தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Fri Nov 01, 2013 12:01 pm

ம்ம்ம்...சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 9:21 am

159 பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப; - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு:

(பொ-ள்.) பல் நாளும்சென்றக்கால் - பலமுறையும் ஒருவர் சென்றால்,‘பண்பிலார் - நற்பண்பில்லாத கீழ் மக்கள், தம்உழை என்னானும் வேண்டுப என்று இகழ்ப - தம்மிடம்ஏதாவது உதவி வேண்டுவார் என்று அவரை அவமதிப்பர்;விழுமியோர் - ஆனால் மேன்மக்கள், என்னானும்வேண்டினும் நன்று என்று - அவர் ஏதாவது உதவிவிரும்பினாலும் நல்லது என்று கருதி, காண்டொறும்செய்வர் சிறப்பு - அவரைப்பார்க்கும்போதெல்லாம் பெருமை செய்வர்.

(க-து.) மேன்மக்கள் பிறர்க்குஉதவி செய்தலில் விருப்பமுடையவராயிருப்பர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by muthuaiyer Sun Nov 03, 2013 9:34 am

ஒரு நந்தவனம்/தோட்டத்தில் நுழைந்தால் அங்கு பூத்துக் குலுங்கும் அன்றலர்ந்த மலர்களின் வாசம் நம்மையே மறக்கச் செய்து எல்லாம்வல்ல இறைவனின் திருவடிகளை நினைக்கச் செய்யும்.
அதேபோல் அமர்க்களமான இந்த மலர்த்தோட்டத்தில் நுழைந்தால் என்னவொரு தமிழ் மணம், நான்கு திசையிலிருந்தும் வீசுகிறது. இத்தோட்டத்தில் இந்தப் பக்கம் வந்தேன். ஆஹா! நாலடியாரின் தமிழ் மணம் என்னையே மறக்கச் செய்துவிட்டது. அருமையான தொடர். தொடர்ந்து மணம் வீசிக்கொண்டே இருக்கட்டும்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Sun Nov 03, 2013 10:47 am

நன்று!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Nov 04, 2013 9:40 am

160 உடைய ரிவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.

(பொ-ள்.) உடையார் இவர் என்று ஒருதலையாப்பற்றிக் கடையாயார் பின் சென்றுவாழ்வர் - பொருளுடையார் இவர் என்று உறுதியாகப்பற்றி மக்களிற் பெரும்பாலார் கீழ்மக்கள்பின்சென்று உயிர் வாழ்வர்; உடையபிலம்தலைப்பட்டது போலாதே நல்ல குலம் தலைப்பட்டவிடத்து-சிறந்த மேன்மக்களினத்தைச்சேரப்பெற்ற போது, அஃது உரிமையுடைய ஒருபொருட்சுரங்கத்தைத் தலைப்பட்டதுபோ லாகாதோ?

(க-து.) மேன்மக்கள் சேர்க்கையேஎல்லா நலங்களும் பெருக அடைவதற்குரியது
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Mon Nov 04, 2013 11:26 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Mon Nov 04, 2013 5:22 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Nov 05, 2013 9:14 am

பொருட்பால்
17. பெரியாரைப் பிழையாமை
[பெரியாரை அவமதித்து நடவாமை]


161 பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.


(பொ-ள்.) பொறுப்பர் என்றுஎண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பனசெய்யாமை வேண்டும் - பொறுத்துக் கொள்வார் என்றுநினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர்வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல்வேண்டும்; வெறுத்தபின் - அவர் உள்ளம் அதனால்வருந்தியபின், ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட -ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகியமலைகள் பொருந்திய சிறந்த நாடனே; பேர்க்குதல்யார்க்கும் அரிது - அவ் வருத்தத்தால் உண்டாகுந்தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும்இயலாது.

(க-து.) பெரியோரைஅவமதித்தொழுகினால் தீர்வில்லாததீங்குண்டாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Tue Nov 05, 2013 9:34 am

எற்றுக்கொள்கிறேன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 9:07 am

162 பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

(பொ-ள்.) பொன்னே கொடுத்தும்புணர்தற்கு அரியாரை - பொன்னையே விலையாகக்கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரானபெரியோர்களை, கொன்னே தலைக்கூடப்பெற்றிருந்தும் - பொருட் செலவில்லாமலே அவரைநட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்றிருந்தும்.நல்ல நயம் இல் அறிவினவர் அன்னோ பயனில்பொழுதாக் கழிப்பரே - சிறந்த பண்புடைமையில்லாதஅறிவினையுடைய பேதையர் ஆ, தம்முடையவாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக்கழிக்கின்றனரே!

(க-து.) பெரியார் இணக்கம்வாழ்க்கை யின்பம் மிகுத்து அதனைப்பயனுடையதாக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Wed Nov 06, 2013 10:22 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Nov 07, 2013 9:20 am

163 அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான் மதிக்கற் பால; -நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.

(பொ-ள்.) அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் மிகைமக்களான் மதிக்கற்பால-மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும்மேன்மக்களாகிய பெரியோர்களால்மதித்தற்குரியனவாகும்; நயம் உணராக்கையறியாமாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் -நன்மையை உணர்தலில்லாத ஒழுக்கமறியாக்கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும்ஏத்துரையும், வடித்த நூலார் வையார் - தெளிந்தநூலறிவினையுடையோர் ஒரு பொருளாகமனத்துட்கொள்ளமாட்டார்கள்.

(க-து.) மேன்மக்கள்பால்மதிப்புப்பெற முயலுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Thu Nov 07, 2013 10:28 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Nov 08, 2013 10:09 am

164 விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

(பொ-ள்.) விரிநிற நாகம் விடர்உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும்- படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின்வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடியஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்குஅஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும்பெருமையுடையார் செறின் உய்யார் - அருமைப்பாடுடையபாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும்,மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச்சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.

(க-து.) பெரியோர்க்குப் பிழைசெய்து பின் அதிலிருந்து தப்புதல் இயலாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 9:47 am

165 எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.

(பொ-ள்.) எம்மை அறிந்திலிர்எம்போல்வார் இல் என்று தம்மைத்தாம் கொள்வதுகோள் அன்று - ‘எமது தகுதியை நீவிர்அறிந்தீரில்லை; எம்மைப்போன்ற தகுதியுடையார்பிறர் ஈண்டு இல்லை' என்று தம்மைத் தாமேபெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது;தம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர்பெரியராக் கொள்வது கோள்-தம்மைஅருமையுடையராகக் கருதி, அறமுணருஞ் சான்றோர்பெரியரென்று மதித்தேற்றுக் கொள்ளுதலேபெருமையாகும்.

(க-து.) தம்மைச் சான்றோர்பெரியரென மதித்தேற்குமாறு தாம் செய்கையில்ஒழுகுதலன்றித், தம்மைத் தாமே பெரியரென -வாயுரையாப் புலப்படுத்திக் கொள்ளுதல்மதிப்புடைமையாகாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Sat Nov 09, 2013 11:52 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sat Nov 09, 2013 3:08 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Nov 10, 2013 8:47 am

166 நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை: - விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.

(பொ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப- பெரிய கடலின் குளிர்ந்த துறையையுடையவனே!சிறியவர் கேண்மை நாள் நிழல்போலவிளியும்-சிறியோர் நட்புக் காலை நேரத்தின்நிழல்போலக் குறைந்து கெடும்; விளிவுஇன்றி-அவ்வாறு குறைந்து கெடுதலில்லாமல், அல்குநிழல்போல் - மாலை நேரத்தின் நிழல்போல,தொல்புகழாளர் தொடர்பு அகன்று அகன்று ஓடும்-பழைமை தொட்டு வரும் புகழினையுடையரான பெரியோர்நட்பு வளர்ந்து பெருகும்.

(க-து.) இருக்க இருக்கப் பெருகும் நேயமாட்சிக் குரியபெரியோரிடம் பிழைத்தலின்றி யொழுகி நலம்பெறல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Sun Nov 10, 2013 10:52 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Nov 11, 2013 9:57 am

167 மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.

(பொ-ள்.) மன்னர் திருவும் மகளிர்எழில் நலமும் - அரசர் வளமும் மகளிரின்எழுச்சியழகும், துன்னியார் துய்ப்பர் - அவர்களுடன்நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: தகல்வேண்டா-நேயம் என்னும் அந் நெருக்கமல்லதுஅதற்குத் தகுதியுடைமை வேண்டா: துன்னிக்குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் -நெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ளகுளிர்ச்சியான மரங்களெல்லாம், உழை தங்கட்சென்றார்க்கு ஒருங்கு - தம்மிடம் வந்தடைந்தாரனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும்.

(க-து.) ஆதலால், நேயத்தால் தம்மைஅடைந்தவரிடம் தகுதி வேறுபாடுகள் கருதாமல்,பெரியோர் அளவளாவியிருந்து அவரை மகிழ்விப்பரென்க.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Mon Nov 11, 2013 11:22 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Nov 12, 2013 9:32 am

168 தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும்.

(பொ-ள்.) தெரியத் தெரியும்தெரிவிலார் கண்ணும் நூற்பொருள்களை விளங்கத்தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், பிரியப்பெரும்படர் நோய் செய்யும் - அவரைப் பிரிய அப்பிரிவு பெரிய நினைவுத் துன்பம் உண்டாக்கும்;பெரிய உலவா இரு கழிச் சேர்ப்ப-வளங்கெடாதகருநிறமான பெரிய கழிக்கரையை யுடையோனே, யார்மாட்டும் கலவாமை கோடி உறும் - ஆதலால்,பெரியோரிடத்தன்றிப்பிறர் யாரிடத்திலும்நேயங்கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

(க-து.) ஆராய்ந்து பெரியோரிடமேநேயங்கொள்ளுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Tue Nov 12, 2013 10:52 am

எற்றுக்கொள்கிறேன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Nov 13, 2013 11:07 am

169 கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.

(பொ-ள்.) கல்லாது போகிய நாளும் -கற்றற்குரிய நூல்களைக் கல்லாமற் கழிந்தநாட்களும், பெரியவர்கண் செல்லாது வைகியவைகலும்-கேள்வியின் பொருட்டுப் பெரியோர்பாற்செல்லாது நின்ற நாட்களும், ஒல்வகொடாது ஒழிந்தபகலும் - இயன்ற பொருள்களை உரியவர்களுக்குஉதவாமல் நீங்கிய நாட்களும், உரைப்பின் -சொல்லுமிடத்து, பண்புடையார்கண்படா-நல்லியல்புடைய பெரியோர்களிடம்உண்டாகமாட்டா.

(க-து.) கல்வி கேள்விகளும்ஒப்புரவும் என்றும் பெரியோர் உடையராயிருப்பர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Wed Nov 13, 2013 11:36 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 11 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 25 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 18 ... 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum