Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
மயிலாடுதுறையில் பெரிய செல்வந்தராக விளங்குபவர் முரளிராஜா அவர்கள். தனது தொழில் திறமையால் அயல் நாடுகளில் அவரின் தொழில் விரிந்து பரந்து இருந்தது .அவர் டாலராகவும் ரூபாயாகவும் சம்பாதித்த பணத்தை நல்வழியில் செல்வு செய்தார் அந்த வகையில் அவர் முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவு அற்றோர்களுக்கும் கோயில் புனரமைப்புக்கும் செலவு செய்து வந்தார் .மீதமுள்ள தொகையினை தன் மகனுக்கும் மகளுக்கும் எதிர் கால நலன் கருதி வங்கியில் வைப்பு தொகையாக வைத்திருந்தார் .இந்த ஆண்டு அவரது திறமையினால் பெரும் தொகை லாபமாக கிடைதது . என்ன செய்வது வென்று தெரியாமல் இருந்த நிலையில் புத்திசாலியான அவரது மனைவி ஒரு யோசனை தெரிவித்தார்கள் . அவரும் எப்போதும் தன் மனைவியின் யோசனை கேட்டே நல்ல செயல்களை செய்வார் . அவரது மனைவிக்கு நீண்ட நாட்களாக மயிலாடுதுறையின் மைய பகுதியில் அழகிய அரண்மனை போன்ற பங்களா ஒன்று கட்டவேண்டும் என்றும் அதில் நம் குடும்ப உறவினர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசிக்கவேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தை வெளிபடுத்தினார்கள் .
மனைவி சொல்லே மந்திரம் என்னும் தாரக மந்திரத்தை கடைபிடிக்கும் முரளிராஜாவும் உடனே மைலாடுதுறையின் மைய பகுதியில் ஒரு 5 கிரவுண்டு நிலம் வாங்கி ஆறே மாதத்தில் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் அழகிய அரண்மனை ஒன்றை கட்டி புது மனை புகு விழாவிர்க்கு நாள் குறித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி விட்டார் . அந்த விழா நாளும் வந்தது நண்பர்களும் உறவின்ர்களும் சுற்றம் சூழ எண்ணற்ற ஆசீர்வாதங்களுடன் புதுமனை புகு விழா சிறப்பாக நடைபெற்றது .
பொதுவாகவே முரளிராஜாவுக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு அதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லும்படி சிலர் உண்டு அவர்கள் ஸ்ரீராம் மகாபிரபு ஜேக் செந்தில் பித்தன் ரமேஷ் ரனுஜா மொஹிதீன் முத்து முகமது சசி இனியவன் சரண் மற்றும் முழுமுதலோன் . இவர்கள் அனைவரையும் தன் வீட்டு விழாவிற்க்கு அழைத்திருந்தார் . இதில் ரமேஷ் என்பவர் தான் பணிபுரியும் கல்லூரியில் பல்கலைகழக தேர்வு நடப்பதால் தன்னால் வர இயலவில்லை என்றும் தன் குடும்பத்துடன் வேறு ஒரு நாள் வருவதாகவும் சொல்லிவிட்டார் . முழுமுதலோனும் தன் குடும்ப சூழ்நிலயின் காரணமாக தன்னால் வர இய்லவில்லை என்றும் வேறு ஒரு நாள் தன் குடும்பத்துடன் வருவதாகவும் இரண்டு நாட்கள் அங்கு தங்கி அருகில் உள்ள திருதலங்களை எல்லாம் தரிசனம் செய்ய போவதாகவும் தெரிவித்து விட்டார் .
புதுமனை புகு விழா சிறப்பாக முடிந்ததும் நண்பர்கள் அனைவரும் விடைபெறும் தருணத்தில் முரளிராஜாவின் விருப்பத்திற்க்கு இணங்க ஸ்ரீராம் மகா பிரபு செந்தில் சசிகுமார் பித்தன் மற்றும் ஜேக் அறுவரும் அங்கேயே தங்கி விட்டனர் .முரளிராஜா அன்றுதான் வாங்கிய புத்தம் புது ரோல்ல்ஸ் ரோய் காரில் நண்பர்கள் அனைவரையும் அருகில் உள்ள கோவிந்தபுரம் மற்றும் அதன் அருகில் உள்ள சங்கர மடம் வைதீஸ்வரன்கோயில் மற்றும் திருக்கடையூர் அழைத்து சென்று தரிசனம் செய்து விட்டு இரவு அரண்மனை திரும்பி அறுசுவை உணவு உண்ட பின்னர் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர் .
இரவு நேரத்தில் அந்த அரண்மனை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை போல் காட்சி அளித்து கொண்டு இருந்தது அந்த அரண்மனையில் பழங்காலத்து கலை பொருட்களும் பிரமாண்டமான ஹாலில் கலை நயத்துடன் செய்யப்பட்டு தொங்க விடப்பட்ட ஊஞ்சலுமே அனைவரையும் வெகுவாக கவர்ந்ததாக இருந்தது . பொதுவாகவே ஊஞ்சல் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் . அந்த நேரத்தில் முரளிராஜாவின் புத்திசாலி குழந்தைகள் இருவரும் தன் அம்மாவோடு ஊஞ்சல் ஆடி கொண்டு இருந்தார்கள் .
பொதுவாகவே ஸ்ரீராம் அவ்ர்களுக்கு போட்டி என்றால் விருப்பம் அதிகம் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் . என்ன செய்வது என்று யோசித்த ஸ்ரீராம் முரளி அவ்ர்களை அழைத்து புன்முறுவலுடன் ஒரு போட்டியை துவக்கினார் .அதன்படி அங்கு உள்ளவர்கள் 3 குழுவாக பிரிக்கபட்டனர் .முதல் குழுவில் முரளிராஜா தன் குடும்பமும் இரண்டாவது குழுவில் ஸ்ரீராம் மகா பிரபு செந்தில் ஆகிய மூவரும் மூன்றாவது குழுவில் சசியும் பித்தனும் ஜேக்வும் அடங்குவர் .
போட்டியின் படி ஒவ்வொரு டீமும் ஒரு நிமிஷம் ஊஞ்சலாடனும். யார் அந்த ஒரு நிமிடத்தில் அதிக ஆட்டம் ஆடறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்க என்ற ஆட்ட விதிமுறைகளை சொன்னார் ஸ்ரீராம் ஒரு ஆட்டங்கிறது ஒரு பக்கத்தில ஆரம்பிச்சு திரும்பி அதே பக்கத்துக்கு வர்றது ஒரு ஆட்டம் . ஒரு டீம் ஆடும்போது இன்னொரு டீம் செல் ஃபோன் ஸ்டாப் கிளாக் வச்சு ஒரு நிமிஷத்தில ஆட்டத்தை எண்ணணும்னு முடிவு பண்ணி போட்டிய ஆராம்பிச்சாங்க.
முதல்ல முரளிராஜா குடும்பம் ஊஞ்சலில் வேகமா ஆட ஆரம்பிச்சாங்க.
அடுத்து ஸ்ரீராம் குழுவினர் ஆடினாங்க அவங்களால முரளிராஜா குடும்பதினர் மாதிரி வேகமா ஆட முடியல
கடைசியா ஜேக் குழுவினர் ஆடினாங்க.ஆனா அவங்க என்னவோ தெரியவில்லை வழக்கத்தை விட மெதுவா ஆடினாங்க. ஒருவேளை காலையிலிருந்து விழாவிர்க்கு வந்தவர்களை கவனித்த தாலும் இருக்கலாம்
இப்ப அமர்க்கள உறவுகளாகிய உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த ஒரு நிமிட ஊஞ்சல் ஆட்டதில எந்த அணி ஜெயிச்சிருப்பாங்க?
1.முரளிராஜா குடும்பம் 2.ஸ்ரீராம் குழுவினர் 3.ஜேக் குழுவினர்
வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு அழகிய ஊஞ்சல் ஒன்று பரிசளிக்கப்படும்
புதிரின் விடை நாளை மாலை வெளிவரும்
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ரானுஜா wrote:
சகோதரி எதுக்கு கையை தட்ரிங்க
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
வாவ் வித்தியாசமான புதிர்
ஆனா என்னைத்தான் ................
ஆனா என்னைத்தான் ................
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
முரளிராஜா wrote:வாவ் வித்தியாசமான புதிர்
ஆனா என்னைத்தான் ................
ஏன் உங்களுக்கு என்ன?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
- Code:
அவரும் எப்போதும் தன் மனைவியின் யோசனை கேட்டே நல்ல செயல்களை செய்வார் .,,,,,,
மனைவி சொல்லே மந்திரம் என்னும் தாரக மந்திரத்தை கடைபிடிக்கும் முரளிராஜாவும் ....
பப்ளிக்கா சொல்லிட்டாரே
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
அண்ணா உங்கள் கதை எழுத்து நடை ரொம்ப நல்லாருக்கு, இது போன்ற புதிர்களை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
சரி விடையை நானே முதலில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.
ஊஞ்சலில் வேகமாக ஆடினால் முன்னும் பின்னும் அதிகம் தூரம் சென்று வர வேண்டும். எனவே வேகத்தினால் எண்ணிக்கை குறையும்.
எனவே முரளி குடும்பம் இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை.
அடுத்து ஸ்ரீராம் குருப் முரளியை விட சற்று அதிகம் எண்ணிக்கையில் இருக்கும், ஆனால் ஸ்ரீராம் குருப்புக்கும் வெற்றி இல்லை.
முடிவில் ஜேக் குருப்க்கு அன்று அதிக வேலை இருந்ததால் கை கால் அதிகம் அசதி ஆகி இருக்கும், அவர்கள் ஊஞ்சலில் மிக குறுகிய தூரம் மட்டுமே மின் பின் சென்று வந்திருப்பார்கள், எனவே ஜேக் குருப் ஸ்ரீராம் குருப்பை விட சற்று அதிக எண்ணிக்கையில் பெற்று வெற்றியை பெற்றிருப்பார்கள்.
அண்ணன் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
இது இல்லையென்றால் அடுத்து யோசிக்கணும்.
சரி விடையை நானே முதலில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.
ஊஞ்சலில் வேகமாக ஆடினால் முன்னும் பின்னும் அதிகம் தூரம் சென்று வர வேண்டும். எனவே வேகத்தினால் எண்ணிக்கை குறையும்.
எனவே முரளி குடும்பம் இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை.
அடுத்து ஸ்ரீராம் குருப் முரளியை விட சற்று அதிகம் எண்ணிக்கையில் இருக்கும், ஆனால் ஸ்ரீராம் குருப்புக்கும் வெற்றி இல்லை.
முடிவில் ஜேக் குருப்க்கு அன்று அதிக வேலை இருந்ததால் கை கால் அதிகம் அசதி ஆகி இருக்கும், அவர்கள் ஊஞ்சலில் மிக குறுகிய தூரம் மட்டுமே மின் பின் சென்று வந்திருப்பார்கள், எனவே ஜேக் குருப் ஸ்ரீராம் குருப்பை விட சற்று அதிக எண்ணிக்கையில் பெற்று வெற்றியை பெற்றிருப்பார்கள்.
அண்ணன் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
இது இல்லையென்றால் அடுத்து யோசிக்கணும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ஸ்ரீராம் wrote:சரி விடையை நானே முதலில் சொல்ல முயற்ச்சிக்கிறேன்.
முதலில் பதில் சொல்ல ஆரம்பித்தவர் மகா பிரபு
மகாபிரபு wrote:Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
by மகா பிரபு Today at 2:53 pm
மு.ரா குடும்பம்
ஸ்ரீராம் wrote:இது இல்லையென்றால் அடுத்து யோசிக்கணும்.
யோசிக்க இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கிங்க .....
இன்னும் நல்லா தீவிரமா யோசிங்கமா ...யோசிங்க !!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
அப்படியா ஆகட்டும் அண்ணா.
மேலும் யோசிக்கிறேன்.
மேலும் யோசிக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
முழுமுதலோன் wrote:ரானுஜா wrote:
சகோதரி எதுக்கு கையை தட்ரிங்க
மு.ரா கதைய நல்லா திரிச்சு இருக்கிங்கண்ணா அதான் பாராட்ட்டினேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
முரளிராஜா wrote:
- Code:
அவரும் எப்போதும் தன் மனைவியின் யோசனை கேட்டே நல்ல செயல்களை செய்வார் .,,,,,,
மனைவி சொல்லே மந்திரம் என்னும் தாரக மந்திரத்தை கடைபிடிக்கும் முரளிராஜாவும் ....
பப்ளிக்கா சொல்லிட்டாரே
அதுதான் தெரிந்த விஷயம் ஆயிற்றே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
பதில்: 1.
வெற்றி பெற்றது - முரளிராஜா குடும்பமே. ஏனென்றால்...
ஒரு குழு வெற்றி பெற வேண்டுமானால்... குழுவுக்குள் ஒற்றுமை முதலில் காணப்பட வேண்டும். அது ஒரு குடும்பத்தில் முழுமையாக இருப்பதை காணலாம். பிள்ளைகள் இருவரும் மிகவும் புத்திசாலிகள் வேறு. எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பு காணப்படும். எனவே, ஜெயித்து விட்டார்கள்.
மற்ற இருகுழுக்களில் ஒற்றுமை காணப்படுவது கடினமே. காரணம்... நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காது என்பதுபோல... மற்றகுழுக்களில் இருப்பவர்கள் இருப்பதால்.
ஜேக்கின் குழு தோல்வியை சந்தித்தன் காரணத்தை அவரே கூறிவிட்டார். பாவம் அலுப்பு. சோர்வு - இது வெற்றியையை அடைய விடவில்லை.
வெற்றி பெற்றது - முரளிராஜா குடும்பமே. ஏனென்றால்...
ஒரு குழு வெற்றி பெற வேண்டுமானால்... குழுவுக்குள் ஒற்றுமை முதலில் காணப்பட வேண்டும். அது ஒரு குடும்பத்தில் முழுமையாக இருப்பதை காணலாம். பிள்ளைகள் இருவரும் மிகவும் புத்திசாலிகள் வேறு. எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பு காணப்படும். எனவே, ஜெயித்து விட்டார்கள்.
மற்ற இருகுழுக்களில் ஒற்றுமை காணப்படுவது கடினமே. காரணம்... நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காது என்பதுபோல... மற்றகுழுக்களில் இருப்பவர்கள் இருப்பதால்.
ஜேக்கின் குழு தோல்வியை சந்தித்தன் காரணத்தை அவரே கூறிவிட்டார். பாவம் அலுப்பு. சோர்வு - இது வெற்றியையை அடைய விடவில்லை.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
பதில்: 2.
முரளி குடும்பம் வெற்றி பெற காரணம்.
ராம் குழுவினர் அவர்களோடு போட்டி போட்டு படுதோல்வியை சந்தித்தனர்.
ஜேக் குழுவினர் நல்ல சிந்தனைதான் காரணம். அதாவது, ஏற்கனவே ராம் குழுவினரோடு போட்யிட்டு சோர்வாக காணப்பட்டனர் மு.ரா.குடும்பம். அதுமட்டுமல்ல... சிறுபிள்ளைகள் தோல்வியை கண்டு நல்ல நாள் அதுவுமாக களையிழந்து விடுவார்கள் என பிள்ளைகளின் நலம் கருதி, ஜேக்கின் மிக பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, பாசமிகு குணம், போன்ற பல நல்லொழுக்கங்கள் நற்சிந்தனைகள் போன்ற காரணங்களால் விட்டுக் கொடுத்த படியால் மு.ரா.குடும்பம் வெற்றி பெற்றது.
குறிப்பு: ஜேக்கின் மிகப் பெருந்தன்மையான குணநலன்களை தயவுசெய்து யாரும் வெளி உலகிற்கு தெரியபடுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால்...இந்தமாதிரி மலிவான விளம்பரங்கள் எல்லாம் அவருக்கு சுத்தமாக பிடிக்காது.
முரளி குடும்பம் வெற்றி பெற காரணம்.
ராம் குழுவினர் அவர்களோடு போட்டி போட்டு படுதோல்வியை சந்தித்தனர்.
ஜேக் குழுவினர் நல்ல சிந்தனைதான் காரணம். அதாவது, ஏற்கனவே ராம் குழுவினரோடு போட்யிட்டு சோர்வாக காணப்பட்டனர் மு.ரா.குடும்பம். அதுமட்டுமல்ல... சிறுபிள்ளைகள் தோல்வியை கண்டு நல்ல நாள் அதுவுமாக களையிழந்து விடுவார்கள் என பிள்ளைகளின் நலம் கருதி, ஜேக்கின் மிக பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, பாசமிகு குணம், போன்ற பல நல்லொழுக்கங்கள் நற்சிந்தனைகள் போன்ற காரணங்களால் விட்டுக் கொடுத்த படியால் மு.ரா.குடும்பம் வெற்றி பெற்றது.
குறிப்பு: ஜேக்கின் மிகப் பெருந்தன்மையான குணநலன்களை தயவுசெய்து யாரும் வெளி உலகிற்கு தெரியபடுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால்...இந்தமாதிரி மலிவான விளம்பரங்கள் எல்லாம் அவருக்கு சுத்தமாக பிடிக்காது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ஜேக் wrote:பதில்: 1.
வெற்றி பெற்றது - முரளிராஜா குடும்பமே. ஏனென்றால்...
ஒரு குழு வெற்றி பெற வேண்டுமானால்... குழுவுக்குள் ஒற்றுமை முதலில் காணப்பட வேண்டும். அது ஒரு குடும்பத்தில் முழுமையாக இருப்பதை காணலாம். பிள்ளைகள் இருவரும் மிகவும் புத்திசாலிகள் வேறு. எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பு காணப்படும். எனவே, ஜெயித்து விட்டார்கள்.
மற்ற இருகுழுக்களில் ஒற்றுமை காணப்படுவது கடினமே. காரணம்... நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காது என்பதுபோல... மற்றகுழுக்களில் இருப்பவர்கள் இருப்பதால்.
ஜேக்கின் குழு தோல்வியை சந்தித்தன் காரணத்தை அவரே கூறிவிட்டார். பாவம் அலுப்பு. சோர்வு - இது வெற்றியையை அடைய விடவில்லை.
யாரு சொன்னது ஒற்றுமை இல்லைனு. ஏதோ முரளி குடும்பத்தில் போயி அவர்களை சங்கட பட வைக்க கூடாதுணு வேண்டும்யென்ற தோற்றோம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ஜேக் wrote:பதில்: 2.
முரளி குடும்பம் வெற்றி பெற காரணம்.
ராம் குழுவினர் அவர்களோடு போட்டி போட்டு படுதோல்வியை சந்தித்தனர்.
ஜேக் குழுவினர் நல்ல சிந்தனைதான் காரணம். அதாவது, ஏற்கனவே ராம் குழுவினரோடு போட்யிட்டு சோர்வாக காணப்பட்டனர் மு.ரா.குடும்பம். அதுமட்டுமல்ல... சிறுபிள்ளைகள் தோல்வியை கண்டு நல்ல நாள் அதுவுமாக களையிழந்து விடுவார்கள் என பிள்ளைகளின் நலம் கருதி, ஜேக்கின் மிக பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, பாசமிகு குணம், போன்ற பல நல்லொழுக்கங்கள் நற்சிந்தனைகள் போன்ற காரணங்களால் விட்டுக் கொடுத்த படியால் மு.ரா.குடும்பம் வெற்றி பெற்றது.
குறிப்பு: ஜேக்கின் மிகப் பெருந்தன்மையான குணநலன்களை தயவுசெய்து யாரும் வெளி உலகிற்கு தெரியபடுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால்...இந்தமாதிரி மலிவான விளம்பரங்கள் எல்லாம் அவருக்கு சுத்தமாக பிடிக்காது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
இந்த புதிர் அவ்வளவு வேகமாக போகலியே .....
என்ன காரணம்
சரி இன்னும் யாராவது நல்லா யோசிக்க்ரங்கன்னு பார்க்கலாம்
உங்களுக்கு எல்லாம் புதிர் புரிகிறது அல்லவா ???
என்ன காரணம்
சரி இன்னும் யாராவது நல்லா யோசிக்க்ரங்கன்னு பார்க்கலாம்
உங்களுக்கு எல்லாம் புதிர் புரிகிறது அல்லவா ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
விடை:
ஜெயித்தது ஜேக் குழுவினர்தான்.
எப்படி?
ஒரு டீம் ஆடும்போது இன்னொரு டீம் செல் ஃபோன் ஸ்டாப் கிளாக் வச்சு ஒரு நிமிஷத்தில ஆட்டத்தை எண்ணணும்னு முடிவு பண்ணி போட்டிய ஆராம்பிச்சாங்க.
ராம் குழுவினர் இப்போதான் ஆடி களைத்துப்போய் வந்து தோல்வியோடு அமர்ந்தனர். அவர்களால் ஜேக் குழுவினர் ஆடுவதை "ஸ்டாப் கிளாக் வாட்சை" வைத்து கவனிக்க இயலாமற்போனது.
மு.ரா.வாண்டூஸ் விளையாட்டுத்தனமாக செயல்பட்டதில் எண்ணிக்கையில் கோட்டை விட்டுவிட்டதால் ... ஜேக் குழுவினர் ஜெயித்து விட்டனர்.
இப்படியும் இருக்கலாமோ...
ஜெயித்தது ஜேக் குழுவினர்தான்.
எப்படி?
ஒரு டீம் ஆடும்போது இன்னொரு டீம் செல் ஃபோன் ஸ்டாப் கிளாக் வச்சு ஒரு நிமிஷத்தில ஆட்டத்தை எண்ணணும்னு முடிவு பண்ணி போட்டிய ஆராம்பிச்சாங்க.
ராம் குழுவினர் இப்போதான் ஆடி களைத்துப்போய் வந்து தோல்வியோடு அமர்ந்தனர். அவர்களால் ஜேக் குழுவினர் ஆடுவதை "ஸ்டாப் கிளாக் வாட்சை" வைத்து கவனிக்க இயலாமற்போனது.
மு.ரா.வாண்டூஸ் விளையாட்டுத்தனமாக செயல்பட்டதில் எண்ணிக்கையில் கோட்டை விட்டுவிட்டதால் ... ஜேக் குழுவினர் ஜெயித்து விட்டனர்.
இப்படியும் இருக்கலாமோ...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
யாருமே விடைய கண்டுபிடிக்கலயா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ரானுஜா அமர்க்களம் சினேகிதி wrote:யாருமே விடைய கண்டுபிடிக்கலயா?
நம்மிடத்தில் நிறைய திறமைசாலிகள் இருந்தும் ஏன் இன்னும் அமைதியா இருக்கிறாங்கன்னு தெரியலை.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ஜேக் wrote:விடை:
ஜெயித்தது ஜேக் குழுவினர்தான்.
எப்படி?
ஒரு டீம் ஆடும்போது இன்னொரு டீம் செல் ஃபோன் ஸ்டாப் கிளாக் வச்சு ஒரு நிமிஷத்தில ஆட்டத்தை எண்ணணும்னு முடிவு பண்ணி போட்டிய ஆராம்பிச்சாங்க.
ராம் குழுவினர் இப்போதான் ஆடி களைத்துப்போய் வந்து தோல்வியோடு அமர்ந்தனர். அவர்களால் ஜேக் குழுவினர் ஆடுவதை "ஸ்டாப் கிளாக் வாட்சை" வைத்து கவனிக்க இயலாமற்போனது.
மு.ரா.வாண்டூஸ் விளையாட்டுத்தனமாக செயல்பட்டதில் எண்ணிக்கையில் கோட்டை விட்டுவிட்டதால் ... ஜேக் குழுவினர் ஜெயித்து விட்டனர்.
இப்படியும் இருக்கலாமோ...
ஜேக் நீங்களும் எல்லா வகையிலும் சொல்லி இருக்கீங்க.
வெற்றி பெற்றது ஜேக் குழுவினர்தான் என்பது என் முடிவு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
இன்னும் 5 நிமிடத்தில் சரியான விடை வெளியாகும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ஐந்து நிமிடம் ஆயிற்று அண்ணா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #19
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #8
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #19
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #8
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|