தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6

View previous topic View next topic Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6 Empty மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6

Post by பித்தன் Mon Feb 11, 2013 10:34 pm

காற்று என்றைக்கேனும் உங்களிடம் தான் தான் உயிர் அளிப்பவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது உண்டா?
எந்த நதியும் தானே வாழ்வின் ஜீவன் என உங்களிடம் அடையளப்படுத்திக்கொண்டது
உண்டா?
இந்த மனிதர்களை தவிர யாரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை.
அது ஏனோ தெரியவில்லை. மனம் இது நான் செய்ததது, இது என்னால் செய்யப்பட்டது என அறிவித்து கொள்ளா விட்டால் மனம் அடங்குவதே இல்லை.

ஏன் இந்த வினோதம் மனித மனதில் ஆழ விழுந்தது என்பது மட்டும் புரியவே இல்லை. சின்ன சின்ன செயல்கள் கூட யாருக்கேனும் உதவி செய்து விட்டால், அதை யாரிடமாவது சொல்லி ஒரு மெல்லிய தற்பெருமை அடையாவிட்டால் மனது திருப்தி கொள்ளுவதில்லை. பக்தியின் பொருட்டு ஆலயத்தில் வைக்கும் ட்யுப் லைட் ஒன்றில் தன் முழு விலாசத்தை எழுதிவைக்கும் மன நிலை. ஒரு 10 பேருக்கு உணவு கொடுத்து விட்டு தான் இன்று அன்னதானம் செய்ததை பிறரிடம் சொல்லி சொல்லி தன்னை முன்னிறுத்தும் மனநிலை.

தன்னை பிறரிடம் காண்பித்து கொள்ள, தன் புகழை பரப்பி கொள்ள செய்யும் எதையும் அதை சேவை என பித்தன் மனம் ஒத்துக்கொள்வதே இல்லை. பலரும் இந்த அசிங்க போதைக்கு அடிமைதான் எல்லோருக்கும் தன்னை நிருபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனாலும் இது போன்ற சேவை செய்வதை புகழ்ந்து ஊக்குவிக்கலாம் ஆனால், செய்பவர் அதை எதிர்பார்க்க கூடாது என்பது தான் கருத்துரு.

ஒரு முறை கால் ஊனமான ஒரு நெருங்கிய உறவில் இல்லாத ஒரு தோழியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவள் திருமணம் பற்றியும் அவளின் வாழ்க்கை பற்றி நலம் விசாரிக்கும் பொழுதில் சில நொடி மௌனத்திற்கு பின் அவள் அழுகையை மறைத்து விட்டதை எண்ணி அழுது கொண்டே சொன்னாள்.

திருமணமான அன்று மாலை அவளின் கணவர் சொன்னாராம் நீ எதிர்பார்க்கவில்லைதானே ஒரு ஊனமான பெண்ணை நல்ல பையனான நான் திருமணம் செய்வேன் என்று. அதற்கு அவள் தன் கணவரிடம் சொன்னாளாம் ஆம் உண்மையில் நிறைய மனம் வேண்டும் அதற்கு என்று, பின் அன்று தொடங்கி எப்போதுமே சொல்லிக்கொண்டே இருப்பாராம். தான் மிகுந்த தியாக உணர்வு உடையவன் என்றும் ஒரு கால் ஊனமான ஒருத்தியை திருமணம் செய்து தன் வாழ்வையே அர்பணித்து விட்டதாகவும் சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒரு கட்டத்தில் அவளுக்கு அந்த தொடர் பேச்சு அவளை மனதளவில் வலி ஏற்படுத்த துவங்கி விட்டதாம்.

சில நேரங்களில் ஏதேனும் செய்ய சொல்லி விட்டு பிறகு அவரே சொல்வாராம், நீ ஊனமானவள் உன்னால் அதை செய்ய இயலாது. நானே செய்து விடுகிறேன் என சொல்லி தானே செய்து விடுவாராம். மேலும் அவளிடம் எதுவும் பித்தன் கேட்க வில்லை. ஒருவேளை கேட்டால் அவளின் துயரை அது அதிகப்படுத்துமோ என கருதி மௌனித்து பின் பித்தன் அவளிடம் சொன்னான். "அக்கா கவலை கொள்ள வேணாம், இந்த நிலையும் மாறும்" என சொன்னபோது அவள் சொன்னது மனதில் எதோ காயத்தின் வடு எப்படி உடலில் சாகும் வரை ஓட்டிக்கொண்டே இருக்குமோ அது போல அவளின் வார்த்தை மனோதொடு ஒட்டிக்கொண்டு விட்டது. அவள் சொன்னாள்,
"கடவுளால் ஒரு முறை உடல் ஊனமுற்றேன்,
கணவனால் ஒரு முறை மனம் ஊனமுற்றேன்"
என சொல்லி விட்டு இது தவிர நான் மிகவும் மகிழ்வோடு இருக்கிறேன் என சொன்னபோது அவள் கண்களில் தண்ணீர் வற்றி , பின் பித்தன் கண்கள் நிரம்பியது.

வார்த்தைகளின் வலி கொஞ்சம் அதிகமாகவே வலிக்குமோ.....



இன்னும் மௌனத்தோடு நினைவுகளை பேச சொல்வோமா?
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6

Post by மகா பிரபு Tue Feb 12, 2013 9:31 am

வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற பொன்மொழியை நாம் ஏனோ கடைபிடிக்க மறக்கிறோம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6

Post by முரளிராஜா Tue Feb 12, 2013 12:52 pm

உண்மைதான் பித்தன்
வார்த்தைகளின் வலி மிகவும் அதிகம்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6

Post by ஸ்ரீராம் Tue Feb 12, 2013 1:27 pm

முற்றிலும் சரி பித்தன்
சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum