Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடலுக்குள்ளேயே உதிரி பாகங்களின் உற்பத்தி
Page 1 of 1 • Share
உடலுக்குள்ளேயே உதிரி பாகங்களின் உற்பத்தி
இயற்கையின் படைப்பில் எல்லோரும் சமமாக பிறப்பதில்லை. மாறாக, உடல் மற்றும் மன குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் இங்கு ஏராளம். உதாரணமாக, குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை சொல்லலாம்.
பிறக்கும்போது, 1.35 கிலோ எடை அல்லது அதற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளில் சுமார் 10 சதவீதத்தினர், குடல் திசு இறந்துபோகும் குறைபாட்டுடன் பிறக்கிறார்கள். இந்த குழந்தைகள் தங்கள் வாழ்க்கை முழுவதும் ஊசி மூலம் ரத்தத்தில் செலுத்தப்படும் ஊட்டச்சத்திலேயே வாழ வேண்டியது கட்டாயமாகிறது. இவர்கள் `குறுகிய குடல் குழந்தைகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
இத்தகையவர்களை காப்பாற்றுவதில் வல்லவரான மருத்துவர் டிரேசி கிரிஷெய்ட், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராவார். அறுவை சிகிச்சை மட்டுமல்ல, ஸ்டெம் செல் ஆராய்ச்சியிலும் இவர் கில்லாடிதான் என்பதை நிரூபித்திருக்கிறது இவரது சமீபத்திய ஆய்வு.
இதுவரையில் எலி, சுண்டெலி மற்றும் பன்றியின் குடல் உயிரணுக்களில் இருந்து அவற்றின் குடல் திசுவை சோதனைக்கூட விலங்குகளில் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்த கிரிஷெய்ட், சமீபத்தில் மனித குடல் உயிரணுக்களில் இருந்து குடல் திசுவை வளர்ப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறார். இந்த தொழில்நுட்பத்தை மனித நோயாளிகளுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதில் தற்போது கவனத்தை செலுத்திவருகிறார்.
இதற்கான ஆய்வில், முதலில் எலிகளின் நல்ல குடலை வெட்டி எடுத்து அதனை என்சைம்கள் மற்றும் இதர ரசாயனங்கள் கொண்டு, குடல் ஸ்டெம் செல்கள் உள்ளிட்ட பல உயிரணுக்கள் உடைய சிறு கலவை உயிரணுக் குழுக்களாக மாற்றுகிறார்கள். பின்னர், பென்சிலின் பின்புறம் இருக்கும் ரப்பர் அளவுள்ள, துளைகளுள்ள ஒரு மக்கும் பிளாஸ்டிக் துண்டின் மீது உயிரணுக் குழுக்கள் வைக்கப்படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் துண்டு, முல்லைக்கு பாரி கொடுத்த தேர் போல, உயிரணுக்கள் வளரவும் எந்தெந்த உயிரணுக்கள் எங்கெங்கு வளர வேண்டும் என்று வழிகாட்டியும் உதவக்கூடியதாம். இதன் மூலம் குடலைச் சுற்றிய படலத்தில் உள்ள உயிரணுக்கள் பிளாஸ்டிக் துண்டின் உட்புறமும், ரத்த நாள திசு உயிரணுக்கள் அதன் வெளிப்புறத்திலும் வளர்கின்றன.
இவ்வாறு வளரும் உயிரணுக்கண்டுகளை எடுத்து எலியின் அடிவயிற்றுக்குள் இருக்கும் ஓமென்டம் பகுதிக்குள் வைத்து தைத்துவிடுகிறார்கள். அங்கு ரத்த நாளங்களால் சூழப்பட்ட உயிரணுக்கண்டுகள் ரத்தத்தில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளின் உதவியுடன் நன்கு வளர்கின்றன. சில நாட்களுக்குப் பிறகு, உயிரணுக்கண்டுகளில் உள்ள மக்கும் பிளாஸ்டிக் துண்டு கரைந்துபோய், உட்புறம் வெற்றிடம் உள்ள ஓர் உயிரணுப்பந்து மட்டுமே வளர்கிறது.
சில வாரங்கள் கழித்து, ஓமென்டத்தில் இருந்து அகற்றப்படும் உயிரணுப்பந்தில், குடலின் மேற்படலம், தசைகள், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் உள்ளிட்ட அனைத்து குடல் பகுதிகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயிரணுப்பந்தின் மீதான ஆய்வில், குடலின் மறுவளர்ச்சி எப்படி நிகழ்கிறது என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்கிறார் கிரிஷெய்ட். இதன் மூலம் எதிர்காலத்தில், குடல் பழுதடைந்த நோயாளிகளுடைய குடலின் மறுவளர்ச்சியை தூண்டி அவர்களை குணப்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எலிகளின் மீதான முந்தைய ஆய்வுகளில், குடலின் பெரும்பகுதி நீக்கப்பட்ட எலிகளின் மீதமிருக்கும் குடலுடன், இந்த உயிரணுப்பந்தில் இருந்து எடுக்கப்பட்ட குடல் திசுக்கள் ஒட்டப்பட்டு வளர்க்கப்பட்டன. குடல் திசுக்கள் ஒட்டப்படாத எலிகளுடன் ஒப்பிடுகையில், திசுக்கள் ஒட்டப்பட்ட எலிகளின் குடல் விரைவாக வளர்ந்து அவை குணமடைந்தது தெரியவந்தது.
தற்போதுள்ள, பெரும்பாலான செயற்கை உடல் பாக மருத்துவ (திசுப் பொறியியல்) முயற்சிகளில், பழுதடைந்த உடல் பாகம் நீக்கப்பட்ட பகுதியில் செயற்கை பாகங்கள் பொருத்தப்படும். அத்துடன் வேலை முடிந்தது. அது செயல்படும் வரை பயன்படுத்திவிட்டு, பின்னர் புதியது ஒன்றை பொருத்த வேண்டும்.
ஆனால், கிரிஷெய்ட்டின் ஆய்வில் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. உடலுக்குள் பொருத்தப்பட்ட ஒரு செயற்கை பாகம் வளர, உடலின் மற்றொரு பகுதி அதற்கு ஊட்டச்சத்து அளிக்கும் வண்ணம் வடிவமைப்பதுதான் இங்கு விசேஷமே. தற்போது, எலிகளில் வெற்றியடைந்துள்ள இந்த முயற்சி, மனிதர்கள் மீதான மேலதிக ஆய்வுகளுக்குப் பின்னர் மனித சிகிச்சைக்கு பயன்படும் காலம் விரைவிலேயே வரும் என்று நம்பிக்கை அளிக்கிறார் மருத்துவர் கிரிஷெய்ட்.
இதன் மூலம், உடலுக்கு தேவையான உதிரி பாகங்களை நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்துகொள்ளும் ஒரு பொன்னான வாய்ப்பு, விரைவில் மனிதர்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் கிரிஷெய்ட்.
நன்றி -முனைவர் பத்மஹரி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உடலுக்குள்ளேயே உதிரி பாகங்களின் உற்பத்தி
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வன்பொருள் கற்போம் - கம்பியூட்டர் பாகங்களின் ஓர் அறிமுகம்
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
» கண்ணுக்கு விருந்து - பழைய கடிகாரங்களின் உதிரி பாகத்திலிருந்து செய்யப்பட்ட அழகிய உருவங்கள்
» வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி
» சிறைகளில் மின்சார உற்பத்தி
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
» கண்ணுக்கு விருந்து - பழைய கடிகாரங்களின் உதிரி பாகத்திலிருந்து செய்யப்பட்ட அழகிய உருவங்கள்
» வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி
» சிறைகளில் மின்சார உற்பத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|