Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்ணதாசன் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
கண்ணதாசன் கவிதைகள்
First topic message reminder :
நன்றி : கண்ணதாசன்
"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'
நன்றி : கண்ணதாசன்
"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'
Re: கண்ணதாசன் கவிதைகள்
வாதிட்டு மன்றில் நின்று
வழக்குரைத் திடும்நீ இங்கு
"தூதெ'ன்றும் "தந்தி' என்றும்
தொடங்கிய அனைத்தும் நாட்டில்
சாதித்த செயலில் ஒன்று
தமிழுக்குப் பாது காப்பு,
ஆதித்த னாரே! உம்மை
அருந்தமிழ் இழந்த தின்று'
வழக்குரைத் திடும்நீ இங்கு
"தூதெ'ன்றும் "தந்தி' என்றும்
தொடங்கிய அனைத்தும் நாட்டில்
சாதித்த செயலில் ஒன்று
தமிழுக்குப் பாது காப்பு,
ஆதித்த னாரே! உம்மை
அருந்தமிழ் இழந்த தின்று'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"ஊராட்சி என்றாலும்
நகராட்சி என்றாலும்
ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்
ஒருபோதும் தன்கட்சி
நிருவாகத் தலையீட்டை
ஒப்புக்கொள் ளாத தலைவன்
சீரான அரசாட்சி
சிலகாலம் செய்தாலும்
திறமாகச் செய்த புனிதன்
தென்னாட்சி மாந்தர்தம்
திறமைக்குச் சான்றாகித்
தேசத்தை ஈர்த்த தமிழன்'
நகராட்சி என்றாலும்
ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்
ஒருபோதும் தன்கட்சி
நிருவாகத் தலையீட்டை
ஒப்புக்கொள் ளாத தலைவன்
சீரான அரசாட்சி
சிலகாலம் செய்தாலும்
திறமாகச் செய்த புனிதன்
தென்னாட்சி மாந்தர்தம்
திறமைக்குச் சான்றாகித்
தேசத்தை ஈர்த்த தமிழன்'
Re: கண்ணதாசன் கவிதைகள்
இற்றைத் தமிழ் இன்றைய வழியே
என்றும் சென்றால் இன்னவை நிகழும்!
வற்றாத் துணிவை வளம்பெறச் செய்தால்
வருநாள் தமிழகம் வாழ்ந்திடக் கூடும்!
என்றும் சென்றால் இன்னவை நிகழும்!
வற்றாத் துணிவை வளம்பெறச் செய்தால்
வருநாள் தமிழகம் வாழ்ந்திடக் கூடும்!
Re: கண்ணதாசன் கவிதைகள்
"காதலர் இருவர் கருத்தொரு மித்து
ஆதர வானால் ஆனந்தம் எனக்
கூறிய வள்ளுவன் குறளின் படியும்,
மங்கல மங்கையர் மனையறம் பற்றச்
செப்பிய இளங்கோ செய்தியின் வழியும்
இருவர் ஒருவராய் இயங்கும் இயக்கமம்
திருமண மென்னும் செவ்வற மாகும்!
வாழ்க்கை என்பது வஞ்சியர் தமக்கு
மணந்த வனுடனே வாழும் வாழ்க்கையே!'
ஆதர வானால் ஆனந்தம் எனக்
கூறிய வள்ளுவன் குறளின் படியும்,
மங்கல மங்கையர் மனையறம் பற்றச்
செப்பிய இளங்கோ செய்தியின் வழியும்
இருவர் ஒருவராய் இயங்கும் இயக்கமம்
திருமண மென்னும் செவ்வற மாகும்!
வாழ்க்கை என்பது வஞ்சியர் தமக்கு
மணந்த வனுடனே வாழும் வாழ்க்கையே!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"கறை படுஞ்சிறு கடுமொழி யறிவும்
காத்து நாவினிற் பூந்தமிழ் பேசுக!
கடமை ஒன்றே உடைமையென் றாக்குக!
இல்லறப் பணி மெல்லியர் வல்லியர்
நல்லறத் தினில் நால்வகைப் பண்பினில்
கல்மனத் தவன் கணவனென் றாயினும்
கண்ணெனக் கொரு காத்தறம் நாட்டுக!
வல்ல மைந்தரை வளர்த்துயிர் கூட்டுக!
வாழும் வீடுகள் ஆயிரம் கட்டுக,
இல்ல தென்றே இல்லாள் இவளென
நல்ல செய்தொரு நற்புகழ் நாட்டுக!'
காத்து நாவினிற் பூந்தமிழ் பேசுக!
கடமை ஒன்றே உடைமையென் றாக்குக!
இல்லறப் பணி மெல்லியர் வல்லியர்
நல்லறத் தினில் நால்வகைப் பண்பினில்
கல்மனத் தவன் கணவனென் றாயினும்
கண்ணெனக் கொரு காத்தறம் நாட்டுக!
வல்ல மைந்தரை வளர்த்துயிர் கூட்டுக!
வாழும் வீடுகள் ஆயிரம் கட்டுக,
இல்ல தென்றே இல்லாள் இவளென
நல்ல செய்தொரு நற்புகழ் நாட்டுக!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"நாமெல்லாம் ஒரு குடும்பம் ஆமாம்! சொல்லும்,
நாவெல்லாம் வாயெல்லாம் இனிக்கும் வண்ணம்!
தேனெல்லாம் பாவெல்லாம் கனிகளெல்லாம்
தித்திக்கும் அமுதெல்லாம் கொண்ட இல்லம்!
நாமெல்லாம் ஒரு குடும்பம்! ஆகா அந்த
நயமிகுந்த வார்த்தையிற்றான் என்ன இன்பம்!'
நாவெல்லாம் வாயெல்லாம் இனிக்கும் வண்ணம்!
தேனெல்லாம் பாவெல்லாம் கனிகளெல்லாம்
தித்திக்கும் அமுதெல்லாம் கொண்ட இல்லம்!
நாமெல்லாம் ஒரு குடும்பம்! ஆகா அந்த
நயமிகுந்த வார்த்தையிற்றான் என்ன இன்பம்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"உடலிரண் டுறவு கொள்ள
ஒருதுளி கருப்பை செல்லக்
கடலென் அமுத முண்டு
களிமிகச் சிலிர்ந்த பாவை
வடிவுகொள் மாறு பாட்டில்
வயிறுமுன் புறத்திற் றள்ள
நடைப்யின் றீரைந் திங்கள்
நடத்திடக் குழவி தோன்றும்!'
ஒருதுளி கருப்பை செல்லக்
கடலென் அமுத முண்டு
களிமிகச் சிலிர்ந்த பாவை
வடிவுகொள் மாறு பாட்டில்
வயிறுமுன் புறத்திற் றள்ள
நடைப்யின் றீரைந் திங்கள்
நடத்திடக் குழவி தோன்றும்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"அந்தியிலும் காலையிலும் இரவு முற்றும்
அருகினிலே இருவென்றே இழுத்தி ழுத்து
முந்தியொரு முன்னூறு நானூ றென்றே
முத்தங்கள் கொடுப்பதுவும் பெறுவ தும்தான்
இந்தஉயிர் படைத்துவிட்ட சுகமா? இல்லை,
எழில்மழலைப் பாசந்தான் சுவைவ ளர்க்கும்
பந்தமெனும் கயிற்றுக்குள் இறுக்கிக் கட்டிப்
பந்தாடும் சேய்முதலில் கணவன் பின்பே!'
அருகினிலே இருவென்றே இழுத்தி ழுத்து
முந்தியொரு முன்னூறு நானூ றென்றே
முத்தங்கள் கொடுப்பதுவும் பெறுவ தும்தான்
இந்தஉயிர் படைத்துவிட்ட சுகமா? இல்லை,
எழில்மழலைப் பாசந்தான் சுவைவ ளர்க்கும்
பந்தமெனும் கயிற்றுக்குள் இறுக்கிக் கட்டிப்
பந்தாடும் சேய்முதலில் கணவன் பின்பே!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"அதனால்தான் மணவாளன் காத லுக்கே
அடுத்தஇடம் தருகின்றோம்! இரவில் கூட
மதுவாயர் அழுதக்கால் கணவன் மார்பை
மண்ணென்று தள்ளுகிறோம்! சேயெ டுத்து
இதமாக அணைக்கின்றோம்! அணைக்கும் நேரம்
எம்நெஞ்சம் உமக்கிருந்தால் அறிவீர்! ஆகா!
பதமாகப் பக்கவமாய்ப் படைத்த இன்பம்
பால் மணக்கும் வாயன்றி மீசை அல்ல!'
அடுத்தஇடம் தருகின்றோம்! இரவில் கூட
மதுவாயர் அழுதக்கால் கணவன் மார்பை
மண்ணென்று தள்ளுகிறோம்! சேயெ டுத்து
இதமாக அணைக்கின்றோம்! அணைக்கும் நேரம்
எம்நெஞ்சம் உமக்கிருந்தால் அறிவீர்! ஆகா!
பதமாகப் பக்கவமாய்ப் படைத்த இன்பம்
பால் மணக்கும் வாயன்றி மீசை அல்ல!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"ஓர்கையிலே மதுவும் ஓர்கையில் மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால்தான்
நான்வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்
ஏன்வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக்கேட்பான்'
சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால்தான்
நான்வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில்
ஏன்வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக்கேட்பான்'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"காதலெனும் போதையுற்று
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் - இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!...
முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டுச் சத்தமிட்டுச்
புத்திகெட்டுப் போனதொரு காலம் - இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்!
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் - இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!...
முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டுச் சத்தமிட்டுச்
புத்திகெட்டுப் போனதொரு காலம் - இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்!
Re: கண்ணதாசன் கவிதைகள்
"தைமாத மேகமெனத்
தவழ்ந்தாடும் பூங்கொடியே
கையோடு நீஇணைந்தால்
கற்பனைகள் ஊறுமடி...
பாவை உனை வேதன்
படைக்காமல் போயிருந்தால்
சாவைத்தான் இளமையிலே
சந்திக்க வேண்டுமடி
காதலியே! எந்தன்
கற்பனையின் நீரூற்றே!
போதை புலம்புதடி;
பொருளுரைக்க வில்லையடி!'
தவழ்ந்தாடும் பூங்கொடியே
கையோடு நீஇணைந்தால்
கற்பனைகள் ஊறுமடி...
பாவை உனை வேதன்
படைக்காமல் போயிருந்தால்
சாவைத்தான் இளமையிலே
சந்திக்க வேண்டுமடி
காதலியே! எந்தன்
கற்பனையின் நீரூற்றே!
போதை புலம்புதடி;
பொருளுரைக்க வில்லையடி!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"கட்டுக் குழல்முடித்து மல்லிகை யிட்டு
கன்னங் களில்அழகு மந்திர மிட்டு
பொட்டுக குலுங்கநிற்கும் பூவை இவளே
பொங்கும் தமிழ்த்தலைவி சங்க மகளே!
... ... ... ...
தலைவி திருமகள்போல் வந்திட வேண்டும் - என்
தலைவிதியில் அதற்குமொரு இடம்ஒன்று வேண்டும்
கலைமகள் போலொருத்தி துணைவர வேண்டும் - அந்த
கடவுள் மனதுவைத்துச் தந்திட வேண்டும்!'
கன்னங் களில்அழகு மந்திர மிட்டு
பொட்டுக குலுங்கநிற்கும் பூவை இவளே
பொங்கும் தமிழ்த்தலைவி சங்க மகளே!
... ... ... ...
தலைவி திருமகள்போல் வந்திட வேண்டும் - என்
தலைவிதியில் அதற்குமொரு இடம்ஒன்று வேண்டும்
கலைமகள் போலொருத்தி துணைவர வேண்டும் - அந்த
கடவுள் மனதுவைத்துச் தந்திட வேண்டும்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"ஊடலிலே ஒதுங்கி மெள்ள எழுவாள்
உண்மைகளை மறைத்து ஓட எழுவாள்
கூடலிலே மயங்கித் துள்ளி எழுவாள்
அச்சத்தில் சிறிது மிச்ச மிருக்கும்
ஆசையும் நெஞ்சிலொரு பக்கமிருக்கும்
கச்சை துடிக்கவரும் மூச்சு வளரும்
கலந்து விட்டால்பிறகு பேச்சு வளரும்!'
உண்மைகளை மறைத்து ஓட எழுவாள்
கூடலிலே மயங்கித் துள்ளி எழுவாள்
அச்சத்தில் சிறிது மிச்ச மிருக்கும்
ஆசையும் நெஞ்சிலொரு பக்கமிருக்கும்
கச்சை துடிக்கவரும் மூச்சு வளரும்
கலந்து விட்டால்பிறகு பேச்சு வளரும்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"காதலை மதுவை இன்பக்
காட்சியை வென்றே னென்று
ஓதுவார் எவரும் இந்த
உலகிற்குத் தேவை இல்லை!
காதலே தெய்வம் அந்தக்
கருணையே சொர்க்கம் என்பேன்!
ஆதலால் காதல் செய்வீர்
அன்றவன் சொன்னாற் போல!
காட்சியை வென்றே னென்று
ஓதுவார் எவரும் இந்த
உலகிற்குத் தேவை இல்லை!
காதலே தெய்வம் அந்தக்
கருணையே சொர்க்கம் என்பேன்!
ஆதலால் காதல் செய்வீர்
அன்றவன் சொன்னாற் போல!
Re: கண்ணதாசன் கவிதைகள்
"ஆணெனப் படைத்தான், பெண்ணை
அழகெனப் படைத்தான்; வாழ்வை
வீணெனப் படைத்தா னில்லை;
விரும்பத்தான் படைத்தான்! கண்ணால்
காணனெப் படைத்தான்; கையில்
கலக்கத்தான் படைத்தான்; இன்னும்
"நாணெ'ன்ன வெட்கம் என்ன
நாமும்தான் வாழ்ந்து பார்ப்போம்!'
அழகெனப் படைத்தான்; வாழ்வை
வீணெனப் படைத்தா னில்லை;
விரும்பத்தான் படைத்தான்! கண்ணால்
காணனெப் படைத்தான்; கையில்
கலக்கத்தான் படைத்தான்; இன்னும்
"நாணெ'ன்ன வெட்கம் என்ன
நாமும்தான் வாழ்ந்து பார்ப்போம்!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
"அம்பிகா பதியின் காதல்
அவலத்தில் முடிந்த துண்டு
எம்பிரான் ராமன் காதல்
இலங்கையை எரித்த துண்டு;
நம்பிஅந்த நிடத நாட்டு
நளமகா ராஜன் காதல்
தம்பலம் இழந்து வந்த
சனியினால் பிரிந்த துண்டு!'
அவலத்தில் முடிந்த துண்டு
எம்பிரான் ராமன் காதல்
இலங்கையை எரித்த துண்டு;
நம்பிஅந்த நிடத நாட்டு
நளமகா ராஜன் காதல்
தம்பலம் இழந்து வந்த
சனியினால் பிரிந்த துண்டு!'
Re: கண்ணதாசன் கவிதைகள்
அனைத்தும் அருமை... அனைத்தையும் விரும்பினேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கவியரசு கண்ணதாசன்
» குடும்பம் என்ற தலைப்பில் கண்ணதாசன் கூறுவது…
» கவியரசர் கண்ணதாசன் வருகிறார்...
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !
» குடும்பம் என்ற தலைப்பில் கண்ணதாசன் கூறுவது…
» கவியரசர் கண்ணதாசன் வருகிறார்...
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|