தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 2:10 pm

First topic message reminder :

கனிமொழி

அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:43 pm

ஒரு தோழியின் குரல்

தோழி
எழுந்து வா
இனும் என்னடி இருட்டினில் வேலை?

மீண்டும் மீண்டும்
அடுப்படி தஞ்சமாய்
அடிமை வாழ்வே தலையெழுத்தாக
எத்தனை நாள்தான் இந்த வாழ்வு?

மானாக மருளாதே
அன்னம் போல் அசையாதே
வீறு கொண்டு எழு
எமது உரிமைகளை வென்றெடுப்போம்

அன்று
தலையைக் குனிவது அழகென்று சொல்லி
உலகையே பார்க்காது உன்னைத் தடுத்தனர்
உலகையே பார்க்காமல்
எத்தனை நாள்தான் இந்த வாழ்வு?
இன்றும் அப்படியா?

உன்னைச் சுற்றிக் கிடுகுவேலிகள்
இனியும் இருப்பதை அனுமதிக்காதே
இன்னும் என்னடி இருட்டினில் வேலை?
தலையை நிமிர்த்து
எழுந்து வா;
உலகைப் பார்!

--உ. ஔவை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:43 pm

உணர்வுகள்

ஆம்.
அன்று நான் உன்னை ஒருமுறை
நோக்கினேன்
ஒரே முறை நோக்கினேன்
நீல விழியின் அழகுதான் காரணமோ?
இல்லை, இல்லை
ராஜநடை போட்டு-நீ
வாசலில் நின்றபோது
மனம் சிலிர்க்கும்
நோக்கினேன்....
என்றும் போல் அதே பார்வை.
அதே கணத்தில்
பார்வைகள் ஆயிரம் சங்கமித்தன
மனதின் உணர்வை அடக்கி
நோக்கினேன்
வாயில் அரும்பிய சொற்கள் உதிர
விடை பெற்றுச் செல்வாய் நீ
ஆம்- அதிலுமோர் அழகு தான்
வட்டப் புல் வெளியில்
வானத்தை நோக்கி
கைகளை ஆட்டி
கால்களை உதைத்து
நிற்கும் அழகில்
உன்னில் தெறிக்கும்
ஆயிரம் பார்வையில்
அர்த்தமுள்ள-
அர்த்தமாயுள்ள பார்வை ஒன்றே
உன்னைத் துளைக்கும்
இப்படி இப்படி எத்தனையோ
ஆனாலும்-
சமூகத்தில் நடக்கும் அசிங்கங்களைப்போல்
ந்ங்கள் உறவுகள்
ஆகிவிட வேண்டாம்
கண்கள் நோக்கும்
கால்கள் அசையும்
ஆனாலும் நான்
வருதல் கூடாது

--உ. ஔவை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:44 pm

மீளாத பொழுதுகள்

அமைதியான காலைப் பொழுது
காலைச் செம்மை கண்களைக் கவரும்
காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்
தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்
எங்கும் அமைதி! எதிலும் இனிமை!

நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.

பொழுது புலராக் கருமை வேளையில்
தட தடத்துறுமின வண்டிகள்
அவலக் குரல்கள்: "ஐயோ! அம்மா!"
தோட்டவெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்...
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.

தாய்மையின் அழுகையும்
தங்கையின் விம்மலும்
பொழுது புலர்தலில்
அவலமாய்க் கேட்டன.

காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது.
மெல்லிய ஒலிகளும் பயத்தையே தூண்டின
எங்கும் அச்சம்; எதிலும் அமைதி.
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்.....
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.

--செல்வி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:44 pm

கோடை

அந்திவானம்
செம்மையை விழுங்கும்
அலைகள் பெரிதாய்
கரையைத் தழுவும்
குளத்தோரத்துப் புற்களின்
கருகிய நுனி
நடக்கையில்- காலைநெருடும்
மேற்கே விரிந்த
வயல்கள் வெறுமையாய்
வானத்தைப் பார்த்து
மௌனித் திருக்கும்
வெம்மை கலந்த
மென்காற்று
மேனியை வருடும்.

புதிதாய் பரவிய
சலையின் செம்மண்
கண்களை உறுத்தும்
காய் நிறைந்த மாவில்
குயிலொன்று
இடையிடை குரலெழுப்பும்.
வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச் செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்
ஒதுங்கிப் போன கல்
ஏளனமாய் இனிக்கும்
இதயத்தில் நினைவுகள் விரிந்து
சர்ரென்று வலியெடுக்கும்
வாடைக்காற்றின் சிலிர்ப்பும்
வரப்போரத்தில் நெடிதுயர்ந்த
கூழாமரத்தின் பசுமையும்
நிறைந்த குளத்தின் மதகினூடு
திமிறிப் பாயும் நீரினழகுமாய்
ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள்
ஊமையாய் மனதுள் அழுத்தும்.

--செல்வி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:45 pm

நீறு பூத்த தணல்

மீட்டப்படாத மனவீணியில்
அமுங்கிக் கிடந்த
முகாரி ராகத்தை
ஏன் மீட்டி விட்டீர்?
தரையில் சிந்தாமல்
தேங்கிக் கிடந்த
கண்ணீர் மழையை
ஏன் சிந்தச் செய்தீர்?
நீறுபூத்த தணலென
எரியாமலிருந்த
எண்ணெய்த்தீயை
ஏன் ஊதி விட்டீர்?

கவிதைகள் பல படைத்து
காவியத்தில் நானொரு
ஓவியமாய்த் திகழ
பாதை காட்டினீரோ?
பலே பலே
எனது கண்களின்
வடிப்பில்
என்னுள்ளத்தின்
தவிப்பில்
உங்களுக்குத்தான்
எவ்வளவு இன்பம்?

--மசூறா ஏ. மஜீட்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:45 pm

ப்ரிய சினேகா

பாதை திறப்பதாய்
கூறியிரா விட்டால்
திறக்கப்படும் பாதையில்
நான்
நடக்க நினைத்திருப்பேன்

யாரோ திறந்த பாதையில்
என்னை
நடை பழக்க நினைக்கிறார்கள்
என்னல் தான்
ஆமாம் பாட முடியவில்லை

இழுத்துப் போனால்
நானென்ன செய்வது?
நீ திறந்த பாதையை
நான் கண்டிருந்தாலாவது
அவர்களுக்குக் காட்டியிருப்பேன்.

என்
கால்களைக் கட்டி விட்டாய்
அவிழ்த்து விட்டாலாவது
கால் போன போக்கில்
நடந்தாலும் திரிந்திருப்பேன்.

பாதையில் அழைத்துச்செல்
அன்றேல்
கால்களையேனும்
அவிழ்த்துவிடேன்.

--மசூறா ஏ. மஜீட்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:46 pm

அன்றும் இன்றும்

இதயத்தில் இருந்து மேலெழுந்து
எதுவோ தொண்டயில் சிக்கிட
உன் முன்னிலையில் அன்று
நான் வாயடத்துப் போனேன்
எனது மௌனத்தை உனக்குப் பதிலாக்கி
தொடர்ந்தது காலம்.

உன்னோடு உலாவந்த நாட்களில்
கைதொட உறையும்
உணர்வுகளின் சிலிர்ப்பில்
"என்ன.. பேசேன்.."
என்று நீ கேட்டும்
"ஊம்.."; என்பது மட்டுமே
எனது பதிலாகி நிற்க,
உள்ளும் புறமும்
எல்லை கடந்த ஏகாந்தப் பெருவெளியும்
ஓசைகளடங்கி உறைந்துபோக.

அத்தனைக்குமாக நீயே
திரும்மத் திருமப் பேசுவாய்.

முகமெங்கும் மகிழ்ச்சிப் பூக்களாய்
எச்சில் குமிழ்களுடன்
பேச்சும் வெடித்துச் சிதறும்
அரசியல், சினிமா, திருவிழா.... என
கூட வந்த
அடுத்தவனின் விமர்சனங்கள்
அத்தனைக்கும் நடுவே
எனது மௌனங்களத்தனையும்
உனதாக்கி
நீ உன்வழி தொடர்ந்தாய்.

அன்று,
நேருக்கு நேராய்த்தான்
நீ கேட்டபொழுது
எனது சம்மதமாக
என்னுடன் இழைந்த மௌனம்
இன்று,
வலியெடுக்கும் இதய சோகத்தின்
சீழ்அகற்றி சுகமளிக்க மறுக்கிறது.
காரணமற்ற நிராகரிப்புடன்
நீ எங்கோ வெகுதொலைவில்
மகிழ்ச்சிப் பிரவகிப்பில்.

அன்றைய எனது மௌனமும்
இன்றைய உனது மௌனமும்
உனக்கே சாதகமானதில்
என்றென்றைக்கும்
வசந்தங்கள் உனக்கும்
சோகங்கள் எனக்குமாய்
ஆக்கிற்று உலகம்.

நானோ,
கனல் வாய்பிழந்து
புழுதி பறக்கின்ற
மைதானவெளி முழுதும்
தீ மிதித்து நடக்கின்றேன்
மௌனமோ
இடையே சுகமாய்த்துயிலும்.

--பிரேமி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:46 pm

அந்த நாளை எண்ணி

பிரியமானவனே, உன்னை ஏன் எனக்குப்
பிடித்திருக்கிறது?
அறிவுக்காகவா? அழகுக்காகவா?
ஒழுக்கத்துக்காகவா? அன்றி, ஒப்பற்ற
குணத்துக்காகவா?
கேள்விகள் சாலைகள் போல்
வளைந்து நெளிந்து
அடிவானம் பூமியை முத்தமிடும் புள்ளியில்
சிக்கிடும் என் இதயம்.
இதய இழையங்களில் நீக்கமற நீ
உன் நினைவில் தவிக்கும் நான்.

அறிவு பூர்வமாக பிளட்டோனிக் லவ்
உணர்ச்சிகள் தாரகைகளாக தொலைதூரத்தில்.
சமாந்தர வாழ்வுகள் சாசுவதம் என்றுணர்ந்தும்
உன் அன்புக் கடலில் முக்குளிக்கும் நான்
எதிர்காலத்தை எண்ணி
சந்தப் பொருளாக மாறும் நாளை எதிர்நோக்கி
மூர்ச்சை அடைகிறேன்.

--ரேணுகா நவரட்ணம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:47 pm

பெண் இனமே...

உன் உறங்கும் காலம்
முடிவுறும் வேளை
இதோ--
மிக அருகில்...
'அடுக்களை அரசி'
'கற்புத் தெய்வம்'
மெல்லியலாள் etc etc
எல்லாம் வெறுங் கனவுப்
பொன் விலங்குகள்,
சுயநலக்காரர் உன்மேற் சூட்டிய
மாய முட்கிரீடங்கள்.
உன் பொறுப்பைத் தட்டிக்கழிக்க
'மெல்லியல்லாள்' என
உன்மேற் போர்த்தபட்ட
போர்வையக் காட்டி
அதனுள் ஒளியாதே.
கனவுகள் வேஷங்களைக் கலைத்து
விரைவில் விழித்தெழு!
நிஜத்தை எதிர்கொள்!
நின் பங்களிப்பைச் செய்.

--மைத்த்ரேயி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:47 pm

எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும்

வா! வா! என்றன
தென்னங் கீறுகள் காற்றில்
பரவி வருகிற மஞ்சள் ஒளியில்
பொன்னாய் நிமிரும் பூக்கள்.

யன்னல் கம்பியில் கைகள்
கன்னங்கள் குளிர்ந்தாலும்
நெஞ்சு கீறி,
அனலாய் வெடிக்கிற
மூச்சில் வெளிப்புறம்
மங்கலாய்த் தெரியும்.
பார்வையில்
தோற்கிற போதும்
ஓயாமல் தாவும் அணில்கள்
அவள் நிற்கிறாள்
யன்னலுடன் கூடவே
தன்னையும் பிணைத்துக் கொண்டு
உள்ளே,
அழுகிற அவனது குழந்தைக்காக
சுரக்கிற மார்புடன்
அதையே நியதியாய்
நினைத்தாள் போல

மஞ்சள் ஒளிகறுக்கும்
மெல்ல வரும் இரவு
கூடு திரும்பும் ஒரு பறவையாய்
கூடவே அவனும்
உடமையாய்க் காத்து
துணையாதலில்,
இன்னும்,
சுகம் தேடலில்
இறுமாந்து போன வெறும் மனிதனாய்...

வெளியே எல்லாம் அழகாய்
மிகவும் விரைவாய்
முகில்கள் திரளல்,
இடியாய் மழையாய்க்
குமுறல், சிதறல்,
வெடித்தல், மரம் தளிர்த்தல்
இலை உதிரல் சிலவேளை
வெறிபிடித்தாடுதல் என,

எதற்கும் அவளில்
சலனமேயில்லை.
வீட்டு மூலையில் கவ்விய இருளில்
கம்பி யன்னலினூடே
ஒவ்வொரு மாலையும் ஒளிபெறுகிற
தெரு விளக்கை
வெறுமனே வியந்தபடிதான்.

--ஊர்வசி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:47 pm

வேலி

நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம் கூட
உயரமாய்,
ஆனாலும் திறந்தபடி
அதனூடே காற்று;
எப்பொழுதும்
மிகவும் இரகசியமாய்
உன்னிடம் என்னை
அழைக்கிற காற்று
என்னைச் சூழவும் சுவர்கள்தான்
நச்...நச் என்று
ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்
அவையும்
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப் போனவை.

உனக்காக நான்
தனிமையிலே தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக
நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்ர்த்தபடி.

எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்?
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ?
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்!
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது..

--ஊர்வசி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:48 pm

இன்னும் வராத சேதி 1

புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்
தெற்கிருந்து பூவாசம்
உன் வீட்டுப் பக்கம்தான்
எங்கேனும்
கோடை மழைக்குக் காட்டுமல்லி
பூத்திருக்கும்.

இங்கே,
முற்றத்து மல்லிகைக்குத்
தேன்சிட்டும் வந்தாச்சு
'விர்-' என்று பின்னால்
அலைகின்ற சோடியுடன்.....

வெள்ளையும் மஞ்சளுமாய்
வண்ணத்திப் பூச்சிகளும், படையாக
செவ்வரளி வரிசைகளில்
காற்றில் மிதந்தபடி.

வீட்டுக்குப் பின் தோப்பில்
மரங்கள் சலசலக்க
குருவிகளின் வம்பளப்பு
தினமும்தான் புதுசாக.

ஆனாலும்,
நீ சொன்ன சேதியை
இன்னும் ஒன்றுமே தரவில்லை
காற்றுங் கூட.

--ஊர்வசி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:48 pm

இன்னும் வராத சேதி 2

வெட்ட வெளி கூடச்
சிறைதான் இங்கே.
கிடுகு வேலியும்
ஒரு பெரும் மதில்தான்.

காற்றுக்கும் காவலுண்டு
ஆனாலும்,

கூரைக்கு மேலாக
அள்காட்டி கிரீச்சிட்டுப்
பறக்கும் நள்ளிரவுப் பொழுதுகளில்
நான் மட்டும்
விழித்திருப்பேன்.
சோளகம் நுழைவதற்காய்
சாளரத்தைத் திறந்து வைப்பேன்.

அப்போது,
வரிசையாய் மின்னுகிற
மூன்று வெள்ளிகளும்
என் சாளரத்தைக் கடக்கு முன்பு

மெல்ல, அதை அனுப்பு.

--ஊர்வசி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 5:51 pm

“என் பெயரே மறந்து போனேன்
என் மணவிழாவில்
நான் தொலைந்து போனேன்
ஆனாலும் யாருமே என்னை
தேடவேயில்லை.”

கவிஞர் தாமரை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 5:52 pm

“அர்த்த நாரீஸ்வரனின்
அழகிய பாதியாய்
அமர்ந்திருப்பவள்
அவனுள் அடங்கிப்போனது
போல்தான் நாமும்
ஏற்றி வைக்கப்பட்டதென்னவோ
உச்சாணிக் கொம்பில்
உள்ளதென்னவோ துணை மந்திரியாய்”

கவிஞர் கனிமொழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 5:52 pm

‘இலக்கிலாமல்
அம்புகளை
எய்து
இற்று விழுந்தன
நம்பிக்கைகள்’

அம்சப் பிரியா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 5:53 pm

ரோஜாக்களே
இதழ்களைக் கொட்டி
தேய்ந்து போவதைவிட
இதழ்களோடு காய்ந்து
போவது மேல்’

‘பணமாக அல்லாமல்
மணமாக முடிக்கும்
ஆண்களை மட்டும்
பெற்றெடுங்கள்
பெண்களே’

கவிஞர் தீபா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by சரண் Fri Sep 13, 2013 6:44 am

அருமை!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 4 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum