தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

View previous topic View next topic Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by பித்தன் Sat May 04, 2013 5:44 pm

மிகவும் பசியோடு இருக்கும் சமயம், கடைகள் ஏதுமில்லை, தெரிந்தவர் கூட யாருமில்லை. பசியோ குடலை நோக்கி உயிரையே இழுக்கும் வலி. இந்த நிலையில் யாரேனும் தவித்தது உண்டா ? அதுவும் அதிகாலை 3.15 மணிப்போல். உலகில் உள்ள எல்லா ஜீவ ராசிகள் அனைத்திற்கும் உணவு அவசியம் என்பது அறிந்ததே.

விடிந்தால் மே 2 நாள், பல்கலைகழத்தில் தேர்வுக்காக அவசரமாக பயணம் செய்துகொண்டு இருந்தான் பித்தன். விழுப்புரம் நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் பொழுதில் தொழுதூர் அருகே சொல்லி விட்டனர் விழுப்புரம் அருகே பதட்டமான நிலை என்று.
ஒரு சிறு குழந்தை வைத்துக்கொண்டு ஒரு நடுத்தர வயதுப்பெண், குழந்தையின் கழுத்தில் ஒரு மருத்துவகாரணத்திற்காக மிக சிறிய பெல்ட் அணிந்து இருந்தது . உயர் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி செல்வதாக சொன்னார் மேலும் கணவர் பணத்தை எடுத்துக்கொண்டு பின்னல் சிறுது நேரம் கழிந்த பின் வருவார் என்று தனியாக வருவதற்கான காரணம் சொன்னார் .
ஆம் அந்த குழந்தைதான் விழுப்புரத்தில் பசிக்காக கதறி அழுது கொண்டு இருந்தது. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை (சில ஜாதிய பிரச்சனைக்காக கடைகள் மூடப்பட்டு இருந்தது ).சிறு குழந்தை பாலுக்காக அழுது கொண்டு இருந்தது. அதிகாலை 3.15 முதல் அழுதுகொண்டே இருந்தது.
பித்தன் கூட அந்த சகோதரியிடம் கேட்டான் என்னிடம் சில பிஸ்கட் இருப்பதாகவும், வேண்டுமென்றால் குழந்தைக்கு கொடுங்கள் என சொன்ன போது, அந்த குழந்தை மிகவும் சிறிய குழந்தை என்றும் பால் தவிர எதுவும் அருந்தாது எனவும் பதில் சொன்னார்.
இதற்கு முன் சென்ற பேருந்தில் கல் வீசப்பட்டதால், ஓட்டுனர் பேருந்து 6 மணிக்கு மேல் மட்டுமே பாண்டிச்சேரி செல்லும் என கூறி விழுப்புரத்திலேயே நிறுத்தி விட்டார். இந்த தேசம் சாமானிய மக்களின் பாதுகாப்பு கருதாத தேசம்.

ஆனால் அந்த குழந்தை மிக சரியாக அரை மணி நேரத்துக்கு மேல் அழுது கொண்டே இருந்தது. எல்லோரும் வருந்த முடிந்தது ஆனால் பசித்தழும் குழந்தைக்கு என்ன செய்வது. கையில் இருந்த பால் 12 மணிப்போல் குழந்தைக்கு கொடுத்து விட்டதால் காலி பாட்டில் மட்டுமே இருந்தது. அதுவும் மிக சிறிய புட்டி. விழுப்புரத்தில் வாங்கி கொள்ளலாம் என வந்து விட்டதாக சொல்லி கண்களில் கண்ணீர் வர தன் தவறை நினைத்து அவள் அழுது விட்டாள்.

அருகில் இருந்த ஒரு பெண்மணி சிறிது தண்ணீர் கொடுக்க சொன்னார், சிறிது குடித்து விட்டு மீண்டும் அழ துவங்கியது. சிலரின் வழிகாட்டுதலில் எங்கேயோ ஒரு டீ கடை இருப்பதாகவும் அங்கே செல்லுங்கள் என வழி காட்டினார்கள். குழந்தையை தூக்கி கொண்டு நடக்க துவங்கினாள் .

அவள் சென்ற பிறகும் அந்த குழந்தையின் அழுகை மட்டும் செவி விட்டு அகலாது இருக்கிறது. ஒரு வேளை அந்த குழந்தைக்கு பால் கிடைத்து இருக்குமா?

மனதுக்குள் தோன்றுகிறது ஒரு மனிதம் மரித்து போன தேசத்தில் பிறந்து விட்டேனோ?


நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட வாழ்வினை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சி சாகிறோம் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!
வஞ்சக பேய்கள் உண்டு இங்கு.
வழியற்ற பேடிகள் நாங்கள்.

பசித்தாலும் குழந்தைக்கு பால் கூட தர இயலவில்லை எனில் வாழ்வு எவ்வளவு கீழ்த்தரமானது என மனம் பித்தனை பாடாய் படுத்துகிறது.

அந்த குழந்தையின் அழுகைக்கு இந்த மானுடத்தின் ஒரு ஆள் என்ற முறையில் பித்தனுக்கும் பொறுப்பு உள்ளதால்,
இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

பல்கலைகழகம் வந்த போதும் மனம் கேட்கிறது அந்த குழந்தைக்கு பால் கிடைத்து இருக்குமா? உங்களுக்கு கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை.......
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by ஸ்ரீராம் Sat May 04, 2013 8:14 pm

எனக்கும் கேக்கிறது பித்தன்... மனசு வலிக்கிறது... நாட்டில் மனிதாபிமானம் மலிந்துவிட்டது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 04, 2013 9:52 pm

ஓட்டுனர் பேருந்து 6 மணிக்கு மேல் மட்டுமே பாண்டிச்சேரி செல்லும் என கூறி விழுப்புரத்திலேயே நிறுத்தி விட்டார். இந்த தேசம் சாமானிய மக்களின் பாதுகாப்பு கருதாத தேசம்.
இன்றைய அரசியல்வாதிகளுக்கான செல்வாக்கையும் சாதி மத இனத்திற்கான ஓட்டுக்காக இனி இப்படித்தான் நடக்கும்

பசித்தாலும் குழந்தைக்கு பால் கூட தர இயலவில்லை எனில் வாழ்வு எவ்வளவு கீழ்த்தரமானது என மனம் பித்தனை பாடாய் படுத்துகிறது.
ஆமாம் கேவலமான உலகம் தான் இது

இந்த மானுடத்தின் ஒரு ஆள் என்ற முறையில் பித்தனுக்கும் பொறுப்பு உள்ளதால்,
இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

இறைவனிடம் வேண்டுவதினாலோ மன்னிப்பு கேட்பதினாலோ ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்பது என் கருத்து

இவ்வாறான பிரச்சினைகள் தீர... பேருந்தையோ பொது சொத்தையோ சேதப்படுத்துபவர்களைக் கண்டு பயப்படாமல் அங்கு இருக்கும் கூட்டம் அவர்களை பின்னி எடுத்து கை கால்களை உடைத்தால் இனி எவனும் பிரச்சினைக்குன்னு வர மாட்டான். அல்லது எந்தக் கட்சியாவது இப்படி நடந்துகொண்டால் கண்டதும் சுடவும் பொதுமக்களே அடித்துக் கொள்ளவும் சட்டம் கொண்டுவர வேண்டும்... இல்லையேல் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள்தான் சாக வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by முரளிராஜா Sun May 05, 2013 9:05 am

உருவத்தில் மனிதனாகவும் உள்ளத்தில் மிருகமாகவும் வாழும் உயிர்கள் இருக்கும் வரை இந்த அவல நிலை தொடரும் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by மகா பிரபு Sun May 05, 2013 9:39 am

எத்தனை குழந்தைகள் எங்கெல்லாம் அழுது இருக்குமோ? மனம் ரொம்ப வலிக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by பித்தன் Sun May 05, 2013 8:07 pm

இந்த மானுடத்தின் ஒரு ஆள் என்ற முறையில் பித்தனுக்கும் பொறுப்பு உள்ளதால்,
இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

இறைவனிடம் வேண்டுவதினாலோ மன்னிப்பு கேட்பதினாலோ ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்பது என் கருத்து"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இதை தவிர இந்த தேசத்தில் ஒரு சாதரணன் வேறு என்ன செய்துவிட முடியும்.

பாரதி பிஜித்தீவுகளில் மக்கள் துன்பப்பட்ட போது ஏதும் செய்ய இயலாது மகா காளியிடம் அழுது புலம்பினானே!
ஆம் ,
அவனுக்கும் தெரிந்திருக்கிறது ஒரு நிலைக்கு மேல் அதை தவிர வேறு வழி இல்லை என்று.
இந்த பிரகிருதி அப்படித்தான்,
ரமணரிடம் ஹிட்லரின் அட்டூழியங்களை பற்றி கேட்டதற்கு,
"இது எதற்கோ" என்று பதில் சொன்னாரே!

ஒரு நிலையில் அனைவருக்கும் ஒரே உணர்வே... என்பதை வெளிப்படுத்தவும்,
இந்த மானுடத்தின் குற்றத்தை, அவர்கள் செய்யும் தவறுகளை, மானுடத்தின் ஒரு ஆளாக ஏற்றுக்கொள்ளவுமே பித்தன் மனம் விரும்பியது.
அதனால் தான் இந்த மன்னிப்பு.

பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by ஸ்ரீராம் Sun May 05, 2013 8:14 pm

உணமைதான் நண்பரே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 05, 2013 8:33 pm

கட்சிகளின் ஓட்டுக்காக அன்பும் கருணையும் எளிமையும் சேவையும் கைவிடப்பட்டுவிட்டது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 05, 2013 10:12 pm

கட்சிகளின் ஓட்டுக்காக அன்பும் கருணையும் எளிமையும் சேவையும் கைவிடப்பட்டுவிட்டது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -7 - கேட்கிறதா அந்த குழந்தையின் அழுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum