தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 16, 2014 1:29 pm

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Zbpqy_203565


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 12, 2015 12:00 pm

யார் நினைகிறார்களோ...?

என்னவனோடு .....
ஊடல் செய்தேன் .....
தும்மினான் ....
நான் நூறு என்று ....
வாழ்த்துவேன் ....
என்று நினைத்தார் ....!!!

நன்றாக நான் ....
வாழ்த்துவேன் ...
யார் நினைகிறார்களோ...?
என்றாலும் மனம் ...
தன்னை அறியாமல் ...
வாழ்த்தியது ....!!!

+
குறள் 1312
+
புலவி நுணுக்கம்
+
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 232
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 12, 2015 12:14 pm

மனதில் ஒரு சஞ்சலம் ....

பூத்து குலுங்கிய ....
மலர்களை பறித்து ....
பூமாலை சூடினேன் ....
என்னவனுக்கு .....!!!

மனதில் ஒரு சஞ்சலம் ....
என்னவன் மாலையுடன் ....
செல்கையில் எவளோ ....
ஒருத்தி கண்ணில் படுவாரே ....
கோபம் கொள்கிறேன் மனமே
+
குறள் 1313
+
புலவி நுணுக்கம்
+
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 233
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 12, 2015 12:36 pm

அத்தனை அன்பு உயிரே ....

யாரைகாட்டிலும் ....
என்னவளே உன்னில்தான் ....
அத்தனை அன்பு உயிரே ....
ஊடலின் போது பேசிவிட்டான் ....!!!

சினங்கொண்டாள்.....
யாரை காட்டிலும் என்றால் ...?
அந்த யார் யாரென்று ....
கேட்டு கேட்டே ஊடல் கொண்டாள்...!!!

+
குறள் 1314
+
புலவி நுணுக்கம்
+
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 234
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 12, 2015 12:46 pm

கண்ணீருடன் நின்றாள் ....!!!

இந்த ஜென்மத்தில் ....
உன்னை பிரியேன் உயிரே ....
என்றான் அவன் .....!
அப்போது அடுத்த ஜென்மம் ...
ஒன்று உண்டோ என்றாள்....?

அப்போ இந்த ஜென்மத்தில்
பிரிவதற்கு வாய்ப்பு உண்டோ ...?
கேட்டபடியே கண் நிரம்பி ...
வழியும் கண்ணீருடன் நின்றாள் ....!!!

+
குறள் 1315
+
புலவி நுணுக்கம்
+
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 235
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:35 am

உன் நினைவில்லாமல் ....

உயிரே ....
எப்போதும் உன்னையே ....
நினைத்திருப்பேன் .....
உன் நினைவில்லாமல் ....
நான் வாழ்வதே இல்லை ....!!!

எப்போதும் என்னையே ....
நினைப்பேன் என்றால் ....
அவ்வப்போது மறக்கிறீர்கள் ....
மறந்தால் தானே நினைவுவரும் ....
செல்ல சண்டை இட்டுபடி ....
ஊடல் செய்தால் என்னவள் ....!!!

+
குறள் 1316
+
புலவி நுணுக்கம்
+
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 236
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:46 am

உம்மை யார் நினைகிறார்கள் ....?

தும்மினேன் .....
யாரும்மை நினைகிறார்கள் ....
இப்போதானே உம்மை ....
வாழ்த்தினேன் - அதற்குள் ....
உம்மை யார் நினைகிறார்கள் ....?

அப்போ எனை விட்டு ....
உம்மை நினைக்கும் உள்ளமும் ....
உமக்கு உண்டோ ....?
கேட்டபடி அழுதால் -மனம் ...
மாறி அழுதமுகத்துடன் ....
ஊடல் செய்தாள் ....!!!
+
குறள் 1317
+
புலவி நுணுக்கம்
+
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 237
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:58 am

ஓகோ ..உம்மை நினைப்பதற்கு ....

என்னவனுக்கு .....
தும்மல் வந்தது -நான் ...
சந்தேகம் கொள்வேன் ..
என்பதற்காக தும்மலை ....
அடக்கினான் .....!!!

ஓ .....ஓகோ ...
உம்மை நினைப்பதற்கு ....
நிறையப்பேர் உள்ளனரோ ....
எனக்கு மறைக்கிறீரோ....
என்று அழுதபடியே ஊடல் ...
செய்தாள்....!!!

+
குறள் 1318
+
புலவி நுணுக்கம்
+
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 238
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 10:12 am

ஓ ..நீர் இப்படித்தானோ ...?

நான் பணிந்து ....
என்னவளை சமாதான ...
படுத்தினேன் .....!!!

ஓ ....
நீர் இப்படித்தான் ....
மற்ற பெண்களையும் ...
இப்படிதான் சமாதானம் ....
செய்வீரோ ..-கேட்டபடியே ....
ஊடல் செய்தாள்....!!!

+
குறள் 1319
+
புலவி நுணுக்கம்
+
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 239
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 10:25 am

என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...

பேசினால் தானே ...
பிரச்சனை பேசாமல் ....
இருந்து அவளின் அங்கத்தை ....
பார்த்துகொண்டிருந்தான் ....!!!

ஓ ...யாருடைய மேனிபோல் ....
என் மேனி இருக்கிறது என்று ....
பார்க்கிறீரோ ....? சீ சீ சீ
என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...
சினங்கொண்டாள் அவள் ....!!!

+
குறள் 1320
+
புலவி நுணுக்கம்
+
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 240
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 15, 2015 9:17 am

எந்தத்தவறும் இல்லை ...

என்னவனிடம் .....
எந்தத்தவறும் இல்லை ...
நன்கு அறிவேன் ....
செல்ல சண்டையே ....
போடுகிறேன் ....!!!

செல்ல சண்டை தானே ...
கூடலையும் ஊடலையும் .....
கடல் போல் பெருக்கும்....!!!

+
குறள் 1321
+
ஊடலுவகை
+
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 241
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 15, 2015 9:26 am

கொடும் குற்றமில்லை ....!!!

என்னவனோடு .....
நான் செய்யும் சிறு சண்டை ....
ஊடலின் போது ஏற்பட்டாலும் ....
அதுவென்றும் கொடும் ....
குற்றமில்லை ....!!!

காதல் என்றால் ,,,,,
கூடலும் சண்டையும் ....
கொஞ்சலும் இருக்கத்தானே ....
செய்யும் ....!!!

+
குறள் 1322
+
ஊடலுவகை
+
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 242
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 15, 2015 9:34 am

தேவலோகத்தில் கூட கிடைக்குமோ ....?

நிலத்தோடு நீர்கலந்தால் ....
நீரெது நிலமெது....?
இரண்டற கலந்துவிடும் ....!!!

என்னவனோடு .....
ஊடல் செய்யும்போது ....
கிடைக்கும் இன்பம் ....
தேவலோகத்தில் கூட ....
கிடைக்குமோ ....?

+
குறள் 1323
+
ஊடலுவகை
+
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 243
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 15, 2015 9:42 am

ரகசிய மந்திரம் ....!!!

ஊடல் ஊடல் ...?
ஊடலென்றால் ...?
என்னவனும் நானும் ....
இறுககட்டி பிடிக்க உதவும் ....
ரகசிய மந்திரம் ....!!!

ஊடலையும் ....
கலைத்துவிடும் .....
மனநிலையும் மனதில் ....
மறைந்துதான் இருக்கிறது ....!!!

+
குறள் 1324
+
ஊடலுவகை
+
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 244
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 15, 2015 9:51 am

கோபத்திலும் அழகு இருக்கு

என்னவனில் ....
தவறில்லை எனக்கு ...
நன்றாக புரிகிறது .....
என்றாலும் ஊடலில் ....
சின்ன சண்டையும் அழகு ....!!!

என்
மீது உள்ள கோபத்தில் ....
என் மெல்லிய தோளை....
தொடாமல் இருக்கும் ...
என்னவனில் கோபத்திலும் ....
ஒரு அழகு இருக்கத்தான் ..
செய்கிறது

+
குறள் 1325
+
ஊடலுவகை
+
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 245
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 3:27 pm

உண்ட உணவு செரிக்கவேண்டும் .....!!!

விருப்பமான உணவை ....
உண்பதை விட -உண்ட உணவு
செரிக்கவேண்டும் .....!!!

இன்பத்தில் இன்பம் ....
கூடல் செய்வதல்ல .....
கூடலுக்கு முன் ஊடல் ....
செய்வதே ....!!!

+
குறள் 1326
+
ஊடலுவகை
+
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.


+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 246
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 3:47 pm

யாருக்கு வெற்றி ? யாருக்கு தோல்வி ?

யாருக்கு வெற்றி ...?
யாருக்கு தோல்வி ...?
ஊடலில் தோற்றவரே ....
வென்றவர் ஆவார் ....!!!

எப்படி தெரியும் ....?
கூடி பெறும் இன்பத்தில் ...
இறுதியில் ஊடலின் ...
வென்றவர் இனம் ...
காணப்படுவர் .....!!!

+
குறள் 1327
+
ஊடலுவகை
+
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 247
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 3:57 pm

இன்பம் கிடைக்குமோ ....?

வியர்வை வரும்வரை ...
விரும்பியவருடன் ....
கூடிபெற்ற இன்பம் ....
இன்னுமொருமுறை ....
கிடைக்குமோ .....?

இன்னொருமுறை ....
ஊடல் செய்தால் ....
முன் பெற்ற கலவி ....
இன்பம் கிடைக்குமோ ....?

+
குறள் 1328
+
ஊடலுவகை
+
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 248
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 4:08 pm

எனக்கொரு உதவி செய்வாயோ .....?

நிலா ஒளி முகத்தால் ....
ஒளியில் மின்னுகிறாள்.....
ஆவலுடன் நான் பெறும் ....
ஊடல் இன்பம் இன்னும் ...
தொடரனும் .....!!!

ஏய் இரவே ....
எனக்கொரு உதவி ....
செய்வாயோ .....?
இன்று நீ விடியாமல் ....
நீண்டுருப்பாயோ....?

+
குறள் 1329
+
ஊடலுவகை
+
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 249
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 4:21 pm

சின்னனாய் விலகியிருப்பது ஊடல்

சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!

ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!

+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 16, 2015 4:47 pm

அன்பு கவிதை வாசகர்களே
----------------------------

திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும்
பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கடந்த பலமாதமாய் கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன் .

இந்தவகையில் கவிதை முறையை யான் இதுவரை வேறு எங்கும் பார்த்ததில்லை . என் மொத்த கவிதை அனைத்தும் சொந்த கவிதையே இன்று 19.09.2015 வரை எழுத்து தளத்தில் 6300 கவிதை எழுதியுள்ளேன் .

அதில் 250 கவிதை இன்பத்துப்பால் கவிதையாக அமைவதில் மிக்க சந்தோசம் .ஆனால் வாசக பெருமக்களே இதுபோன்ற கவிதைக்கு தரும் ஊக்கம் போதாது என்றே கூறுவேன் . இன்று இந்த
திருக்குறள் கவிதை ஒரு சின்ன விடயமாக இருக்கலாம் . என்றோ ஒருநாள் தமிழ் ஆவலர் .திருக்குறள்
ஆவலர் கண்ணில் இது படும்போது இதன் முக்கியத்துவம் உணரப்படும் என்று நம்புகிறேன் .
இன்னுமொரு எழுத்தாளர் " இதைவிட சிறப்பாக எழுதுவதற்கு இது உதவலாம் " என்ற மகிழ்சியுடன்
என் எண்ணத்தை முடிக்கிறேன்

நன்றி
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 11 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum