தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)

View previous topic View next topic Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4) Empty ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)

Post by இம்சை அரசன் Mon Oct 15, 2012 12:15 pm

இம்சை அரசனின் அரண்மனைக்கு அயல்நாட்டு தூதுவர் வந்திருக்க.,அவரது வருகையை
அன்போடு வரவேற்ற இம்சை,அவருடன் கலந்துரையாடத் தொடங்கினார்.
"மிஸ்டர் இம்சை ...உங்க நாட்டு மக்களை நான் சந்தித்து சில கேள்விகளைக் கேட்கவேண்டும்....",
என அயல்நாட்டு தூதர் கூறிய மறுகணமே,
தம் மக்களை அரண்மனைக்கு அழைத்து தூதுவரை சந்திக்க ஏற்பாடு செய்தார் இம்சை.
தங்கள் நாட்டிற்கு வந்த அயல்நாட்டு தூதுவரை ஆவலோடுக் கண்டனர் மக்கள்.

"மக்களே..உங்கள் மன்னர் இம்சை அரசன்,,,உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளாரா??".
என அயல்நாட்டு தூதுவர் கேட்டதும்,

"என்ன இப்படி கேட்டுடிங்க?எங்க மன்னர்,தன் ஆட்சி சூப்பரோ சூப்பர்.
எங்க வீட்டு வாசலில் நாங்க துவைக்கும் துணிகளை காயப்போட கொடிக்கம்பியெல்லாம் கட்டிக்கொடுத்திருக்காருங்க...".
என்று மக்களில் ஒருவர் குரல் கொடுக்க,
"என்னாங்கடா...?நான் எப்படா உங்களுக்கு துணிக்காயப்போட கொடிக்கம்பி கட்டுனேன்???",
என சட்டென இம்சை குழம்பியவன்னம் கேட்டதும்,
"எங்க வீட்டு வாசலில் ,உயர உயரமா கம்பி கட்டியிருக்கிங்களே மன்னா,,..அதுலதான் நாங்க ஈரத் துணிகளை காயப்போடுறோம்...",
என்று கூட்டத்தில் பதில் வர,அதிர்ந்துப்போன இம்சை,
"அட நன்னாரிப்பசங்களா...!!!!, அது கரண்ட்டு போற கம்பியாச்சேடா....
அதுல எப்படிடா ஈரத்துணியை காயப்போடுறீங்க?ஷாக் அடிக்கும்டா....பிக்காளிப்பசங்களா..",.
என உரக்க சத்தம்மிட,

"போங்க மன்னா...நாங்க ஒன்னும் முட்டாப்பசங்க இல்லை.
உங்க ஆட்சியிலதான் ரெகுலரா ,மத்தியம் 12மணி முதல் 4மணி வரை கரண்ட்டு கட் பன்றீங்களே....
அந்த நேரம் கரண்ட்டு கம்பி சும்மாதானே இருக்கு மன்னா.அந்த நேரத்தில் தான் துணியெல்லாம் காயப்போடுறோம்...நாங்க",
என்று மக்கள் கூட்டத்தில் ஒருவன் செல்லமாக மன்னரிடம் கோபித்துக்கொள்ள,

"ஓ பலே...பலே..."
என்ற அயல்நாட்டு தூதுவர்,
"பகலில் கரண்ட்டுக் கம்பியில் துணியக்காயப்போடுறீங்க...நைட்ல என்னப் பன்றீங்க..?",
என நக்கலாக கேட்டதும்,
""எங்கவூட்டு புள்ளைங்களுக்கு தொட்டில் கட்டி ஆட்டுவோம், அந்தக் கம்பில கிளுகிளுப்பையைக் கட்டித் தொங்கவிட்டு புள்ளைங்களுக்கு வேடிக்கைக் காட்டுவோம்..",
என்று துள்ளிக்குதித்தப்படி ஆர்வமாக பதில் தந்தார் மக்களிள்,மற்றொரு நபர்.

அதைக் கேட்ட இம்சை சந்தோஷமாக சத்தம்மிட்டு சிரித்தபடி,
"எனக்குவாய்த்த அடிமைகளுக்கு பேச்சுதான் கொஞ்சம் ஜாஸ்தி....மற்றபடி திறமைசாளிகள்....",
என தம்மக்களை எண்ணி பெரிமிதம் கொண்டார் .

"தமிழர்களுக்கு இந்த நிலையா?
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..
என்ற பாரதி பிறந்த நாடா இது??',
என அயல்நாட்டு தூதுவர் சோகமாக மக்களை நோக்க,
"தமிழன் தலை நிமிர்ந்து நிக்கிறானா???
அட நீங்க வேறங்க.அண்டை மாநில மக்களிடம்,
அப்பரு லோயரு மிடில்லுன்னு ஒரு இடம்விடாமல் அடிவாங்கிட்டு இருக்கோம்...நாங்க....",
என மக்களிள் ஒருவர் கூற,
"காவிரி தண்ணிப்பிரச்சனைக்கு கர்நாடகாவில் ,எங்களை ஓடஓட அடிக்கிறாங்க தூதுவரே...",
என்றார் மற்றொரு நபர்.,
"என்ன சொல்றீங்க??பக்கத்து மாநிலமக்கள் அடிக்கிறாங்களா?கேரளா நாட்டில் தஞ்சம் அடையவேண்டியதுதானே???'.
என தூதுவர் கேட்க,
"முல்லைபெரியாறு பிரச்சனையில அங்கும் அடிவாங்கியாச்சுங்க...",
என்று ஒருவர் கூற,அவரைப் பின்தொடர்ந்த மக்களிள் ஒருவர்,

"எங்க இம்சை அரசரையே,,,,
குமுழி பார்டரில் வெச்சி குமுறகுமுற அடிச்சாங்க....நாங்களாம் எங்க மொபைலில் அதை வீடியோக்கூட எடுத்தோம்....",
என சிரித்த முகத்துடன் கூற,
"நப்பிபசங்க!!!!....ஒருமன்னன் அடிவாங்கியதை ,ஏதோ ஆஸ்கார் அவார்ட்டு வாங்கியதைப்போல சிரிச்சிக்கிட்டே சொல்றாய்ங்கப்பாரு....
பிளடி ப்ளாக்காட்ஸ்....",
என இம்சை மனதுக்குள் முனுமுனுக்க,

"இங்கு இருப்பதற்கு நீங்களெல்லாம் அயல்நாடுகளுக்கு போய்விடவேண்டியது தானே???",
என தூதுவர் கேட்க,
"கோபால் பல்பொடி ரேஞ்சுக்கு,சிங்கப்பூர்,மலேஷியா,இலங்கை,போன்ற அனைத்து நாடுகளிலும் எங்க தமிழர்கள் அடிவாங்கியாச்சுங்க....",
என மக்கள் கூட்டதில் குரல் வந்ததும்,
"தமிழை வளர்க்க உயிரைக் கொடுப்போம்,எனக்கூறும் உங்கள் நாட்டு கட்சித்தலைவர் இதையெல்லாம் கண்டும்காணாததுப் போல் இருக்கிறாரா?",.
என்று தூதுவர் கேட்க,
"அவைங்க தமிழை வளர்க்க உயிரைக்கொடுப்போம்னு சொல்றது,தமிழ் மொழிக்கு இல்லைங்க....
அவருக்கு ரெண்டு பசங்க.ஒருத்தன் பேரு முத்தமிழ்,இன்னொருத்தன் பேரு செந்தமிழ்.அவைங்களைத்தான் தமிழு தமிழுன்னு சொல்றாரு...",
என குலுங்கி குலுங்கி சிரித்தப்படி மக்கள் ஆரவரம் செய்தனர்.

இவற்றையெல்லம் கேட்ட அயல்நாட்டு தூதுவர் ,இம்சை அரசரை மெல்லப் பார்த்து,
"என்ன இம்சை???என்ன இது??மக்களை இப்படியா பாடாய்ப்படுத்துவது...இப்படிக்கேவலமா ஆட்சி செய்யிற நீங்களாம்
பதவியை ராஜினாமா செஞ்சிட்டு எங்கயாவது எஸ்டேட்டுல போயி ரெஸ்ட் எடுக்கலாமே????",
என்று நொந்துபோன மனதுடன் கேட்க,
ஆத்திரம் அடைந்த இம்சை,
"தூதுவரே கொஞ்சம் அடக்கிவாசிங்க....தேர்தலில் நாங்க இலவசமா தருகிற,
டீ.வீ, வீசீடீ, வாஷிங் மெஷின்., லேப்டாப், சைக்கிள்,இதையெல்லம் வாங்கிட்டு,சிந்திக்காமல்
ஓட்டுப்போடும் மதிகெட்ட மக்களே கம்முன்னு இருக்காங்க.உனக்கென்னயா???
இனியும் நீ ரெம்ப பேசினின்னா...குண்டர்தடுப்பு சட்டம்,எஸ் மா சாட்டம்,இப்படிகைவசம் நிறையா தெரிஞ்சிவெச்சிருக்கேன்...
அதுல எதையாவது ஒன்றை யூஸ் செய்து உன்னைய உள்ளத்தள்ளிடுவேன்....,மைன்ட் இட்.....",
என்றவர்,
சட்டென அவையைவிட்டு வெளியேற.,
"தமிழகத்தினைக் காக்கும் ஆதிபராசக்தியே.... தமிழ் காக்கும் காவலரே...எங்கள் திராணியாரே....மதிர்ப்பிக்குறிய ஐயா அவர்களே.,,
எழுச்சிநடைக் கண்ட நாயகனே..
..எங்கள் மன்னர் இம்சை அரசனே நீவிர் வாழ்க வாழ்க...வாழ்க...",
என கோஷம்மிட்டப்படி அந்நாட்டு மக்களும் அவரைப்பின் தொடர்ந்தனர்.................................

மீண்டும் சந்திப்போம்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)

Post by முரளிராஜா Mon Oct 15, 2012 1:05 pm

உண்மைதான் இம்சை இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சி தேவலை, அந்த ஆட்சிக்கு இந்த ஆட்சி தேவலைனு சொல்லியே நாம நம்ம வாழக்கைய தொலைச்சுகிட்டு இருக்கோம்.
ஆக இந்த இரண்டு குரூப்புமே நம்மள வாழ வைக்க போறதில்லை

நகைச்சுவையுடன் நடைமுறையை சொன்னவிதம் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)

Post by மகா பிரபு Mon Oct 15, 2012 2:13 pm

நம் நாட்டின் நிலையை நல்ல நகைச்சுவையோடு சொல்லி உள்ளீர்கள்.. பாராட்டுக்கள் அரசே..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum