Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ந.க.துறைவன் கவிதைகள்
Page 1 of 1 • Share
ந.க.துறைவன் கவிதைகள்
பார்வை
பாதையில்
நடந்துக் கொண்டிருந்தவன்
திரும்பித்திரும்பிப் பார்த்தான்
எதற்காகத் திரும்பிப்
பார்க்கிறான் என்று
புரியவில்லை
பிறகுதான் தெரிந்தது
பின்னால் யாரோ
அழகானப் பெண் வருவது
அவன் பார்வை
மீண்டும் பின்னால்
முன்னால் இல்லை
வேகமாய் எதிரில் வந்த
மோட்டார் பைக்காரன்
“முன்னால பார்த்துப்போடா
முண்டம்
வீட்டுலே சொல்லிட்டு
வந்துட்டியா?” என்று
கத்தினான்
அப்பத்தான்
சுய நினைவுக்கு வந்தான்
வெட்கத்துடன்
வியர்த்துக்கொட்டியது
அவன் முகம்.
பாதையில்
நடந்துக் கொண்டிருந்தவன்
திரும்பித்திரும்பிப் பார்த்தான்
எதற்காகத் திரும்பிப்
பார்க்கிறான் என்று
புரியவில்லை
பிறகுதான் தெரிந்தது
பின்னால் யாரோ
அழகானப் பெண் வருவது
அவன் பார்வை
மீண்டும் பின்னால்
முன்னால் இல்லை
வேகமாய் எதிரில் வந்த
மோட்டார் பைக்காரன்
“முன்னால பார்த்துப்போடா
முண்டம்
வீட்டுலே சொல்லிட்டு
வந்துட்டியா?” என்று
கத்தினான்
அப்பத்தான்
சுய நினைவுக்கு வந்தான்
வெட்கத்துடன்
வியர்த்துக்கொட்டியது
அவன் முகம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் கவிதைகள்
பிரபஞ்ச ரகசியம்
*உலகில் வாழும் மானுடத்தின்
உண்மை ரகசிய மெல்லாம்
உனக்குத் தெரியுமா?
தெரியுமென்றால்,
அது அகந்தை
தெரியாது என்றால்,
அது தன்னடக்கம்
பிரபஞ்ச ரகசியம்
உணர்வது அவசியம்!
** எது, எதை, எப்படி
எடைபோட வேண்டுமென்று
நிர்ணயித்துள்ளவன் நீ
தங்கத்தை எடைபோட
குன்றிமணியை அல்லவா
பயன்படுத்த வைத்தாய்
இப்பொழுதோ
தங்கம் விலை உயர்வானது
குன்றி மணி விலை குறைவானது!
***எது தீட்டானது?
உங்கள்
உடலா? ஆன்மாவா?
பாதையோரம் ஒதுங்கி நின்று
புலையன் கேட்டக் கேள்வி
ஆதிசங்கரரை அதிர வைத்தது
இவர்களில்
யார் ஞானி?
யார் அஞ்ஞானி?
***ஆசைகள்
அழிவதில்லை
நாமே
அழிகிறோம்
*உலகில் வாழும் மானுடத்தின்
உண்மை ரகசிய மெல்லாம்
உனக்குத் தெரியுமா?
தெரியுமென்றால்,
அது அகந்தை
தெரியாது என்றால்,
அது தன்னடக்கம்
பிரபஞ்ச ரகசியம்
உணர்வது அவசியம்!
** எது, எதை, எப்படி
எடைபோட வேண்டுமென்று
நிர்ணயித்துள்ளவன் நீ
தங்கத்தை எடைபோட
குன்றிமணியை அல்லவா
பயன்படுத்த வைத்தாய்
இப்பொழுதோ
தங்கம் விலை உயர்வானது
குன்றி மணி விலை குறைவானது!
***எது தீட்டானது?
உங்கள்
உடலா? ஆன்மாவா?
பாதையோரம் ஒதுங்கி நின்று
புலையன் கேட்டக் கேள்வி
ஆதிசங்கரரை அதிர வைத்தது
இவர்களில்
யார் ஞானி?
யார் அஞ்ஞானி?
***ஆசைகள்
அழிவதில்லை
நாமே
அழிகிறோம்
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் கவிதைகள்
அலைகளில் அலைகழிந்து...
அஸ்தியை
கடல் நீரில் – உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும் பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத் தொடங்கியது
அந்த
அஸ்தியின் வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின மீன்கள்!
---
கிராமங்களில்
அவ்வளவு
கண்டிப்புடன்
கடைபிடிக்கிறார்கள்
காலம் காலமாய்
மாலை நேரம்
விளக்கு வைச்சதும்
கைமாத்தாய்
எவருக்கும் எவரும்
கொடுப்பதில்லை
சமையல் உப்பு.
அஸ்தியை
கடல் நீரில் – உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும் பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத் தொடங்கியது
அந்த
அஸ்தியின் வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின மீன்கள்!
---
கிராமங்களில்
அவ்வளவு
கண்டிப்புடன்
கடைபிடிக்கிறார்கள்
காலம் காலமாய்
மாலை நேரம்
விளக்கு வைச்சதும்
கைமாத்தாய்
எவருக்கும் எவரும்
கொடுப்பதில்லை
சமையல் உப்பு.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் கவிதைகள்
அத்துமீறும் வன்முறைகள்
ஊரெங்கும்
வெடிகுண்டு,
கலவரம், மரணம்.
பயந்து ஒதுங்கும்
மக்கள் நெரிசல்,
அத்துமீறும்
வன்முறைகள்,
அமைதியாய்
அச்சமின்றி
வேடிக்கை பார்க்கும்
உயர்கோபுரத்திலிருந்து
வெண்புறாக்கள்.
ஊரெங்கும்
வெடிகுண்டு,
கலவரம், மரணம்.
பயந்து ஒதுங்கும்
மக்கள் நெரிசல்,
அத்துமீறும்
வன்முறைகள்,
அமைதியாய்
அச்சமின்றி
வேடிக்கை பார்க்கும்
உயர்கோபுரத்திலிருந்து
வெண்புறாக்கள்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் கவிதைகள்
உப்பு கரித்தது உதடு
இனிக்குமென நினைத்து
முத்தமிட்டான்
உப்பு கரித்தது உதடு.
பலரும் பாராட்டினார்கள்
பாட்டியின்
நாட்டு(கை) வைத்தியம்.
எழுபது வயது முதியவர்
நகைச்சுவை எழுதி அனுப்பினார்
பரிசாக் கிடைத்தது “டீ” சர்ட்.
ஒலி எழுப்பிப் பார்த்தார் ஓட்டுநர்
அசைந்து நகரவில்லை
பாதையின் குறுக்கே எருமை.
காலையில் மார்க்கெட் போகிறது
காரில் சொகுசாய்
வளர்ப்பு நாய்க் குட்டி.
ஜல்லிக்கட்டுப் போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றவன்
குடும்பவாழ்க்கையில் தோல்வி.
காற்றில் மிதந்து வந்தது
மூக்கைப் பொத்தினார்கள்
தோல் கழிவுநீர் நாற்றம்.
அபாரமான பயிற்சி
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது
மோப்ப நாய்கள்.
“தண்ணி வண்டி” என
குழந்தைகள் கேலி செய்தனர்
போதையில் போகும் குடிகாரன்
தங்கம் விலை தெரியுமா?
தங்கத் தேரில்
பவனிவரும் சாமிக்கு.
குடிநீர் தொட்டியில் விழுந்து
தற்கொலை செய்துகொண்டது
குதித்து விளையாடிய அணில்.
மனிதர்களால் இயலவில்லை
கள்ள நோட்டைக்
கண்டுபிடிக்கிறது கருவி.
இனிக்குமென நினைத்து
முத்தமிட்டான்
உப்பு கரித்தது உதடு.
பலரும் பாராட்டினார்கள்
பாட்டியின்
நாட்டு(கை) வைத்தியம்.
எழுபது வயது முதியவர்
நகைச்சுவை எழுதி அனுப்பினார்
பரிசாக் கிடைத்தது “டீ” சர்ட்.
ஒலி எழுப்பிப் பார்த்தார் ஓட்டுநர்
அசைந்து நகரவில்லை
பாதையின் குறுக்கே எருமை.
காலையில் மார்க்கெட் போகிறது
காரில் சொகுசாய்
வளர்ப்பு நாய்க் குட்டி.
ஜல்லிக்கட்டுப் போட்டியில்
தங்கப் பதக்கம் வென்றவன்
குடும்பவாழ்க்கையில் தோல்வி.
காற்றில் மிதந்து வந்தது
மூக்கைப் பொத்தினார்கள்
தோல் கழிவுநீர் நாற்றம்.
அபாரமான பயிற்சி
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறது
மோப்ப நாய்கள்.
“தண்ணி வண்டி” என
குழந்தைகள் கேலி செய்தனர்
போதையில் போகும் குடிகாரன்
தங்கம் விலை தெரியுமா?
தங்கத் தேரில்
பவனிவரும் சாமிக்கு.
குடிநீர் தொட்டியில் விழுந்து
தற்கொலை செய்துகொண்டது
குதித்து விளையாடிய அணில்.
மனிதர்களால் இயலவில்லை
கள்ள நோட்டைக்
கண்டுபிடிக்கிறது கருவி.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் கவிதைகள்
வளர்ச்சி
தெருக் கூத்துப் பர்த்து
மெய்சிலிர்த்து
பொழுதுபோக்கி வாழ்ந்தார்
என் தாத்தா
வானொலிப்
பெட்டிவாங்கி
பாட்டுக்கேட்டார்
என் அப்பா
கலர் டி.வி
பெட்டி வாங்கி
படம்பார்க்கிறேன்
நான்
மடிக்கணினி
வாங்கிப்பலதைப்
படிக்கிறான்
என் மகன்
கைபேசி
இன்டெர்நெட்டில்
உலக நடப்பை
அறிகிறான்
என் பேரன்
நாளை...
என்ன கருவி
புதியதாய் இருக்கும் -என்
கொள்ளுபேரன்
கைகளில்...
தெருக் கூத்துப் பர்த்து
மெய்சிலிர்த்து
பொழுதுபோக்கி வாழ்ந்தார்
என் தாத்தா
வானொலிப்
பெட்டிவாங்கி
பாட்டுக்கேட்டார்
என் அப்பா
கலர் டி.வி
பெட்டி வாங்கி
படம்பார்க்கிறேன்
நான்
மடிக்கணினி
வாங்கிப்பலதைப்
படிக்கிறான்
என் மகன்
கைபேசி
இன்டெர்நெட்டில்
உலக நடப்பை
அறிகிறான்
என் பேரன்
நாளை...
என்ன கருவி
புதியதாய் இருக்கும் -என்
கொள்ளுபேரன்
கைகளில்...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் கவிதைகள்
தங்கம் விலை தெரியுமா?
தங்கத் தேரில்
பவனிவரும் சாமிக்கு.
அருமையான வரிகள்..
கண்மணி சிங்
தங்கத் தேரில்
பவனிவரும் சாமிக்கு.
அருமையான வரிகள்..
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ந.க.துறைவன் கவிதைகள்
வளர்ச்சி கவிதை
கால மாற்றத்தை சிறப்பாய் சொன்னது
பாராட்டுக்கள்
கால மாற்றத்தை சிறப்பாய் சொன்னது
பாராட்டுக்கள்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: ந.க.துறைவன் கவிதைகள்
வரிகள் ஒவ்வொன்றும் அருயமையோ அருமை.
கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா
கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ந.க.துறைவன் கவிதைகள்
கவிதைகள் அத்தனையும் முத்துக்கள் .பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|