Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
Page 1 of 1 • Share
தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
புதுச்சேரி மருத்துவமனைகளுக்குப் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களுக்கு எச்சரிக்கை. ஆண் குழந்தை பிறந்து, அக்குழந்தை கடத்தப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல” என்ற அறிக்கையை புதுச்சேரி அரசு விரைவில் அறிவிக்கலாம்
. காரணம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் 36 கொழு கொழு ஆண்குழந்தைகள் காணாமல் போய் இருப்பதுதான்.
புதுச்சேரியில் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில்தான் ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மருத்துவமனைகளில் புதுவைக்காரர்களைவிட சுற்றியுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ‘தமிழகத்தைவிட இங்கு தரமான மருத்துவ சேவை இருப்பதால்(!) அதிகமான கூட்டம் அலைமோதுகிறது’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடவே குழந்தைகளை கடத்தும் கும்பலும் வந்துவிடுகின்றன என்பதும் மிகையில்லை.
கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தௌதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த மின்னல்கொடி என்பவர் பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போனது. குழந்தையைப் பறிகொடுத்த மின்னல்கொடியின் புகாரின் பேரில் போலீஸார் லியோ பாத்திமா என்ற பெண்ணைக் கைது செய்தனர். ஆனால், இவரின் வாக்குமூலம் பரிதாபத்திற்குரியதே என்கின்றனர் போலீஸார்.
லியோ பாத்திமாவுக்கும் வினோத்குமாருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை. பாத்திமாவுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால், வினோத்குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக அவரது தாயார், அக்கம்பக்கத்தில் பேச, பாத்திமா ஆடிப்போனார். கூடவே, ஐடியாவும் ஓடிவந்தது. கர்ப்பம் அடைந்ததாக நாடகமாடிய பாத்திமா, கணவர் ஊரான மரக்காணத்தைவிட்டு புதுவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். தாய் வீட்டிலும் நாடகம் அரங்கேறியது. ஜிப்மர் மகப்பேறு வார்டுக்குள் அவ்வப்போது வந்து சென்ற பாத்திமாதான், மின்னல் கொடியின் குழந்தையைக் கடத்திச் சென்றார். எப்படியோ போலீஸ் மோப்பம் பிடித்து, பாத்திமாவைக் கைது செய்தது. குழந்தையைக் காப்பாற்றிவிட்டது.
கடத்தப்படும் குழந்தைகளை வெளிநாட்டுக்கும் வெளி மாநிலத்துக்கும் இரண்டு லட்ச ரூபாய் வீதம் விற்கப்படு-வதாக, புதுச்சேரி மக்களிடையே பரவ-லான பீதி கிளம்பியுள்ளது. புதுச்சேரி மருத்துவ-மனைகளையே இந்தக் கடத்தல் கும்பல் சுற்றிவருவதாகவும் போலீஸுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் பெருகிவரும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “இந்த ஆண்டு மட்டும் 36 கைக்குழந்தைகள் கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. இந்தக் கும்பலை கண்டுபிடித்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
புதுச்சேரி மருத்துவமனைகளில் மகப்-பேறுக்காக வரும் பெண்கள் மடியில் மழலை-யுடன் நெருப்பையும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்!
. காரணம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் 36 கொழு கொழு ஆண்குழந்தைகள் காணாமல் போய் இருப்பதுதான்.
புதுச்சேரியில் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில்தான் ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மருத்துவமனைகளில் புதுவைக்காரர்களைவிட சுற்றியுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ‘தமிழகத்தைவிட இங்கு தரமான மருத்துவ சேவை இருப்பதால்(!) அதிகமான கூட்டம் அலைமோதுகிறது’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடவே குழந்தைகளை கடத்தும் கும்பலும் வந்துவிடுகின்றன என்பதும் மிகையில்லை.
கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தௌதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த மின்னல்கொடி என்பவர் பிரசவத்திற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போனது. குழந்தையைப் பறிகொடுத்த மின்னல்கொடியின் புகாரின் பேரில் போலீஸார் லியோ பாத்திமா என்ற பெண்ணைக் கைது செய்தனர். ஆனால், இவரின் வாக்குமூலம் பரிதாபத்திற்குரியதே என்கின்றனர் போலீஸார்.
லியோ பாத்திமாவுக்கும் வினோத்குமாருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை. பாத்திமாவுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால், வினோத்குமாருக்கு இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக அவரது தாயார், அக்கம்பக்கத்தில் பேச, பாத்திமா ஆடிப்போனார். கூடவே, ஐடியாவும் ஓடிவந்தது. கர்ப்பம் அடைந்ததாக நாடகமாடிய பாத்திமா, கணவர் ஊரான மரக்காணத்தைவிட்டு புதுவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். தாய் வீட்டிலும் நாடகம் அரங்கேறியது. ஜிப்மர் மகப்பேறு வார்டுக்குள் அவ்வப்போது வந்து சென்ற பாத்திமாதான், மின்னல் கொடியின் குழந்தையைக் கடத்திச் சென்றார். எப்படியோ போலீஸ் மோப்பம் பிடித்து, பாத்திமாவைக் கைது செய்தது. குழந்தையைக் காப்பாற்றிவிட்டது.
கடத்தப்படும் குழந்தைகளை வெளிநாட்டுக்கும் வெளி மாநிலத்துக்கும் இரண்டு லட்ச ரூபாய் வீதம் விற்கப்படு-வதாக, புதுச்சேரி மக்களிடையே பரவ-லான பீதி கிளம்பியுள்ளது. புதுச்சேரி மருத்துவ-மனைகளையே இந்தக் கடத்தல் கும்பல் சுற்றிவருவதாகவும் போலீஸுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் பெருகிவரும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “இந்த ஆண்டு மட்டும் 36 கைக்குழந்தைகள் கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. இந்தக் கும்பலை கண்டுபிடித்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
புதுச்சேரி மருத்துவமனைகளில் மகப்-பேறுக்காக வரும் பெண்கள் மடியில் மழலை-யுடன் நெருப்பையும் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்!
Guest- Guest
Re: தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
பெண்களின் பிரச்சனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|