அணிந்துரை வாழ்த்துரை என்ற பக்க செலவின்றி தன்னுரையோடு கவிதைகள் தொடக்கி விடுகின்றன .
.காதலின் முன்னுரை முத்தம் என்பதால் முத்தம் பற்றிய பல கவிதைகள் உள்ளன .
ஒரே ஒரு முத்தம்தான்
என்று கண்டிப்போடு
கொடுத்தாய் !
என்றாலும் இன்று வரை
கன்றிப் பொய் இருக்கிறது
என் உதடுகள் !
மறுபடியும் முத்தம் பற்றி ஒரு கவிதை .காதலர்கள் மட்டும் உணர்ந்த தனிச்சுவை முத்தம் பற்றி தித்திக்க புதுக்கவிதைகள் வடித்துள்ளார் .
நீ முத்தமிட்டால்
வெப்பத்தில்
உறைந்து போகிறேன்
நான் !
முத்தம் குளிர்ச்சி என்பார்கள் சிலர் .இவர் வெப்பம் என்கிறார் .கோடை காலத்தில் குளிர் .குளிர் காலத்தில் வெப்பம் என்றும் பொருள் கொள்ளாலாம் .நாம் .
பெண்களுக்கு குளியலறையில் நெற்றிப் பொட்டை ஒட்டி வைக்கும் பழக்கம் உண்டு .வீடுகளில் பார்த்து இருக்கிறோம் .அதனை காட்சிப் படுத்தும் விதமாக ஒரு புதுக் கவிதை .
உன் குளியலறைக்கு
நீயே வைக்கும்
திருஷ்டிப் பொட்டு
உன் நெற்றி
ஒட்டுப் பொட்டு !
கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனைக்கு பொய் அழகு .என்பதை மெய்ப்பிக்கும் கவிதை நன்று .
உன் பிறந்த
நாளுக்கு
நீ
ஊதி அணைக்க
சூரியனைத் தரவா
மெழுகுவர்த்தியாக !
காதலி சரி சூரியனைத் தா ! என்றால் காதலனால் தர முடியாது. என்றாலும் வார்த்தையில் உள்ள நளினம் காதலி ரசிப்பாள் .
மனதிற்குள்ளேயே காதலை மறைத்து வைத்துக் கொள்பவர்கள் அதிகம் .அவள் சொல்லட்டும் என்று அவனும் .அவன் சொல்லட்டும் என்று இருவர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் வைத்து ரகசியமாக காதலிப்பவர்களும் உண்டு .அதனை நவீன உவமையுடன் எழுதி உள்ளார் .
கணினியில் இரகசிய
பெயர் கேட்கும்
இடமெல்லாம்
உன் பெயரை
நான் கொடுக்க
கணினியைப் போலவே
இரகசியமாக வைத்திருக்கிறாய்
உன் காதலை !
பலர் மறக்காது என்று கணினியில் இரகசிய பெயர் தங்கள் துணையின் பெயரை வைத்துக் கொள்வதும் உண்மை .
காதலி நினைவு வந்து விட்டால் தூக்கம் பறி பொய் விடும் என்ற காதல் அனுபவம் வைத்து எழுதிய கவிதை.
கடவுள் பக்தர்களுக்கு
ஆண்டுக்கு ஒரு நாள்தான்
சிவராத்திரி !
காதலியே
உன் பக்தன் எனக்கு
தினம் தினம் !
இன்றைய கல்லூரி காதல் பற்றிய நடப்பியலை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .புதிய காதலர்கள் பற்றி கல்லூரியே பேசிக்கொள்ளும் இயல்பை உணர்த்தி உள்ளார் .
எனக்கு
நீ அனுப்பிய
குறுசெய்திதான்
அந்த ஆண்டு
கல்லூரிக்கே
தலைப்பு செய்தி !
எல்லோர்க்கும் அவரவர் காதலி தேவதைதான் .அழகிதான் .பேரழகிதான் சில சொற்களில் நன்கு உணர்த்துகின்றார் .
தேவதை என்று
உன்னை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தவனை
இப்படியா நீ
காதலனாக்கி
வேடிக்கைப் பார்ப்பது !
நாய் குறைப்பது கூட காதலனுக்கு லவ் லவ் என்று கேட்கிறதாம். கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் ரசிக்கலாம் .
காதலர்தினப் பரிசாய்
நீ கொடுத்த
நாய்க்குட்டி
லவ் லவ் என்று
குரைக்கிறது !
காதல் ரசம் சொட்டச் சொட்ட கற்பனை கலந்து புதுக் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
.
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|