Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
அழகான கன்னத்தில் குழி யுடன், எச்சில் ஒழுக சிரிக்கும் சிரிப்பும், ஆடைகள் சரியாக அணியாமல் , சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உற்சாக சிரிப்போடு இருக்கும் குழந்தைகளை யாராலும் தவிர்க்க முடியாது. அதுவும் சில குழந்தைகளின் சிரிப்பு நம்முள் ஓர் உற்சாக குதுகலம் ஏற்பட செய்யும்.
குழந்தைகளின் கதை உலகம் விசித்திரமானது. சிறு வயதில் சிறுவர் மலர் இதழில் வரும் பல முக மன்னன் ஜோ கதாப்பாத்திரத்தை நினைத்துக்கொண்டே இருந்த நாட்கள் சுகமானது. அதில் வரும் கதையின் நாயகன் தன் முகத்தை தன் விருப்பத்தின் படி மாற்றும் வித்தை தெரிந்தவனாய் இருப்பான்.
ஆனால் அந்த கதையின் அர்த்தம் இன்றே உணர முடிகிறது. முகங்கள் மாறுவது என்பது முகமுடி போல் அல்ல என்றும் நம் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நம் முகம் மாறிவிடும் என்பதே ஆகும்.
குழந்தைகள் எப்போதும் புன்னகை மட்டுமே கொண்டு இருக்கிறார்கள் நாம் தான் குழந்தைகளின் எண்ணங்களை உருவாக்கி அவர்களின் முகபாவங்களை மாற்றி விடுகிறோம். குழந்தைகளோடு சிரித்து சிறிது நேரம் கதை கதைத்து பாருங்கள் யார் யாரெல்லாம் அவர்களின் மனப்பதிவில் பதிவாகி உள்ளனர் என்று தெரியும். புதிதாக பள்ளியில் சேர்ந்த சில நாட்கள் தன்னை ஓர் ஆசிரியராகவே சித்தரித்து மாலை நேரங்களில் விளையாடாத குழந்தைகள் மிக குறைவு. பல முறை கவனித்த போது சில எல்.கே.ஜி ஆசிரியர்களின் பழக்கவழக்கம், உடல் வாகு , அவரின் பேச்சு வழக்கு, அவரின் உச்சரிப்பு முறை என பலவற்றை அறியமுடியும்.
இது போல குழந்தைகள் பற்றி அறிவதும், அது பற்றி தேடுதலும் ஒரு பிரபஞ்சம் போல விரிவடைந்து கொண்டே செல்கிறது. இது மட்டும் உலகம் அல்ல. இது தாண்டியும் ஓர் அதீத உலகம் இருக்கவே செய்கிறது. ஆரம்பத்தில் சொன்ன அதே அழகான கன்னத்தில் குழி யுடன், எச்சில் ஒழுக சிரிக்கும் சிரிப்பும், ஆடைகள் சரியாக அணியாமல் , சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உற்சாக சிரிப்போடு இருக்கும் ஒரு பதினைந்து வயதும் 5 வயதின் மனமும் கொண்ட ஒரு குழந்தை காணும் போது மட்டும் மகிழ்ச்சி மறைந்து ஒரு துயரம் அப்பிக்கொள்கிறது மனது.
ஏன் என்றுதான் தெரிவதில்லை , நம்மால் இயற்கையின் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடிவதே இல்லை.
அது போன்ற குழந்தைகளை நாம் பார்க்கும் போது ஒரு மன நோயாளிக்கான தகுதியே பலரும் வழங்குகிறோம். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மன வளர்ச்சி குன்றிய அவர்களை ஒரு உடல் ஊனமுற்றவரை போலத்தான் பார்கிறார்களே தவிர மன நோயாளியாக பார்ப்பதில்லை.
அவர்களுக்காக சில நிமிடம் சிந்தித்து மிக சாதாரணமாக நகர்ந்து விடுகிறது மனது ஆனால் அவர்களோடு வாழும் அந்த பெற்றோர் படும் மனவருத்தம் உண்மையில் பாலைவனத்து மணல் வெளி போன்றதே. இருந்த போதும் சில பெற்றோர்களின் சிறப்பு குழந்தைகளை அவர்களின் பெற்றோர் சிறப்பாக கவனிப்பதை நினைக்கையில், ஒரு முறை அவர்களை வணங்கி விடுவோமா என்றே தோன்றுகிறது. ஒரு வேளை சொல்லிவிடலாம் அவர்கள் குழந்தையை அவர்கள் கவனிக்கிறார்கள் என.
ஆனால் ஒரு நாள் அந்த பெற்றோரின் நிலையை கொஞ்ச நேரம் இருந்து கவனித்து பாருங்கள். இந்த சமூகம் மனவளர்ச்சி குன்றிய தன் குழந்தையை ஏதேனும் சொல்லிவிடுமோ என்ற தவிப்பும், தனக்கு பிறகு எவ்வாறு இந்த குழந்தை வாழும் என்ற கவலை உடலோடு ஒட்டியே இருக்கும் சுமையாகவே மாறிவிடுகிறது.
இதை விட அந்த குழந்தையின் நிலை நினைக்கையில் சில கண்ணீர் துளி தவிர வார்த்தைகளே இல்லை. தான் ஏதும் செய்யாமல் தனக்கேதும் தெரியாமல் , வஞ்சக உலகம் புரியாமல் இருப்பது உண்மையில் சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்களை குளம் கொள்ள செய்கிறது.
ஆம் ஒரு மாலை வேளையில் புதுச்சேரி கடற்கரையில் நாயகன்-2012 என எழுதப்பட்டு ஒரு மேடை , நிறைந்த மௌனத்தோடு. சில நிமிடம் கழித்து வருவோம் என நண்பரோடு சென்று விட்டு ஒரு ஏழு மணி இருக்கும் அந்த சமயத்தில் வந்த போது ஒரு பெண் குழந்தை பாடிக்கொண்டு இருந்தது.
" உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென இறைவா எனை ஏற்றிடுவீர்.
சுக ராகம் மீட்டிடுவீர் ,
தீராத சோகத்தில் நான் வீழும் போது சுமைதாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதனையா
என் தனிமை நீ மீட்க வேண்டும்,
உன் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும்.
இறைவா இறைவா இறைவா "
பிறகு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சொன்னார் அந்த குழந்தைக்கு, கால் செயல் படாமலும் , கண் தெரியாது எனவும் , மற்றும் மன வளர்ச்சி குன்றியும் உள்ளது என. அந்த மெல்லிய குரல் அந்த அறிவிப்பை கூட கவனிக்காமல் தனக்கான கைதட்டல் என புரியாமல் தன் கையில் உள்ள மைக்கை கொடுத்து தானும் கைதட்டும் போது பலரின் கண்கள் அவர்களை அறியாமலேயே கண்ணீர் விட்டது. அதுவரை உற்சாக மாக தெரிந்த கடல் அலை, அந்த மெல்லிய அழகான குரல் கேட்ட பின் கடல் அலை தேம்பி தேம்பி அழுவது போலவே உணர முடிந்தது. அறைக்கு வந்து வெகு நேரம் அவளின் அழகு குரலும் , 10 வயது உடல் வளர்ச்சியும் 3 வயது மன வளர்ச்சி கொண்ட முகமும் மனம் விட்டு மறையவே இல்லை. அந்த குரல் காதுகளில் கேட்டு கொண்டே இருக்கிறது , உங்களுக்கு .....
" உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென இறைவா எனை ஏற்றிடுவீர்.
சுக ராகம் மீடிடுவீர்,
தீராத சோகத்தில் நான் வீழும் போது சுமைதாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதனையா
என் தனிமை நீ மீட்க வேண்டும்,
உன் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும்.
இறைவா இறைவா இறைவா "
குழந்தைகளின் கதை உலகம் விசித்திரமானது. சிறு வயதில் சிறுவர் மலர் இதழில் வரும் பல முக மன்னன் ஜோ கதாப்பாத்திரத்தை நினைத்துக்கொண்டே இருந்த நாட்கள் சுகமானது. அதில் வரும் கதையின் நாயகன் தன் முகத்தை தன் விருப்பத்தின் படி மாற்றும் வித்தை தெரிந்தவனாய் இருப்பான்.
ஆனால் அந்த கதையின் அர்த்தம் இன்றே உணர முடிகிறது. முகங்கள் மாறுவது என்பது முகமுடி போல் அல்ல என்றும் நம் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நம் முகம் மாறிவிடும் என்பதே ஆகும்.
குழந்தைகள் எப்போதும் புன்னகை மட்டுமே கொண்டு இருக்கிறார்கள் நாம் தான் குழந்தைகளின் எண்ணங்களை உருவாக்கி அவர்களின் முகபாவங்களை மாற்றி விடுகிறோம். குழந்தைகளோடு சிரித்து சிறிது நேரம் கதை கதைத்து பாருங்கள் யார் யாரெல்லாம் அவர்களின் மனப்பதிவில் பதிவாகி உள்ளனர் என்று தெரியும். புதிதாக பள்ளியில் சேர்ந்த சில நாட்கள் தன்னை ஓர் ஆசிரியராகவே சித்தரித்து மாலை நேரங்களில் விளையாடாத குழந்தைகள் மிக குறைவு. பல முறை கவனித்த போது சில எல்.கே.ஜி ஆசிரியர்களின் பழக்கவழக்கம், உடல் வாகு , அவரின் பேச்சு வழக்கு, அவரின் உச்சரிப்பு முறை என பலவற்றை அறியமுடியும்.
இது போல குழந்தைகள் பற்றி அறிவதும், அது பற்றி தேடுதலும் ஒரு பிரபஞ்சம் போல விரிவடைந்து கொண்டே செல்கிறது. இது மட்டும் உலகம் அல்ல. இது தாண்டியும் ஓர் அதீத உலகம் இருக்கவே செய்கிறது. ஆரம்பத்தில் சொன்ன அதே அழகான கன்னத்தில் குழி யுடன், எச்சில் ஒழுக சிரிக்கும் சிரிப்பும், ஆடைகள் சரியாக அணியாமல் , சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உற்சாக சிரிப்போடு இருக்கும் ஒரு பதினைந்து வயதும் 5 வயதின் மனமும் கொண்ட ஒரு குழந்தை காணும் போது மட்டும் மகிழ்ச்சி மறைந்து ஒரு துயரம் அப்பிக்கொள்கிறது மனது.
ஏன் என்றுதான் தெரிவதில்லை , நம்மால் இயற்கையின் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடிவதே இல்லை.
அது போன்ற குழந்தைகளை நாம் பார்க்கும் போது ஒரு மன நோயாளிக்கான தகுதியே பலரும் வழங்குகிறோம். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மன வளர்ச்சி குன்றிய அவர்களை ஒரு உடல் ஊனமுற்றவரை போலத்தான் பார்கிறார்களே தவிர மன நோயாளியாக பார்ப்பதில்லை.
அவர்களுக்காக சில நிமிடம் சிந்தித்து மிக சாதாரணமாக நகர்ந்து விடுகிறது மனது ஆனால் அவர்களோடு வாழும் அந்த பெற்றோர் படும் மனவருத்தம் உண்மையில் பாலைவனத்து மணல் வெளி போன்றதே. இருந்த போதும் சில பெற்றோர்களின் சிறப்பு குழந்தைகளை அவர்களின் பெற்றோர் சிறப்பாக கவனிப்பதை நினைக்கையில், ஒரு முறை அவர்களை வணங்கி விடுவோமா என்றே தோன்றுகிறது. ஒரு வேளை சொல்லிவிடலாம் அவர்கள் குழந்தையை அவர்கள் கவனிக்கிறார்கள் என.
ஆனால் ஒரு நாள் அந்த பெற்றோரின் நிலையை கொஞ்ச நேரம் இருந்து கவனித்து பாருங்கள். இந்த சமூகம் மனவளர்ச்சி குன்றிய தன் குழந்தையை ஏதேனும் சொல்லிவிடுமோ என்ற தவிப்பும், தனக்கு பிறகு எவ்வாறு இந்த குழந்தை வாழும் என்ற கவலை உடலோடு ஒட்டியே இருக்கும் சுமையாகவே மாறிவிடுகிறது.
இதை விட அந்த குழந்தையின் நிலை நினைக்கையில் சில கண்ணீர் துளி தவிர வார்த்தைகளே இல்லை. தான் ஏதும் செய்யாமல் தனக்கேதும் தெரியாமல் , வஞ்சக உலகம் புரியாமல் இருப்பது உண்மையில் சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்களை குளம் கொள்ள செய்கிறது.
ஆம் ஒரு மாலை வேளையில் புதுச்சேரி கடற்கரையில் நாயகன்-2012 என எழுதப்பட்டு ஒரு மேடை , நிறைந்த மௌனத்தோடு. சில நிமிடம் கழித்து வருவோம் என நண்பரோடு சென்று விட்டு ஒரு ஏழு மணி இருக்கும் அந்த சமயத்தில் வந்த போது ஒரு பெண் குழந்தை பாடிக்கொண்டு இருந்தது.
" உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென இறைவா எனை ஏற்றிடுவீர்.
சுக ராகம் மீட்டிடுவீர் ,
தீராத சோகத்தில் நான் வீழும் போது சுமைதாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதனையா
என் தனிமை நீ மீட்க வேண்டும்,
உன் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும்.
இறைவா இறைவா இறைவா "
பிறகு அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சொன்னார் அந்த குழந்தைக்கு, கால் செயல் படாமலும் , கண் தெரியாது எனவும் , மற்றும் மன வளர்ச்சி குன்றியும் உள்ளது என. அந்த மெல்லிய குரல் அந்த அறிவிப்பை கூட கவனிக்காமல் தனக்கான கைதட்டல் என புரியாமல் தன் கையில் உள்ள மைக்கை கொடுத்து தானும் கைதட்டும் போது பலரின் கண்கள் அவர்களை அறியாமலேயே கண்ணீர் விட்டது. அதுவரை உற்சாக மாக தெரிந்த கடல் அலை, அந்த மெல்லிய அழகான குரல் கேட்ட பின் கடல் அலை தேம்பி தேம்பி அழுவது போலவே உணர முடிந்தது. அறைக்கு வந்து வெகு நேரம் அவளின் அழகு குரலும் , 10 வயது உடல் வளர்ச்சியும் 3 வயது மன வளர்ச்சி கொண்ட முகமும் மனம் விட்டு மறையவே இல்லை. அந்த குரல் காதுகளில் கேட்டு கொண்டே இருக்கிறது , உங்களுக்கு .....
" உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென இறைவா எனை ஏற்றிடுவீர்.
சுக ராகம் மீடிடுவீர்,
தீராத சோகத்தில் நான் வீழும் போது சுமைதாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதனையா
என் தனிமை நீ மீட்க வேண்டும்,
உன் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும்.
இறைவா இறைவா இறைவா "
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
அந்த பத்து வயது சிறுமியை நினைக்கும்பொழுது மிகவும் மனம் வேதனையாக உள்ளது.
சாதாரண பெற்றோரே தங்கள் குழந்தையின் எதிர் காலத்தை நினைத்து அச்சத்துடன் நோக்கிகொண்டிருக்கும் பொழுது , இது போன்ற குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் என்ன வெல்லாம் சிந்த்தித்து வேதனையோடு இருப்பார்கள்.அதை நினைக்கும் பொழுதே மனம் பார மாகிவிடுகிறது.
சாதாரண பெற்றோரே தங்கள் குழந்தையின் எதிர் காலத்தை நினைத்து அச்சத்துடன் நோக்கிகொண்டிருக்கும் பொழுது , இது போன்ற குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் என்ன வெல்லாம் சிந்த்தித்து வேதனையோடு இருப்பார்கள்.அதை நினைக்கும் பொழுதே மனம் பார மாகிவிடுகிறது.
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
இது போன்ற தருணங்களில்தான் இறைவனின் கருனைமேல் சந்தேகம் வருகிறது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
அது போன்ற மன வளர்ச்சி பெற்ற குழந்தையின் மனதிலோ, அவர்களின் பெற்றோர் மனதிலோ கடவுளின் மீதானசெந்தில் wrote: இது போன்ற தருணங்களில்தான் இறைவனின் கருனைமேல் சந்தேகம் வருகிறது
பிடிப்பு குறைவதேயில்லை. மாறாக நமது மனதில் சந்தேக கீற்று முளைக்கிறது.
ஆம் இது கடவுள் நம் அன்பின் பலத்தை அறிந்து கொள்ளத்தான் மேலும் இதில் பலதரப்பட்ட மாற்றுக்கருத்துகள் வரலாம்.
"குழந்தைகளை என்னிடம் விடுங்கள்" என இயேசு சொன்னது வெறும் குழந்தைகளை அல்ல. இயேசு போன்றவர்கள் அவசியமற்ற எழுத்தைக்கூட உச்சரிப்பதில்லை. அதன் பொருள் எப்போதும் குழந்தையின் கள்ளமற்ற மனம் கொண்டவர்களைத்தான் தன்னிடம் வரச்சொல்லுமரு சொன்னதாகவே நான் உணர்கிறேன்.
ஆம் குழந்தையின் மனதோடு அவர்களோடு அன்பு செய்யத்துவங்குவோம். பார்த்தறியாத கடவுளோடு சந்தேகம் கொண்டு பலனேயில்லை. மேலும் நாம் கண்முன்னே இருக்கும் அவரின் படைப்புகளோடு அன்பு செய்வோம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
அவர்களும் மனிதர்களே என்ற எண்ணம மட்டும் வந்தாலே எல்லாம் சரி ஆகிவிடும்ம்..
Similar topics
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|