தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

View previous topic View next topic Go down

மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா Empty மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

Post by rammalar Sun Oct 08, 2017 8:53 am

மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா 201710080210004635_In-cricket-India-defeated-Australia_SECVPF

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற
கணக்கில் பறிகொடுத்தது.

அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன் முதலாவது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்
நேற்றிரவு நடந்தது. மனைவிக்கு உடல்நலக்குறைவு காரணமாக
ஒரு நாள் தொடரில் ஆடாத ஷிகர் தவான் அணிக்கு திரும்பினார்.

லோகேஷ் ராகுல், மூத்த வேகப்பந்து வீச்சாளர் நெஹரா
ஆகியோருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, வானிலையை
மனதில் வைத்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

பிஞ்ச் 42 ரன்

ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை கேப்டன் டேவிட் வார்னரும்,
ஆரோன் பிஞ்சும் தொடங்கினர். வார்னர் (8 ரன்)
புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

அடுத்து மேக்ஸ்வெல் ஆட வந்தார்.
ஆரோன் பிஞ்ச், ரன் சேகரிப்பில் ஓரளவு வேகம் காட்டினார்.
ஸ்கோர் 55 ரன்களை எட்டிய போது மேக்ஸ்வெல் (17 ரன்),
யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்தை வளைத்து பிடித்து அடித்த
போது, பும்ராவிடம் சிக்கினார்.
தொடர்ந்து ஆரோன் பிஞ்ச்சை (42 ரன், 30 பந்து, 4 பவுண்டரி,
ஒரு சிக்சர்) குல்தீப் யாதவ் காலி செய்தார்.

தொடர்ந்து சாஹல்-குல்தீப்பின் சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய
அணி நிலைகுலைந்து போனது. வேகம் குறைந்த இந்த (ஸ்லோ)
ஆடுகளத்தில் பந்து அதிகமாக மேலே எழும்பவே இல்லை.
சரியாக கணித்து ஆடாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்
விக்கெட்டுகளை கொத்து கொத்தாக தாரைவார்த்தனர்.

ஹென்ரிக்ஸ் (8 ரன்), டிராவிஸ் ஹெட் (9 ரன்), டிம் பெய்ன் (17 ரன்),
நாதன் கவுல்டர்-நிலே (1 ரன்), டேனியல் கிறிஸ்டியன் (9 ரன்)
வரிசையாக நடையை கட்டினர்.

மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள்
எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை
பெய்ததால் அத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக்
கொள்ளப்பட்டது. 2 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை
இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர்.

இதையும் கச்சிதமாக செய்திருந்தால் ஆஸ்திரேலியாவின்
நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்திய தரப்பில் பும்ரா,
குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார்,
ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டும்
வீழ்த்தினர்.

மழையால் சுமார் 2 மணி நேரம் போட்டி பாதிப்புக்குள்ளானது.
பின்னர் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி
6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எளிய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா வெற்றி

இதை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 5.3 ஓவர்களில்
ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி கண்டது. பவுண்டரியுடன் இலக்கை எட்ட வைத்த கேப்டன்
விராட் கோலி 22 ரன்களுடனும் (14 பந்து, 3 பவுண்டரி),
ஷிகர் தவான் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ரோகித் சர்மா 11 ரன்னில் அவுட் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக பெற்ற
7-வது வெற்றி இதுவாகும். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக
தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா
1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி
வருகிற 10-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல்

இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த கடைசி ஒரு நாள் கிரிக்கெட்
போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்
காயமடைந்தார். பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது, வலது
தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 20 ஓவர் தொடருக்குள் உடல்
தகுதியை எட்டி விடுவார் என்று அணி நிர்வாகம் எதிர்பார்த்த
நிலையில் தோள்பட்டை வலி இன்னும் முழுமையாக குறையவில்லை.

மேலும் தொடர்ந்து விளையாடினால் காயத்தன்மை அதிகரித்து
விட வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு
எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இருந்து
ஸ்டீவன் சுமித் நேற்று விலகினார். அவர் உடனடியாக தாயகம்
திரும்புகிறார்.

சுமித்தின் விலகலால் நேற்றைய முதலாவது 20 ஓவர் போட்டியில்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார்.
எஞ்சிய இரு ஆட்டத்திற்கும் அவரே கேப்டனாக தொடருவார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவன் சுமித்துக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
-
-------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இந்தியா - ஆஸ்திரேலியா: முதலாவது டெஸ்ட்
» சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum