தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

View previous topic View next topic Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by பித்தன் Fri Feb 01, 2013 7:59 pm

மனதோடு நெருங்கிய நல்ல நண்பர்களோடு காரணமின்றி பேசிக்கொண்டு இருந்ததை என்றாவது மெளனமாக மனதோடு அசைபோட்டது உண்டா , வேறு யார் சொன்னாலும் சட்டென கோபம் கொள்ளும் சிலர் கூட நண்பர்கள் அதிகமாக கேலி செய்யும் போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.

அதுமட்டும் ஏனோ தெரியவில்லை சில நண்பர்களை உதட்டளவில் கூட திட்டவோ வருத்தப்படவோ இயலுவதில்லை. எதை எதையோ அவர்களிடம் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். நண்பனுக்கான தகுதிகள் என்ன? நண்பனை இவன் எப்படி பட்டவன் என அளவிடும் முறைதான் என்ன? இவையெல்லாம் எல்லா நேரங்களிலும் கணக்கிட்டு நட்பு பாராட்டுவதில்லை நாம்.

நண்பர்கள் ஆவதற்கு வயது வித்தியாசமில்லை, ஆண் பெண் வேறுபாடு இல்லை,
மதம் இல்லை, சாதி இல்லை, பண உயர்வு தாழ்வு இல்லை, மொழி பேதமில்லை, ஏன் எந்த வித தடையும் இல்லாமல் உறவு கொள்ள முடியும் எனில் அது நட்பு மட்டுமே.காதல் கூட சில இடைவெளி ஏற்படுத்தும். ஆனால் நட்பிற்கு........?இல்லவே இல்லை.

ஒரு கதை நினைவுகளோடு நித்தம் நித்தம் சண்டை போடும் ஒரு கதை,
ஆதாம்,ஏவாள் கதையில் அவனின் தனிமை போக்கும் விதமாக ஒரு தோழியின் துணை அவனுக்கு அவசியம் அவளின் நட்பை அவனுக்கு தர வேண்டும் என்று கருதிதானே அந்த கடவுள் படைத்தார். ஆனால் எதோ விலக்கப்பட்ட கனி அவர்களை உள்ளத்தால் இரண்டாக்கி போனது. ஆதாமின் முதுகெலும்பில் இருந்து வந்த போதும் இருவரும் இரண்டாகி போனார்கள் , உங்கள் உடம்பின் ஒரு பகுதியை நீங்கள் எப்படி வேறு ஒன்றாக அறியமுடியும். ஆம் அந்த விலக்கப்பட்ட கனிதான் உங்களை வேறு வேறாக இன்று வரை நினைக்க வைத்துக்கொண்டே உள்ளது. உண்மையில் எப்போது விலக்கப்பட்டதை ருசிக்க துவங்கிவிட்டோமோ அப்போதே தோழிகளின் துணை விரசத்தை நம்முள் ஏற்படுத்தும், அவளின் அன்பின் தொடுதலின் கசிவில் நஞ்சு கலக்க செய்யும். அது சாத்தானின் வேலை இல்லை, உங்கள் மன சாத்தானின் வேலைதானோ என பித்தனின் மனம் புலம்புகின்றது.

எல்லா தோழிகளும் தங்களின் பயணத்தில் யாரையும் சேர்த்துக்கொள்ள தயாராகவே உள்ளனர் ஆனாலும் நீங்கள் விலக்கப்பட்ட கனி சுவை தேடும் மனதின்,விலக்கப்பட்ட கனியை வெறி கொண்டு சுவைக்க சொல்லும் உள் மனதின் சாத்தானுக்கு உங்களை நீங்கள் ஒப்புகொடுத்தவரா என்பதுமட்டுமே இங்கு கேள்விக்குறிக்கு அருகில் உள்ளது. மற்ற படி தடை என்று இருந்தால் அது உங்கள் அகங்காரம் மட்டுமே அது எல்லாவற்றையும் விட கீழ்த்தரமானது. மற்ற பிரிவினை எல்லாம் உங்கள் அகங்காரம் ஏற்படுத்தும் மாயையே ஆகும்.

விடுதிகளின் வாழ்க்கை வித்தியாசமானது, கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பது கல்வியோடு உலக வாழ்வையும் சொல்லித்தரும் இடமே அன்றி வேறில்லை. இளநிலை பயிலும் காலங்களில் பித்தனுக்கு உடல் நலம் அடிக்கடி சீர்கேடும், அப்போது அவனின் கல்லூரியில் அதே பிரிவில் நேரடி அடுத்த ஆண்டு படிக்கும் மாணவியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவள் சொன்னாள் அண்ணா மருந்து மட்டும் பத்தாது, குளிர்ந்த நீரும், சளியை மேலும் அதிகமாக்கும் என சொன்னதும் பித்தன் சொன்னான் விடுதியில் வெந்நீரும், நல்ல உணவும் சற்றே கடினம் என சொன்னவுடன் அவள் சொன்னாள்
"அண்ணா, நாளை முதல் நீரும் உணவும் சில நாட்களுக்கு நான் தருகிறேன்" என சொன்னாள். அன்று முதல் இரண்டு நாட்களுக்கு உணவும், நன்கு காய்ச்சிய நீரும் தந்தாள். இரண்டு நாட்களுக்கு மேல் வேண்டாம் என மறுத்ததும் அந்த தங்கை அன்பின் மிகுதியில் சொன்னாள், இனி சில வாரங்களுக்கு தான் கொண்டு வரும் தண்ணீரை கல்லூரியில் இருக்கும் வரை அந்த வெந்நீரை மட்டுமே குடிக்குமாறு சொல்லி தினமும் தண்ணீர் தந்தாள்.

வாரங்கள் கடந்தன, எதோ ஒரு நாளின் மதிய இடைவேளையில் அவளோடு பேசுகையில் அவள் தந்தை என்ன வேலை செய்கிறார்? அவளின் அம்மா என்ன செய்கிறார்? குடும்பத்தில் எத்தனை பேர் என வழக்கமான எல்லா கேள்விகளையும், அவளோடு பேசி திரும்பிய பின் சில நாட்களுக்கு அவளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் செய்முறை தேர்வின் அவசரகதியில் சென்று அவளை பார்க்க முடியவில்லை, தேர்வு முடிந்து ஒரு நாள் நேர் எதிரே சந்திக்கும் போது வழக்கமான புன்னகை பரிமாறி, அவள் சொல்லும் குட் மார்னிங் அண்ணாவை அவள் மறந்து விட்டால் அதை கேட்க அவளின் வகுப்புக்கு போனபோது,

சில துளி கண்ணீரோடு எனை கண்டதும் நகர்ந்து சென்றாள், அவளை அழைத்து கேட்டபோது அவளே சொன்னாள் "அன்று கடைசியாக சந்திக்கும் போது என் குடும்ப விபரம் அனைத்தும் கேட்டிங்க அண்ணா, என் அப்பா செய்யும் தொழிலையும் உங்களிடம் சொன்னேன், அதிலிருந்து நான் தாழ்ந்த சாதி என்று தானே என்னை நீங்கள் பார்க்கவே இல்லை ,நான் தரும் தண்ணீரை அருந்தவே இல்லை என சொன்னாள்". அப்போது சில நிமிடம் நெஞ்சு அடைத்து உயிர் வந்ததாய் உணர்ந்து. கண்கள் நிறைய கண்ணீரோடு சொன்னான் பித்தன் பித்தனின் வாழ்வில் பேதமே இல்லை, உண்மையில் தேர்வுகளின் நெருக்கடியே காரணம் என புரிய வைத்து பின் மேசையில் அமர்ந்து இருந்த பித்தன் எழும் போது பித்தனின் சட்டையில் கண்ணீர் துடைத்து அந்த தங்கை சொன்னாள், "நீங்கள் எப்போதும் அப்படி பழகியதில்லை எனக்கு புரியும், பார்க்காத போதும் எனக்கு நோட்ஸ் தந்தும், எனை பார்க்காத போதும் என் வகுப்பு நண்பர்களிடம் எனை உங்கள் தங்கை என்றும் இரண்டாம் தொப்புள் கொடி என்று சொன்னதும் எனக்கு தெரியும்" என்றாள்.

இறுதி ஆண்டு முடியும் வரை என் தாகம் தீர்த்த தங்கை அவளே என்பதை பித்தன் என்றும் மறப்பதில்லை. உண்மையில் அவள் அப்படி நினைவு கூறும் வரை அவளின் எந்த பதிலும் நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் அவள் மனம் அதை நினைவு வைத்து கொண்டே இருந்திருக்கிறது. மீண்டும் எத்தனை அவசர தாகம் ஏற்பட்ட போதும் அவளிடமே கேட்டு தண்ணீர் குடித்தது அவளிடம் பித்தன் பேதம் கொள்ளவில்லை என நீருபிக்க அல்ல.
என்றுமே மனதில் தங்கையாக தோழியாக இருக்கிறாள் என பகிரவே......

அந்த நினைவுகளை எப்போது நினைத்தாலும் அவளின் அழுகையின் விம்மல் கேட்டுகொண்டே தான் இருக்கிறது. உங்களுக்கும் ஒரு வேளை பித்தனின் மௌனத்தின் இரைச்சலின் கூடே அவளின் விம்மல்களும் கேட்கலாம். நீங்கள் தவறாக நினைக்காத ஒன்றை பிறர் தவறாக நினைத்தால் வலி அவருக்கு மட்டும் அல்லவே.

பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by மகா பிரபு Sat Feb 02, 2013 10:02 am

சில நாட்களுக்கு முன் முகநூலில் வாசித்த ஒரு வரி,

ஒரு பெண்ணிடம் உண்மையான அன்பை பெற விரும்பினால் அண்ணனாக இருந்த பார் என்று..

அது எவ்வளவு உணமை என்று நான் அப்போது நினைத்தேன்.. குற்றமில்லாத ஒரு உறவு என்றால் மிகை ஆகாது.. அதை நிரூபிக்கும் வகையிலான ஒரு பதிவு. அதுவும் உங்கள் எழுத்துக்களால் படிக்கும் போது என் மனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது..

நன்றி பித்தன்.. மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 2695542999 மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 2695542999 மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 7:49 pm

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Images?q=tbn:ANd9GcSz5L_LnsDRY0vvJ7kntAKGOrqclX5U53-Xy_Jrww_-I-nezvk5
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by Manik Sun Feb 03, 2013 9:37 am

நம் கூடப்பிறக்காத தங்கைகளிடம் எப்போதும் ஒரு தனி அன்பு இருக்கத்தான் செய்கிறது.......

சில நேரம் அதிகமான அன்பை கூட வெளிப்படுத்துவோம் நாம் ஏனென்றால் நம் மனம் அப்படியே பழகிவிட்டது.

அருமையான சிந்தனை

தொடரட்டும் பித்தன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by பூ.சசிகுமார் Sun Feb 03, 2013 1:16 pm

அருமை அண்ணா சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by பித்தன் Sun Feb 03, 2013 9:18 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Images?q=tbn:ANd9GcSz5L_LnsDRY0vvJ7kntAKGOrqclX5U53-Xy_Jrww_-I-nezvk5
பொருள் என்னவோ?
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by ஸ்ரீராம் Mon Feb 04, 2013 1:09 am

நல்லொதொரு கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி பித்தன்
நன்றி மகா பிரபு.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by பித்தன் Mon Feb 04, 2013 5:32 pm

இது போன்றதொரு எழுத்துநடையில் பித்தனுக்கு பல முன்னோடிகள் இருப்பினும்,
ஒரு சிறு பிள்ளை முயற்சியே. வாழ்வின் இறந்த கால நிகழ்வுகளை மனதோடு நெருங்கி அசைபோடும் மரபே இந்த முறை.
இதற்காக பித்தன் என்றுமே தன் முன்னோடி படைப்பாளிகளுக்கு நன்றி கடன் பட்டவனாகிறான். வாசிக்கும் உங்களுக்கும் தான்.

காகித கப்பல் செய்து வீட்டின் மழை நீரில் விட்டு,
உண்மையில் கப்பல் விட்டதாகவே மனதில்
கொள்ளும் சிறுவனைப்போல் இருக்கிறது
பித்தனின் மனம்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by முரளிராஜா Mon Feb 04, 2013 5:40 pm

தொடர்ந்து உங்கள் எண்ண சிதறல்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் .
காகித கப்பல் ஆயினும் அதில் பயணம் செய்ய நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறோம் என்பதை நீங்கள் மறந்து விடாதிர் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும்  ஆழமாக  -5 Empty Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - இன்னும் ஆழமாக -5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum