Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
First topic message reminder :
கனிமொழி
அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று
கனிமொழி
அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...
நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்
கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!
அ.வெண்ணிலா
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...
நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்
கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
மணமிக்க
பூச்சூடிக்கொள்கிறேன்
கூடுதலாய் முகப்பவுடரும்
புடவைகளுக்குக்கூட
வாசனை திரவியம்
பூசி வைத்துள்ளேன்
வியர்வையைக் கழுவிக் கழுவி
சுத்தமாய் வைத்திருப்பதாய்
நினைத்துக்கொள்கிறேன்
என்னை அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
தாயின் வாசம் சொட்டு சொட்டாய்
கோப்புகளில் இறங்குகிறது
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து
பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்று அலறும்
குழந்தையின் அழுகுரல்
அ.வெண்ணிலா
பூச்சூடிக்கொள்கிறேன்
கூடுதலாய் முகப்பவுடரும்
புடவைகளுக்குக்கூட
வாசனை திரவியம்
பூசி வைத்துள்ளேன்
வியர்வையைக் கழுவிக் கழுவி
சுத்தமாய் வைத்திருப்பதாய்
நினைத்துக்கொள்கிறேன்
என்னை அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
தாயின் வாசம் சொட்டு சொட்டாய்
கோப்புகளில் இறங்குகிறது
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து
பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்று அலறும்
குழந்தையின் அழுகுரல்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
வயிற்றில் முகம் பதித்துத் தேய்த்து
இறுக்கி அணைத்தாள்
உன் வயிறு ஏம்மா லூசா இருக்கு
நீ வசித்த இடமது
உனக்கு நிறைய இடம் வேணும்தானே
அதான் வயிறு பெரிசாச்சு
வலிச்சுதாம்மா
ம்ம் உன்னைப் பார்த்தப் பிறகு
வலி போயிடுச்சி
அ.வெண்ணிலா
இறுக்கி அணைத்தாள்
உன் வயிறு ஏம்மா லூசா இருக்கு
நீ வசித்த இடமது
உனக்கு நிறைய இடம் வேணும்தானே
அதான் வயிறு பெரிசாச்சு
வலிச்சுதாம்மா
ம்ம் உன்னைப் பார்த்தப் பிறகு
வலி போயிடுச்சி
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
ஏம்மா ரத்தம் வந்துக்கிட்டே இருக்கு
நீ பூக்கத்துவங்கிவிட்டாய் மகளே
பூ பூத்தால் வாசனை தானே வரும்
ரத்தம் வருது
ரத்தப்பூ
ஆதியில் உன் பாட்டிக்குப் பாட்டிக்கு பாட்டி
சூரியனை விழுங்கிவிட்டாள்
சூரியப் பூ
சிகப்பு
அ.வெண்ணிலா
நீ பூக்கத்துவங்கிவிட்டாய் மகளே
பூ பூத்தால் வாசனை தானே வரும்
ரத்தம் வருது
ரத்தப்பூ
ஆதியில் உன் பாட்டிக்குப் பாட்டிக்கு பாட்டி
சூரியனை விழுங்கிவிட்டாள்
சூரியப் பூ
சிகப்பு
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
தேதி மாறாமல்
திட்டமிடப்பட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றை
சந்தித்தாற் போல்
அதிர்கிறது மனசு.
அ.வெண்ணிலா
திட்டமிடப்பட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றை
சந்தித்தாற் போல்
அதிர்கிறது மனசு.
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
ரகசிய சிநேகிதன் ஒருவனுடன்
வாழ்வதன் ருசி தெரியுமா உங்களுக்கு
… … … …
குளிர் பிளக்க இயலாமல்
தோற்று விழும்
மார்கழியின் இளம் வெயில் போல்
என்முன் பணிந்தேகுவான்
அ.வெண்ணிலா
வாழ்வதன் ருசி தெரியுமா உங்களுக்கு
… … … …
குளிர் பிளக்க இயலாமல்
தோற்று விழும்
மார்கழியின் இளம் வெயில் போல்
என்முன் பணிந்தேகுவான்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
கற்பெனும் ஒற்றைப் பண்பாடு
கழுத்திறுக்கிய கணத்தின் வெம்மை
திருகியெரிந்த ஒற்றை முலையில்
பெருகிய வாழ்வுப் பெருந்தீயில்
சாம்பலாகிய கோவலனின் அன்பு
அ.வெண்ணிலா
கழுத்திறுக்கிய கணத்தின் வெம்மை
திருகியெரிந்த ஒற்றை முலையில்
பெருகிய வாழ்வுப் பெருந்தீயில்
சாம்பலாகிய கோவலனின் அன்பு
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
எதிர்ப்படும் நண்பரின்
முகம் பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை.
அ.வெண்ணிலா
முகம் பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை.
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
தேநீரின்
திடம், மணம், ருசியைவிட
அருந்தும் மனநிலையே
குடிப்பதின் திருப்தியாகிறது.
தேநீர் அருந்தியபடி
நிச்சயிக்கப்படும் உறவில்
மழை நாளொன்றின் ஈரம்
உட்பொதிந்திருக்கக் கூடும்
அ.வெண்ணிலா
திடம், மணம், ருசியைவிட
அருந்தும் மனநிலையே
குடிப்பதின் திருப்தியாகிறது.
தேநீர் அருந்தியபடி
நிச்சயிக்கப்படும் உறவில்
மழை நாளொன்றின் ஈரம்
உட்பொதிந்திருக்கக் கூடும்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
தொடர்ந்து கொண்டிருக்கின்றன
இன்னும்
திடமான தேநீர் ஒன்றின்
சுவையைப்போல்
நம் முத்தங்கள்
அ.வெண்ணிலா
இன்னும்
திடமான தேநீர் ஒன்றின்
சுவையைப்போல்
நம் முத்தங்கள்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
கணிகையின் மனசூறும் பேரன்பு
காதலற்ற காமமே என இடக்கைப்
புறந்தள்ளலில்
சாபம் பொங்கி வழிந்த
இசைக் குறிப்புகளைப் பருகிய
கடற்கரை மணற்துகள்கள்
அ.வெண்ணிலா
காதலற்ற காமமே என இடக்கைப்
புறந்தள்ளலில்
சாபம் பொங்கி வழிந்த
இசைக் குறிப்புகளைப் பருகிய
கடற்கரை மணற்துகள்கள்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
உதிரும் காதல் மகத்துவங்களை
பத்திரமாய் சேகரிக்கும்
ஒருவரை ஒருவர் வீழ்த்தும்
பிரயத்தனங்களை
பலமிழந்த ஆயுதங்களாக்கும்
நம் நிர்வாணங்களை முழுக்க
அறிந்த அறை ஒரு போதும்
ரகசியங்களை வெளிச் சொன்னதில்லை
நானற்றப் பொழுதுகளில்
என் கனிவை நினைவூட்டும்
… … … …
காதலர்கள் என்ற
வண்ணமயமான முகமூடி
அ.வெண்ணிலா
பத்திரமாய் சேகரிக்கும்
ஒருவரை ஒருவர் வீழ்த்தும்
பிரயத்தனங்களை
பலமிழந்த ஆயுதங்களாக்கும்
நம் நிர்வாணங்களை முழுக்க
அறிந்த அறை ஒரு போதும்
ரகசியங்களை வெளிச் சொன்னதில்லை
நானற்றப் பொழுதுகளில்
என் கனிவை நினைவூட்டும்
… … … …
காதலர்கள் என்ற
வண்ணமயமான முகமூடி
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
நிர்வாணம் சுமக்கும்
அற்புத கணங்களும்
களவிக்கு அழைக்கப்படுகின்றன
நானும் உடலும்
சுமைகளற்று
தனித்து மகிழும்
எளிய கணத்திற்கான
காத்திருப்புகள்
யுகங்களைக் கடந்தும்
காத்திருப்புகளாக
அ.வெண்ணிலா
அற்புத கணங்களும்
களவிக்கு அழைக்கப்படுகின்றன
நானும் உடலும்
சுமைகளற்று
தனித்து மகிழும்
எளிய கணத்திற்கான
காத்திருப்புகள்
யுகங்களைக் கடந்தும்
காத்திருப்புகளாக
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
பேசித் தீர்க்க முடியாத
என் மொழியின் ஓசைகள்
காற்றின் பாடலாய் வெளியெங்கும்
மொழிக்காடாய்
அடர்ந்திருக்கும் என்னிலிருந்து
காட்டாற்றாய்ப் பிரவகிக்கின்றன
மொழியின் புதுமைகள்
மொழியிலிருந்து கிளைத்தவள் நான்
மொழியானவள் நான்.
அ.வெண்ணிலா
என் மொழியின் ஓசைகள்
காற்றின் பாடலாய் வெளியெங்கும்
மொழிக்காடாய்
அடர்ந்திருக்கும் என்னிலிருந்து
காட்டாற்றாய்ப் பிரவகிக்கின்றன
மொழியின் புதுமைகள்
மொழியிலிருந்து கிளைத்தவள் நான்
மொழியானவள் நான்.
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
விமானம் பறப்பதை
அருகில் பார்க்கவே
25 வருடங்கள் பிடித்த எனக்கு
வெடிகுண்டு வீசும்
விமானங்கள் பற்றிக்
கற்பனை செய்ய முடியவில்லை.
எட்டுக்கு எட்டடி
இருட்டரையில் வாழ்ந்து
பழகியுள்ள என்னால்
ஓரளவுக்கு
பதுங்கு குழிகளின்
அனுபவம் உணர முடிகிறது
அ.வெண்ணிலா
அருகில் பார்க்கவே
25 வருடங்கள் பிடித்த எனக்கு
வெடிகுண்டு வீசும்
விமானங்கள் பற்றிக்
கற்பனை செய்ய முடியவில்லை.
எட்டுக்கு எட்டடி
இருட்டரையில் வாழ்ந்து
பழகியுள்ள என்னால்
ஓரளவுக்கு
பதுங்கு குழிகளின்
அனுபவம் உணர முடிகிறது
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
எரிகணைகளில் சிக்கித் கருகாத உடல்
பார்வையில் தீய்கிறது
சாம்பலாகும் மனசு
குண்டு மழைக்கிடையில்
புள்ளை எப்படி
புருஷன்காரனா இல்லை
என் வீட்டில் நாட்டில்
பல பெயர்கள் எனக்கு
உன்னாடு புதுப் பெயர் சூட்டியுள்ளது
அகதி.
அ.வெண்ணிலா
பார்வையில் தீய்கிறது
சாம்பலாகும் மனசு
குண்டு மழைக்கிடையில்
புள்ளை எப்படி
புருஷன்காரனா இல்லை
என் வீட்டில் நாட்டில்
பல பெயர்கள் எனக்கு
உன்னாடு புதுப் பெயர் சூட்டியுள்ளது
அகதி.
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
காலியாகும் நாற்காலியின்
பதற்றம் தீரும் முன்
நிரம்பும் நாற்காலியிலிருந்து
எழும் உயிர் நட்பின் ஈரம்
மனிதர்களைத் தேடி
மனிதர்களில் சீரழிகிறது காலம்
அ.வெண்ணிலா
பதற்றம் தீரும் முன்
நிரம்பும் நாற்காலியிலிருந்து
எழும் உயிர் நட்பின் ஈரம்
மனிதர்களைத் தேடி
மனிதர்களில் சீரழிகிறது காலம்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
விதையற்ற
விஷ விருட்சமொன்றாய்
எண் திசைகளிலும்
பரவி கொண்டிருக்கின்றன
நகரத்தின்
விஷ நாவுகள்
அ.வெண்ணிலா
விஷ விருட்சமொன்றாய்
எண் திசைகளிலும்
பரவி கொண்டிருக்கின்றன
நகரத்தின்
விஷ நாவுகள்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
ஆடையின்றி எப்படி?
நாகரீக மனுஷியல்லவா நீ?
கறையா முக்கியம்…
ஆடையன்றோ?.
நிர்வாணம்
உண்டாக்கிய பயத்தில்
அவசரமாய் அணிந்தாள்
கறைகளால் இற்றுப்போன
ஆடையை
அ.வெண்ணிலா
நாகரீக மனுஷியல்லவா நீ?
கறையா முக்கியம்…
ஆடையன்றோ?.
நிர்வாணம்
உண்டாக்கிய பயத்தில்
அவசரமாய் அணிந்தாள்
கறைகளால் இற்றுப்போன
ஆடையை
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
சமூகத்தின் கௌரவத்தை
ஆடையால் அலங்கரிக்க வேண்டிய
பெண்ணுக்கு
கைக்குட்டை வைக்க
ஏதுவான ஆடை எது
அ.வெண்ணிலா
ஆடையால் அலங்கரிக்க வேண்டிய
பெண்ணுக்கு
கைக்குட்டை வைக்க
ஏதுவான ஆடை எது
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
அங்க நின்னு பெசின
இங்க நின்னு பேசினன்னு
பேச்சு வந்தது
படிச்சது போதுமுன்னு
சோறாக்க வேண்டியதுதான்.
அங்க பார்த்தேன்
இங்க பார்த்தேன்
இப்படி தொட்டேன்னு
யார்கிட்டயாவது சொன்ன
பள்ளிக்கூடம் வர முடியாது
அ.வெண்ணிலா
இங்க நின்னு பேசினன்னு
பேச்சு வந்தது
படிச்சது போதுமுன்னு
சோறாக்க வேண்டியதுதான்.
அங்க பார்த்தேன்
இங்க பார்த்தேன்
இப்படி தொட்டேன்னு
யார்கிட்டயாவது சொன்ன
பள்ளிக்கூடம் வர முடியாது
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
இதெல்லாம் படிக்க வரலன்னு
யார் அழுதா
பஸ்ல ஏறிக்கிட்டு நின்ன இடத்துல
நிக்குது பாரு
எல்லா ஜோடி ஜோடியா
இந்த வயசுல
அ.வெண்ணிலா
யார் அழுதா
பஸ்ல ஏறிக்கிட்டு நின்ன இடத்துல
நிக்குது பாரு
எல்லா ஜோடி ஜோடியா
இந்த வயசுல
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
கவிதையின்
உயிர்த்திருக்கும் சொற்களை
வீழ்த்திச் சாய்க்க
போர்த்தி விடுகின்றனர்
முதலில் சால்வைகளை
அ.வெண்ணிலா
உயிர்த்திருக்கும் சொற்களை
வீழ்த்திச் சாய்க்க
போர்த்தி விடுகின்றனர்
முதலில் சால்வைகளை
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
நெடுஞ்சாலையின்
சிக்னல் ஒன்றில்
எதிர்பாராமல்
சந்தித்துக்கொள்ளும்
நிஜமுகங்களில்
வெடித்துச் சிதறுகின்றன
மின் முகங்கள்
அ.வெண்ணிலா
சிக்னல் ஒன்றில்
எதிர்பாராமல்
சந்தித்துக்கொள்ளும்
நிஜமுகங்களில்
வெடித்துச் சிதறுகின்றன
மின் முகங்கள்
அ.வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
நம் காதல்
மெல்ல
கைப்பேசியின் எண்களை
ஒத்திக்கொடுக்கத்
துவங்குகிறது
அ.வெண்ணிலா
மெல்ல
கைப்பேசியின் எண்களை
ஒத்திக்கொடுக்கத்
துவங்குகிறது
அ.வெண்ணிலா
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெண்ணிய கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|