தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரு‌த்துவ‌ம், பொ‌‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

View previous topic View next topic Go down

மரு‌த்துவ‌ம், பொ‌‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி Empty மரு‌த்துவ‌ம், பொ‌‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

Post by tamilselvi Mon May 31, 2010 9:18 am

மரு‌த்துவ‌ம், பொ‌றி‌யிய‌ல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

தமிழகத்தின் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க மே 17ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 25,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று தினங்களில் மொத்தம் 9,350 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துள்ளதாக அதன் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவி‌த்தா‌ர்.

கடந்த ஆண்டு மொத்தம் 14,321 மாணவ-மாணவியர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 15-லிருந்து 17-ஆக அதிகரித்து, எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,653-ஆக உயர்ந்துள்ளது. எனவே, விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பம் பெற்றுள்ள மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பலாம்.

சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போடலாம்.

மருத்துவ மாணவர் சேர்க்கைப் பணிக்காக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகம் இ‌ன்று‌ம் செயல்படும்; எனவே இந்த அலுவலகத்துக்கு நேரடியாக வந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெட்டியில் போடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தபால் தாமதத்தைத் தவிர்க்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் நாளை மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு கிடைத்து விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் (www.tnhe​alth.org)​ வசதி செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பதிவு எண், பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆண்டை இணையதளத்தில் பூர்த்தி செய்யும் நிலையில், விண்ணப்பம் கிடைத்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடியும்; விண்ணப்பம் கிடைத்ததற்கான ஏ.ஆர். பதிவு எண்ணையும் விண்ணப்பதாரர் உடனடியாக குறித்து வைத்துக் கொள்ள முடியும்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வரும் ஜூன் 7ஆம் தேதி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 11ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கல‌ந்தா‌ய்வு ஜூன் 21ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,72,445 பொ‌றி‌யிய‌ல் இடங்களில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். பொ‌றி‌‌யிய‌ல் படிப்பில் சேருவதற்கும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பொ‌றி‌‌யிய‌ல் படிப்பில் சேருவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை இணையதளம் www.ann​auniv.edu மூலம் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நே‌ற்று மாலை வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று பொ‌றி‌‌யிய‌ல் மாணவர் சேர்க்கை செயலர் ரேமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

பொ‌றி‌யிய‌ல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 18ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 28ஆம் தேதி கல‌ந்தா‌ய்வு தொடங்குகிறது.
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum