Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
First topic message reminder :
மயிலாடுதுறையில் பெரிய செல்வந்தராக விளங்குபவர் முரளிராஜா அவர்கள். தனது தொழில் திறமையால் அயல் நாடுகளில் அவரின் தொழில் விரிந்து பரந்து இருந்தது .அவர் டாலராகவும் ரூபாயாகவும் சம்பாதித்த பணத்தை நல்வழியில் செல்வு செய்தார் அந்த வகையில் அவர் முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவு அற்றோர்களுக்கும் கோயில் புனரமைப்புக்கும் செலவு செய்து வந்தார் .மீதமுள்ள தொகையினை தன் மகனுக்கும் மகளுக்கும் எதிர் கால நலன் கருதி வங்கியில் வைப்பு தொகையாக வைத்திருந்தார் .இந்த ஆண்டு அவரது திறமையினால் பெரும் தொகை லாபமாக கிடைதது . என்ன செய்வது வென்று தெரியாமல் இருந்த நிலையில் புத்திசாலியான அவரது மனைவி ஒரு யோசனை தெரிவித்தார்கள் . அவரும் எப்போதும் தன் மனைவியின் யோசனை கேட்டே நல்ல செயல்களை செய்வார் . அவரது மனைவிக்கு நீண்ட நாட்களாக மயிலாடுதுறையின் மைய பகுதியில் அழகிய அரண்மனை போன்ற பங்களா ஒன்று கட்டவேண்டும் என்றும் அதில் நம் குடும்ப உறவினர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசிக்கவேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தை வெளிபடுத்தினார்கள் .
மனைவி சொல்லே மந்திரம் என்னும் தாரக மந்திரத்தை கடைபிடிக்கும் முரளிராஜாவும் உடனே மைலாடுதுறையின் மைய பகுதியில் ஒரு 5 கிரவுண்டு நிலம் வாங்கி ஆறே மாதத்தில் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் அழகிய அரண்மனை ஒன்றை கட்டி புது மனை புகு விழாவிர்க்கு நாள் குறித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி விட்டார் . அந்த விழா நாளும் வந்தது நண்பர்களும் உறவின்ர்களும் சுற்றம் சூழ எண்ணற்ற ஆசீர்வாதங்களுடன் புதுமனை புகு விழா சிறப்பாக நடைபெற்றது .
பொதுவாகவே முரளிராஜாவுக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு அதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லும்படி சிலர் உண்டு அவர்கள் ஸ்ரீராம் மகாபிரபு ஜேக் செந்தில் பித்தன் ரமேஷ் ரனுஜா மொஹிதீன் முத்து முகமது சசி இனியவன் சரண் மற்றும் முழுமுதலோன் . இவர்கள் அனைவரையும் தன் வீட்டு விழாவிற்க்கு அழைத்திருந்தார் . இதில் ரமேஷ் என்பவர் தான் பணிபுரியும் கல்லூரியில் பல்கலைகழக தேர்வு நடப்பதால் தன்னால் வர இயலவில்லை என்றும் தன் குடும்பத்துடன் வேறு ஒரு நாள் வருவதாகவும் சொல்லிவிட்டார் . முழுமுதலோனும் தன் குடும்ப சூழ்நிலயின் காரணமாக தன்னால் வர இய்லவில்லை என்றும் வேறு ஒரு நாள் தன் குடும்பத்துடன் வருவதாகவும் இரண்டு நாட்கள் அங்கு தங்கி அருகில் உள்ள திருதலங்களை எல்லாம் தரிசனம் செய்ய போவதாகவும் தெரிவித்து விட்டார் .
புதுமனை புகு விழா சிறப்பாக முடிந்ததும் நண்பர்கள் அனைவரும் விடைபெறும் தருணத்தில் முரளிராஜாவின் விருப்பத்திற்க்கு இணங்க ஸ்ரீராம் மகா பிரபு செந்தில் சசிகுமார் பித்தன் மற்றும் ஜேக் அறுவரும் அங்கேயே தங்கி விட்டனர் .முரளிராஜா அன்றுதான் வாங்கிய புத்தம் புது ரோல்ல்ஸ் ரோய் காரில் நண்பர்கள் அனைவரையும் அருகில் உள்ள கோவிந்தபுரம் மற்றும் அதன் அருகில் உள்ள சங்கர மடம் வைதீஸ்வரன்கோயில் மற்றும் திருக்கடையூர் அழைத்து சென்று தரிசனம் செய்து விட்டு இரவு அரண்மனை திரும்பி அறுசுவை உணவு உண்ட பின்னர் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர் .
இரவு நேரத்தில் அந்த அரண்மனை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை போல் காட்சி அளித்து கொண்டு இருந்தது அந்த அரண்மனையில் பழங்காலத்து கலை பொருட்களும் பிரமாண்டமான ஹாலில் கலை நயத்துடன் செய்யப்பட்டு தொங்க விடப்பட்ட ஊஞ்சலுமே அனைவரையும் வெகுவாக கவர்ந்ததாக இருந்தது . பொதுவாகவே ஊஞ்சல் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் . அந்த நேரத்தில் முரளிராஜாவின் புத்திசாலி குழந்தைகள் இருவரும் தன் அம்மாவோடு ஊஞ்சல் ஆடி கொண்டு இருந்தார்கள் .
பொதுவாகவே ஸ்ரீராம் அவ்ர்களுக்கு போட்டி என்றால் விருப்பம் அதிகம் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் . என்ன செய்வது என்று யோசித்த ஸ்ரீராம் முரளி அவ்ர்களை அழைத்து புன்முறுவலுடன் ஒரு போட்டியை துவக்கினார் .அதன்படி அங்கு உள்ளவர்கள் 3 குழுவாக பிரிக்கபட்டனர் .முதல் குழுவில் முரளிராஜா தன் குடும்பமும் இரண்டாவது குழுவில் ஸ்ரீராம் மகா பிரபு செந்தில் ஆகிய மூவரும் மூன்றாவது குழுவில் சசியும் பித்தனும் ஜேக்வும் அடங்குவர் .
போட்டியின் படி ஒவ்வொரு டீமும் ஒரு நிமிஷம் ஊஞ்சலாடனும். யார் அந்த ஒரு நிமிடத்தில் அதிக ஆட்டம் ஆடறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்க என்ற ஆட்ட விதிமுறைகளை சொன்னார் ஸ்ரீராம் ஒரு ஆட்டங்கிறது ஒரு பக்கத்தில ஆரம்பிச்சு திரும்பி அதே பக்கத்துக்கு வர்றது ஒரு ஆட்டம் . ஒரு டீம் ஆடும்போது இன்னொரு டீம் செல் ஃபோன் ஸ்டாப் கிளாக் வச்சு ஒரு நிமிஷத்தில ஆட்டத்தை எண்ணணும்னு முடிவு பண்ணி போட்டிய ஆராம்பிச்சாங்க.
முதல்ல முரளிராஜா குடும்பம் ஊஞ்சலில் வேகமா ஆட ஆரம்பிச்சாங்க.
அடுத்து ஸ்ரீராம் குழுவினர் ஆடினாங்க அவங்களால முரளிராஜா குடும்பதினர் மாதிரி வேகமா ஆட முடியல
கடைசியா ஜேக் குழுவினர் ஆடினாங்க.ஆனா அவங்க என்னவோ தெரியவில்லை வழக்கத்தை விட மெதுவா ஆடினாங்க. ஒருவேளை காலையிலிருந்து விழாவிர்க்கு வந்தவர்களை கவனித்த தாலும் இருக்கலாம்
இப்ப அமர்க்கள உறவுகளாகிய உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த ஒரு நிமிட ஊஞ்சல் ஆட்டதில எந்த அணி ஜெயிச்சிருப்பாங்க?
1.முரளிராஜா குடும்பம் 2.ஸ்ரீராம் குழுவினர் 3.ஜேக் குழுவினர்
வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு அழகிய ஊஞ்சல் ஒன்று பரிசளிக்கப்படும்
புதிரின் விடை நாளை மாலை வெளிவரும்
முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
பொதுவாக முழுமுதலோன் எப்போதுமே தன நண்பர்களை விட்டு
கொடுத்ததில்லை அதுவும் அமர்க்கள நண்பர்களையா விட்டு
கொடுப்பார் .இல்லை இல்லை . அவர் யாரையுமே தோற்கடிக்க
விரும்புவதில்லை இப்போது ...
புதிருக்கான சரியான விடை
ஊஞ்சல் மெதுவாக ஆடினாலும் சரி வேகமாக ஆடினாலும் சரி அலைவுநேரம் மாறாது. ஊஞ்சலின் நீளம் மாறினால் மட்டுமே அலைவு நேரம் மாறும்
மூன்று குழுக்களும் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடமே அந்த ஒரு நிமிடத்தில் மூன்று குழுக்களுமே ஒரே அளவில்தான் ஆட்டம் போட்டிருப்பார்கள்
எனவே வெற்றி தோல்வி யாருக்கும் இல்லை அனைவரும் சமமே
இதை பற்றிய கூடுதல் தகவல் பின்னூட்டத்தில் பாருங்கள்
கொடுத்ததில்லை அதுவும் அமர்க்கள நண்பர்களையா விட்டு
கொடுப்பார் .இல்லை இல்லை . அவர் யாரையுமே தோற்கடிக்க
விரும்புவதில்லை இப்போது ...
புதிருக்கான சரியான விடை
ஊஞ்சல் மெதுவாக ஆடினாலும் சரி வேகமாக ஆடினாலும் சரி அலைவுநேரம் மாறாது. ஊஞ்சலின் நீளம் மாறினால் மட்டுமே அலைவு நேரம் மாறும்
மூன்று குழுக்களும் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடமே அந்த ஒரு நிமிடத்தில் மூன்று குழுக்களுமே ஒரே அளவில்தான் ஆட்டம் போட்டிருப்பார்கள்
எனவே வெற்றி தோல்வி யாருக்கும் இல்லை அனைவரும் சமமே
இதை பற்றிய கூடுதல் தகவல் பின்னூட்டத்தில் பாருங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
இது தனி ஊசல் பாடம்,சுவாரசியமாக சொல்லிக் கொடுப்பதற்காக நான் உருவாக்கிய புதிர். ஊசல்(ஊஞ்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்) மெதுவாக ஆடினாலும் சரி வேகமாக ஆடினாலும் சரி அலைவுநேரம் மாறாது. ஊசலின் நீளம் மாறினால் மட்டுமே அலைவு நேரம் மாறும்.
இது பற்றி சுவாரசியமான விஷயம் உண்டு .
இந்த உண்மையை கண்டறிந்தவர் கலீலியோ. ஒரு சர்ச்சுக்கு சென்றிருந்தபோது தற்செயலாக சர்ச்சில் சங்கிலியில் கட்டி தொங்க விடப்பட்ட விளக்கு காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை கவனித்தார்.அதை உற்று நோக்கிய கலீலியோ, அது காற்றின் வேகத்திற்கேற்ப எப்படி ஆடினாலும் ஒரு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரே அளவாக இருந்தது. கூடுதல் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது கடிகாரம் கண்டுபிடிக்கப் படவில்லை. பின் எப்படி இந்த உண்மையைக் கண்டறிந்தார். விளக்கின் அலைவை தன் நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டார். இந்த உண்மை அறியப்பட்ட காலம் கி.பி. 1642.
இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? பெண்டுலம் கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு இதுதான் அடிப்படையாக அமைந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிகாரம் தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்தார் கலீலியோ . ஆனால் இதை அடிப்படையாக வைத்து டச்சு நாட்டு அறிஞர் ஹைஜென்ஸ் என்ற விஞ்ஞானிதான் வெற்றிகரமாக முதல் கடிகாரத்தை உருவாக்கினார். தனி ஊசல் பாடம் நடத்தும்போது பெரும்பாலான ஆசிரியர்கள் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே! அலைவு நேரம் கண்டுபிடிக்கும் சோதனை எதற்காகப் பயன்பட்டது என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அந்த ஆசிரியரின் பெயரை சொல்லுங்கள் பாராட்டு விழா நடத்தி விடலாம்
இது பற்றி சுவாரசியமான விஷயம் உண்டு .
இந்த உண்மையை கண்டறிந்தவர் கலீலியோ. ஒரு சர்ச்சுக்கு சென்றிருந்தபோது தற்செயலாக சர்ச்சில் சங்கிலியில் கட்டி தொங்க விடப்பட்ட விளக்கு காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை கவனித்தார்.அதை உற்று நோக்கிய கலீலியோ, அது காற்றின் வேகத்திற்கேற்ப எப்படி ஆடினாலும் ஒரு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரே அளவாக இருந்தது. கூடுதல் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது கடிகாரம் கண்டுபிடிக்கப் படவில்லை. பின் எப்படி இந்த உண்மையைக் கண்டறிந்தார். விளக்கின் அலைவை தன் நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டார். இந்த உண்மை அறியப்பட்ட காலம் கி.பி. 1642.
இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? பெண்டுலம் கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு இதுதான் அடிப்படையாக அமைந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிகாரம் தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்தார் கலீலியோ . ஆனால் இதை அடிப்படையாக வைத்து டச்சு நாட்டு அறிஞர் ஹைஜென்ஸ் என்ற விஞ்ஞானிதான் வெற்றிகரமாக முதல் கடிகாரத்தை உருவாக்கினார். தனி ஊசல் பாடம் நடத்தும்போது பெரும்பாலான ஆசிரியர்கள் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே! அலைவு நேரம் கண்டுபிடிக்கும் சோதனை எதற்காகப் பயன்பட்டது என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அந்த ஆசிரியரின் பெயரை சொல்லுங்கள் பாராட்டு விழா நடத்தி விடலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
சூப்பர் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
இந்த புதிரில் பங்கு எடுத்து கொண்ட நம் தளத்து நண்பர்களுக்கும் முகநூளில் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் அமர்க்களம் சார்பாக வாழ்த்துக்களையும் பாரட்டுகளையும் அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்
அடுத்த வேறு ஒரு வித்தியாசமான புதிரில் சந்திப்போம்
அடுத்த வேறு ஒரு வித்தியாசமான புதிரில் சந்திப்போம்
நன்றி வணக்கம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
பதிலுக்கு நன்றி
நானாத்தான் பதில் என்கிற பேரில் நாறிட்டேனா...
நானாத்தான் பதில் என்கிற பேரில் நாறிட்டேனா...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ஆமாம் எப்பவும் விட ரொம்ப அதிகமாவே நாறிட்டிங்க ஜேக்ஜேக் wrote:பதிலுக்கு நன்றி
நானாத்தான் பதில் என்கிற பேரில் நாறிட்டேனா...
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
நம்ம ஜேக் இன்னும் நாறட்டும்முரளிராஜா wrote:ஆமாம் எப்பவும் விட ரொம்ப அதிகமாவே நாறிட்டிங்க ஜேக்ஜேக் wrote:பதிலுக்கு நன்றி
நானாத்தான் பதில் என்கிற பேரில் நாறிட்டேனா...
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
வாசனைய போயி யாராவது நாத்தம் என்று சொல்வார்களா?
உங்க மூக்கில ஏதோ பிரச்சினை போல தெரியுது
உங்க மூக்கில ஏதோ பிரச்சினை போல தெரியுது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
பதில் என்னாச்சு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ரானுஜா wrote:பதில் என்னாச்சு
எந்த பதில் அக்கா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
இந்தப் புதிருக்கு பதில் சொல்லியாச்சா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
அக்கா இங்கே பாருங்கள்
http://www.amarkkalam.net/t22135p15-27
http://www.amarkkalam.net/t22135p15-27
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
ஆஹா! அருமையான புதிராக இருக்கே!
புதிரோடு அறிவியல் உண்மைகளையும் கலந்து செவிக்கும் சிந்திக்கும் அளித்த விருந்தை நான் எப்படி தவற விட்டேன்?
அருமை அண்ணா உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
புதிரோடு அறிவியல் உண்மைகளையும் கலந்து செவிக்கும் சிந்திக்கும் அளித்த விருந்தை நான் எப்படி தவற விட்டேன்?
அருமை அண்ணா உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #27
நான் தான் கவனிக்கல போல ... பதில் சூப்பர் அதோடு ஊசல் பற்றிய விளக்கமும் அருமை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #19
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #8
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #19
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #8
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|