Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
Page 1 of 1 • Share
ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
ஹிரோஷிமா, நாகசாகி...இந்தப் பெயர்களை இன்று கேட்டாலும் நம் மனம் ஒரு நிமிடம் பதறுவதைத் தவிர்க்க முடியாது. மாயாஜால திரைப்படங்களில் வருவது போல, ஒரு சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோரை சாம்பலாக்கி, அனைத்தையும் மறையச் செய்த அமெரிக்காவின், லிட்டில் பாய் என்ற அணுகுண்டு, ஹிரோஷிமா நகரில் 'அழிவு விளையாட்டு' விளையாடிய நாள் இன்று (ஆகஸ்ட் 6) . 1945ம் ஆண்டு நடந்தேறிய இந்த கொடூரத்தின் பின்னணி என்ன, ஹிரோஷிமா நகரை மட்டும் அமெரிக்கா குறிவைத்ததன் மர்மம் என்ன..அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட பயங்கர பாதிப்புகள் யாவை?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகள் இதோ...
1940ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த காலகட்டம் அது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அதிபயங்கர விளைவுகளை விளைவிக்கக்கூடிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்தனர். ஜெர்மனியின் நாஜிப் படையினரால் துரத்தப்பட்டு, அமெரிக்காவிடம் தஞ்சம் புகுந்த யூத விஞ்ஞானிகளுடன் சேர்ந்து அணு ஆயுத தயாரிப்புக்கான பூர்வாங்க பணிகள் வேகமாக நடந்தன. இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டு, அணு ஆயுதங்களை எப்படித் தயாரிப்பது என்ற ஆய்வு தொடங்கப்பட்டது.
போர் தீவிரமடைந்து விட்ட நிலையில், ஜப்பான் பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா பிலிப்பைன்ஸுக்கு உதவுவதாக உறுதியளித்திருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜப்பானும் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தன. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், 1941ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம் ஹிரோஷிமா கடற்படை மையத்திலிருந்து சரமாரியாகப் போர் விமானங்கள் ஹவாய் தீவை நோக்கிப் பறக்க ஆரம்பித்தன. 359 விமானங்கள் பேர்ல் ஹார்பர் (Pearl Harbour) துறைமுகத்தின்மீது குண்டுமழை பொழிய ஆரம்பித்தன. பிலிப்பைன்ஸுக்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படை சின்னாபின்னமாகியது. இதைச் சற்றும் எதிர்பாராத அமெரிக்காவுக்கு ஜப்பான் மீதான கோபம் அதிகரித்தது.
1942ம் ஆண்டு ஆயுதம் தயாரிக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது. மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்ட இப்பணிக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை 200 மில்லியன் டாலர்கள். இவ்வணு ஆயுதங்களின் மூலம் போர் முடிவுக்கு வருமானால், அது அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் உறுதியாக நம்பினார்.
அணுகுண்டு தயாரிப்பு முடிந்ததும், அதை எப்போது பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படவே, பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலுடன் ஆலோசனை நடத்தினார். இறுதியில் ஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
அணுகுண்டு தாக்குதலுக்கு முன் ஜப்பானை எச்சரிப்பதற்காக, ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிய ஆரம்பித்தன. டோக்கியோ நகரத்தில் மட்டும் ஒவ்வொரு 2 மீட்டருக்கும் ஒரு குண்டு வீதம் போடப்பட்டு, மொத்த நகரமும் தரைமட்டமாக்கப்பட்டது. கி.பி 1945 ஏப்ரல் 12ம் தேதி ஜனாதிபதி ரூஸ்வெல்ட் காலமானார். ஹாரி ட்ரூமன் அதிபராகப் பொறுப்பேற்றார். மான்ஹாட்டன் திட்டம் மிக ரகசியமாக நடந்து வந்ததால், இதற்கு முன் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ட்ரூமனுக்கு இதைப்பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை.
ஏராளமான பொருட்செலவுடன் மூன்றாண்டுகளில் தயாரான அணுகுண்டை இந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி அமெரிக்கா சோதனை செய்தது. Trinity என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, நியூ மெக்ஸிகோ மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனத்தின் மத்தியில் நடத்தப்பட்டது. அணுகுண்டின் வெடிதிறன் எவ்வளவு இருக்கும் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்போது போல ஊடகங்கள் இல்லாததால் வெறும் யூகங்கள்தான் உலவிக்கொண்டிருந்தன.
ஏன் ஹிரோஷிமா மீது?
ஜூலை மாதம் சோதனை நடத்துவதற்கு முன்பே அமெரிக்கா குண்டு போடுவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வைத்திருந்தது. இதற்காக, ஓஸகா, கியோத்தோ மற்றும் டோக்கியோ உட்பட, 17 நகரங்கள் பட்டியலிடப்பட்டன. பின்னர், ஒவ்வொரு நகரத்தின் மக்கள்தொகை மற்றும் ஏற்படப்போகும் பாதிப்புகளின் அடிப்படையில், மே 11ம் தேதி, நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஹிரோஷிமா, கொக்கூரா, நீகத்தா மற்றும் நாகசாகி. 1944 முதல் ஜப்பானின் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வந்த அமெரிக்கா, அணுகுண்டின் பாதிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட, இந்த நான்கு இடங்களின் மீது மட்டும் குண்டு வீச்சை நிறுத்தி வைத்தது. மக்கள் நெருக்கம் மிகுந்த போர்முனையாக இருக்க வேண்டும் என்பதால், முதல் இலக்காக ஹிரோஷிமா தேர்வானது. அங்கு பிறநாட்டுப் போர்க்கைதிகள் சிறை வைக்கப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
மற்ற குண்டுகளைவிட, அணுகுண்டை வீசும் முறை சற்று வித்தியாசமானது என்பதால், விமானிகளுக்குச் சற்று பயிற்சி தேவைப்பட்டது. இதற்காக அமெரிக்காவிலிருக்கும் பாலைவனத்தில், தேர்வு செய்யப்பட்ட இலக்குகளை மாதிரியாகச் செய்து வைத்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்பயிற்சி வெற்றிகரமாக முடிந்தவுடன், ஆகஸ்டு முதல் வாரத்தில் ஹிரோஷிமா மீது குண்டு வீச அமெரிக்கா எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டது.
ஆகஸ்டு 2ம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பால் டிபெட்ஸ் என்ற விமானி தேர்வு செய்யப்பட்டார். எனோலா கே' (Enola Gay) விமானம் மூலம் குண்டு வீச ஏற்பாடானது. அணுகுண்டிற்கு லிட்டில் பாய்(Little Boy) எனப் பெயரிடப்பட்டது. இறந்து போன அதிபர் ரூஸ்வெல்ட்டின் செல்லப்பெயர் தான் இந்த லிட்டில் பாய் என கூறப்படுகிறது. 29 அங்குல விட்டமும், 126 அங்குல நீளமும், 9700 பவுண்ட் எடையும், யுரேனியத்தை மூலப்பொருளாகவும் கொண்ட லிட்டில் பாய், எனோலா கே விமானத்தில் பொருத்தப்பட்டது.
கறுப்பு நாள்
அதிகாலை 2 மணிக்கு ஹிரோஷிமா நகர எல்லைக்குள் வேற்று நாட்டுப் போர் விமானம் ஊடுருவியிருப்பது விமானப்படையின் ரேடார்களில் தெரிய வருகிறது. உடனே ரேடியோ மற்றும் ஒலி பெருக்கிகளின் மூலம் மக்கள் எச்சரிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைவரும் வீட்டிற்குள் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். பின்னர் மூன்று மணி நேரம் கழித்து அவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியபின், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது. சேதம் எதுவுமில்லை என்று சோதித்தறிந்தபின், நகரின் ஒவ்வொரு சாலையாக மக்கள் நடமாட்டத்திற்குத் திறந்து விடப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் அந்த நாளைத் தொடங்குகின்றனர். குழந்தைகள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பெற்றோர் அவர்களை அனுப்புவதிலும் தாங்கள் வேலைக்குச் செல்வதிலும் முனைகின்றனர்.
காலை 8:15 மணிக்கு மேலும் இரண்டு விமானங்கள் ஹிரோஷிமா நகர எல்லைக்குள் வருகின்றன. முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பாராசூட்டின் மூலம் கீழே போட்டுவிட்டுச் சென்று விடுகிறது. ஆனால் இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. போர்முனையில் இருக்கும் வீரர்கள் சிலர் விமானத்திலிருந்து ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்க்கின்றனர்.
அடுத்த சில நிமிடங்களில் நகரெங்கும் ஒரே மரண ஓலம். குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 28 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கல்லையும் மண்ணையும் தவிர, எரியக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 300000 (மூன்று லட்சம்) டிகிரி செல்சியஸ். அடுத்த ஒரு வினாடியில் 280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு 5000 (ஐந்தாயிரம்) டிகிரி செல்சியஸ். எத்தனை மனிதர்கள் இறந்தார்கள் என்பதுகூடத் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துக் காணாமல் போனவர்களைக் கணக்கெடுத்து, அதிலிருந்து இத்தனை பேர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தனர்.
இத்துடன் இதன் விளைவுகள் நின்று விடவில்லை. அணுக்கதிர்வீச்சு பல ஆண்டுகளுக்கும் தொடர்ந்தது. பல ஆண்டுகள் அங்கு தொடர்ந்த கதிர்வீச்சால் பலருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அதன் பின் பிறந்த குழந்தைகள் குறைபாடுகளுடன் அவதிக்குள்ளாயின. ஆனால் இன்று... அணுகுண்டு போடப்பட்டதன் அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, உலகின் சிறந்த நகரங்களுக்கும் சவால் விடும் வகையில் ஹிரோஷிமா கட்டமைக்கப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this image.]
நன்றி கட்டுரை உதவி: அம்புலிமாமா
படங்கள் உதவி: கூகிள்
நாளை வரலாற்றில் புதைந்த மர்மங்கள் வரிசையில் கொடுங்கோல் ஆட்சி .... ராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3
» நீ பெரியவனா...நான் பெரியவனா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #1
» புதைந்த ரகசியங்கள் - தஞ்சை கோவில்கள் #1
» மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம்
» இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!
» நீ பெரியவனா...நான் பெரியவனா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #1
» புதைந்த ரகசியங்கள் - தஞ்சை கோவில்கள் #1
» மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம்
» இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|