தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு

View previous topic View next topic Go down

முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு Empty முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு

Post by செந்தில் Thu May 16, 2013 5:22 pm

முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு Board
முன்பின் தெரியாத ஒருவர் ஒரு கிராமத்திற்குச் சென்று ஒரு விலாசத்தைக் கேட்டால் கிராமத்து மக்கள் விலாசம் மட்டுமல்ல, விலாசதாரருடைய பூர்வீகத்தையே புட்டுபுட்டு வைத்திடுவர். அந்த அளவுக்கு கிராமத்தில் வசிப்பவருடைய அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பர். ஆனால், நகர்ப்புறங்களில் விலாசங்களைக் கண்டுபிடிப்பது மிகமிகச்சிரமமான வேலை.

எல்லாம் கணினிமயம் என்ற இன்றைய நிலையிலும்கூட நகரத்தில் விலாசங்களைக் கண்டுபிடிப்பது எளிதல்ல! ஒருவரை அணுகி, "இந்த விலாசம் எங்குள்ளது?’ என்று கேட்டால், "அதோ அந்த ஆட்டோக்காரரைக் கேளுங்க’ என்பார். அல்லது "அந்த வெற்றிலைப்பாக்கு கடைக்காரரைக் கேளுங்க’ என்று சொல்வார்! அதுவும் பிள்ளையார் கோயில் தெரு (எந்த பிள்ளையார் கோயில்?) அண்ணாநகர், ஜெ.ஜெ. நகர், எம்.ஜி.ஆர். நகர் என்றால் – அனேகமாக எல்லா பகுதிகளிலும் இதே பெயர்களில் ஏராளமான தெருக்களும், நகர்களும் உண்டு.

விலாசம் என்றாலே – கதவு இலக்கம், தெருப்பெயர், பகுதி, நகரம் என்ற விவரங்களைக் கொண்டது. வீட்டு இலக்கத்தை எடுத்துக்கொண்டால், எந்தப் பக்கத்திலிருந்து இலக்கம் தொடங்குகிறது என்று எவருக்கும் தெரியாது. அடுத்து புது எண்ணா (அ) பழைய எண்ணா என்று கேட்டு குழப்புவார்கள். தெருப்பெயரைக் குறிப்பிட்டால், தெரு தற்போது விரிவடைந்துள்ளது, ""விரிவுப்பகுதியா” என்று வினவுவார்கள்.

சென்னை மாநகரில் ஜாதிப் பெயர்களைத் தெருக்களில் ஒழித்ததால், வீராசாமி தெரு 18-ஆம் நெம்பர் வீடு என்று கேட்டால், " வீராசாமி செட்டியாரா, நாயக்கரா?’ என்று அந்த தெருக்காரர்கள் கேட்கும்போது பேந்தப்பேந்த விழிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை.

சென்னைப் புறநகர்ப் பகுதிகள் நாளும் விரிவடைந்து வருவதால் வீதிகளுக்குப் பெயர் இருக்காது – மனை எண்ணைத்தான் குறிப்பிடுவார்கள். அந்த வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதால் – அலைந்து திரிந்து தேட வேண்டும்.

மனை விற்றவர் அப் பகுதிக்குத் தனது பெயரையோ தன்னுடைய மனைவி பெயரையோ சூட்டி, விற்றுவிட்டுச் சென்று விடுவார். அந்தப் பெயரே நிலைத்துவிடும். உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியில்லாமலேயே – பெயர்கள் அரசு ஆவணங்களில் வந்துவிடும். அந்த மனை வியாபாரி எங்கெல்லாம் "லே-அவுட்’ போடுகிறாரோ – அங்கெல்லாம் ஒரே பெயரையே தொடர்ந்து வைத்துவிட்டுப் போய்விடுவார். இது மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்குமே என்று கவலைப்பட மாட்டார்.

தபால்காரர், உள்ளாட்சி ஊழியர்கள், தேர்தல் பணியாளர்கள், பத்திரிகை மற்றும் பால் பாக்கெட் போடுபவர்கள், எரிவாயு சிலிண்டர் கொண்டு வருபவர்கள் புதிதாக ஒரு பகுதிக்குச் சென்றால் விலாசம் கண்டுபிடிக்கப் படுகிற பாட்டைச் சொல்லி மாளாது!

லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்து வீடு கட்டுபவர்கள் – தனது வீட்டின் முகப்பில் – அனைவரின் கண்ணில் தெரியும்படி பளிச்சென வீட்டு இலக்கம், தெருப் பெயரை எழுதி வைப்பதில்லை. வீட்டுக்காரர்தான் இப்படியென்றால், விலாசங்களை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அஞ்சல் துறை, உள்ளாட்சி நிறுவனங்களும் – இது குறித்துக் கவலைப்படுவதில்லை! பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில்லை.

சில இடங்களில், தெருப்பெயர்ப் பலகை இருந்தாலும், தெருப்பெயரை மறைக்கும்வண்ணம் போஸ்டர்களும் துண்டுப் பிரசுரங்களும் அதன்மேல் ஒட்டப்படுகின்றன. இதை எவரும் தடுக்க முடிவதில்லை. நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் வைக்கும் பெயர்ப் பலகைகள் மீது "போஸ்டர்’ ஒட்டினால்கூட நடவடிக்கை எடுப்பதில்லை.

வெளிச்சம் இல்லாத பகுதிகளில் இரவு நேரங்களில் விலாசத்தைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்று எவரும் உணருவதில்லை.

தமிழ்நாட்டில் பஸ் போகும் எல்லா சாலைகளிலும் கடைகளுடைய பெயர்களைக் கொட்டை எழுத்திலும் அது எந்த ஊர், எந்தத் தெரு என்பதை மிகச் சிறிய பொடி எழுத்துகளிலும் எழுதி வைத்துள்ளார்கள்.

இரவு நேரம் அந்த ஊரைக் கடப்பவர் பஸ்ஸில் இருந்தாலும் காரில் இருந்தாலும் பெயரைத் தெரிந்துகொள்ளவே முடியாது.

நமது நாடு பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறது – என்றாலும் – சிறிய சிறிய விஷயங்களில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை என்பதை "வீட்டு முகவரி’ விஷயத்திலேயே நாம் பார்க்க முடியும்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு Empty Re: முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு

Post by மகா பிரபு Fri May 17, 2013 7:16 am

ஆம் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு Empty Re: முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 17, 2013 7:18 am

லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்து வீடு கட்டுபவர்கள் – தனது வீட்டின் முகப்பில் – அனைவரின் கண்ணில் தெரியும்படி பளிச்சென வீட்டு இலக்கம், தெருப் பெயரை எழுதி வைப்பதில்லை. வீட்டுக்காரர்தான் இப்படியென்றால், விலாசங்களை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அஞ்சல் துறை, உள்ளாட்சி நிறுவனங்களும் – இது குறித்துக் கவலைப்படுவதில்லை! பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில்லை.

இனிமேலாவது ஏற்படட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு Empty Re: முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு

Post by செந்தில் Sat May 18, 2013 12:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்து வீடு கட்டுபவர்கள் – தனது வீட்டின் முகப்பில் – அனைவரின் கண்ணில் தெரியும்படி பளிச்சென வீட்டு இலக்கம், தெருப் பெயரை எழுதி வைப்பதில்லை. வீட்டுக்காரர்தான் இப்படியென்றால், விலாசங்களை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அஞ்சல் துறை, உள்ளாட்சி நிறுவனங்களும் – இது குறித்துக் கவலைப்படுவதில்லை! பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில்லை.

இனிமேலாவது ஏற்படட்டும்...
நாமே ஏற்படுத்துவோம் நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு Empty Re: முகவரியை கண்டுபிடிப்பது பெரும்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்
» தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
» ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
» Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற
» மின் அஞ்சல் முகவரியை மாற்ற உதவி தேவை - முத்து முஹமது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum