தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒளவையார் அருளிய .... நல்வழி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:40 pm

கடவுள் வாழ்த்து 

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.


(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.

இதன் கருத்து :- விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல்,
இசை, நாடகம் என்னும் பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று.

 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:40 pm

நன்மையே செய்க 

1.  புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
   மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுஙகால்
   ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந் 
   தீதொழிய நன்மை செயல்.


(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.

புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் போக்கும் என்பன ஆம் போம் என நின்றன. (1)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:41 pm

ஈயாமையின் இழிவு 

2.  சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
   நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
   இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
   பட்டாங்கில் உள்ள படி.


(பதவுரை) சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.

கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை எ - ம். (2)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:42 pm

ஈதலின் சிறப்பு 

3.  இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
   இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
   உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
   விண்டாரைக் கொண்டாடும் வீடு.


(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் என்க. (3)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:43 pm

காலம் நோக்கிச் செய்க 

4.  எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
   புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
   மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
   ஆங்கால மாகு மவர்க்கு.


(பதவுரை) யார்க்கும் - எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல், ஒரு கருமம்-ஒரு -காரியத்தை, எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும் பொழுது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.

புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ-ம். மாத்திரை-அளவு. குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க. (4)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:43 pm

     
கவலையுறுதல் கூடாது 

5.  வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
   பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
   நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
   துஞ்சுவதே மாந்தர் தொழில்.


(பதவுரை) வாராத-(ஊழால்) வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும், வாரா - வாராவாம்; பொருந்துவன - (ஊழால்) வரக்கூடியவை, போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும், போகா-போகாவாம்; இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே - மாண்டு போவதே, மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்க 
தன்று எ - ம். (5)
 
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:44 pm

    
பேராசை கூடாது 

6.  உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
   கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
   கடலோடி மீண்டு கரையேறி னாலென்
   உடலோடு வாழும் உயிர்க்கு


(பதவுரை) ஒருவர்க்கு - ஒருவருக்கு, உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங்களை, கொள்ள,-அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்; (ஆதலால்) குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல் ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், என் - அதனாற் பயன் என்ன?

கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினளவன்றி அநுபவித்தல் கூடாது 
எ - ம். (6) 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:45 pm

ஞானிகள் பற்றற்றிருப்பர் 

7.  எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
   பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
   அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
   பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


(பதவுரை) எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும், புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்; பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள், ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள் எ - ம். (7)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:45 pm

மரியாதையே தேடத்தக்கது 

8.  ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
   கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
   மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
   தரியாது காணுந் தனம


(பதவுரை) மகிதலத்தீர்-பூமியிலுள்ள மனிதர்களே, கேண்மின் - கேளுங்கள்; ஈட்டும் பொருள் - தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த ஆயினும்-முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - ஊழ் கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம் தரியாது-ஊழினாலே (சேரினும்) அப்பொருள் நிலைபெறாது; தேட்டம் மரியாதை - (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்: அசை

காணுமிரண்டும் முன்னிலை யசை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:46 pm

குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார் 

9.  ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
   ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
   நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
   இல்லையென மாட்டார் இசைந்து


(பதவுரை) ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, இசைந்து - மனமிசைந்து, இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார்  எ -ம். (9)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:47 pm

இட்டு உண்டு இரும் 

10.  ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
    மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
    நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
    எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


(பதவுரை) மா நிலத்தீர்-பெரிய பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - வருடா வருடந் தோறும் அழுதுபுரண்டாலும், மாண்டார் வருவரோ - இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா - (ஆதலினால்) அழ வேண்டுவதில்லை; நமக்கும் அதுவழியே - நமக்கும் அம்மரணமே வழியாகும்; நாம் போம் அளவும்-நாம் இறந்துபோ மளவும், எமக்கு என் என்று-எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு இரும்-பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.

இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்
 


Last edited by முழுமுதலோன் on Sat Jan 04, 2014 3:48 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:49 pm

பசி கொடியது 

11.  ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
    என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
    உன்னோடு வாழ்தல் அரிது.


(பதவுரை) இடும்பைகூர் என் வயிறே-துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்-(கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.

வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை எ - ம். (11)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:50 pm

உழவின் உயர்வு 

12.  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
    உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு


(பதவுரை) ஆற்றங்கரையின் மரமும்-ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும், விழும் அன்றே-அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு ஓர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம், பழுது உண்டு - தவறு உண்டு.

அம் : சாரியை. கண்டீர் : முன்னிலை அசை.

உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்தர முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும் எ - ம். (12)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:50 pm

விலக்க இயலாதன 

13.  ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
    சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
    ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
    மெய்யம் புவியதன் மேல்.


(பதவுரை) அம் புவியதன்மேல் - அழகிய பூமியின்மேலே, மெய் - உண்மையாக, ஆவாரை அழிப்பார் யார் - வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது அன்றி - அது வல்லாமல், சாவாரை தவிர்ப்பவர் யார் - இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஓவாமல் - ஒழியாமல், ஐயம் புகுவாரை - பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர் யாவர்? ஏ மூன்றும் அசை.

ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை எ - ம். (13)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:51 pm

மானமே உயிரினும் சிறந்தது 

14.  பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
    இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
    வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
    உயிர்விடுகை சால உறும


(பதவுரை) பேசுங்கால்-சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கையாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்; சிச்சீ-சீ சீ (இது என்ன செய்கை), வயிறு வளர்க்கைக்கு-இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம் அழியாது - மானங் கெடாமல் உயிர் விடுகை - உயிரை விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும்.

பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து எ - ம். (14)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:52 pm

திருவைந்தெழுந்தின் சிறப்பு 

15.  சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
    அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
    இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
    விதியே மதியாய் விடும


(பதவுரை) சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு - சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒரு நாளும் அபாயம் இல்லை - ஒருபொழுதும் துன்பம் 
உண்டாகாது; இதுவே-இஃதொன்றுமே, உபாயம்-(விதியைவெல்லுதற் கேற்ற) உபாயமும், மதி - இது வல்லாத எல்லா அறிவுகளும், விதியே ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும்.


சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்துகொண் டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு எ - ம். (15) 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:53 pm

வியத்தகு விழுப்பொருள் 

16.  தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
    கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை
    கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
    அற்புதமாம் என்றே அறி


(பதவுரை) தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும் எ - ம். (16)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:53 pm

தீவினையே வறுமைக்கு வித்து 

17.  செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
    எய்த வருமோ இருநிதியம்-வையத்து
    அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
    வெறும்பானை பொங்குமோ மேல


(பதவுரை) வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து - பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கு - அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய் தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால், இரு நிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ - வெறும் பானை (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.)

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை எ-ம். (17)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:54 pm

இடிப்பார்க்கு ஈவர் 

18.  பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
    உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்
    இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
    சரணங் கொடுத்தாலுந் தாம.


(பதவுரை) பேர் உலகில் - பெரிய நிலவுலகத்திலே, பெற்றார் - (எம்மைப்) பெற்றவர், பிறந்தார் - (எமக்குப்) பிறந்தவர்,பெருநாட்டார் - (எம்முடைய) பெரிய தேசத்தார், உற்றார் - (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் - (எம்மை). நேசித்தவர், என வேண்டார் - என்று விரும்பாதவராகிய உலோபிகள், மற்றோர் - பிறர், இரணம் கொடுத்தால் - தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் - (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் - (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ தாம் இரண்டும் அசை.

உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையர் முதலாயினோருக்குக் கொடார் எ - ம். (18)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:55 pm

பேரின்பம் நாடாப் பேதமை 

19.  சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
    பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
    நாழி அரிசிக்கே நாம


(பதவுரை) வயிற்றின் கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், உடம்மை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றேம்.

வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் எ - ம். (19)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:56 pm

பரத்தையரால் செல்வம் பாழாம் 

20.  அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
    கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
    மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
    வெறுமைக்கு வித்தாய் விடும்.


(பதவுரை) கொம்மை முலை - திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரை (இன்பங்காரணமாகக்) கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்மிக்கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப்போலும்; (அன்றியும்) மாநிதியம் போக்கி - (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் - வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று - அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது.

விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழிபாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன் எ - ம். (20) 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:56 pm

வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன் 

21   நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
    பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
    வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
    தருஞ்சிவந்த தாமரையாள் தான


(பதவுரை) சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு - வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் - நீர்வளத்தையும், நிழலும் - நிழல்வளத்தையும், நிலம்பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் - பேரையும், புகழும் - கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும், ஊரும் - கிராமத்தையும், வரும் திருவும் - வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும்-நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள்.

வஞ்சனை யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும்      எ - ம். (21)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:57 pm

பாவிகளின் பணம் 

22.  பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
    காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
    பாவிகள் அந்தப் பணம்.


(பதவுரை) பணத்தைப் பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து - (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு விட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப் பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் - இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ - ம். (22)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:58 pm

வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ் 

23.  வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே-மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரஞ் சொன்னார் மனை.


(பதவுரை) மன்று ஓரஞ் சொன்னார் மனை-தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும்-பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள் - மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடிபுகும் - பாம்புகள் குடியிருக்கும்.

ஏ ஐந்தும் அசை.

நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ - ம். (23)

ஓரம் - நடுவுநிலையின்மை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:59 pm

வாழ்க்கை மாண்பு ஐந்து 

24.  நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
    ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
    உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
    மடக்கொடி யில்லா மனை.


(பதவுரை) நீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ - ம். (24)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum