தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

View previous topic View next topic Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by இம்சை அரசன் Thu Nov 08, 2012 10:39 am

(இது நகைச்சுவைக்கென எழுதப்பட்ட பதிவு.இதில் இடம்பெறும் வார்த்தைகள் யாரையும் குறிப்பிடுவதல்ல.மேலும்,அரசியல்,சினிமா,ஆன்மீகாவாதிகள்,போன்றோரை குற்றம்சாடும்விதமாகவோ,இழிவு செய்யும்விதமாகவோ., உருவாகப்படவில்லை,.இது முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்டது.இதில் வரும் சம்வங்கள் யாவும் கற்பனையே...)


இடம்:பூலோகம்......

"அம்மா தாயே...ராப்பிச்சை வந்திருக்கேன்.பிச்சைப் போடுங்க....",
என்று குரல் தந்தபடி ஒரு வீட்டின் வாசலை அடைந்தான் ,பரம்பரை பிச்சைக்காரனான ரா.பிச்சை.
அவனது குரலைக் கேட்டதும்,அந்த வீட்டின் குடும்ப தலைவர்
"யோவ்...நானே பசியில் இன்னும் சாப்பிடாம கிடக்கேன்...அதுக்குள்ள உனக்கு சாப்பாடு கேட்குதா?"
என கடுமையாக பதில் கூற,
"நைட் 9.30மணி ஆகுது.இன்னும்மா நீங்க சாப்பாடு சாப்பிடவில்லை....இட்ஸ் டூ பேட்..."
என்ற ரா.பிச்சை,
"ஏன் சார் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க?",
என்றதும்,
"என் பொண்டாட்டி, " செல்லமே " சீரியல் பார்த்துக்கிட்டு இருக்காள்.சீரியல் முடிஞ்சதும்தான் எனக்கே சாப்பாடு கிடைக்கும்...",
குடும்பதலைவரின் பதிலில் சோகம் தெரிய,
"வாட்....சீரியல் முடிஞ்சாதான் சாப்பாடா?வழக்கமா,30நிமிஷம் சீரியலில் ,20நிமிஷம் விளம்பரம் ஓடுமே...அந்த சைக்கிள்கேப்ள சாப்பிடவேண்டியதுதானே...",
ரா.பிச்சை நக்கலாய் கேட்க,
"உனக்கு திமிரு ஜாஸ்தி இருக்கு...",
என வீட்டிற்குள் இருந்து குரல் வந்தது.
"திமிரா?எனக்கா?நான் என்ன ஸ்பெக்ட்ரம் ஊழலில் கோடி லட்சம் ரூபாயவா சம்பாதிச்சுட்டேன்?பேசுறதை கொஞ்சம் லாஜிக்கோட பேசுங்க....பொண்டாட்டியை கன்ட்ரோல் செய்ய கெப்பாஸிட்டி இல்லாத உனக்குதான்யா திமிரு ஜாஸ்தி....",
என்ற ரா.பிச்சை,தனது ஹாட் பேக்கில் வைத்திருந்த,பர்க்கரையும்,ஸ்ப்ரிங் ரோலையும், சாப்பிட்டுவிட்டு,கொஞ்சம் ஸ்பைரைட்டைக் குடித்துவிட்டு ,அருகில் இருந்த அம்மன் கோவிலில் படுக்கையை விரித்து தலை சாய்ந்தான்.


இடம்:தேவலோகம்.

ரா.பிச்சை,,அம்மன் கோவிலில் உறங்குவதைக கண்ட,
படைப்புக் கடவுள் பிரம்மா...
"அந்த ரா.பிச்சை என்ற மனிதனுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும்.பாவம்...அவன்,,,சாப்பாட்டுக்கு வழியில்லாமல்,தினமும் பர்க்கரையும்,ஸ்ப்ரிங் ரோலையும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றான்...."
என கவலையுடன் கூற,
"அவனுக்கு நல் வாழ்வு கிடைக்க சரஸ்வதி ,லெஷ்மி,பார்வதி இம்மூவரின் உதவியையும் நாடுவோம்....",
என காக்கும் கடவுள் விஷ்ணு கூறினார்.
அவர்கள் இருவரும் கூறுவதைக் கண்ட சிவபெருமான்,
"தேவியரே....நீங்கள் மூவரும் அந்த ரா.பிச்சை என்ற மனிதனுக்கு,கல்வி,செல்வம்,வீரம்,இவை மூன்றையும் அருளாக அளித்து அவன் வாழ்வை சிறப்பாக ஆகவேண்டும்...",
என,முப்பெரும் தேவியரான ,சரஸ்வதி,லெஷ்மி,பார்வதி ,மூவரிடமும் கோரிக்கை வைத்தார்.

"உங்கள் மூவரின் கோரிக்கைகளும் விரைவில் நிறை வேற்றப்படும்....சரஸ்வதியின் அருளால்,முதலில் அவனுக்கு கலைத்துறை வாய்ப்பு வந்து குவியத் தொடங்கும்,,,,,அதனைக் கொண்டு அரசியலில் அவன் கால் வைப்பான்,.அரசியலில் நுழைந்த அவனுக்கு வீரம் என்ற பெயரில் ரெளடித்தனம் உருவாகும்,..பின் லெஷ்மியின் அருளால் ஊழல்கள் செய்து செல்வந்தன் ஆவான்........",
என்று தேவியர் மூவரும் கூற,
"அவனது வாழ்க்கை கதை முடிவு எப்படி முடியும்?இறுதியில் அவன் என்ன ஆவான்?",
என அருகில் இருந்த மஹாவிஷ்ணு கேட்டதும்,
"கிளைமாக்ஸை இப்ப சொல்லமுடியாது..அது சஸ்பெண்ஸ்....அவனது கதை முடிவில் தெரியும்...",
என்று வில்லங்கமாக சிரித்தனர்,முப்பெரும் தேவியரும்.
அதக் கேட்ட
பிரம்ம,விஷ்ணு,சிவன் முக்கடவுளும் முகம் மலர்ந்தனர்.......


பூலோகாம்...............


விடிந்ததை அறிந்து,ரா.பிச்சை மெல்ல கண் விழித்தான்.விழித்தவனின் கண்முன் ,
பளிச்சென விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன.அதன் அருகில் மக்கள் கூட்டம்.
சினிமா ஷுட்டிங்கிற்கான வாகனங்கள்,திரைப்பட கேமிரா,ஆகியவை அவன் படுத்திருந்த கோவிலை சுற்றி வைக்கப்பட்டுருந்தன.அங்கு ஏதோ தமிழ் திரைப்படத்திற்கான ஷுட்டிங் நடைப்பெறுகின்றது என்பதை அறிந்த,ரா.பிச்சை சட்டென படுக்கையை விட்டு எழுந்தான்.

"சார்...டைரக்டருக்கு சம்பளம் போதாதாம்.சம்பளம் ஏத்திதரனுமாம்.இல்லைன்னா ஷுட்டிங் கேன்சல்ன்னு பிடிவாதம் பன்றாரு...",
என ,திரைப்பட கம்பெணியின் மேலாளர்,தயாரிப்பாளரிடம் பதட்டத்துடன் கூற,
"அந்த டைரக்டரை அப்படியே போகச்சொல்லு.....",
என்ற தயாரிப்பாளர்,
"நம்ம படத்தோட கதை சுருக்கம் என்னய்யா?",
என்று மேனேஜரைக் கேட்டதும்,

"ஹீரோ ஹீரோயினை கல்யாணம் பன்னிக்கிறாரு.
ஹீரோயின்,ஹீரோவோட அண்ணன் கூட ஓடிப்போயிடுறா.
அதைக் கண்ட ஹீரோ,ஹீரோயினோட தங்கச்சிக்கூட ஓடிப்போயிடுறான்.
இந்த கருமத்தையெல்லாம் பார்த்த ,ஹீரோவோட அம்மாவும்,ஹீரோயினோட அப்பாவும் ஜாலியா ஓடிப்போயிடுறாங்க.
கடைசியா,ஹீரோவோட அப்பாவும்,ஹீரோயினோட அம்மவும் அநாதைய நிக்கிறாங்க.
இப்படி கூட்டுப்பொறியல் ஆன ஒரு கேவலமான குடும்பம் மறுபடி எப்படி ஒன்னு சேருதுன்னு முடிவில் தெரியும்...
பிறகு நம்மப் படத்தைப் பார்த்தவங்களாம் தியேட்டரைவிட்டு ஓடிப்போயிடுறாங்க...
இதான் இப்ப நம்ம எடுக்கப்போற,-ஓடி ஓடி விளையாடு-படத்தோட கதை",
என ஒரேமூச்சில் சொல்லிமுடித்தார் மேனேஜர்..

"இவ்வளவு அருமையான கதையை டைரக்ட் செய்ய எனக்குனு ஒருத்தன் கிடைப்பான்யா.அவன் ஒருப் பிச்சைக்கரானா இருந்தாலும் அவனுக்கு நான் சான்ஸ் தருவேன்...",
என்று தயாரிப்பாளர் கூறியதும்,

"ஐயா....சாமி....எதாவது சினிமா டைரக்ட்டு பன்ன சான்ஸ் இருந்தா பிச்சைப்போடுங்க சாமீ......",
ரா.பிச்சை பவ்யமாக அலுமினிய தட்டைக் குலுக்கியப்படி,சினிமா சான்ஸிற்கு பிச்சை கேட்டான்....
அவனது அப்ரோச்சில் மயங்கிய ,அந்த திரைப்பட தயாரிப்பாளர்,
"ஒரு நல்ல சினிமாவிற்கு எதெது தேவைன்னு உனக்கு தெரியுமா?',
என்று ரா,பிச்சையிடம் கேட்டதும்,

"அடிப்பாட்டு-4
ஃபைட்டு சீன்னு,-5
காமெடியென்ற பெயரில் மொக்கை சீன்ஸு-8
வெட்டு குத்து சீன்ஸு-7,
அருவாள் -20,
டாடா சுமோ கார் -10,
இதனுடன்,
தமிழ் பேச தெரியாத ஹீரோயின் -1,
நடிப்பே இல்லாம பஞ்ச் டயாலக் பேசுற ஹீரோ -1,
இதோட,
வசனமே கேட்காத அளவுக்கு பின்னனி இசை,
தமிழ் வார்த்தைகளே இல்லாத பாடல்கள்-5
இதெல்லாம் நல்ல சினிமாவுக்கு தேவைங்க...",
என ரா.பிச்சை கூறியதும்,அவனை கட்டிதழுவிய தயாரிப்பாளர்,

"மளிகை கடை சாமானுக்கு லிஸ்ட்டு போட்டதைப்போல ,ஒரு சினிமாவுக்கு தேவையானதை அழகா சொல்லிட்டியேட....நீதான்டா இந்தப் படத்துக்கு டைரக்டர்...",
என தட்டிக்கொடுத்தார்........ நண்பேன்டா ....

சட்டென தன் உடைகளை மாற்றிக்கொண்டு
ஒரு இயக்குனருக்கு இருக்கவேண்டிய நடை உடையுடன் களம் இறங்கிய ரா,பிச்சை,
" ஒகே,,,இப்ப எடுக்கப்போற ஸீன் என்னென்னான்னு அஸிட்டெண்ட்டுக்கிட்ட கொடுத்து அனுப்புங்க...
நான் அதுவரை கேராவேன்னில் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்... ரொம்ப ஜாலி .",
என்றபடி கேராவேன்னுகுள் நுழைந்தான்......


இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by முரளிராஜா Thu Nov 08, 2012 11:21 am

.பொண்டாட்டியை கன்ட்ரோல் செய்ய கெப்பாஸிட்டி இல்லாத உனக்குதான்யா திமிரு ஜாஸ்தி..

மாப்ளே இது உன்னைபத்தின விசயமா? நக்கல்


ரொம்ப அருமையா இருக்கு மாப்ளே
இதன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by இம்சை அரசன் Thu Nov 08, 2012 11:23 am

முரளிராஜா wrote:
.பொண்டாட்டியை கன்ட்ரோல் செய்ய கெப்பாஸிட்டி இல்லாத உனக்குதான்யா திமிரு ஜாஸ்தி..

மாப்ளே இது உன்னைபத்தின விசயமா? :


கல்யாணம் ஆகி 10 நாள்தான் ஆகுது மாப்ளே...ஸோ இப்ப கண்ட்ரோல் இருக்கு.....போக போகதான் கண்ட்ரோல் போயி கண்டம்டு ஆகனும்....
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by முரளிராஜா Thu Nov 08, 2012 11:25 am

இம்சை அரசன் wrote:

கல்யாணம் ஆகி 10 நாள்தான் ஆகுது மாப்ளே...ஸோ இப்ப கண்ட்ரோல் இருக்கு.....போக போகதான் கண்ட்ரோல் போயி கண்டம்டு ஆகனும்....
இதையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நண்பா ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by இம்சை அரசன் Thu Nov 08, 2012 11:35 am

முரளிராஜா wrote:
இம்சை அரசன் wrote:

கல்யாணம் ஆகி 10 நாள்தான் ஆகுது மாப்ளே...ஸோ இப்ப கண்ட்ரோல் இருக்கு.....போக போகதான் கண்ட்ரோல் போயி கண்டம்டு ஆகனும்....
இதையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நண்பா ரொம்ப ஜாலி

நான் கண்டம்டு ஆகப்போவதை .....ஆவலோட எதிர்ப்பார்க்கிறியா?எதோ தீபாவளி ரிலீஸ் படத்தை ஆவலோட எதிர்ப்பார்க்கிறாப்ல சொல்றீயேடா...
மாப்ளே....வில்லதனத்தை எவ்வளவு டீசண்டா செய்யிறேடா....?????????
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by முரளிராஜா Thu Nov 08, 2012 11:38 am

அப்பதானே மாப்ளே உன்னை மாதிரி ஆட்களுக்கு நண்பன் கண்னுக்கு தெரிவான்
சோகத்தை புலம்ப நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by ரானுஜா Thu Nov 08, 2012 5:53 pm

ஹா ஹா சூப்பருங்க... [You must be registered and logged in to see this image.]
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by mohaideen Thu Nov 08, 2012 8:40 pm

அருமையான கற்பனை அதிலும் சினிமாவைப்பத்திய நிஜம் மிக அருமை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by ஸ்ரீராம் Fri Nov 09, 2012 12:44 am

ரசித்து சிரித்தேன் அரசன்...

ரொம்ப நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1) Empty Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum