Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்ணதாசன் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
கண்ணதாசன் கவிதைகள்
First topic message reminder :
நன்றி : கண்ணதாசன்
"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'
நன்றி : கண்ணதாசன்
"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'
Re: கண்ணதாசன் கவிதைகள்
ஏது திரும்பினும் என்ன நடப்பினும்
இளமை திரும்பிடுமோ - ஒரு
தேதி நடந்திட தேதி நடந்திட
திரையும் விழுந்திடுமோ!
இளமை திரும்பிடுமோ - ஒரு
தேதி நடந்திட தேதி நடந்திட
திரையும் விழுந்திடுமோ!
Re: கண்ணதாசன் கவிதைகள்
இன்னும் உடம்பில் இரத்தம் இருப்பினும்
எண்ணம் அரும்பவில்லை - அதில்
மின்னிடும் சிந்தனை ஞானமல்லாமல் சுக
வேதனை ஏதுமில்லை!
மன்னிய பக்குவம் எய்திய நாட்களை
வாழ்வில் அடைந்துவிட்டேன் - இனி
தன்னந் தனிமையில் தவம்புரிவோ மெனக்
வினைச் சாத்தி விட்டேன்'
எண்ணம் அரும்பவில்லை - அதில்
மின்னிடும் சிந்தனை ஞானமல்லாமல் சுக
வேதனை ஏதுமில்லை!
மன்னிய பக்குவம் எய்திய நாட்களை
வாழ்வில் அடைந்துவிட்டேன் - இனி
தன்னந் தனிமையில் தவம்புரிவோ மெனக்
வினைச் சாத்தி விட்டேன்'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"யாரைச் சொல்லி யாரிடம் சொல்லி
தேறுவ திந்தத் தேரா வாழ்க்கையை?
ஒருமணி நேரம் ஊமையாய் இருங்கள்
சிலமணிப் பொழுது செவிடாய் இருங்கள்
மூன்று நாழிகைகள் முடமாய் இருங்கள்
கூடுமானவரை குருடாய் இருங்கள்
இப்படியே தினம் இருந்து கொண்டிருந்தால்
மரணம் வரும்வரை மனிதனாய் வாழலாம்!'
தேறுவ திந்தத் தேரா வாழ்க்கையை?
ஒருமணி நேரம் ஊமையாய் இருங்கள்
சிலமணிப் பொழுது செவிடாய் இருங்கள்
மூன்று நாழிகைகள் முடமாய் இருங்கள்
கூடுமானவரை குருடாய் இருங்கள்
இப்படியே தினம் இருந்து கொண்டிருந்தால்
மரணம் வரும்வரை மனிதனாய் வாழலாம்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
ஆயிரமாய்த் தொல்லைகள் வாழ்விற் கண்டேன்
அடுக்கடுக்காய் இன்னல்களை அணைத்தும் நின்றேன்
ஆயினுமென்? அச்சத்தால் உயிர்விட் டேனா?
ஆகட்டும் பார்ப்போம் என்றெதிர்த்துச் சென்றேன்'
அடுக்கடுக்காய் இன்னல்களை அணைத்தும் நின்றேன்
ஆயினுமென்? அச்சத்தால் உயிர்விட் டேனா?
ஆகட்டும் பார்ப்போம் என்றெதிர்த்துச் சென்றேன்'
Re: கண்ணதாசன் கவிதைகள்
நம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்
நலிவுறும் என்று அஞ்சி
நடுங்காத நெஞ்சோடும் தொடர்கிறேன் வருகின்ற
நாளை என் காலம் என்றே
நலிவுறும் என்று அஞ்சி
நடுங்காத நெஞ்சோடும் தொடர்கிறேன் வருகின்ற
நாளை என் காலம் என்றே
Re: கண்ணதாசன் கவிதைகள்
என்னை அழவிடு என்னை அழவிடு
அன்னை என்னை அழவே படைத்தாள்
வானம் அழுவது மழையெனும் போது
வையம் அழுவது பனியெனும் பொது
கானம் அழுவது கலையெனும் பொது
கலைஞன் அழுவது கவிதையா காதோ?
அன்னை என்னை அழவே படைத்தாள்
வானம் அழுவது மழையெனும் போது
வையம் அழுவது பனியெனும் பொது
கானம் அழுவது கலையெனும் பொது
கலைஞன் அழுவது கவிதையா காதோ?
Re: கண்ணதாசன் கவிதைகள்
கைநிறையப் பொருள்குவித்துக் காலமெல்லாம் அள்ளிவிட்டு
இல்லையென வருவார்க்கும் ஏங்கி அழுவார்க்கும்
தொல்லையிலே வீழ்வார்க்கும் துணையாக வாழ்ந்திருந்து
கல்யாண மாகாத காளையர்க்கும் கன்னியர்க்கும்
நல்ல மணமுடித்து நல்வாழ்வுக் கைகொடுத்து
எல்லார்க்கும் நல்லவனாய் இரக்கம் மிகுந்தவனாய்
வாழ நினைத்திருந்தேன் வாழ்வும் முழுமையில்லை
இல்லையென வருவார்க்கும் ஏங்கி அழுவார்க்கும்
தொல்லையிலே வீழ்வார்க்கும் துணையாக வாழ்ந்திருந்து
கல்யாண மாகாத காளையர்க்கும் கன்னியர்க்கும்
நல்ல மணமுடித்து நல்வாழ்வுக் கைகொடுத்து
எல்லார்க்கும் நல்லவனாய் இரக்கம் மிகுந்தவனாய்
வாழ நினைத்திருந்தேன் வாழ்வும் முழுமையில்லை
Re: கண்ணதாசன் கவிதைகள்
"போனால் போகட்டும் போட! இறந்து விட்டால்
நானாரோ நீயாரோ நல்ல பொழுதையெல்லாம்
அழுதே கழிக்காமல் ஆடித்தான் பார்க்கிறேன்'
நானாரோ நீயாரோ நல்ல பொழுதையெல்லாம்
அழுதே கழிக்காமல் ஆடித்தான் பார்க்கிறேன்'
Re: கண்ணதாசன் கவிதைகள்
இனித்தசுவை வாழ்க்கைமுறை பலவுங் கொண்ட
இயல்புமிகு தமிழரெல்லாம் இனத்தால் ஒன்று
மனிதக்குணம் சிறிதுமிலா வடவர் தம்மில்
மாறுபடு இனத்தார் காரணத்தால் ஒன்று'
இயல்புமிகு தமிழரெல்லாம் இனத்தால் ஒன்று
மனிதக்குணம் சிறிதுமிலா வடவர் தம்மில்
மாறுபடு இனத்தார் காரணத்தால் ஒன்று'
Re: கண்ணதாசன் கவிதைகள்
காட்டுமலர்க் கொத்தேபோல் இனிமை தேக்கிக்
காத்த மொழி தமிழாகும் நம்மதாகும்!
கெட்ட மொழி இந்திஅதன் பகைவ னாகும்
கேட்கின்ற பிரிவினைக்குப் பொருள் இரண்டாம்
... ... ... ...
அற்புதமாம் தமிழ்க்கலைக்கு வடவர் நாட்டின்
அசடுவழி கலைவேறு! கொள்கை மூன்று'
காத்த மொழி தமிழாகும் நம்மதாகும்!
கெட்ட மொழி இந்திஅதன் பகைவ னாகும்
கேட்கின்ற பிரிவினைக்குப் பொருள் இரண்டாம்
... ... ... ...
அற்புதமாம் தமிழ்க்கலைக்கு வடவர் நாட்டின்
அசடுவழி கலைவேறு! கொள்கை மூன்று'
Re: கண்ணதாசன் கவிதைகள்
குதிரையைக் கூடிய கோமள வல்லிகள்
கூடியிருந்தது வடநாடு!'
பதிமுறை காத்தநற் பத்தினிப் பெண்மையின்
பண்புவ ளர்த்தது தென்னாடு!
அதிசயக் கடவுளர் ஆயிர மாயிரம்
ஆதிநி லைத்தது வடநாடு!
கதிரொடு திங்களைக் கண்ணுற வாழ்த்திய
காவியம் புகழ்வது தென்னாடு!
காதலர் கண்டதும் மேகலை வீழ்வுறும்
காமம்வ ளர்த்தது வடநாடு!
காதலர் கண்டதும் நாணிய பெண்மையிற்
கற்புநி லைத்தது தென்னாடு!'
கூடியிருந்தது வடநாடு!'
பதிமுறை காத்தநற் பத்தினிப் பெண்மையின்
பண்புவ ளர்த்தது தென்னாடு!
அதிசயக் கடவுளர் ஆயிர மாயிரம்
ஆதிநி லைத்தது வடநாடு!
கதிரொடு திங்களைக் கண்ணுற வாழ்த்திய
காவியம் புகழ்வது தென்னாடு!
காதலர் கண்டதும் மேகலை வீழ்வுறும்
காமம்வ ளர்த்தது வடநாடு!
காதலர் கண்டதும் நாணிய பெண்மையிற்
கற்புநி லைத்தது தென்னாடு!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
எவ்வழி ஓரினம் எவ்வழி ஓர்கலை
எவ்வழி பாரதம் ஒன்றாகும்
... ... ... ...
செவ்வழி தமிழர் ஆந்திரர் ஒன்றாய்த்
திராவிடம் காணல் நன்றாகும்
எவ்வழி பாரதம் ஒன்றாகும்
... ... ... ...
செவ்வழி தமிழர் ஆந்திரர் ஒன்றாய்த்
திராவிடம் காணல் நன்றாகும்
Re: கண்ணதாசன் கவிதைகள்
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழிவைத்து
வாழைக்குள் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் இறைவன்'
முட்டைக்குள் கோழிவைத்து
வாழைக்குள் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் இறைவன்'
Re: கண்ணதாசன் கவிதைகள்
இறைவனென் றொருவன் உண்டு
இவரிவர் வாழ்க்கை இந்த
முறையிலே போகும் என்று
முடிவுற்ற கணக்கும் உண்டு
இவரிவர் வாழ்க்கை இந்த
முறையிலே போகும் என்று
முடிவுற்ற கணக்கும் உண்டு
Re: கண்ணதாசன் கவிதைகள்
முற்றும் கசந்ததென்று
பற்றற்று வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்'
பற்றற்று வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்'
Re: கண்ணதாசன் கவிதைகள்
நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவ தத்துவம் ஆயிரம் எழுதலாம்
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்
ஆண்டவ தத்துவம் ஆயிரம் எழுதலாம்
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்
Re: கண்ணதாசன் கவிதைகள்
இருவேறு வர்க்கம் இனிமேல் கிடையாது!
ஏழைக்கு வாழ்வு! எல்லார்க்கும் ஒரு வீடு!
ஆளுக்கு இவ்வளவு ஆதிக்கம் எனும்படிக்கு
மாறிவரும் காலம்! மாறத்தான் வேண்டும், இதில்
சாவுவரும் என்றாலும் சமுதாயம் துணிந்துவரும்
இந்தத் தலைமுறையில் இதனை முடித்துவைப்போம்!'
ஏழைக்கு வாழ்வு! எல்லார்க்கும் ஒரு வீடு!
ஆளுக்கு இவ்வளவு ஆதிக்கம் எனும்படிக்கு
மாறிவரும் காலம்! மாறத்தான் வேண்டும், இதில்
சாவுவரும் என்றாலும் சமுதாயம் துணிந்துவரும்
இந்தத் தலைமுறையில் இதனை முடித்துவைப்போம்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"இமயமுடி மீதேறிக்
காஷ்மீரில் இறங்குவேன்...
புதுடில்லி ஓடுவேன்
இந்தியில் பேசி மகிழ்வேன்...
சண்டிகார் நகரிலோர்
நண்பனின் வீட்டில்
தமிழ்நாட்டின் உணவு கொள்வேன்...
எழில்மிக்க கோவாவில்
சிறுகப்பல் ஓட்டுவேன்...
புலனெலாம் சிலிர்க்கவே
கர்நாட கத்திலே
போய்த் தென்றல் அலைகள் பெறுவேன்...
காஷ்மீரில் இறங்குவேன்...
புதுடில்லி ஓடுவேன்
இந்தியில் பேசி மகிழ்வேன்...
சண்டிகார் நகரிலோர்
நண்பனின் வீட்டில்
தமிழ்நாட்டின் உணவு கொள்வேன்...
எழில்மிக்க கோவாவில்
சிறுகப்பல் ஓட்டுவேன்...
புலனெலாம் சிலிர்க்கவே
கர்நாட கத்திலே
போய்த் தென்றல் அலைகள் பெறுவேன்...
Re: கண்ணதாசன் கவிதைகள்
"ஒன்றுதான் தேசம்! ஒன்றுதான் சிந்தை
ஒன்றுதான் நாம் சொல்லும் வார்த்தை
ஒன்றுதான் நோக்கும் ஒன்றுதான் பார்வை
ஒன்றுதான் நாம் ணெசல்லும் பாதை
ஒன்றுதான் நாம் சொல்லும் வார்த்தை
ஒன்றுதான் நோக்கும் ஒன்றுதான் பார்வை
ஒன்றுதான் நாம் ணெசல்லும் பாதை
Re: கண்ணதாசன் கவிதைகள்
"சாதியைப் புலமாய்க் கொண்டு
தலைவர்கள் அமைந்தால் ஆங்கு
நீதியே அமைவ தில்லை
நிகழ்ந்தது குளத்தூர் நாட்டில்
சாதியே பேயே சாவின்
தளத்திலே சிவந்த உன்னைத்
தேர்தலால் மீண்டும் கொண்டு
திணித்தவர் அழத்தான் வேண்டும்
தலைவர்கள் அமைந்தால் ஆங்கு
நீதியே அமைவ தில்லை
நிகழ்ந்தது குளத்தூர் நாட்டில்
சாதியே பேயே சாவின்
தளத்திலே சிவந்த உன்னைத்
தேர்தலால் மீண்டும் கொண்டு
திணித்தவர் அழத்தான் வேண்டும்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"சுடுகாட் டெலும்புகளைச் சோதித்துப் பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று வந்தஎலும் பில்லையடி
தென்னாட் டெலும்பென்று தெரிந்தஎலும் பில்லையடி
எந்நாட் டெலும்பென்றும் எழுதிவைக்க வில்லையடி
ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில் எந்நாளும் துன்பமடி'
வடநாட் டெலும்பென்று வந்தஎலும் பில்லையடி
தென்னாட் டெலும்பென்று தெரிந்தஎலும் பில்லையடி
எந்நாட் டெலும்பென்றும் எழுதிவைக்க வில்லையடி
ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில் எந்நாளும் துன்பமடி'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"படைகொண்டு மோதி வென்ற
பாண்டியர் ஈழ நாட்டில்
விடைகொண்டு திரும்பி டாமல்
வேரூன்றி நின்றி ருந்தால்
கடைதாவிக் குதிக்கு மிந்தக்
காடையர் வாழ்க்கை இன்று
நடைதேய்ந்து போயி ருக்கும்!
பாண்டியர் ஈழ நாட்டில்
விடைகொண்டு திரும்பி டாமல்
வேரூன்றி நின்றி ருந்தால்
கடைதாவிக் குதிக்கு மிந்தக்
காடையர் வாழ்க்கை இன்று
நடைதேய்ந்து போயி ருக்கும்!
Re: கண்ணதாசன் கவிதைகள்
"என்னயான் சொல்வேன்; வாழும்
இருபது லட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே! வருந்த வேண்டாம்!
"அழிவது தமிழே' என்று
சொன்னவர் அழியு மாறு
துவக்குக போரை! வெல்வோம்!'
இருபது லட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே! வருந்த வேண்டாம்!
"அழிவது தமிழே' என்று
சொன்னவர் அழியு மாறு
துவக்குக போரை! வெல்வோம்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
வந்தவுடன் பார்த்தேன்
வானளவு நான் விரிந்தேன்
சிறுகூடு விட்டவந்து
சிறகைவிரித் தாட்டுகின்ற
பறவையென நான்பறந்தேன்
பழங்கதையை மறந்துவிட்டேன்
இவ்வுலகம் மிகப்பெரிது
எவ்வளவோ மக்களினம்
அவ்வளவும் தோழமையாய்
ஆக்குவதே கவிதைமனம்
வானளவு நான் விரிந்தேன்
சிறுகூடு விட்டவந்து
சிறகைவிரித் தாட்டுகின்ற
பறவையென நான்பறந்தேன்
பழங்கதையை மறந்துவிட்டேன்
இவ்வுலகம் மிகப்பெரிது
எவ்வளவோ மக்களினம்
அவ்வளவும் தோழமையாய்
ஆக்குவதே கவிதைமனம்
Re: கண்ணதாசன் கவிதைகள்
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாடு
உலகம் யாவும் மானிடர் வீடு
உரிமை காப்போம் உறவையுங் காப்போம்
ஒன்றாய் இணைந்து என்றும் வாழ்வோம்!
உலகம் யாவும் மானிடர் வீடு
உரிமை காப்போம் உறவையுங் காப்போம்
ஒன்றாய் இணைந்து என்றும் வாழ்வோம்!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கவியரசு கண்ணதாசன்
» குடும்பம் என்ற தலைப்பில் கண்ணதாசன் கூறுவது…
» கவியரசர் கண்ணதாசன் வருகிறார்...
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !
» குடும்பம் என்ற தலைப்பில் கண்ணதாசன் கூறுவது…
» கவியரசர் கண்ணதாசன் வருகிறார்...
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|