Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
வறுமையை போல
வாழ்க்கையை கற்று கொடுக்க
எந்த குருவாலும் முடியாது
அந்த வறுமையை நீ வெல்லாமல் விட்டால்
அதன் புனிதம் தெரியாது .......!!!
வறுமையை உடைத்து வெளியே வா
அதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
வாழ்க்கையை கற்று கொடுக்க
எந்த குருவாலும் முடியாது
அந்த வறுமையை நீ வெல்லாமல் விட்டால்
அதன் புனிதம் தெரியாது .......!!!
வறுமையை உடைத்து வெளியே வா
அதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
எனக்கு வாழ பிடிக்கவில்லை
ஆனால்
என் தமிழை விட்டுவிட்டு சாக பிடிக்கவில்லை
அதனால் தான்
வாழ்தலை நேசிக்கிறேன்
தமிழை மூச்சாய் சுவாசிக்கிறேன்
!.......சுபபாலா .....!
ஆனால்
என் தமிழை விட்டுவிட்டு சாக பிடிக்கவில்லை
அதனால் தான்
வாழ்தலை நேசிக்கிறேன்
தமிழை மூச்சாய் சுவாசிக்கிறேன்
!.......சுபபாலா .....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
!!!!.......முதுமை ........!!!!! பற்கள்
மரத்தில் இருந்து கனிந்து விழுந்த பழமாய் விழுந்து போகும்
முடிகள் இலைகள் போல் உதிர்ந்து மொட்டையாய் வானம் போல்
வெளிச்சமாகும்
எல்லை கோடுகளின் இராணுவம் போல்
நெஞ்சை நிமிர்த்திய உடம்பு
எலும்பு கூடுகளாய் தெரியும்
குரல் கேட்டவுடன்
ஓடி வந்த கூட்டம்
ஒரு குரலும் கேட்காமல்
மௌனத்தால் தாலாட்டும்
நோய் தோற்றி கொள்ளும்
வார்த்தைகள் உடைந்து நினைவுகளை
மட்டும் பதநீராய் பருகி செல்லும்
தெய்வமே .....!
தேடலாக முதுமையோ
வாழ்ந்த வாழ்க்கையின்
வரவு செலவு கணக்கின் வங்கியாய்
வாழ்க்கையை கணக்கு பார்க்கும்
போகின்ற நாளை எண்ணி
மனதால் பூரித்து கொண்டே
இன்னொரு போர்வை கேட்கும் ........ !!!!!
மரத்தில் இருந்து கனிந்து விழுந்த பழமாய் விழுந்து போகும்
முடிகள் இலைகள் போல் உதிர்ந்து மொட்டையாய் வானம் போல்
வெளிச்சமாகும்
எல்லை கோடுகளின் இராணுவம் போல்
நெஞ்சை நிமிர்த்திய உடம்பு
எலும்பு கூடுகளாய் தெரியும்
குரல் கேட்டவுடன்
ஓடி வந்த கூட்டம்
ஒரு குரலும் கேட்காமல்
மௌனத்தால் தாலாட்டும்
நோய் தோற்றி கொள்ளும்
வார்த்தைகள் உடைந்து நினைவுகளை
மட்டும் பதநீராய் பருகி செல்லும்
தெய்வமே .....!
தேடலாக முதுமையோ
வாழ்ந்த வாழ்க்கையின்
வரவு செலவு கணக்கின் வங்கியாய்
வாழ்க்கையை கணக்கு பார்க்கும்
போகின்ற நாளை எண்ணி
மனதால் பூரித்து கொண்டே
இன்னொரு போர்வை கேட்கும் ........ !!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
ஒரு முதியவரின் ஒற்றை சொல்
வாழ்வில் நாம் படிக்கும்
திருக்குறளின் பொருள் போல்
உண்மையின் நீதியாகும் .........!!!!
ஆதலால்
முதியோரை நேசியுங்கள்
அவர்கள் முன்னுரையை யாசியுங்கள்
உங்கள் வாழ்க்கை அழகாகும்
அவர்கள் வாழும் நாட்களும்
உங்களால் இன்னும் அழகாகும்
வாழ்வில் நாம் படிக்கும்
திருக்குறளின் பொருள் போல்
உண்மையின் நீதியாகும் .........!!!!
ஆதலால்
முதியோரை நேசியுங்கள்
அவர்கள் முன்னுரையை யாசியுங்கள்
உங்கள் வாழ்க்கை அழகாகும்
அவர்கள் வாழும் நாட்களும்
உங்களால் இன்னும் அழகாகும்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
உடன்பிறப்பு.......!!!
உலகில் தாயின் வரங்களில்
தவமாய் கிடைப்பது சகோதிரங்கள்
உண்மையில் உயிரோடும் உதிரங்கள் .....!
அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற
சொல்லுக்குள்ளேயே
வாழ்வின் உலகம் இருந்தது அன்று
வளரும் வரை அணைத்து காத்து
வைத்திருந்தது தாய்தந்தை அன்பு ....!!!
பருவங்களும் வாழ்வின் தேடல்களும்
திசை தேட
அன்பின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது இயல்போ ...!!!
காரணம் இல்லாமல் மூழ்கி போவது
சமுகமுறையோ ....?
ஒரு குடில் வீட்டுக்குள் படித்து உறங்கி
பறித்து தின்று
அண்ணா சொல் கேட்டு
அக்காவின் கதை கேட்டு
தம்பி தங்கைகளுடன் தாலாட்டு பாடி மகிழ்ந்த அன்புகள்
வளர்ந்து வாழ்க்கையாகும் போது
எங்கே ஓடி ஒழிந்து கொள்கிறது ....!!!
அப்பாவுக்கு அடுத்து
அண்ணன்மாருக்கு பயந்த உலகம்
அண்ணனையே அன்னையாய் சொல் கேட்டு
வளர்ந்த சகோதரர்கள் எதற்க்காக எதிரிகளாக கோபங்களை மட்டும் குறிவைக்கிறார்கள் .....!!!
அக்கா என்றாலே அம்மாவாய் இருந்து
அவள் நாம் வாழ
கரைந்த பொழுதுகளை
எதற்க்காக கண்டுகொள்ளாமல்
கடந்துபோகிறார்கள் .....!!!
குடும்பம் என்பது கோயில்
எப்படி வேண்டுமானாலும் சகோதரர்கள் பிரிந்து போகலாம்
ஆனால்
உண்மையான அன்பும்
ஆயுளுக்கான அமைதியும்
அன்னை தந்தை உருவாக்கிவிட்ட
"உடனபிறப்பு கோயிலிலே "மட்டும் தான் கிடைக்கும்
உலகில் கோடியிலும் கோபத்திலும்
ஏழ்மையிலும் வடுக்களோடும்
வாழ்ந்தாலும்
ஒற்றுமையாய் வாழ்ந்தால் மட்டுமே
வாழ்க்கை சிறக்கும் !!!
உடன்பிறந்த உறவுகள் என்றும்
எதிலும் பிரியவே கூடாது
பிரிந்தால்
அன்னை தந்தை கருவாக்கி உருவாக்கி விட்ட
இந்த வாழ்க்கையில் உயிர் ஏது ......!!!
உலகில் தாயின் வரங்களில்
தவமாய் கிடைப்பது சகோதிரங்கள்
உண்மையில் உயிரோடும் உதிரங்கள் .....!
அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற
சொல்லுக்குள்ளேயே
வாழ்வின் உலகம் இருந்தது அன்று
வளரும் வரை அணைத்து காத்து
வைத்திருந்தது தாய்தந்தை அன்பு ....!!!
பருவங்களும் வாழ்வின் தேடல்களும்
திசை தேட
அன்பின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது இயல்போ ...!!!
காரணம் இல்லாமல் மூழ்கி போவது
சமுகமுறையோ ....?
ஒரு குடில் வீட்டுக்குள் படித்து உறங்கி
பறித்து தின்று
அண்ணா சொல் கேட்டு
அக்காவின் கதை கேட்டு
தம்பி தங்கைகளுடன் தாலாட்டு பாடி மகிழ்ந்த அன்புகள்
வளர்ந்து வாழ்க்கையாகும் போது
எங்கே ஓடி ஒழிந்து கொள்கிறது ....!!!
அப்பாவுக்கு அடுத்து
அண்ணன்மாருக்கு பயந்த உலகம்
அண்ணனையே அன்னையாய் சொல் கேட்டு
வளர்ந்த சகோதரர்கள் எதற்க்காக எதிரிகளாக கோபங்களை மட்டும் குறிவைக்கிறார்கள் .....!!!
அக்கா என்றாலே அம்மாவாய் இருந்து
அவள் நாம் வாழ
கரைந்த பொழுதுகளை
எதற்க்காக கண்டுகொள்ளாமல்
கடந்துபோகிறார்கள் .....!!!
குடும்பம் என்பது கோயில்
எப்படி வேண்டுமானாலும் சகோதரர்கள் பிரிந்து போகலாம்
ஆனால்
உண்மையான அன்பும்
ஆயுளுக்கான அமைதியும்
அன்னை தந்தை உருவாக்கிவிட்ட
"உடனபிறப்பு கோயிலிலே "மட்டும் தான் கிடைக்கும்
உலகில் கோடியிலும் கோபத்திலும்
ஏழ்மையிலும் வடுக்களோடும்
வாழ்ந்தாலும்
ஒற்றுமையாய் வாழ்ந்தால் மட்டுமே
வாழ்க்கை சிறக்கும் !!!
உடன்பிறந்த உறவுகள் என்றும்
எதிலும் பிரியவே கூடாது
பிரிந்தால்
அன்னை தந்தை கருவாக்கி உருவாக்கி விட்ட
இந்த வாழ்க்கையில் உயிர் ஏது ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
தாய் நாட்டை இழந்தவனுக்கும்
தாய் இல்லாமல் வாழ்பவனுக்கு ம்
மட்டுமே தெரியும்
இந்த வாழ்க்கையில்
நொடிக்கொரு முறை செத்து பிழைப்பது எப்படியான வலி என்று ......!!!! /வெளிநாடு /
தாய் இல்லாமல் வாழ்பவனுக்கு ம்
மட்டுமே தெரியும்
இந்த வாழ்க்கையில்
நொடிக்கொரு முறை செத்து பிழைப்பது எப்படியான வலி என்று ......!!!! /வெளிநாடு /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
வயிற்று பசியோடு
மட்டுமல்ல ....!உயிர் தேடல் பசியோடும்
எப்போதும் தாகமாகவே இரு ....!!!
அப்போது தான்
உன் தேடல் வெறி கொள்ளும்
உன்னை தேடி வெற்றி வரும் .....!!!!
சுபபாலா
மட்டுமல்ல ....!உயிர் தேடல் பசியோடும்
எப்போதும் தாகமாகவே இரு ....!!!
அப்போது தான்
உன் தேடல் வெறி கொள்ளும்
உன்னை தேடி வெற்றி வரும் .....!!!!
சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 3:30 pm; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
யாரும் உங்களை கண்டு கொள்ளவில்லை என கவலைபடுபவரா நீங்கள் .....!!!
அப்படியானால் முதலில் உங்களை
தெளிவாக கண்டுகொண்டு போராட களமிறங்குங்கள்
வெற்றி வர கொஞ்சம் தயங்கும் பின்
உன் துணிவு கண்டு உன்னில் விழுந்து மயங்கும் .....!!!
அப்படியானால் முதலில் உங்களை
தெளிவாக கண்டுகொண்டு போராட களமிறங்குங்கள்
வெற்றி வர கொஞ்சம் தயங்கும் பின்
உன் துணிவு கண்டு உன்னில் விழுந்து மயங்கும் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
தாங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு நன்றி
அறிமுக பகுதியில் தங்களை அறிமுக படுத்தி கொள்ளுங்களேன்
அறிமுக பகுதியில் தங்களை அறிமுக படுத்தி கொள்ளுங்களேன்
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
சுபபாலா wrote:வறுமையை போல
வாழ்க்கையை கற்று கொடுக்க
எந்த குருவாலும் முடியாது
அந்த வறுமையை நீ வெல்லாமல் விட்டால்
அதன் புனிதம் தெரியாது .......!!!
வறுமையை உடைத்து வெளியே வா
அதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
யாரிடமும் கடன் வாங்கும் முன்
உழைப்பின் முகவரியை தேடிக்கொண்டு இரு ....!
கடன் வாங்கிவிட்டால்
இரு விழியும் உறங்காது உழைப்பை
நீயே உருவாக்கு .....!!!
இல்லையேல்
கடன் உன்னை ஊனப்படுத்தி
உலகையே வெறுக்க பண்ணும் .....!!!
/ சுபபாலா /
உழைப்பின் முகவரியை தேடிக்கொண்டு இரு ....!
கடன் வாங்கிவிட்டால்
இரு விழியும் உறங்காது உழைப்பை
நீயே உருவாக்கு .....!!!
இல்லையேல்
கடன் உன்னை ஊனப்படுத்தி
உலகையே வெறுக்க பண்ணும் .....!!!
/ சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
கோபம் கொள்பவன்
முதலில் உறவுகளை வெறுத்து
பின் தன்னையே வெறுக்கிறான்
ஆதலால்
கோபம் கொள்வதை தவிர்த்து
மனதை வெல்லுங்கள்
பகுத்து உணர்ந்து தெளிந்து
வாழ்வை மகிழ்ந்து செல்லுங்கள்
முதலில் உறவுகளை வெறுத்து
பின் தன்னையே வெறுக்கிறான்
ஆதலால்
கோபம் கொள்வதை தவிர்த்து
மனதை வெல்லுங்கள்
பகுத்து உணர்ந்து தெளிந்து
வாழ்வை மகிழ்ந்து செல்லுங்கள்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
இழந்ததற்காக கவலைப்படவில்லை
இழக்க போவதற்காகவும் கவலைப்படவில்லை
நாளை
ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே
கவலையிலும் தீச்சுவாலையாய்
எரிகிறது ......!!!
இழக்க போவதற்காகவும் கவலைப்படவில்லை
நாளை
ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே
கவலையிலும் தீச்சுவாலையாய்
எரிகிறது ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
சூரியன் உதிக்கும் முன் விடிந்து கொண்டிருக்கும்
காலை பொழுதை அப்பாவுக்கும்
இரவு படுக்கைக்கு போனபின் உறங்கி கொண்டிருக்கும்
இரவு பொழுதை அம்மாவுக்கும் தவிர .......!!!
யாரும் இதுவரை அறிந்திருக்க மாட்டார்கள் .......!!!
காலை பொழுதை அப்பாவுக்கும்
இரவு படுக்கைக்கு போனபின் உறங்கி கொண்டிருக்கும்
இரவு பொழுதை அம்மாவுக்கும் தவிர .......!!!
யாரும் இதுவரை அறிந்திருக்க மாட்டார்கள் .......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
உலகிலேயே கடினமான வேலை
பிள்ளைகளை பிள்ளைகளாய்
வளர்த்து ஆளாக்குவது ......!
பிள்ளைகளை பிள்ளைகளாய்
வளர்த்து ஆளாக்குவது ......!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
சுதந்திரத்தை தான் பாட
உரிமையில்லை
காதலையாவது பாடிவிட்டு
சாவோம்......!!!
உரிமையில்லை
காதலையாவது பாடிவிட்டு
சாவோம்......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
கணவனின் துயரங்கள்
மனைவிக்கு தெரியாது
மனைவிக்கு தெரிந்தாலும் அதை
சொல்லவும் தெரியாது
துணைவியின் வலிதனை
உலகுக்கு சொல்லவும் முடியாது
குடும்ப சுமைகளின் வடுக்களை
மெல்லவும் முடியாது
இரு இதயமாக பூத்த வாழ்க்கை
இரு துருவமாவது தான்
புரியாத வேட்கை ......!!!!
திருமண நாள் போல் நாளும்
வருமா ...,வாழ்க்கை
அந்த நாள் மட்டும் தான்
ஆயுளுக்கும் உள்ள ஆனந்தகளம்
மிச்சமெல்லாம் போர்க்களம்
பூக்குமா .......!!!!
எல்லோர் வாழ்விலும் பூக்காலம்......!!!!
மனைவிக்கு தெரியாது
மனைவிக்கு தெரிந்தாலும் அதை
சொல்லவும் தெரியாது
துணைவியின் வலிதனை
உலகுக்கு சொல்லவும் முடியாது
குடும்ப சுமைகளின் வடுக்களை
மெல்லவும் முடியாது
இரு இதயமாக பூத்த வாழ்க்கை
இரு துருவமாவது தான்
புரியாத வேட்கை ......!!!!
திருமண நாள் போல் நாளும்
வருமா ...,வாழ்க்கை
அந்த நாள் மட்டும் தான்
ஆயுளுக்கும் உள்ள ஆனந்தகளம்
மிச்சமெல்லாம் போர்க்களம்
பூக்குமா .......!!!!
எல்லோர் வாழ்விலும் பூக்காலம்......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
நிம்மதி ..........!!!!
அமைதி ...நிம்மதி
இரண்டும் கிடைத்துவிட்டால்
அதுவே கடவுளின் சந்நிதி
இரண்டும் இல்லையானால்
நாளும்
மனமெனும் இடுகாட்டில்
புதைக்கபடுகிறது
உயிர் வலிந்து ஒழுகும்
கண்ணீர் .......!!!!
வாழ்க்கையில் பிரச்சனைகளை
சந்திப்பது வழக்கம்
பிரச்சனைகளோடு வாழ்க்கையை
சந்திப்பதிலேயே
தொடங்குகிறது .....!
நிம்மதி தேடும்
முதல் வழக்கு .......!!!
வழக்குகளை கூட வென்று விடலாம்
வாழ்க்கையை எப்படி வென்று விடலாம் ....!!!
புரியாமலே நாளும் பொழுதும்
நகர்கிறது .....!!!
புரிந்து விட்டால் அமைதி நிலவுகிறது
எங்கே தொலைத்தோம்
எங்கே தொலைந்தோம் தெரியவில்லை
ஆனால் .....!
வன்முறைகளையும் வடுக்களையும்
எப்படி வளர்த்தோம் புரியவில்லை
சாவை நிறுத்த முடியாது
சாகும் முன் உறவை உணர்வை புரிந்தால்
வாழ்க்கையில் வலி ஏது ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
கலாச்சாரம் ........!!!
காதலை அடைத்து வைத்திருகிறார்கள்
காமத்தை அடக்கி வைத்திருக்கிறார்கள்
வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறார்கள்
வாழும் வழிமுறைகளை முடக்கி வைத்திருக்கிறார்கள்
எப்படி முளைக்கும் புதிய விடியலுக்கான முளை ....!!!
எங்கிருந்து வந்தாலும் விடியாது கலாச்சார வினை ....!!!
பருவம் என்பது கோளாறல்ல
பதிகம் மட்டும் பாடிக்கொண்டிருக்க
பருவம் என்பதே மனிதனுக்கான பாதி வரலாறு
அதை உணர்வால் எழுதாமல்
அடக்கி வைப்பதாலேயே அடிக்கடி அக்கினிகுண்டுகள் வெடித்து
சமுகத்தை சாகடிக்கிறது
வயதுக்கு ஏற்றவாறு கல்வி
கல்விக்கு ஏற்றவாறு பதவி
ஆனால் .....!
மனதுக்கு ஏற்றவாறு எதுவும் இல்லை
எல்லாம் தடை ...எதற்கும் தடை
கேள்விகேட்டால் முரண்பட்ட விடை
மானுடபிறப்பிற்கு இதுவா கொடை.....!!!
வாழ்ந்தவர்கள் கட்டுபடுத்துகிறார்கள்
வாழ்பவர்களை கட்டாயபடுத்துகிறார்கள்
காலாச்சாரத்தை கொலைசாரம் ஆக்குகிறார்கள்
சமுகத்தை நெறிபடுத்தட்டும் உங்கள் நீதிகள்
அதற்காக .....!
வளரும் புதிய சந்ததிகளுக்கு உங்கள் அடக்குமுறைகளை
முன்வைக்காதிர்கள்
கணணி உலகத்தை கைவிட்டு
நாளை காட்டு வாழ்க்கையை தேடசொல்லும்
ஆதலால் ......!!!
உணர்வுகள் வாழ தினமும்
தீ ஊற்றி எரிக்காதிர்கள்
எதிர்காலத்துக்கு நீர் ஊற்றி
வளர்த்து விடுங்கள்
வளரும் தலைமுறையாவது
வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழட்டும் ......!!!!
காதலை அடைத்து வைத்திருகிறார்கள்
காமத்தை அடக்கி வைத்திருக்கிறார்கள்
வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறார்கள்
வாழும் வழிமுறைகளை முடக்கி வைத்திருக்கிறார்கள்
எப்படி முளைக்கும் புதிய விடியலுக்கான முளை ....!!!
எங்கிருந்து வந்தாலும் விடியாது கலாச்சார வினை ....!!!
பருவம் என்பது கோளாறல்ல
பதிகம் மட்டும் பாடிக்கொண்டிருக்க
பருவம் என்பதே மனிதனுக்கான பாதி வரலாறு
அதை உணர்வால் எழுதாமல்
அடக்கி வைப்பதாலேயே அடிக்கடி அக்கினிகுண்டுகள் வெடித்து
சமுகத்தை சாகடிக்கிறது
வயதுக்கு ஏற்றவாறு கல்வி
கல்விக்கு ஏற்றவாறு பதவி
ஆனால் .....!
மனதுக்கு ஏற்றவாறு எதுவும் இல்லை
எல்லாம் தடை ...எதற்கும் தடை
கேள்விகேட்டால் முரண்பட்ட விடை
மானுடபிறப்பிற்கு இதுவா கொடை.....!!!
வாழ்ந்தவர்கள் கட்டுபடுத்துகிறார்கள்
வாழ்பவர்களை கட்டாயபடுத்துகிறார்கள்
காலாச்சாரத்தை கொலைசாரம் ஆக்குகிறார்கள்
சமுகத்தை நெறிபடுத்தட்டும் உங்கள் நீதிகள்
அதற்காக .....!
வளரும் புதிய சந்ததிகளுக்கு உங்கள் அடக்குமுறைகளை
முன்வைக்காதிர்கள்
கணணி உலகத்தை கைவிட்டு
நாளை காட்டு வாழ்க்கையை தேடசொல்லும்
ஆதலால் ......!!!
உணர்வுகள் வாழ தினமும்
தீ ஊற்றி எரிக்காதிர்கள்
எதிர்காலத்துக்கு நீர் ஊற்றி
வளர்த்து விடுங்கள்
வளரும் தலைமுறையாவது
வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழட்டும் ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
காதல் நினைவுகள் போலவே
பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
சிறுவயது நினைவுகள் அழகாய் நனைத்து விட்டு செல்கிறது
ஒரு பட்டாசுக்காய் அடம்பிடித்து அழுதது
அம்மா குளிக்க சொன்னபோது ஓடி ஒழித்தது
கோயிலுக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன்
சினிமாவுக்கு போனது
மாமா ...சித்தப்பா ....பெரியப்பா ....வீடு வரும்போது அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காசு கேட்டு அடம்பிடித்தது
அந்த காசை ஒழித்து வைக்க தெரியாமல் ஒரு நாயகன் போல்
அண்ணன் அக்காவிடம் காட்டி சண்டை பெரிதாக
அப்பா பண்டிகைக்காய் அடிக்காது மன்னிப்பு வழங்கியது
இப்படி எத்தனை சந்தோசங்கள்
அழகழகாய் பூத்தது
பருவமும் பக்குவமும் வர பண்டிகைகள் காதல் வரங்களாய்
மௌனமாய் புன்னகைத்து கைகாட்டி போனது
ஞாபகங்களின் சாவியாய் இன்னும் இதயத்தில் பூட்டியே இருக்கிறது
பள்ளி தோழிகள் வீடு வருவார்கள் எனதெரிந்தால் அம்மாவுடன்
வீட்டை அழகு செய்து
இல்லாத சொடனைஎல்லாம் செய்து வீட்டில் அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையாய் நடித்தது இன்னும் ஞாபகமாய் .....!!!
வந்தவர்களில் நமக்கு பிடித்தமானவர்களுடன் அம்மா பேசும் போது
அதையும் அம்மாவுக்கு சொல்லி
செல்ல அடி வாங்குவது ........!!!
எத்தனை அழகு அத்தனையும் கடந்து போன நிகழ்வு
என்னை போல் உங்கள் தீப நாட்களும் இதயத்திலும் புது உதயத்திலும்
ஒளியேற்றி போய் இருக்கும்
மீசை முளைத்து ஆசை சிறகடித்து இளைஞன் ஆனபின் வந்த தீபநாள்
காதலை விட அழகாய் இருந்து கடந்து போன கனிந்த நாள் .....!!!
நட்புகள் சேர்ந்து யாருக்கும் தெரியாது ஊரின் ஒதுக்குபுறம் போய்
மதுவை தொட்டு பார்த்தது ...!
ஒரு சிகிரெட்டை மூன்று பேரும் பத்திவிட்டு மூன்று மணித்தியாலம்
வாய் மணக்கும் என்று ஒருவரை ஒருவர் ஊதிபார்த்து நல்ல பிள்ளையாட்டம்
வீடு வந்து சாப்பிடாமல் படுத்தது ......!!!
அத்தனையும் பொக்கிஷம்
வாழும் காலத்தில் மறக்க முடியாத அதிசயம்
அதன் பின் வாழ்க்கை தேடிய பயணங்களில் எத்தனையோ பண்டிகைகள்
வந்து போயிருக்கிறது ஆனால் அம்மாஅப்பாவுடன் வாழ்ந்த விழாக்கள் போல் இதுவரை வந்ததில்லை .........!!!
பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
சிறுவயது நினைவுகள் அழகாய் நனைத்து விட்டு செல்கிறது
ஒரு பட்டாசுக்காய் அடம்பிடித்து அழுதது
அம்மா குளிக்க சொன்னபோது ஓடி ஒழித்தது
கோயிலுக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன்
சினிமாவுக்கு போனது
மாமா ...சித்தப்பா ....பெரியப்பா ....வீடு வரும்போது அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காசு கேட்டு அடம்பிடித்தது
அந்த காசை ஒழித்து வைக்க தெரியாமல் ஒரு நாயகன் போல்
அண்ணன் அக்காவிடம் காட்டி சண்டை பெரிதாக
அப்பா பண்டிகைக்காய் அடிக்காது மன்னிப்பு வழங்கியது
இப்படி எத்தனை சந்தோசங்கள்
அழகழகாய் பூத்தது
பருவமும் பக்குவமும் வர பண்டிகைகள் காதல் வரங்களாய்
மௌனமாய் புன்னகைத்து கைகாட்டி போனது
ஞாபகங்களின் சாவியாய் இன்னும் இதயத்தில் பூட்டியே இருக்கிறது
பள்ளி தோழிகள் வீடு வருவார்கள் எனதெரிந்தால் அம்மாவுடன்
வீட்டை அழகு செய்து
இல்லாத சொடனைஎல்லாம் செய்து வீட்டில் அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையாய் நடித்தது இன்னும் ஞாபகமாய் .....!!!
வந்தவர்களில் நமக்கு பிடித்தமானவர்களுடன் அம்மா பேசும் போது
அதையும் அம்மாவுக்கு சொல்லி
செல்ல அடி வாங்குவது ........!!!
எத்தனை அழகு அத்தனையும் கடந்து போன நிகழ்வு
என்னை போல் உங்கள் தீப நாட்களும் இதயத்திலும் புது உதயத்திலும்
ஒளியேற்றி போய் இருக்கும்
மீசை முளைத்து ஆசை சிறகடித்து இளைஞன் ஆனபின் வந்த தீபநாள்
காதலை விட அழகாய் இருந்து கடந்து போன கனிந்த நாள் .....!!!
நட்புகள் சேர்ந்து யாருக்கும் தெரியாது ஊரின் ஒதுக்குபுறம் போய்
மதுவை தொட்டு பார்த்தது ...!
ஒரு சிகிரெட்டை மூன்று பேரும் பத்திவிட்டு மூன்று மணித்தியாலம்
வாய் மணக்கும் என்று ஒருவரை ஒருவர் ஊதிபார்த்து நல்ல பிள்ளையாட்டம்
வீடு வந்து சாப்பிடாமல் படுத்தது ......!!!
அத்தனையும் பொக்கிஷம்
வாழும் காலத்தில் மறக்க முடியாத அதிசயம்
அதன் பின் வாழ்க்கை தேடிய பயணங்களில் எத்தனையோ பண்டிகைகள்
வந்து போயிருக்கிறது ஆனால் அம்மாஅப்பாவுடன் வாழ்ந்த விழாக்கள் போல் இதுவரை வந்ததில்லை .........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
உடன்பிறப்பு.......!!!
உலகில் தாயின் வரங்களில்
தவமாய் கிடைப்பது சகோதிரங்கள்
உண்மையில் உயிரோடும் உதிரங்கள் .....!
அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற
சொல்லுக்குள்ளேயே
வாழ்வின் உலகம் இருந்தது அன்று
வளரும் வரை அணைத்து காத்து
வைத்திருந்தது தாய்தந்தை அன்பு ....!!!
பருவங்களும் வாழ்வின் தேடல்களும்
திசை தேட
அன்பின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது இயல்போ ...!!!
காரணம் இல்லாமல் மூழ்கி போவது
சமுகமுறையோ ....?
ஒரு குடில் வீட்டுக்குள் படித்து உறங்கி
பறித்து தின்று
அண்ணா சொல் கேட்டு
அக்காவின் கதை கேட்டு
தம்பி தங்கைகளுடன் தாலாட்டு பாடி மகிழ்ந்த அன்புகள்
வளர்ந்து வாழ்க்கையாகும் போது
எங்கே ஓடி ஒழிந்து கொள்கிறது ....!!!
அப்பாவுக்கு அடுத்து
அண்ணன்மாருக்கு பயந்த உலகம்
அண்ணனையே அன்னையாய் சொல் கேட்டு
வளர்ந்த சகோதரர்கள் எதற்க்காக எதிரிகளாக கோபங்களை மட்டும் குறிவைக்கிறார்கள் .....!!!
அக்கா என்றாலே அம்மாவாய் இருந்து
அவள் நாம் வாழ
கரைந்த பொழுதுகளை
எதற்க்காக கண்டுகொள்ளாமல்
கடந்துபோகிறார்கள் .....!!!
குடும்பம் என்பது கோயில்
எப்படி வேண்டுமானாலும் சகோதரர்கள் பிரிந்து போகலாம்
ஆனால்
உண்மையான அன்பும்
ஆயுளுக்கான அமைதியும்
அன்னை தந்தை உருவாக்கிவிட்ட
"உடனபிறப்பு கோயிலிலே "மட்டும் தான் கிடைக்கும்
உலகில் கோடியிலும் கோபத்திலும்
ஏழ்மையிலும் வடுக்களோடும்
வாழ்ந்தாலும்
ஒற்றுமையாய் வாழ்ந்தால் மட்டுமே
வாழ்க்கை சிறக்கும் !!!
உடன்பிறந்த உறவுகள் என்றும்
எதிலும் பிரியவே கூடாது
பிரிந்தால்
அன்னை தந்தை கருவாக்கி உருவாக்கி விட்ட
இந்த வாழ்க்கையில் உயிர் ஏது ......!!!
உலகில் தாயின் வரங்களில்
தவமாய் கிடைப்பது சகோதிரங்கள்
உண்மையில் உயிரோடும் உதிரங்கள் .....!
அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற
சொல்லுக்குள்ளேயே
வாழ்வின் உலகம் இருந்தது அன்று
வளரும் வரை அணைத்து காத்து
வைத்திருந்தது தாய்தந்தை அன்பு ....!!!
பருவங்களும் வாழ்வின் தேடல்களும்
திசை தேட
அன்பின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது இயல்போ ...!!!
காரணம் இல்லாமல் மூழ்கி போவது
சமுகமுறையோ ....?
ஒரு குடில் வீட்டுக்குள் படித்து உறங்கி
பறித்து தின்று
அண்ணா சொல் கேட்டு
அக்காவின் கதை கேட்டு
தம்பி தங்கைகளுடன் தாலாட்டு பாடி மகிழ்ந்த அன்புகள்
வளர்ந்து வாழ்க்கையாகும் போது
எங்கே ஓடி ஒழிந்து கொள்கிறது ....!!!
அப்பாவுக்கு அடுத்து
அண்ணன்மாருக்கு பயந்த உலகம்
அண்ணனையே அன்னையாய் சொல் கேட்டு
வளர்ந்த சகோதரர்கள் எதற்க்காக எதிரிகளாக கோபங்களை மட்டும் குறிவைக்கிறார்கள் .....!!!
அக்கா என்றாலே அம்மாவாய் இருந்து
அவள் நாம் வாழ
கரைந்த பொழுதுகளை
எதற்க்காக கண்டுகொள்ளாமல்
கடந்துபோகிறார்கள் .....!!!
குடும்பம் என்பது கோயில்
எப்படி வேண்டுமானாலும் சகோதரர்கள் பிரிந்து போகலாம்
ஆனால்
உண்மையான அன்பும்
ஆயுளுக்கான அமைதியும்
அன்னை தந்தை உருவாக்கிவிட்ட
"உடனபிறப்பு கோயிலிலே "மட்டும் தான் கிடைக்கும்
உலகில் கோடியிலும் கோபத்திலும்
ஏழ்மையிலும் வடுக்களோடும்
வாழ்ந்தாலும்
ஒற்றுமையாய் வாழ்ந்தால் மட்டுமே
வாழ்க்கை சிறக்கும் !!!
உடன்பிறந்த உறவுகள் என்றும்
எதிலும் பிரியவே கூடாது
பிரிந்தால்
அன்னை தந்தை கருவாக்கி உருவாக்கி விட்ட
இந்த வாழ்க்கையில் உயிர் ஏது ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
ஒவ்வொரு ஈழத்தமிழனும்
அகதியாக மட்டும் அல்ல .......!!!
அகம் முழுதும் தீயோடுதான் இருக்கிறான்
தீயே .....!
இவனை தீண்ட அஞ்சும் .......!!!
இருந்தும் இன்னொரு துரோகத்தை தாங்க முடியாததால் தான்
காற்றில் பறக்கும் பஞ்சாய் போனான் .......!!!!
பஞ்சம் பிழைக்க அல்ல ........!!!!எஞ்சிய
உயிரை மட்டும் பிழைக்க புறப்பட்ட
பரதேசியானான் ...........!!!!!
ஆனால்
அகதியாய் மட்டும் அல்ல
!!!......அகம்தீயாய் .......!!!!தான் வாழ்கிறான் .........!!!!
அகதியாக மட்டும் அல்ல .......!!!
அகம் முழுதும் தீயோடுதான் இருக்கிறான்
தீயே .....!
இவனை தீண்ட அஞ்சும் .......!!!
இருந்தும் இன்னொரு துரோகத்தை தாங்க முடியாததால் தான்
காற்றில் பறக்கும் பஞ்சாய் போனான் .......!!!!
பஞ்சம் பிழைக்க அல்ல ........!!!!எஞ்சிய
உயிரை மட்டும் பிழைக்க புறப்பட்ட
பரதேசியானான் ...........!!!!!
ஆனால்
அகதியாய் மட்டும் அல்ல
!!!......அகம்தீயாய் .......!!!!தான் வாழ்கிறான் .........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|