Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உணர்வுகளை காயப்படுத்துதல் என்றால் என்ன?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
உணர்வுகளை காயப்படுத்துதல் என்றால் என்ன?
அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச் சொல்லியழு
தோள்விலங்கு போட்டுறுவோம்
வெண்ணெயில விலங்கு செய்து
வெயிலிலே போட்டுறுவோம்
மண்ணால விலங்கு செய்து
தண்ணியில போட்டுறுவோம்
கொப்புக்கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
விளக்கிலிட்ட வெண்ணெயபோல்
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந் தீர்த்தாயே!
இப்படித்தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று தாலாட்டுப் பாடலில் தாய் கூறுகிறாள். தூக்கம் வராமல் அழும் குழந்தையை பார்த்து, ‘யாராவது உன்னை அடித்தார்களா? இப்படி அழுகிறாயே... அடித்தவர்களை சொல்லி அழு’ என்றும், அப்படி அடித்தவர்களை கூட எப்படி தண்டிப்பது என்றும் எடுத்துக் கூறுகிறாள், வெண்ணெயில் விலங்கிட்டு வெயிலிலும் மண்ணால் விலங்கிட்டு தண்ணீரிலும் போடலாம் என்று மென்மையாகக் கண்டிக்கிறாள். குழந்தையை அடித்தவர்களைக் கூட இப்படி மென்மையாக தண்டிக்கச் சொல்லும் தாய் வாழ்ந்த நாடு நம் நாடு.
இன்று? குழந்தைகள் வன்கொடுமை என்பது உடல் ரீதியான கொடுமைகள், பாலியல் ரீதியான கொடுமைகள் மட்டுமல்ல... உரிமைகள் மறுக்கப்படுதலும் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துதலும் கூட வன் கொடுமையே. உணர்வுகளை காயப்படுத்துதல் என்றால் என்ன? ஒரு குழந்தையை அதனுடைய குழந்தைப் பருவத்துக்கே உரிய அனைத்து உரிமைகளுடன் வளர அனுமதிப்பதும் எதன் பொருட்டும் அதன் குழந்தைமையை கெடுக்காமல் இருப்பதுமே.
சமீபத்திய செய்திகளில் பார்த்திருக்கலாம்... தோழியுடன் பேசிக்கொண்டு வந்ததற்காக தாய் திட்டிய தால் தற்கொலை செய்து கொண்ட பெண் குழந்தை பற்றி. அங்கு முதலில் இறந்தது அந்த குழந்தையின் உணர்வுகள்தான்.பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்குவது ஆரோக்கியமான நிகழ்வு. அதுவே நூற்றுக்கு 98 மதிப்பெண் எடுத்த குழந்தையை, மீதி 2 மதிப்பெண்ணுக்காக, வேறு ஒரு குழந்தையுடன் ஒப்பிடுவது தவறு. காலை விடியும் முன் ட்யூசன் என்ற பெயரில் ஆரம்பித்து, அலுத்துச் சோர்ந்து படுக்கையில் விழும் வரை, சிறப்பு வகுப்புகளில் திணிப்பதும் தவறு. சம்மர் கேம்ப் என்ற பெயரில் நடத்தப்படும் வகுப்புகளில் வருடம் முழுதும் கற்றதை மீண்டும் கற்க வற்புறுத்த வேண்டுமா?
நம் குழந்தைப் பருவத்தில் எந்த வகுப்புக்குச் சென்றோம்? கோடை விடுமுறையில் அடித்த வெயில் அனைத்தும் நம் தலையில்தானே விழுந்தது? நாம் குழந்தையாக இருந்த போது இருந்த சுதந்திரமும் சந்தோஷமும் இப்போதைய குழந்தைகளிடம் இல்லவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.குழந்தைப் பருவம் என்பது ஒரு மலர் மெல்ல மெல்ல மலர்வதற்கு ஒப்பானது. அது வேரிலிருந்து வெளிவந்து, இலைகளுக்குள் பாதுகாப்பாக இருந்து, மொட்டாக உருவாகி, மொட்டுகளும் பெரிதாகி, ஒவ்வொரு இதழாக விரிந்து முழு மலராக மலர எத்தனை காலம் பிடிக்குமோ... அதுவே அந்த மலருக்கு நல்லது.
இன்று நட்ட ரோஜா இன்றே மலர்ந்தால் அதற்கு என்ன மதிப்பு? குழந்தைகளும் அதுபோலவே... அவர்களின் அறியாமையும் குழந்தைத்தனமுமே அவர்களின் அழகு... இயல்பு... நல்லதும் கூட. பெரியவர் ஆகும்போது அவர்களுக்கு என்றே ஏகப்பட்ட கடமைகளும் கட்டாயங்களும் இருக்கத்தானே போகிறது? வயதான பிறகு அவர்கள் நினைத்துப் பார்க்க குழந்தைப் பருவம் என்பதே இல்லாமல் போகலாகுமோ?
சில நிகழ்வுகளின் வெற்றியோ, தோல்வியோ - குழந்தைகளின் உணர்வு களோடு எப்படி விளையாடுகிறது? மனரீதியாக தோல்வியை தனிமையில் சந்திக்கும் குழந்தைகளே, அதிலிருந்து வெளிவர கடுமையாக போராட வேண்டியிருக்கும். பெற்றோரின் பங்கு சரிசமமாக இருந்தால் மட்டுமே அதுவும் சாத்தியம். பெற்றோரால் ஒரு நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட குழந்தை அதில் தோல்வி அடைந்தால், அந்த பெற்றோரே ஏதேனும் ஒரு நேரத்தில் அதனை சொல்லிக் காட்ட நேரிடும். நண்பர்களின் கிண்டல், உறவினர்களின் கேலி, இன்னும் சமுதாயத்தின் பார்வை என்று அவர்களே மறக்க நினைத்தாலும், ஒவ்வொரு நிமிடமும் அது நினைவுபடுத்தப்படும். இது தொடர்கையில் வாழ்வில் ஒரு சலிப்பு ஏற்பட்டு, போராடும் குணமும் மறையும்.
அத்துடன் ‘ஸ்போர்ட்டிவ்னெஸ்’ அல்லது ‘இதுவும் கடந்து போகும்’ அல்லது ‘தோல்வியும் ஒரு பாடமே’ என்பதை அவர்கள் உணர்வுபூர்வமாக ஒப்புக்கொள்ள மறுப்பார்கள். எதிலும் பயம், பிடிப்பின்மை, கோபம், எரிச்சல் தனிமையை விரும்புவது என்று தொடங்கி, பிற்காலத்தில் சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளாக மாறவும் கூடும். வெற்றி-தோல்வி குழப்பத்தில் மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உண்டு.
வெற்றி பெற்றவர்கள் நிலையோ அதற்கும் மேல் சிக்கலானது. இந்த வயதில் இத்தனை புகழை அவர்களால் கையாளத் தெரியாததால் நிறைய தடுமாற்றங்கள் வரும். திடீரென ஒரு நாளில் வரும் இந்த வெளிச்சம் நிலையானதல்ல, என்றாவது இவர்களின் புகழையும் மறக்க வைக்கும் வேறு ஒருவர் வரும்போது, ‘இவர்கள் முன்னாள் சாதனையாளர்கள்’ என்று அடையாளம் காணப்படும்போது, சாதாரண வாழ்க்கைக்குப் போக நிறைய கஷ்டப்படுவார்கள். மன ரீதியாக புகழை விரும்பிப் போற்றிய பின், அவர்களின் ஆளுமை அவர்கள் அறியாமல் மாறும். தான் என்ற நிலையில் நெடுங்காலம் இருக்க முடியாமல், சாதாரண நிலையையும் ஏற்க முடியாமல் தடுமாறும் நிலையில் இருப்பார்கள். எதுவும் அந்தந்தப் பருவத்தில் நிகழ்தலே இயற்கை... இயல்பு... அழகு. குழந்தைத்தன்மையை கெடுத்து அவர்களை பெரியவர்கள் ஆக்கி நாம் சிறியவராக வேண்டாமே!
- தினகரன்
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச் சொல்லியழு
தோள்விலங்கு போட்டுறுவோம்
வெண்ணெயில விலங்கு செய்து
வெயிலிலே போட்டுறுவோம்
மண்ணால விலங்கு செய்து
தண்ணியில போட்டுறுவோம்
கொப்புக்கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
விளக்கிலிட்ட வெண்ணெயபோல்
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந் தீர்த்தாயே!
இப்படித்தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று தாலாட்டுப் பாடலில் தாய் கூறுகிறாள். தூக்கம் வராமல் அழும் குழந்தையை பார்த்து, ‘யாராவது உன்னை அடித்தார்களா? இப்படி அழுகிறாயே... அடித்தவர்களை சொல்லி அழு’ என்றும், அப்படி அடித்தவர்களை கூட எப்படி தண்டிப்பது என்றும் எடுத்துக் கூறுகிறாள், வெண்ணெயில் விலங்கிட்டு வெயிலிலும் மண்ணால் விலங்கிட்டு தண்ணீரிலும் போடலாம் என்று மென்மையாகக் கண்டிக்கிறாள். குழந்தையை அடித்தவர்களைக் கூட இப்படி மென்மையாக தண்டிக்கச் சொல்லும் தாய் வாழ்ந்த நாடு நம் நாடு.
இன்று? குழந்தைகள் வன்கொடுமை என்பது உடல் ரீதியான கொடுமைகள், பாலியல் ரீதியான கொடுமைகள் மட்டுமல்ல... உரிமைகள் மறுக்கப்படுதலும் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துதலும் கூட வன் கொடுமையே. உணர்வுகளை காயப்படுத்துதல் என்றால் என்ன? ஒரு குழந்தையை அதனுடைய குழந்தைப் பருவத்துக்கே உரிய அனைத்து உரிமைகளுடன் வளர அனுமதிப்பதும் எதன் பொருட்டும் அதன் குழந்தைமையை கெடுக்காமல் இருப்பதுமே.
சமீபத்திய செய்திகளில் பார்த்திருக்கலாம்... தோழியுடன் பேசிக்கொண்டு வந்ததற்காக தாய் திட்டிய தால் தற்கொலை செய்து கொண்ட பெண் குழந்தை பற்றி. அங்கு முதலில் இறந்தது அந்த குழந்தையின் உணர்வுகள்தான்.பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்குவது ஆரோக்கியமான நிகழ்வு. அதுவே நூற்றுக்கு 98 மதிப்பெண் எடுத்த குழந்தையை, மீதி 2 மதிப்பெண்ணுக்காக, வேறு ஒரு குழந்தையுடன் ஒப்பிடுவது தவறு. காலை விடியும் முன் ட்யூசன் என்ற பெயரில் ஆரம்பித்து, அலுத்துச் சோர்ந்து படுக்கையில் விழும் வரை, சிறப்பு வகுப்புகளில் திணிப்பதும் தவறு. சம்மர் கேம்ப் என்ற பெயரில் நடத்தப்படும் வகுப்புகளில் வருடம் முழுதும் கற்றதை மீண்டும் கற்க வற்புறுத்த வேண்டுமா?
நம் குழந்தைப் பருவத்தில் எந்த வகுப்புக்குச் சென்றோம்? கோடை விடுமுறையில் அடித்த வெயில் அனைத்தும் நம் தலையில்தானே விழுந்தது? நாம் குழந்தையாக இருந்த போது இருந்த சுதந்திரமும் சந்தோஷமும் இப்போதைய குழந்தைகளிடம் இல்லவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.குழந்தைப் பருவம் என்பது ஒரு மலர் மெல்ல மெல்ல மலர்வதற்கு ஒப்பானது. அது வேரிலிருந்து வெளிவந்து, இலைகளுக்குள் பாதுகாப்பாக இருந்து, மொட்டாக உருவாகி, மொட்டுகளும் பெரிதாகி, ஒவ்வொரு இதழாக விரிந்து முழு மலராக மலர எத்தனை காலம் பிடிக்குமோ... அதுவே அந்த மலருக்கு நல்லது.
இன்று நட்ட ரோஜா இன்றே மலர்ந்தால் அதற்கு என்ன மதிப்பு? குழந்தைகளும் அதுபோலவே... அவர்களின் அறியாமையும் குழந்தைத்தனமுமே அவர்களின் அழகு... இயல்பு... நல்லதும் கூட. பெரியவர் ஆகும்போது அவர்களுக்கு என்றே ஏகப்பட்ட கடமைகளும் கட்டாயங்களும் இருக்கத்தானே போகிறது? வயதான பிறகு அவர்கள் நினைத்துப் பார்க்க குழந்தைப் பருவம் என்பதே இல்லாமல் போகலாகுமோ?
சில நிகழ்வுகளின் வெற்றியோ, தோல்வியோ - குழந்தைகளின் உணர்வு களோடு எப்படி விளையாடுகிறது? மனரீதியாக தோல்வியை தனிமையில் சந்திக்கும் குழந்தைகளே, அதிலிருந்து வெளிவர கடுமையாக போராட வேண்டியிருக்கும். பெற்றோரின் பங்கு சரிசமமாக இருந்தால் மட்டுமே அதுவும் சாத்தியம். பெற்றோரால் ஒரு நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட குழந்தை அதில் தோல்வி அடைந்தால், அந்த பெற்றோரே ஏதேனும் ஒரு நேரத்தில் அதனை சொல்லிக் காட்ட நேரிடும். நண்பர்களின் கிண்டல், உறவினர்களின் கேலி, இன்னும் சமுதாயத்தின் பார்வை என்று அவர்களே மறக்க நினைத்தாலும், ஒவ்வொரு நிமிடமும் அது நினைவுபடுத்தப்படும். இது தொடர்கையில் வாழ்வில் ஒரு சலிப்பு ஏற்பட்டு, போராடும் குணமும் மறையும்.
அத்துடன் ‘ஸ்போர்ட்டிவ்னெஸ்’ அல்லது ‘இதுவும் கடந்து போகும்’ அல்லது ‘தோல்வியும் ஒரு பாடமே’ என்பதை அவர்கள் உணர்வுபூர்வமாக ஒப்புக்கொள்ள மறுப்பார்கள். எதிலும் பயம், பிடிப்பின்மை, கோபம், எரிச்சல் தனிமையை விரும்புவது என்று தொடங்கி, பிற்காலத்தில் சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளாக மாறவும் கூடும். வெற்றி-தோல்வி குழப்பத்தில் மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உண்டு.
வெற்றி பெற்றவர்கள் நிலையோ அதற்கும் மேல் சிக்கலானது. இந்த வயதில் இத்தனை புகழை அவர்களால் கையாளத் தெரியாததால் நிறைய தடுமாற்றங்கள் வரும். திடீரென ஒரு நாளில் வரும் இந்த வெளிச்சம் நிலையானதல்ல, என்றாவது இவர்களின் புகழையும் மறக்க வைக்கும் வேறு ஒருவர் வரும்போது, ‘இவர்கள் முன்னாள் சாதனையாளர்கள்’ என்று அடையாளம் காணப்படும்போது, சாதாரண வாழ்க்கைக்குப் போக நிறைய கஷ்டப்படுவார்கள். மன ரீதியாக புகழை விரும்பிப் போற்றிய பின், அவர்களின் ஆளுமை அவர்கள் அறியாமல் மாறும். தான் என்ற நிலையில் நெடுங்காலம் இருக்க முடியாமல், சாதாரண நிலையையும் ஏற்க முடியாமல் தடுமாறும் நிலையில் இருப்பார்கள். எதுவும் அந்தந்தப் பருவத்தில் நிகழ்தலே இயற்கை... இயல்பு... அழகு. குழந்தைத்தன்மையை கெடுத்து அவர்களை பெரியவர்கள் ஆக்கி நாம் சிறியவராக வேண்டாமே!
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உணர்வுகளை காயப்படுத்துதல் என்றால் என்ன?
விழிப்புணர்வு தரும் பகிர்வு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|