Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜூன் 11 – வைகாசி விசாகம்
Page 1 of 1 • Share
ஜூன் 11 – வைகாசி விசாகம்
-
.
வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில்,
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து
தீப்பிழம்பாய், முருகப்பெருமான் அவதரித்தார்
-
‘வி’ என்றால், வெற்றி. சாகம் என்றால், ஆடு.
ஆடு வாகனத்தை உடையவனாக இருந்து, பின்,
இந்திரனிடமிருந்து மயிலை வாகனமாகப்
பெற்றவர் முருகன்.
-
ஒரு சமயம், பத்மாசுரன் உள்ளிட்ட அசுரர்களின்
கொடுமைக்கு, தேவர்கள் ஆளாயினர். அவர்கள்
சிவனிடம் இதுபற்றி முறையிட, சிவன் தன்
நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து
வெளிப்பட்ட ஆறு நெருப்பு பொறிகள், சரவணப்
பொய்கையில் வளர்ந்து, குழந்தையானது.
-
கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர், அக்குழந்தையை
சீராட்டி வளர்த்தனர். அவர்களிடம் வளர்ந்ததால்,
கார்த்திகேயன் என்று, போற்றப்பட்டார்.
-
முருகன், ஆறுமுகங்களும், 12 கரங்களும் கொண்டவர்.
ஒரு முகம், உயிர்களின் ஆணவ இருளை அகற்றி,
ஞானச்சுடரை ஏற்றி அருள்கிறது.
இரண்டாவது முகம், தன்னை வழிபடும் அடியார்களுக்கு
வரத்தை தருகிறது.
மூன்றாம் முகம், அந்தணர்கள் செய்யும் யாகங்களை
காவல் காக்கிறது.
நான்காவது முகம், வாழ்க்கை என்றால் என்ன என்ற,
மெய்ஞானத்தை உணர்த்துகிறது.
ஐந்தாவது முகம், தீயவர்களை எதிர்த்து போர் புரிகிறது.
ஆறாவது முகம், வள்ளி நாயகியிடம் புன்முறுவல்
பூக்கிறது.
-
அவரது, 12 கரங்களில், முதல் கை, தேவர் மற்றும்
முனிவர்களைப் பாதுகாக்கிறது. இரண்டாம் கை, முதல்
கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது.
மூன்றாம் கை, உலகத்தை தன் கைக்குள் அடக்கி
வைக்கும் அங்குசத்தை தாங்கியுள்ளது. நான்காம் கை,
ஆசைகளைக் குறைக்கச் சொல்கிறது.
-
ஐந்தாம் கை, நிறைந்த அருளைத் தருகிறது.
ஆறாம் கை, வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது.
-
ஏழாம் கை, ‘சரவணபவ’ என்னும் சொல்லுக்குரிய
பொருளை வெளிப்படுத்தும் வகையில், மார்பில் உள்ளது.
எட்டாம் கை, மார்பில் இருந்து தொங்கும் மாலையைத்
தாங்குகிறது.
ஒன்பது, பத்தாம் கைகள், யாக பலனை ஏற்கின்றன.
11ம் கை, மழையைத் தருகிறது. 12ம் கை, வள்ளி,
தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.
-
சிவன் வேறு, முருகன் வேறு அல்ல; சிவாம்சமே
முருகனாகத் திகழ்கிறது. அதுபோல் பார்வதி தேவியும்
முருகனை விட்டு அகலுவதில்லை. முருகன் சூரபத்மனை
வெல்ல போருக்கு புறப்பட்ட போது, தாயிடம் ஆசி
பெற்றார். பார்வதி தேவி தன் சக்தியையெல்லாம்
ஒன்று திரட்டி, வேலாக தந்தாள். அதனால் தான்,
சக்திவேல் இல்லாமல், தனித்து முருகன் காட்சி
தருவதில்லை.
-
சக்திவேலுடன் கூடிய முருகனே, சூரனை வென்று,
வெற்றி வாகை சூடினார். ஆக தாயும், தந்தையும்
அவனே! ‘வேல்’ என்றால் வெற்றி. வெற்றி தரும்
வேலை வணங்கினால், நம் வாழ்வில் என்றும்
வெற்றியே!
-
வெற்றிவேல் முருகனின் பிறந்த நாளான வைகாசி
விசாகத்தன்று, ‘முருகா வருக’ என, வரவேற்போம்;
அவன் திருவடியைச் சரணடைவோம்.
-
————————————
>தி.செல்லப்பா (வாரமலர்)
.
வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில்,
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து
தீப்பிழம்பாய், முருகப்பெருமான் அவதரித்தார்
-
‘வி’ என்றால், வெற்றி. சாகம் என்றால், ஆடு.
ஆடு வாகனத்தை உடையவனாக இருந்து, பின்,
இந்திரனிடமிருந்து மயிலை வாகனமாகப்
பெற்றவர் முருகன்.
-
ஒரு சமயம், பத்மாசுரன் உள்ளிட்ட அசுரர்களின்
கொடுமைக்கு, தேவர்கள் ஆளாயினர். அவர்கள்
சிவனிடம் இதுபற்றி முறையிட, சிவன் தன்
நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து
வெளிப்பட்ட ஆறு நெருப்பு பொறிகள், சரவணப்
பொய்கையில் வளர்ந்து, குழந்தையானது.
-
கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர், அக்குழந்தையை
சீராட்டி வளர்த்தனர். அவர்களிடம் வளர்ந்ததால்,
கார்த்திகேயன் என்று, போற்றப்பட்டார்.
-
முருகன், ஆறுமுகங்களும், 12 கரங்களும் கொண்டவர்.
ஒரு முகம், உயிர்களின் ஆணவ இருளை அகற்றி,
ஞானச்சுடரை ஏற்றி அருள்கிறது.
இரண்டாவது முகம், தன்னை வழிபடும் அடியார்களுக்கு
வரத்தை தருகிறது.
மூன்றாம் முகம், அந்தணர்கள் செய்யும் யாகங்களை
காவல் காக்கிறது.
நான்காவது முகம், வாழ்க்கை என்றால் என்ன என்ற,
மெய்ஞானத்தை உணர்த்துகிறது.
ஐந்தாவது முகம், தீயவர்களை எதிர்த்து போர் புரிகிறது.
ஆறாவது முகம், வள்ளி நாயகியிடம் புன்முறுவல்
பூக்கிறது.
-
அவரது, 12 கரங்களில், முதல் கை, தேவர் மற்றும்
முனிவர்களைப் பாதுகாக்கிறது. இரண்டாம் கை, முதல்
கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது.
மூன்றாம் கை, உலகத்தை தன் கைக்குள் அடக்கி
வைக்கும் அங்குசத்தை தாங்கியுள்ளது. நான்காம் கை,
ஆசைகளைக் குறைக்கச் சொல்கிறது.
-
ஐந்தாம் கை, நிறைந்த அருளைத் தருகிறது.
ஆறாம் கை, வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது.
-
ஏழாம் கை, ‘சரவணபவ’ என்னும் சொல்லுக்குரிய
பொருளை வெளிப்படுத்தும் வகையில், மார்பில் உள்ளது.
எட்டாம் கை, மார்பில் இருந்து தொங்கும் மாலையைத்
தாங்குகிறது.
ஒன்பது, பத்தாம் கைகள், யாக பலனை ஏற்கின்றன.
11ம் கை, மழையைத் தருகிறது. 12ம் கை, வள்ளி,
தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.
-
சிவன் வேறு, முருகன் வேறு அல்ல; சிவாம்சமே
முருகனாகத் திகழ்கிறது. அதுபோல் பார்வதி தேவியும்
முருகனை விட்டு அகலுவதில்லை. முருகன் சூரபத்மனை
வெல்ல போருக்கு புறப்பட்ட போது, தாயிடம் ஆசி
பெற்றார். பார்வதி தேவி தன் சக்தியையெல்லாம்
ஒன்று திரட்டி, வேலாக தந்தாள். அதனால் தான்,
சக்திவேல் இல்லாமல், தனித்து முருகன் காட்சி
தருவதில்லை.
-
சக்திவேலுடன் கூடிய முருகனே, சூரனை வென்று,
வெற்றி வாகை சூடினார். ஆக தாயும், தந்தையும்
அவனே! ‘வேல்’ என்றால் வெற்றி. வெற்றி தரும்
வேலை வணங்கினால், நம் வாழ்வில் என்றும்
வெற்றியே!
-
வெற்றிவேல் முருகனின் பிறந்த நாளான வைகாசி
விசாகத்தன்று, ‘முருகா வருக’ என, வரவேற்போம்;
அவன் திருவடியைச் சரணடைவோம்.
-
————————————
>தி.செல்லப்பா (வாரமலர்)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஜூன் 11 – வைகாசி விசாகம்
நாளை வைகாசி விசாகமா? பயனுள்ள தகவலுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!
» ஜூன் மாதம் எப்படி?
» ஜூன் 6ல் காங்., செயற்குழு
» அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
» ஜூன் 18-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு
» ஜூன் மாதம் எப்படி?
» ஜூன் 6ல் காங்., செயற்குழு
» அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
» ஜூன் 18-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|